நிலைத்து நிற்கும் வேதமா குர்ஆன்?

நிலைத்து நிற்கும் வேதமா குர்ஆன்?



குர்ஆன் காலங்காலமாக இறைவனால் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் அதற்கு முன்பு அருளப்பட்ட வேதமான பைபிள் காலப்போக்கில் தன் உண்மைகளை இழந்துவிட்டதாகவும் இஸ்லாமிய தோழர்களுக்கு சிறு வயதில் இருந்து கற்று கொடுக்கப்படுகிறது. உண்மையை சொல்ல வேண்டுமானால், பைபிள் குரானை விட தன்னுள் உண்மைகளை கொண்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் கால அளவில் நாற்பது நபர்களால் எழுதப்பட்ட 66 நூல்களை உள்ளடக்கிய புத்தகமாக பைபிள் இருந்து வருகிறது. களிமண் பலகைகளிலும், பாப்பிரஸ் ஓலைகளிலும், துணிகளிலும், உலோக தகடுகளிலும், தோல் சுருள்களிலும் ஆயிரம் ஆயிரம் வருடங்களாக பாதுகாக்கப்பட்டு 3500 ஆண்டுகள் ஆன பின்பும் நம் கரங்களில் நிலைத்து நிற்கின்ற அதிசய புத்தகம் தான் பைபிள். குரானை விட ஐந்து மடங்கு செய்திகளை கொண்டது. இத்தனை பெரிய செய்திகளையும், கால அளவுகளையும், பல்வேறு ஆசிரியர்களையும் கொண்டிருந்தாலும் இன்று வரை நம் கரங்களில் உலாவி வரும் வேதமே உண்மையில் வியக்கத்தக்கது. ஆனால், குரான் ஒரே ஒரு நபரது போதனைகளை உள்ளடக்கி, ஒருவரது காலக்கட்ட‌த்தில் எழுதி முடிக்கப்பட்டது. பைபிள் முடிவுபெற்று 500 ஆண்டுகளுக்கு அப்பால் எழுதப்பட்டது. சிந்திப்போருக்கு, இவைகளில் வியக்கத்தக்கது எது என்பது விளங்கும். இனி குரான் காக்கப்பட்ட வரலாற்றை காணலாம். பெரும்பாலான முஸ்லிம்கள், இஸ்லாத்தை ஒருவருக்கு அறிமுகப்படுத்தும் முன், இந்த செய்திகளை எல்லாம் கூற மாட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்.

