ஹலாலாகும் ஹராம்கள்...

இஸ்லாத்தின் அறியாமை


இந்த நவீன உலகில்,உலகத்தையே தன் கையில் அடக்கி கொண்டு முகநூல் மூலமாக பல ஆயிரம் மையில்கள் தொலைவில் உள்ளவனை பத்தே வினாடிகளில் தொடர்பு கொள்ள கூடிய அளவில் விஞ்ஞானம் வளர்ந்து வருக்கின்ற இத்தருணத்தில் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு உருப்பெற்ற புனித(?) குரான் தான் மனிதனின் எக்காலத்துக்கும் பொருந்தும் எனவும் அதுவே உலகத்துக்கு வழிக்காட்டும் மறை என ஆட்டம்போடும் இஸ்சுலாமியர்களின் கருத்துக்கள், இப்பொழுது இஸ்சுலாமியர்களாலே நடைமுறைபடுத்த முடியாமல் தவுடுபொடியாக்கபடுகின்றது. இது தான் இன்று இஸ்லாம் இவ்வுலகில் தோற்கடிக்கபடுகின்றது என்பதற்கான ஒரு அத்தாட்சி..

எக்காலத்திற்கும் பொருந்தும் குரான் முஹம்மது இறந்த பின்னே தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்பது தான் வரலாறு (காலிபாக்களுக்குள் ஏற்பட்ட சண்டை). இருந்தாலும் இந்த காலகட்டத்தில் அது எப்படி எல்லாம் தோற்கடிக்கப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டவே இந்த இடுக்கை.

   எந்த ஒரு தத்துவம் அது நடைமுரையில் பின்பற்றப்படவில்லையோ அல்லது பின்பற்றமுடியவில்லையோ அத்தத்துவம் எல்லாம் தோற்கடிக்கப்படுகின்ற தத்துவங்களே என்று இஸ்லாமியர்கள் அதிகமாக கூறி கூப்பாடு போடுவதை அறிந்து கொள்ளுங்கள்.இப்பொழுது இடுக்கைகு செல்வோம்.

ஹலால் என்றால் என்ன?
  குரான் அனுமதித்தது மற்றும் எதை எல்லாம் முஹம்மது செய்தாரோ (அ) செய்ய சொன்னாரோ அவை எல்லாம் ஹலாலாக கருதப்படும்
ஹராம் என்றால் என்ன?
  குரான் தடுத்தது மற்றும் எதை எல்லாம் முஹம்மது செய்யவில்லையோ (அ) செய்ய சொல்லவில்லையோ அவை எல்லாம் ஹரமாக கருதப்படும்.

முக்கிய குறிப்பு
 எவர் எல்லாம் குரானின் போதனையும் முஹம்மதுவின் நடைமுறையின்படி நடக்கவில்லையோ அவர் எல்லாம் சொர்கம் செல்ல மாட்டார்கள்.அவர்கள் எல்லாம் காஃபிர் என கருதப்படுவர்.[ ஹராமான பொருளை சாப்பிடுபவன் சொர்கம் செல்ல மாட்டான். அண்ணன் பி.ஜெ]
முஸ்லிம்களால் மீறப்படும் முக்கிய ஹராம்களை பற்றி பார்ப்போம்.

1. உருவப்படம் ஒழித்தல்

'உங்கள் இறைவனை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் 'அவனே ஒளியானாவன். எப்படி அவனை நான் காணமுடியும்?' என விடையளித்தார்கள் என்று அபுதர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.இந்த ஹதிஸ் முஸ்லிம்யில் இடம்பெற்றுள்ளது.
                                                                                                                    onlinepj.com/books/ 

