இஸ்லாத்தின் சுய முரண்பாடுகள்
குர்ஆன் தனக்குத்தானே எவ்வாறு முரண்படுகிறது என்பதை கீழே தரப்பட்டுள்ள பட்டியல் சுருக்கமாக விளக்குகிறது. கீழே கணப்படும் எண்கள் குர் ஆனின் வசனங்களைக் குறிப்பிடுகிறது.
படைப்பாளன்
அல்லாஹ் மட்டுமே : 39:62, 40:62
படைப்பாளர்களில் சிறந்தவன் : 23:14, 37:125 (மற்ற படைப்பாளர்கள் யார்?)
படைப்பின் காரணம்
அல்லாஹ்வை வணங்குவதற்காக : 2:21, 51:56, 13:15
நரகத்திற்காக : 7:179, 50:30, 19:71
படைப்பினங்களிடமிருந்து எவ்வித
தேவைகளற்றவன் : 3:97, 35:15
பூமி மற்றும் வானங்களின் படைப்பு
பூமி முதலில் படைக்கப்பட்டது : 2:29, 41:9-12
வானம் முதலில் படைக்கப்பட்டது : 7:54, 10:3, 11:7, 32:4, 79:27-30
ஆறு நாட்களில் படைக்கப்பட்டது : 7:54, 10:3, 11:7, 25:59
எட்டு நாட்களில் படைக்கப்பட்டது : 41:9-12
‘குன்’ என்றால்உடனே உருவாகிவிடும் : 2:117, 3:59, 19:35
பூமி மற்றும் வானங்களின் வாரிசு
படைப்பினங்களிடமிருந்து பெறப்பட்டது : 3:180, 15:23, 19:40, 21:89, 28:58
அல்லாஹ்வே அனைத்திற்கும் உரிமையாளன் : 2:116, , 3:189, 9:116,10:55, 20:6, 21:19, 57:2 , 44:85
அல்லாஹ்வே அனைத்திற்கும் வாரிசு : 15:23
மனிதன் படைக்கப்பட்டது
தூசியிலிருந்து : 3:59
ஈரமான கருப்பு களி மண்ணிலிருந்து : 17:61, 38:71
சுடப்பட்ட களி மண்ணிலிருந்து : 15:26
அல்லாஹ்வின் இருகைகளால் : 38:75
தண்ணீரிலிருந்து : 21:30
எதுவுமாக இல்லாத நிலையிலிருந்து : 19:9, 19:67
எதுவுமாக இல்லாத நிலையிலிருந்து படைக்கப்படவில்லை : 52:35
‘குன்’ என்றால்உடனே உருவாகிவிடும் : 2:117, 3:59, 19:35
அல்லாஹ்விற்கு வாரிசு
அவன் நாடினால் தன்னிலிருந்தே
உருவாக்க முடியும் : 39:4
(பெண்) துணை இல்லாததால் வாரிசு இல்லை : 6:101-102
அல்லாஹ்வின் ஆணையால் மரியம் (ஆண்) துணையின்றி தாயானார் : 19:21
‘குன்’ என்றால் உடனே உருவாகிவிடும் : 2:117, 3:59, 19:35
பாதுகாவலர்களும் நண்பர்களும்
அல்லாஹ் மட்டுமே : 2:107, 5:55, 9:116, 17:111, 29:22, 32:4, 42:28
வானவர்கள் : 13:11, 41:31-32, 82:10
நபிமார்கள் : 5:55, 13:11
நம்பிக்கையளர்கள் : 9:71,
கிருஸ்துவர்கள் : 5.82
வேதங்களின் நிலை
மக்காவிற்கும் அதை சுற்றியிருக்கும் பகுதி மக்களுக்காகவும் : 42:7
அகிலம் முழுவதற்கும் : 38
நன்கு விவரிக்கப்பட்டுள்ளது : 2:85, 2:159, 3:138, 6:103,6:116,10:37, 16:89
பல பொருள் தரும் வசனங்கள் உள்ளது : 3:7
யூதர்களும் கிருஸ்துவர்களும் மாற்றிவிட்டனர் : 2:75 79, 3:78, 3:187, 4:46, 5:13, 5:41, 41:43, 7:162, 9:169
யாரும் மாற்ற இயலாது : 6:34, 6:115, 10:64,
அல்லாஹ் மாற்றுவான் : 2:106, 13:39, 16:101
மறுப்பாளர்களுக்கு சவால்
ஒரு அத்தியாயத்தைக் கொண்டுவர முடியுமா? : 2:23, 10:38
பத்து அத்தியாயங்களை கொண்டுவர முடியுமா? : 11:13
முழு குர்ஆனைக் கொண்டுவர முடியுமா? : 17:88, 52:34