ஸைத் அவர்களின் குர்ஆன்:
முகமது போதனை செய்ய ஆரம்பித்து இறக்கும் வரை குரான் வசனங்களை சிறிது சிறிதாகவே கூறி வந்தார். அவர் உயிரோடு இருக்கும் காலம் அளவும் குர்ஆன் எழுதி முடிக்கப்படவுமில்லை. ஒன்று திரட்டப்படவுமில்லை. அவர் வாழ்நாட்களில் அத்தகைய தேவையை பற்றி எந்த முஸ்லிமும் பெரிதளவு சிந்திக்கவில்லை. முகமது அவர்கள் இறந்த பின்பு தான் அத்தகைய முயற்சிகள் கைக்கொள்ளப்பட்டன. முகமது அவர்களது மாமனார் அபூபக்ர் அவர்களே குரானை மனனம் செய்த சைத் இப்னு ஸாபித் என்பவரை அணுகி குரானை ஒன்று திரட்டும் படி பிற்காலங்களில் பணித்தார். சைத் கற்களில், பனவோலைகளில் எழுதி வைக்கப்பட்டிருந்த வசனங்களையும், மனனம் செய்து ஓதி வந்த சில‌ரது உதவி கொண்டும் குரானை ஒன்று திரட்டி எழுதி முடித்தார். இந்த முயற்சியின் மூலம் திரட்டப்பட்ட குரான் பிழையற்றதா? அனைத்து வசனங்களையும் கொண்டுள்ளனவா? அல்லது நூறு சதவிகிதம் நேர்த்தியானதா? என்பதெல்லாம் சிறிது சிந்திக்க வேண்டியவைகள். முகமதுக்கு பின் அபூபக்ர் அவர்களே தலைமை ஏற்று முதல் கலீபாவாக செயல்பட்டார். கலீபாவின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட குரான் தொகுப்பு என்பதை தவிர சைத் அவர்கள் கொண்டுவந்த குரான் பிரதிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. பின் இந்த தொகுப்பு உமர் அவர்களிடமும், பல ஆண்டுகளாக முகமது அவர்களது நான்காம் மனைவியான ஹஃப்ஸாவிடம் மட்டுமே இருந்தது. இந்த காலங்களில் முகமது அவர்களின் பிற சகாக்களும் குரானை ஒன்று திரட்டி எழுதி வந்தனர். இவ்வாறு பல்வேறு நபர்களால், விதவிதமான நூல்கள் குர்ஆன் என்ற பெயரில் வளம் வந்து கொண்டிருந்தன.
சஹீஹ் புகாரி 7191: (வேத அறிவிப்பை எழுதியோரில் ஒருவரான) ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். யமாமா(போரில்) வீரர்கள் கொல்லப்பட்ட போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னை அழைத்து வரும்படி) ஆளனுப்பினார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) கூறினார்: உமர்(ரலி) அவர்கள் என்னிடம் வந்து, இந்த யமாமா போர், குர்ஆன் அறிஞர்கள் பலரைப் பலிகொண்டது. (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) எல்லா இடங்களிலும் குர்ஆன் அறிஞர்கள் பலர் கொல்லப்பட்டு அதனால் குர்ஆனில் பெரும்பகுதி (அந்த நெஞ்சங்களுடன் அழிந்து) போய்விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். எனவே, (கலீஃபாவான) நீங்கள் குர்ஆனைத் திரட்டுமாறு ஆணையிட வேண்டுமென கருதுகிறேன்' என்று கூறினார்கள். அதற்கு நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்ய முடியும்?' என்று (உமர்(ரலி) அவர்களிடம்) கேட்டேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்று கூறினார்கள். இது விஷயமாக தொடர்ந்து உமர்(ரலி) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். முடிவில், உமர்(ரலி) அவர்கள் மனதை அல்லாஹ் எதற்காக விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அவன் விரிவாக்கினான்; எது விஷயத்தில் உமர்(ரலி) அவர்கள் கருதியதையே நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னிடம்), 'நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்பட்டதில்லை. நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக வஹீ (இறைச்செய்தி) (வேத அறிவிப்பை) எழுதக் கூடியவராயிருந்தீர்கள். எனவே, (தனித்தனி பிரதிகளில் பல்வேறு நபித் தோழர்களிடம் இருக்கும்) குர்ஆன் வசனங்களைத் தேடி (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென என்னை அவர்கள் பணிந்திருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப் போகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்றார்கள். இதையே என்னிடம் அன்னார் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர்(ரலி) ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். அவர்கள் இருவரும் கருதியதையே நானும் (பொறுத்தமானதாகக்) கருதினேன். எனவே, நான் (மக்களின் கரங்களிலிருந்து குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அகலமான பேரீச்ச மட்டைகள், துண்டுத் தோல்கள் ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சங்கள் ஆகியவற்றிலிருந்து குர்ஆன் வசனங்களைத் திரட்டினேன். அப்போது நான் அத்தவ்பா எனும் (9 வது) அத்தியாத்தின் இறுதி அல்லது 'அபூ குஸைமா'(ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டேன். அதை நான் அதற்குரிய அத்தியாயத்தில் சேர்த்தேன். 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார்' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 09:128 வது) வசனமே அந்த வசனமாகும். (என் வாயிலாகத் திரட்டிக் தொகுக்கப் பெற்ற) குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை அவர்களின் வாழ்நாள் முழுக்க இருந்து வந்தது. பிறகு (கலீஃபா) உமர்(ரலி) அவர்களிடம் அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை அவர்களின் வாழ்நாள் முழுக்க இருந்து வந்தது. பிறகு (நபிகளாரின் துணைவியரான) ஹஃப்ஸா பின்த் உமர்(ரலி) அவர்களிடம் இருந்து வந்தது. முஹம்மத் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்கள், 'இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) 'லிகஃப்' எனும் சொல்லுக்கு 'ஓடு' என்று பொருள் எனக் கூறினார்கள்.
சைத் திரட்டிய குரான் நேர்த்தியானது என நம்பிகொள்வதை தவிர நிச்சயமாக கூற முடியாது. அவர் சில வசனங்களை ஒரே ஒருவரிடம் இருந்து மட்டுமே பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சில வசனங்கள் ஒரே ஒருவரது நினைவால் பாதுகாக்கப்பட்டிருந்தன. ஒருவர் கூட நினைவில் வைத்திராத சில வசனங்கள் இருந்தால், நிச்சயமாக அவை அழிந்துவிட்டன. இன்று நம்மிடம் உள்ள குரான் நேர்த்தியானது என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை.
சஹீஹ் புகாரி 4989: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்: (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் அவர்களிடம் சென்றேன். என்னிடம்) அவர்கள் 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற 'வஹீ' (வேத வசனங்)களை எழுதிவந்தீர்கள். எனவே, குர்ஆன் வசனங்களைத் தேடுங்கள்!' என்று கூறினார்கள். எனவே, நான் குர்ஆன் வசனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டேன். இறுதியாக 'அத்தவ்பா' எனும் (9 வது அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்களை அபூ குஸைமா அல்அன்சாரி(ரலி) அவர்களிடம் இருந்து பெற்றேன். அவரல்லாத வேறு எவரிடமும் அவற்றை நான் காணவில்லை. (அவ்விரு வசனங்களாவன:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குச் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான். '(திருக்குர்ஆன் 09:128, 129)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களின் குர்ஆன்:
அப்துல்லாஹ் இஸ்லாத்தை ஆரம்ப காலங்களிலேயே ஏற்று கொண்டார். குரானை நன்கு ஓத தெரிந்த நால்வரில் இவரும் ஒருவர் என புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நால்வரிலும், அப்துல்லாஹ் அவர்களை முகமது முதலாவதாக குறிப்பிடுகிறார்.