(அண்ணன் பிஜே அல்லாவுக்கு உருவம் உண்டு என்று கூறிவறுவது தனிக்கதை)
ஆகவே இவ்வுலகத்தை படைத்தவன் ஒரே இறைவன். அவனே ஏகஇறைவன் அவனுக்கு உருவமே கிடையாது (ஏன் அவள்(பெண்) படைத்து இருக்க கூடாத என்று எல்லாம் கேட்க கூடாது) என்று ஹதீஸ்கள் கூறுகின்றது. அதனால்தான் முஹம்மதுவும் உருவப்படங்களுக்கு எதிரியாக இருந்தார். முஹம்மது எங்கேயும் குரூப்போட்டோ எடுத்ததாக குரானிலோ ஹதிஸ்சிலோ குறிப்பிடபடவில்லை.அதனால் தான் முஹம்மதுக்கு முன்னாடி வாழ்ந்த இயேசுவின் {ஈசா நபி} உருவபடம் கணிக்கப்பட்டுவிட்டாலும் முஹம்மதுவின் உருவபடம் கணிக்கப்படவில்லை. இதுவே முஸ்லீம்களுக்கு உருவபடம் ஹராம் என்பதற்க்கான ஒரு முக்கிய அத்தாட்சி. சரி உருவபடம் ஹராமனதுக்கு காரணம் என்ன என யோசிகின்றீர்களா? உருவப்படத்தை முஹம்மது அனுமதித்தால் பிற்காலத்தில் அவை உருவ வழிப்பாடுக்கு வழிவகுக்குமாம், அது அவரின் ஏக இறைக்கொள்கைளுக்கு விரோதமாக அமையுமாம் அதனால் தான் உருவபடத்தை தடை செய்தார் என பல மூஃமீன்கள் சொல்லுகின்றார்கள். எது எப்படியோ போகட்டும் ஆக மொத்தம் உருவப்படம் ஹராம் என்பதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஆனால் சுவணத்துக்கு பை-பாஸ் ரோடு போடும் பி.ஜெ அண்ணன், ஜாகிர் நாயக், ஜவாருல்லா காதர் மொய்தீன் இன்னும் என்னற்ற மூஃமீன் தலைவர்களின் உருவபடம் மட்டும் சுவர் எங்கும், இனையதளம் எங்கும் பயனித்து கொண்டு இருக்கின்றதே, இவர்களுக்கு இவை எல்லாம் ஹராமாக தெரியவில்லையா? ஏன் இவர்கள் போடும் 10ரூபாய் சி.டியில் கூட இவர்கள் படம் இல்லாமல் வருவதுயில்லை. இவர்கள் தான் நபி வழியை பின்பற்றுபவர்களா? முஹம்மதுவின் போட்டோவை கார்ட்டூனாக போட்டாலே கோவப்பட்டு பத்வா கொடுக்கும் நம் மூஃமீன்கள் இவர்களை ஏன் கண்டுக்கொள்வதில்லை? ஓ... ஒட்டுமொத்த இசுலாமியர்களுக்கும் இவர்கள் தான் அதாரிட்டியோ ! அதனால் அவர்களை பிறர் கேளவி கேட்க முடியாதுதானே.


புகாரி 7042. (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

சரி இது ஒருபுறம் இருக்கட்டும், ஹராமான உருவப்படத்தை பொதித்த ரூபாய் நோட்டுக்காக நாம் எவ்வளவு சண்டையிடவேண்டியிருக்கின்றது. இதில் அந்த ஹராமான உருவபடத்தை பாக்கெட்டுகுள்ளே வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கின்றோமே! அதை என்னவென்று சொல்லுவது? இந்திய போன்ற பல மதங்கள் கொண்ட நாட்டில் ரூபாய் நோட்டில் காந்தியின் உருவப்படம் போட்டு இருக்கின்றதே! காபிர்கள் நாட்டில் வேறு வழியே இல்லை பயன்படுத்திதான் ஆகவேண்டும் என்பதால் நம் மூஃமீன்கள் பயன்படுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று கூட சப்புக்கட்டிக்கொள்வோம். ஆனால் இஸ்லாத்தை தூக்கிபிடிக்கும் மற்றும் இஸ்லாம் பிறந்த நாடுகளின் ரூபாய் நோட்டுகளில் கூட உருவப்படம் இல்லாமல் அச்சடிக்கப்படுவதுயில்லை ஏன்?. பீயூர் முஸ்லீம் (pure muslim) என்று சொல்லிக்கொள்ளும் தாலிபான்கள் ஆட்சியாண்ட ஆப்கானிஸ்த்தானில் கூட உருவப்பட ரூபாய் நோட்டுக்கள் தான் பயன்படுத்தபடுகின்றது. ஏன் இவர்கள் கூட ஹராமான உருவபடத்தை ஹலாலாக்க முயற்சிக்கின்றார்கள்?.


 2.பிரியானி
    
      உச்சா,கக்கா போவுரதுக்கு கூட நபி வழி தேடும் நம் மூஃமீன்களில் ஒருவர் அண்ணன் பி.ஜெவிடம் சிறிது அளவு ஆல்காஹல் கலந்த மவுத் வாஷ்சரை பயன்படுத்தலாமா என்று ஒரு கேள்வியை கேட்டு உள்ளார். அதற்கு நம் விஞ்சானி பி.ஜெ அளித்த பதில்,

      'ஆல்காஹாலை உண்டால் போதை ஏற்படும் என்பதால் இதில் சிறிதளவையும் பயன்படுத்தாக் கூடாது. ஆல்காஹால் கலந்த பானத்தை வாய் கொப்பளிக்கும் போது வாய்க்குள் அந்த ஆல்காஹால் சிறிதளவேனும் தங்கிவிடும். இது எச்சிலின் வழியாகவோ நாம் உண்ணும் உணவின் வழியாகவோ வயிற்றுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. எனவே உண்ணுவதற்கு தடை செய்யப்பட்ட இது போன்ற பொருட்களைக் கொண்டு வாய் கொப்பளிப்பதும் சுவைப்பதும் கூடாது.
                                                13/05/2011 -onlinepj.com
      'அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக்கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான்'. என்று முஹம்மது அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர்(ரலி).
                                                நூர்திர்மதி 1788,நஸபி 5513
ஆக சிறிது அளவு போதை தரும் பொருட்கள் கூட ஹராமாகும்.ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் போதை பொருள் என தடை செய்யப்பட்ட கசகசாவை(ஒப்பியம் செடியின் விதை)கொண்டு தான் இன்று நம் மூஃமீன்கள் ருசிகரமான பிரியானியை சமைத்து கொண்டு இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஹராமான பிரியானியை தான் நல்ல நாள் பெருநாளில் கூட நம் மூஃமீன்கள் சாப்பிடவேண்டியிருக்கின்றது. இதில் கூடுதல் சிறப்பு என்னவெனில் நம் மூஃமீன்கள் நடத்தும் ஓட்டல்களில் 'ஹாலால் பிரியானி' கிடைக்கும் என ஹராமான உணவை போர்டு(board)போட்டு வியாபாரம் செய்வதுதான். இப்படி ஹராமான பிரியாணியை சாப்பிட்டால் எப்படி இவர்கள் சுவனத்துக்கு போவார்கள்?

அதனல் மூஃமீன்கள் முடிவு எடுக்கவேண்டிய தருணம் இது பிரியானியா? இல்ல நபி வழியா?

"விசுவாசிகளே! தங்களுக்கு பிரியானியில் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சிந்திப்பவருக்கு நிறைய அத்தாட்சியுள்ளது".
                                          


3.கணினிக்கும் தடை;


நாம் முன்பே குறிப்பிட்டது போல இந்த நவீன உலகத்துக்கு பழைய ஏற்ப்பாடுலாம் {குரான்} செட்டாகாது என்பதை நிறுப்பிக்க நம் மூஃமீங்களின் நவீன கால ஹராமை சுட்டிக்காட்டினாலே போதும் என நினைக்கின்றேன்.

'உலகமே கணினிமூலம் சுருங்கிவிட்டது' என கொக்கரித்துக் கொண்டு இருக்கும் 21ம் நூற்றாண்டில் நாம் பயனப்பட்டுக்கொண்டு இருக்கின்றோம். மனிதர்களால் தவிற்க்கவே முடியாத ஒன்றாக இப்பொழுது கணினி மாறிக்கொண்டு வருக்கின்றது.ஆனால் இப்படிப்பட்ட கணினியை கூட நாம் முஃமீங்கள் பயன்ப்படுத்துவதில் அல்லாவுத்தாலாவும் நம் முத்திரை நபியும் ஆப்பு சீவி வைத்துவிட்டார்களே என நினைக்கும் போது தான் மனசு மிக வருத்தப்படுக்கின்றது. என்ன செய்வது 'கூத்தாடிக்கு வாக்கப்பட்டால் ,'டங்கு' டங்கு'னு தான் ஆடியாக வேண்டும். பாவம் நம் மூஃமீங்களுக்கும் அப்படித்தான். இப்பொழுது மையக்கருத்தை பற்றி விவாதிப்பதற்கு முன் எங்கள் ஊரில் நடந்த ஒரு உண்மை கதையை பற்றி சுருக்கமாக சொல்லி முடிக்கின்றேன்.அந்த கதை இந்த இடுக்கையை புறிந்துக்கொள்வதற்கு சுலபமாக இருக்கும்..