சஹீஹ் புகாரி 3808: மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார், அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) குறித்துக் கூறப்பட்டது. அப்போது அவர்கள் கூறினார்கள்: அவர் நான் நேசித்து கொண்டேயிருக்கும் ஒருவர். (ஏனெனில்,) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமை சாலிம், முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅப் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை (ஓதும் முறையை) எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்ல கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களையே முதலில் குறிப்பிட்டார்கள். 

அப்துல்லாஹ், ஸைத் அவர்களை விட அனுபவம் மிக்கவர். வயதில் பெரியவர். முகமது அவர்களிடம் குரானை நன்கு அறிந்தவர் என நற்சாட்சி பெற்றவர். இவரும் ஒரு குர்ஆனை எழுதினார் (சஹீஹ் புகாரி 4996, முஸ்லிம் 1494). குரானை நன்கு அறிந்தவராக அப்துல்லாஹ் தன்னை குறிப்பிட்டுள்ளார்.
சஹீஹ் புகாரி 5002: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்: எவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் அருளப்பட்டால், அது எங்கே அருளப்பட்டது என்பதை நான் நன்கு அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வசனம் அருளப்பட்டால் அது யார் விஷயத்தில் அருளப்பட்டது என்பதையும் நான் நன்கறிவேன். என்னை விட அல்லாஹ்வின் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் இருந்தால் நான் (அவரிடமிருந்து அதைக் கற்றுக் கொள்வதற்காக) அவரை நோக்கி நிச்சயம் பயணம் புறப்பட்டு விடுவேன். இதை மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். 
சாலிம் அவர்களின் குர்ஆன்:
குர்ஆனை நன்கு அறிந்தவர்களாக முகமது குறிப்பிட்ட நான்கு நபர்களுள் சாலிம் இரண்டாம் நபர். யமாமா போரின் போது இவர் கொல்லப்பட்டார். எனினும், இறப்பதற்கு முன்பு சாலிமும் ஒரு குரானை எழுதி முடித்தார். இந்த குர்ஆன் தான் முதலில் எழுதி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது - (As Suyuti, Al-Itqan fii Ulum al-Quran, Vol.1, p.135).

உபை இப்னு கஅப் அவர்களின் குர்ஆன்:
முகமது அவர்கள் குறிப்பிட்ட நான்கு நபர்களுள் இவரும் ஒருவர். இவர் எழுதிய குர்ஆன் சிரியா தேசத்து இஸ்லாமியர்களிடம் பிரதானமாக விளங்கி வந்தது (Source).

புழக்கத்தில் இருந்த பிற குர்ஆன்கள்:
இந்த குர்ஆன்களைத் தவிர, இப்னு அப்பாஸ் அவர்களது குர்ஆன், அலி அவர்களது குர்ஆன், அபூமூஸா அவர்களது குர்ஆன், அனஸ் இப்னு மாலிக் அவர்களது குர்ஆன், இப்னு அஸ் ஸுபைர் அவர்களது குர்ஆன் என விதவிதமான குர்ஆன்கள் அதே காலங்களில் எழுதி முடிக்கப்பட்டன.

உஸ்மான் அவர்களது உத்தரவு:
இத்தனை குர்ஆன்கள் எழுதப்பட்டு இருந்தாலும், ஸைத் அவர்களது குர்ஆன் தான் இன்று வரை நிலைத்து நம்மிடம் வந்துள்ளது. மூன்றாவது கலீபாவாக செயல்பட்ட உஸ்மான் அவர்களது காலத்தில் ஸைத் அவர்களது குர்ஆனை தவிர பிறர் இயற்றிய அத்தனை குர்ஆன்களும் தீயில் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. உஸ்மான் அவர்களது உத்தரவை பல இஸ்லாமியர்கள் எதிர்த்தனர். குர்ஆனை நன்கு ஓத அறிந்தவராக முகமது அவர்களால் நற்பெயர் பெற்ற அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களும் இதனை எதிர்த்தார். ஸைத் அவர்களது குர்ஆனிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய பிரதிகள் உருவாக்கப்பட்டது. பின்னர், சுற்றுப்புற பகுதிகளுக்கு இந்த ஏடுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இது தான் இன்று நம்மிடம் உள்ள குர்ஆன். இதனையே பாதுக்காக்கப்பட்ட வேதம் என இஸ்லாமிய அன்பர்கள் பல காலமாக கூறி வருகின்றனர்!
சஹீஹ் புகாரி 4987: அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்: ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின் போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர்பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கான போரில் கலந்து கொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்து வேறுபாடு கொண்டு அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடு கொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த (திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள். எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழி வழக்குப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழி வழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள்.
குர்ஆனை ஓதும் முறையிலேயே வித்தியாசங்கள் காணப்பட்டதாக மேலுள்ள ஹதீஸ் சமாளிக்கிறது. நிச்சயமாக, உச்சரிப்புகளில் வேறுபாடு காணப்பட்டால், அதற்காக பிறர் இயற்றிய குர்ஆன்களை எரிக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணத்திற்கு, "India is the best country" என்ற வாக்கியத்தை "இன்டியா இஸ் தி பெஸ்ட் கன்ட்ரி" எனவும் படிக்கலாம், "இந்தியா இஸ் த பெஸ்ட் கன்ட்ரி" என்றும் படிக்கலாம். இவ்வாறு உச்சரிப்பு வேறுபடுவதால், அந்த வாக்கியத்தில் பிழை உள்ளதாக அர்த்தமா? இல்லையே. உஸ்மானால் எரிக்கப்பட்ட பிற குர்ஆன்கள் உச்சரிப்பில் வேறுப்பட்டவை என்பது அர்த்தமற்ற கூற்று. உச்சரிப்பிற்கும், எழுத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அக்குர்ஆன்கள் ஸைத் அவர்கள் எழுதிய குர்ஆனுடன் முரண்பாடுகளை கொண்டிருந்ததே அவைகள் எரிக்கப்பட்டதற்கு காரணம். ஸைத் அவர்கள் எழுதிய குர்ஆன் தான் அனைத்திலும் நேர்த்தியானது என்பதற்கு என்ன ஆதாரம்?

திருத்தப்பட்ட மறுபதிப்பு!
ஹப்ஸா அவர்களிடம் இருந்த குர்ஆனே உஸ்மான் காலத்தில் அப்படியே நகல் எடுக்கப்பட்டது என்றும் கூற முடியாது. ஸைத் அவர்கள் இன்னும் சில வசனங்களை இணைத்து எழுதினார். மொழி வழக்கை திருத்தி எழுதினர். இவ்வாறு உஸ்மான் காலத்தில் குர்ஆனுக்கு திருத்தங்களும் செய்யப்பட்டது.
சஹீஹ் புகாரி 4988: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்: நாங்கள் (உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) குர்ஆனுக்குப் பிததிகள் எடுத்த போது 'அல்அஹ்ஸாப்' எனும் (33 வது) அத்தியாயத்தில் ஒரு வசனம் காணவில்லை. அதனை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். அதை நாங்கள் தேடிய போது அது குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டோம். (அந்த வசனம் இதுதான்:) அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெயப்படுத்தி விட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் உயிரை அர்ப்பணிக்க வேண்டுமென்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்ற தக்க தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23). உடனே நாங்கள் அந்த வசனத்தை குர்ஆன் பிரதியில் அதற்குரிய அத்தியாயத்தில் இணைத்துவிட்டோம்.
மேற்கண்ட குறிப்புப்படி அபூபக்ர் காலத்தில் தான் இயற்றிய குர்ஆன் பிரதி முழுமையானதல்ல என்பதை ஸைத் அவர்களே ஒப்புக் கொள்கிறார். தான் முந்தி எழுதிய பிரதியில் 33:23 வசனத்தை இணைத்து எழுதியிருந்தால், நகல் எடுக்கும் போது, சைத் அவர்களுக்கு இந்த வசனத்தை தேட வேண்டிய வேலையே இருந்திருக்காது. இது ஒரு மறுபதிப்பு குர்ஆன். குர்ஆன் பாதுக்காக்கப்பட்ட வேதமெனில் முதலில் இந்த சிக்கல்களை எல்லாம் தாண்டி நிறைவாக நமது கரங்களுக்கு வந்திருக்க வேண்டும். ஸைத் அவர்கள் திக்கி திணறி எழுதி முடித்த நூலையே இன்று நாம் குர்ஆனாக எண்ணி வருகிறோம். அது நேர்த்தியானதற்கு என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. நேர்த்தியில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் கிடக்கின்றன. அவற்றையும் இனி காணலாம்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களின் எதிர்ப்பு:
உஸ்மான் அவர்களின் உத்தரவை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் எதிர்த்தார். எரிக்கப்பட்ட குரான்களில் அப்துல்லாஹ் அவர்களது ஏடும் அடங்கும். உண்மையில் சொல்ல போனால், ஸைத் அவர்களிடம் ஒப்படைத்த பொறுப்பை அப்துல்லாஹ் அவர்களிடம் ஒப்படைத்திருக்கலாம். அப்துல்லாஹ் தான் முகமது அவர்களிடம் குரானை ஓத அறிந்தவர்களுள் முதன்மையானவர் என நற்சாட்சி பெற்றவர். ஸைத் அவர்களை விட வயதில் முதிர்ந்தவர், அனுபவம் மிக்கவர். ஆனால், அப்துல்லாஹ் இயற்றிய குரானை ஏன் அக்கால முஸ்லிம்கள் எரித்துவிட்டனர் என்பது தான் வியக்கதக்கது! ஒருவேளை அதுதான் இஸ்லாத்தின் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டுள்ள குர்ஆனோ என்னமோ! உஸ்மான் பிற குர்ஆன்களை எரிக்க உத்தரவிட்ட போது, மஸ்வூத் தனது பதிப்பை கொண்டுவர மறுத்தார், அவரது குர்ஆன் கூஃபா நகரில் பிரதான பிரதியாக விளங்கி வந்தது. ஆனால், ஸைத் அவர்களது பிரதி எந்தளவும் பரவலாக பின்பற்றபடவில்லை. (அபூ தாவூது, கிதாப் அல் மஸாஹிஃப், 13)
"Hudaifah said "It is said by the people of Kufa, 'the reading of Masud', and it is said by the people of Basra, 'the reading of Musa', (another Muslims Qur'an). By Allah! If I come to the commander of the faithful (Uthman), I will demand that they (the various Qur'ans) be drowned! Masud said to him, "Do so, and by Allah you will also be drowned, but not in water" - Ref: Abi Dawud "Kitab al Masahif" p. 13 
ஹுதைஃபா சொன்னார்: கூஃபாவாசிகள், "இது மஸ்வூத் அவர்களது ஓதுதல் என்கின்றனர், பஸ்ராவாசிகள், இது மூஸா அவர்களது ஓதுதல் என்கின்றனர். அல்லாஹ்வினால், நான் விசுவாசிகளின் தலைவராக இருந்தால், நான் இவைகளை மூழ்கடித்துவிடும்படி பணித்திருப்பேன்", மஸ்வூத் அவரிடம் சொன்னார்: "செய்யுங்கள், அல்லாவினால் நீங்களும் மூழ்கடிக்கப்படுவீர்கள். ஆனால் நீரில் அல்ல"