எங்கள் ஊரில் ஒரு பெரிய நகரத்தில் ஜாக் & தவ்ஹீத் அமைப்பை சார்ந்த இரண்டு உண்மை மூஃமீங்கள் கம்ப்யூட்டர் சர்வீஸ் செண்டர் நடத்தி வந்தார்கள்.எல்லா வியாபாரிகள் போல பொய், பழைய பொருளை பொருத்துவது, நல்லா இருக்கின்ற பொருளை பழுதாகிவிட்டது என கூறி ஏமாற்றுவது என அனைத்தையும் செய்து மிக வேகத்தில் மூன்றே ஆண்டுகளில் பல லட்சம் ரூபாய் சம்பாத்துவிட்டார்கள். (இப்படியல்லாம் மூஃமீங்கள் செய்ய கூடாதே இது ஹராம் இல்லையா?என நாம் கேட்டாள். அதற்கு மூஃமீங்கள் அண்ணன் பி.ஜெ முறையில் பதில் சொல்லுவார்கள், 'வியாபாரமே ஹலாலாகும் அதில் என்ன ஹராம் என்று'. அதனால் நாம் அதை விட்டுவிடுவோம்} கதைக்கு வருவோம்.

திடீர் என்று ஒரு நாள் அந்த கம்ப்யூட்டர் சர்வீஸ் செண்டரை விற்றுவிட்டார்கள், காரணம் என்ன என்றால் அவர்கள் சர்வீஸ் செய்யும் அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பைரேட்டட் OS (Pyrated OS) மற்றும் பைரேட்டட் சாஃப்ட்வேர் (Pyrated software) தான் போடுகின்றார்களாம். பைரேட்டட் (Pyrated) என்றால் என்ன என யோசிக்கின்றீர்களா? அதாவது ஒருவரின் பொருளை அவரின் காப்புரிமை இல்லாமல் பயன்ப்படுத்துவது ,புரியும்படி சொல்லனும்னா திருட்டு பொருள். அப்படிப்பட்ட திருட்டு பொருளில் வியாபாரம் செய்வதால் அவர்கள் சுவனம் செல்லமாட்டார்கள் என்பதால் விற்றுவிட்டார்கள் என கேள்விப்பட்டேன் . அய்யகோ என்னே இது உண்மை மூஸ்லீம்களுக்கு வந்த சோதனை. இந்தியாவில் உள்ள நம் மூஃமீங்கள் அனைவரும் இப்படித்தானே கணினியை உபயோக செய்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள். ஏன் நபி கணினியை கூட விட்டுவைக்காமல் போய்விட்டர். முஸ்லீம்கள் அறிவை வளர்ப்பதில் அவருக்கு இஷ்டம் இல்லையோ!
 சரி முகமது இப்படிப்பட்ட திருட்டுக்குலாம் என்ன ஃபைன் விதித்தார் என அறிய ஹதீஸ்களை புரட்டினேன்.


புஹாரி 6789 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கால் தீனார் (பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புஹாரி 6799 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது உண்டாகட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக் கவசத்தைத் திருடுகிறான்; அதற்காக அவனது கை துண்டிக்கப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதற்காகவும் அவனது கை துண்டிக்கப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸில் இருந்து நபி நமக்கு சொல்ல வரும் செய்தி என்ன? கால் தினார், தலை கவசம், கேவலம் கயிற்றை திருடினால் கூட மூஃமீங்களின் கையை வெட்ட வேண்டும் என அறிவுறித்திருக்கிறார். அப்போ இவ்வளவு திருட்டை செய்யும் நம் மூஃமீங்களுக்கு எதை வெட்ட வேண்டும்? மேலும் இவ்வளவு பெரிய திருட்டு நம் பி.ஜெ அண்ணனுக்கு தெரியாமலையா இருக்கும் என onlinepj யில் நுழைந்தேன். நம் மூஃமீங்களில் ஒருவர் ஒரிஜினல் சாப்ட்வேரை காப்பி செய்து பயன்ப்படுத்துலாமா? என்று கேட்டுவிட்டார். அதற்கு அண்ணன் பி.ஜெ நபியைவிட எப்படி காட்டுத்தனமாக உளறுகின்றார்கள் என்று பாருங்களேன்.