Masud said "I recited from the messenger of Allah seventy suras which I had perfected before Zaid Thabit had embraced Islam" - Abi Dawud "Kitab al Masahif" p. 17. 
மஸ்வூத் சொன்னார்: "நான் அல்லாவின் தூதரிடம் இருந்து எழுபது ஸூராக்களை ஓதியுள்ளேன், ஸைத் ஸாபித் இஸ்லாத்தை ஏற்கும் முன்பிருந்தே நான் அவைகளில் நேர்த்தியாயிருந்தேன்."

"I acquired directly from the messenger of Allah 70 suras when Zaid was still a child, must I now forsake what I acquired directly from the messenger of Allah?" - Abi Dawud "Kitab al Masahif" p. 15. 
"ஸைத் குழந்தையாக இருக்கும் போதே, நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து 70 ஸூராக்களை நேரடியாக பெற்றேன், அல்லாஹ்வின் தூதரிடம் இருந்து நான் நேரடியாக பெற்றவைகளை இப்போது கைவிட வேண்டுமா?"

The people have been guilty of deceit in the reading of the Qur'an. I like it better to read according to the recitation of him (Muhammad) who I love more than that of Zaid Thabit - Ibn Sa'd's "Kitab al-Tabaqat al-Kabir, vol 2, p.444 
"குர்ஆனை தப்பிதமாக ஓதிவருவதாக மக்கள் உணர்கின்றனர். நான் ஸைத் ஸாபித்தை விட முகமது ஓதிய வண்ணம் படிப்பதே நலமென்று விரும்புகிறேன்."

அப்துல்லா இப்னு மஸ்வூத் கூறுவது போல அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்களும் மறுப்பு தெரிவிக்கின்றார்,

Let none of you say “I have acquired the whole of the Qur’an”. How does he know what all of it is when much of the Qur’an has disappeared? Rather let him say “I have acquired what has survived.” - (As-Suyuti, Al Itqan fii Ulum al-Qur’an, p.524). 
"முழு குர்ஆனையும் பெற்றுவிட்டேன்" என உங்களில் எவரும் சொல்ல வேண்டாம், குர்ஆனின் பெரும்பாலான பகுதி காணாமற் போய்விட்ட நிலையில், அதில் முழுமையானது என்ன என்பது எப்படி ஒருவனுக்கு தெரியும்? அதற்கு பதிலாக, "குர்ஆனின் நிலைத்துள்ள பகுதிகளையே நான் பெற்றுள்ளேன்" என ஒருவன் கூறட்டும்.

இன்றுள்ள ஸைத் அவர்களின் குர்ஆன் தான் பாதுகாக்கப்பட்டதா? வாசகர்களே சிந்தியுங்கள்! ஏதோ ஒன்றை திரட்டி வைத்துவிட்டு காக்கப்பட்ட வேதம் என பெருமை பேசி கொள்வதில் எந்த பயனில்லை. முதலில், திரட்டப்பட்ட நூல் நேர்த்தியாக இருக்க வேண்டும்!

ஸைத் அவர்களது பிரதியில் உள்ள கோளாறுகள்:
தங்கள் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்ட காரணங்களால் பொறாமை கொண்டு மேற்கண்ட நபர்கள் அவதூறு கூறியதாக எண்ண வேண்டாம். உண்மையில் ஸைத் அவர்களது குர்ஆனில் பல கோளாறுகள் காணப்படுகின்றன. குர்ஆனில் இடம்பெற்று இருந்ததாக கூறப்படும் பல வசனங்கள், பகுதிகள், முழு அத்தியாயங்கள் இன்றைய குர்ஆனில் இருந்து காணாமல் போய்விட்டன. இன்று நம்மிடம் உள்ளது ஒரு அரைகுறை நூல் தான்! சில எடுத்துக்காட்டுகளை காணலாம்,

எடுத்துக்காட்டு 1:
சஹீஹ் முஸ்லிம் 1897: அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் பஸ்ரா (இராக்) நகரத்திலுள்ள குர்ஆன் அறிஞர்களிடம் (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். (அவர்களது அழைப்பை ஏற்று) குர்ஆனைக் கற்றறிந்த முன்னூறு பேர் அவர்களிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம் அபூமூசா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: பஸ்ராவாசிகளிலேயே நீங்கள் தாம் சிறந்தவர்கள் ஆவீர்கள்; அவர்களிலேயே குர்ஆனை நன்கறிந்தவர்களும் ஆவீர்கள். எனவே, (தொடர்ந்து) குர்ஆனை ஓதிவாருங்கள். காலம் நீண்டுவிட்ட போது உங்களுக்கு முன் வாழ்ந்த (வேதம் அருளப்பெற்ற சமுதாயத்த)வர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டதைப் போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிட வேண்டாம். நாங்கள் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ஓர் அத்தியாயத்தை ஓதிவந்தோம்; நீளத்திலும் கடுமை(யான எச்சரிக்கை விடுக்கும் தோரணை)யிலும் "பராஅத்" எனப்படும் (9ஆவது) அத்தியாயத்திற்கு நிகராக அதை நாங்கள் கருதினோம். ஆனால், அந்த அத்தியாயத்தை நான் மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும், அதில் "ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். மேலும், மற்றோர் அத்தியாயத்தையும் நாங்கள் ஓதிவந்தோம். அதை (சப்பஹ, யுசப்பிஹு, சப்பிஹ் என) இறைத்துதியில் தொடங்கும் அத்தியாயங்களில் ஒன்றுக்கு நிகராகவே நாங்கள் கருதினோம். அந்த அத்தியாயத்தையும் நான் மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும்,அதில் "நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அவ்வாறு நீங்கள் செய்யாததைப் பிறருக்குச் சொல்வீர்களாயின்) அது உங்களுக்கு எதிரான சாட்சியாக உங்களுடைய கழுத்துகளின் மீது எழுதப்படும். பின்னர் மறுமை நாளில் அது குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். (இந்த அத்தியாயங்கள் பின்னர் மாற்றப்பட்டுவிட்டன.)
இந்த ஹதீஸை கணக்கில் கொண்டால், இன்று நம்மிடம் உள்ள குர்ஆனில் இருந்து இரண்டு முழு அத்தியாயங்களே காணாமல் போய்விட்டன. இந்த ஹதீஸின் தமிழ் மொழிப்பெயர்ப்பில் பல்வேறு பொய்கள் வேறு கலந்துள்ளன. அவற்றையும் என்ன என்று இனி காணலாம்.