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/saftwrai_kapi_etuthal/

//நாம் ஒரு சாப்ட்வேரை வாங்கினால் அது நமக்குச் சொந்தமாகி விடுகிறது.நமக்கு சொந்தமான ஒரு பொருளை மற்றவர்க்களுக்கு கொடுக்கும் உரிமையைத் தடுத்தால் அது நம் உரிமையை பறிக்கின்றது//

//இந்த அளவுக்குக் கொள்ளை அடிப்பதால் தான் காப்பி எடுக்கின்றார்கள் என்று உணர்ந்து குறைந்த விலைக்கு விற்க அவர்கள் முன் வர வேண்டும்//

மேற்க்கண்ட உளறலிருந்து நம் தமிழ்நாடு நபி என்ன சொல்ல வருகின்றார் என்றால் ஒருவன் தான் காசு கொடுத்து ஒரு பொருளை வாங்கிவிட்டாள் அந்த பொருளை அவன் விருப்பம் போல் என்ன வேணும்னாலும் செய்துக் கொள்ளலாம், விற்றவருக்கு அதில் எந்த சம்மந்தமும் இல்லை என கூறுகின்றார். சாப்ட்வேர்/OS போன்றவற்றை பற்றி அரியாத ஆசாமி காய்கரி, மளிகை சாமான் வாங்குவதை போல் சகடுமேனிக்கு உளறியிருக்கின்றார்.
மேலும் ஒரு நிறுவனம் வெளியிடும் ஒரிஜினல் சாப்ட்வேர்/OS ஒரே ஒரு கம்ப்யூட்டருக்கு தான் பொருந்தும் வகையில் விற்கப்படுக்கின்றது என்பதை அதில் இருக்கும் Terms&Conditions முழுமையாக படித்து பார்த்தாள் தெரியும்.என்ன தான் ஒரு நபர் எவ்வளவு காசு கொடுத்து ஒரு OS/சாப்ட்வேரை வாங்கியிருந்தாலும் அவர் ஒரு கணினியில் பயன்ப்படுத்தினால் தான் அது ஒரிஜினல்(Genuine) OS/சாப்ட்வேர் என கருதப்படும். அவரே வேற கணினியில் பயன்படுத்தினால் அது பைரேட்டட் OS/சாப்ட்வேர் என்ற வகையில் தான் வரும். இது புறியாமல் கண்டமேனிக்கு உளறுகின்றார் நம் அண்ணன் பி.ஜெ. தெரியாததை தெரியாது என்று சொன்னால் என்னவாம்.அவர் சொன்னதில் முக்கியமான உளறல் என்னவேனில் அதிக விலைக்கு நிறுவனம் விற்ப்பதனால் தான் சாப்ட்வேரை காப்பி போடுகின்றார்களாம். அப்படி என்றால் அதிகமான விலையில் ஒரு பொருள் விற்றால் அதை திருடலாம? அது மட்டும் திருட்டாகாத? உணவுகே வழியில்லாமல் இருப்பவன் தான் கால் தினார் திருடுவான், அவனின் கையை மட்டும் ஏன் நபி வெட்டினார். ஒரு வேளை நவீன முறையில் திருடினால் ஹராமாகாமல் ஹலாலாகுமோ?

இந்தியாவில் பயன்ப்படுத்தும் 100ரில் 90 கம்ப்யூட்டர்களின் பைரேட்டட் OS/சாப்ட்வேர் தான் பயன்படுத்துப்படுகின்றதாம் என்று நான் சொல்லவில்லை மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சர்வே சொல்லுகின்றது..
என்ன மூஃமீங்களே! புறிக்கின்றதா முகமதுவின் ஏற்ப்பாடுலாம் இப்போ செட்டாகாது என்று? இப்பொழுதாவது சிந்து(தியு)ங்கய்யா....