1) (இந்த அத்தியாயங்கள் பின்னர் மாற்றப்பட்டுவிட்டன.)
(இந்த அத்தியாயங்கள் பின்னர் மாற்றப்பட்டுவிட்டன.) என்று இறுதியில் கொடுக்கப்பட்ட குறிப்பு தமிழ் மொழிப்பெயர்ப்பாளரால் இணைக்கப்பட்டது. இத்தகைய வாக்கியம் எதுவும் உண்மையான ஹதீஸில் இல்லை. கீழுள்ள ஆங்கில வரிகளை கண்டால் இந்த பொய் விளங்கும்.
(2286) Abu Harb b. Abu al-Aswad reported on the authority of his father that Abu Musa al-Ash'ari sent for the reciters of Basra. They came to him and they were three hundred in number. They recited the Qur'an and he said: You are the best among the inhabitants of Basra, for you are the reciters among them. So continue to recite it. (But bear in mind) that your reciting for a long time may not harden your hearts as were hardened the hearts of those before you. We used to recite a Sura which resembled in length and severity tO (Sura) Bara'at. I have, however, forgotten it with the exception of this which I remember out of it: "If there were two valleys full of riches for the son of Adam, he would long for a third valley, and nothing would fill the stomach of the son of Adam but dust." And we used to so recite a Sura which resembled one of the suras of Musabbihat, and I have forgotten it, but remember (this much) out of it: "O people who believe, why do you say that which you do not practice" (lxi 2.) and "that is recorded in your necks as a witness (against you) and you would be asked about in on the Day of Resurrection" (xvii. 13)." (Sahih Muslim, translated by A. H. Siddiqi, Ashraf, Lahore, pp. 500, 501)
2) மாற்றப்பட்டவைகளை சேர்த்து எழுத வேண்டுமா? விட்டு விட வேண்டுமா?
இந்த அத்தியாயங்கள் பின்னர் மாற்றப்பட்டவிட்டன என என்னத்தையோ கூறி முஸ்லிம் சகோதரர்கள் சமாளிக்க முற்ப்பட்டுள்ளதை மேலே காணலாம். கீழுள்ள கேள்விகளுக்கு இஸ்லாமியர் எவரேனும் விடையளித்தால் நலமாயிருக்கும்.

அ) எந்த ஆதாரங்களை வைத்து இந்த அத்தியாயங்கள் மாற்றப்பட்டுவிட்டது என கூறுகின்றீர்?
ஆ) எதற்காக அல்லாஹ் இந்த அத்தியாயங்களை வழங்கிவிட்டு பின்னர் மாற்றி விட்டார்?
இ) சரி, நீங்கள் கூறுவது போல மாற்றப்பட்டுவிட்டது என எடுத்துக் கொண்டால், அதற்காக அந்த அத்தியாயங்களை குர்ஆனில் சேர்க்காமல் விட்டு விடலாமா?
ஈ) விட்டு விடலாம் என்றால் அதற்கான காரணம் என்ன என்று கூற முடியுமா?
உ) மாற்றப்பட்ட இந்த வசனங்களை விட்டு விட்டு, ஏன் மாற்றப்பட்ட பிற வசனங்களை மட்டும் சேர்த்து கொண்டீர்கள்? (சஹீஹ் புகாரி 4530)
சஹீஹ் புகாரி 4530: அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார், நான், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம், 'உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தருவாயில் இரு)ப்பவர்கள், தம் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்யட்டும்! ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டால் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மிகைத்தோனும் விவேகமிக்கவனும் ஆவான்' எனும் (திருக்குர்ஆன் 02:240 வது வசனம் குறித்து இந்த) இறை வசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (திருக்குர்ஆன் 02:234) மாற்றிவிட்டதே! இதை 'ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?' அல்லது 'இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே)விட்டுவைக்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்' என்று பதிலளித்தார்கள்.
மேற்கண்ட ஹதீசையும் கணக்கில் கொண்டால், இன்று நம்மிடம் உள்ள குரான் கறைப்பட்டது என்பது நிச்சயமாகும். சில மாற்றப்பட்ட வசனங்களை சேர்த்து எழுதியுள்ளனர், வேறு சில மாற்றப்பட்ட வசனங்களை விட்டு எழுதியுள்ளனர்! கோளாறுகள் நிறைந்த நூல் தான் காக்கப்பட்ட இறைவேதமா?

3) "மறக்கச்செய்யப்பட்டுவிட்டேன்"
மூன்றாவதாக, I have forgotten it என்பதை 'மறந்துவிட்டேன்' என்று மொழிபெயர்ப்பதற்கு பதிலாக 'மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன்' என்று மொழி பெயர்த்துள்ளார்கள். இதற்கு காரணம் இந்த அறிவிப்பை தருபவரை காக்க‌ வேண்டிதான். ஏன் எனில் முகமது கீழுள்ளவாறு ஒரு ஹதீஸில் கூறுகிறார்.
சஹீஹ் புகாரி 5039: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன் என்று ஒருவர் கூறுவதே அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். உண்மையில், அவர் மறக்கவைக்கப்பட்டுவிட்டார் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
அவர் மறந்துவிட்டாரா, மறக்கவைக்கப்பட்டாரா என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். அறிவிப்பாளர் என்ன கூறியுள்ளாரோ அதனை சரியாக மொழி பெயர்த்துவிடுங்கள். அது போதும்!

எடுத்துக்காட்டு 2:
உமர் இப்னு அல் கத்தாப் முகமது அவர்களின் நெருங்கிய தோழரில் ஒருவர். இரண்டாவது கலீபாகவாக செயல்பட்ட இவர், மதீனா வாசிகளிடம், குர்ஆனின் 24:2ஆம் வசனத்தை குறிப்பிட்டு கீழுள்ளவாறு வெளிப்படையாக கூறியுள்ளார். குரானின் 24:2 வசனம் விபச்சாரக் காரர்களுக்கு நூறு கசையடிகள் கொடுக்கும் படி கூறுகிறது. உண்மையில் அவர்கள் மீது கல்லெறி தண்டனை நிறைவேற்றும்படியே இந்த வசனம் இருந்ததாக உமர் தெரிவிக்கிறார்! பல்வேறு குறிப்புகள் இதனை உறுதி செய்கின்றன.
See that you do not forget the verse about stoning and say: We do not find it in the Book of Allah; the Apostle of Allah (may peace be upon him) had ordered stoning and we too have done so, after him. By the Lord Who holds possession of my life, if people should not accuse me of adding to the Book of Allah, I would have had this transcribed therein: “The adult men and women who commit adultery, stone them”. We have read this verse - (Muwatta Imam Malik, p.352) 
நீங்கள் இந்த வசனத்தை மறக்காதவாறு பார்த்து கொள்ளுங்கள், எங்களால் இதனை அல்லாஹ்வின் வேதத்தில் காண இயலவில்லை; அல்லாஹ்வின் தூதர் கல்லெறியும்படி உத்தரவிட்டுள்ளார், அவருக்கு பின்னரும் நாங்கள் இதனை செய்து வந்தோம். அல்லாஹ்வின் வேதத்தில் இடைசெருகல் செய்தவனாக என்னை மக்கள் தூசிக்காவிட்டால், என்னுயிரை தன்னிடம் கொண்டுள்ள இறைவனால், நான் அதில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பேன்: "விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் மீது கல்லெறியுங்கள்". இந்த வசனத்தை நாங்கள் வாசித்திருக்கிறோம்.
சஹீஹ் புகாரி 6829: இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார், உமர்(ரலி) கூறினார்: காலப் போக்கில் மக்களில் சிலர் 'இறை வேதத்தில் கல்லெறி (ரஜ்கி) தண்டனை காணப்படவில்லையே?' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறி விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். அறிந்துகொள்ளுங்கள்: திருமணமான ஒருவர் விபசாரம் புரிந்து, அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது நிச்சயமாகும். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'அறிந்து கொள்ளுங்கள்! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள். அவர்களுக்குப் பின் நாங்களும் அதனை நிறைவேற்றினோம்' (என்றும் உமர்(ரலி) கூறினார்). இவ்வாறு தான் நான் மனனமிட்டுள்ளேன்.
எடுத்துக்காட்டு 3:
மேற்கண்ட வசனத்தை போல, இன்னொரு வாக்கியத்தையும் காணவில்லை என உமர் கூறுகிறார்!
சஹீஹ் புகாரி 6830: காலப்போக்கில் மக்களில் சிலர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும். பிறகு, நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்: உங்களுடைய (உண்மையான) தந்தையரைப் புறக்கணித்து(விட்டு வேறொரு வரை தந்தையாக்கி விட வேண்டாம். அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி சொல்லலாகும்.
தற்போது நம்மிடம் உள்ள குர்ஆனில் இது போன்று இன்னும் நிறைய கோளாறுகள் நிறைந்துள்ளன. இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள மூன்றும் வெறும் எடுத்துக்காட்டுகள் தான்.

இந்த குர்ஆன் தான் தற்போது பாதுகாக்கப்பட்டதாக இஸ்லாமியர்களால் பெருமை பேசப்பட்டு வருகிறது! ஸைத் அவர்கள் எழுதிய குரானை விட சிறப்பாக எழுதிய பிற மக்களது பிரதிகளை எரித்து, பின்னர் ஸைத் அவர்களது குர்ஆனிலும் திருத்தங்கள் மேற்கொண்டு இயற்றப்பெற்றது தான் இன்றைய குர்ஆன். பல அத்தியாயங்களையும், வசனங்களையும் தொலைத்து விட்ட நூல் தான் இன்றைய காக்கப்பட்ட இறைவேதம்! உஸ்மான் அவர்களது கால குர்ஆனிலும் நமது தற்போதைய குர்ஆனிலும் கூட வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை இன்னொரு பதிவில் காணலாம்! சிந்திப்போருக்கு இதில் நிறைய அத்தாட்சிகள் உள்ளன.