இரண்டு வேதங்களைக் கொண்டுவர முடியுமா? : 28:49
மனிதனுடைய செயல்களுக்கு காரணம்
மனிதனின் அறிவே : 2:6, 4:79, 6:12, 6:149, 8:55, 11:118,30:9, 42:30
சைத்தான் : 4:120, 38:41
அல்லாஹ்வின் விதி : 2:6-7, 2:272, 4:78, 6:9, 57:22, 36:7…
அல்லாஹ்வின் ஒருநாள் என்பது மற்றும் மறுமை நாளின் அளவு என்பது
1,000 ஆண்டுகள் : 22:47
50,000 ஆண்டுகள் : 70:4
யூதர்களும் கிருஸ்துவர்களும்
அவர்களின் செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பளிக்கப்படும் : 2:62, 2:139
நிரந்தரமான நரக தண்டனை : 4:150-151, 9:17, 9:30
அவர்கள் கொல்லப்படவேண்டும் : 5:33, 5:54, 8:39, 9:5, 9:29, 47:4,
நெருங்கிய நண்பர்கள் : 5:82
(கிருஸ்துவர்கள்)எதிரிகள் : 3:118, 5:51, 5:57, 5:82 (யூதர்கள்),
58:14, 60:13
அவர்களை மன்னிக்கவும் : 5:13
அவரவர் பாதை அவரவர்களுக்கு : 109:6
அவர்களின் பெண்களைத் திருமணம் செய்யலாம் : 5:5, 9:30
அவர்களின் பெண்களைத் திருமணம் செய்யக்கூடாது : 2:221, 60:10
நபிமார்களின் நிலை
நபிமார்களிடையே பேதம் பார்க்கக்கூடாது : 4:152
அவர்களிடையே தகுதி வேறுபாடு இருந்தது : 2:253, 17:55
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டனர் : 16:36, 29:27, 35:24
சமுதாயத்தின் மொழியிலே அனுப்பிவைக்கப்பட்டனர் : 14:4
அரேபியர்களிடையே அனுப்பப்படவில்லை : 28:46, 32:3, 34:44, 36:6
நபி ஈஸா இறக்கவில்லை : 4:157, 4:158
நபிமார்களுக்கும் மரணம் உறுதியானது : 3:144, 23:15, 39:30
நபி யூனுஸ் வெட்டவெளியில் வீசப்பட்டார் : 37:145
நபி யூனுஸ் வெட்டவெளியில் வீசப்படவில்லை : 68:49
பத்ரு போரில்
1000 வானவர்கள் : 8:9
3000 வானவர்கள் : 3:124
5000 வானவர்கள் : 3:125
தீர்ப்பு நாளில்
எவருடைய பரிந்துரைகளும் ஏற்கப்படமாட்டாது : 2::48, 2:123, 2:254, 6:51, 78:37
பரிந்துரைகள் ஏற்கப்படும் : 10:3, 34:23, 20:109, 21:23, 53:56
நரகத்தில் மறுப்பாளர்களுக்கு உணவு
ஜக்கூம் பழம் மட்டுமே : 37:62 – 66
தரி என்ற முள் வகை மரம் மட்டுமே : 88:6
துர்நாற்றமான சீழ் மட்டுமே : 69:36
இன்னும் நிறைய உள்ளது…
சிலவற்றை கொஞ்சம் விளக்கமாக பார்ப்போம்.
25:54. இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.
6:2. அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்; இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது; அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்.
35:11. அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.
22:47. (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.
70:4. ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.
5:72. “நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
5:69. முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
குர்ஆன் பத்தின அடிப்படை அறிவு(?)(!)...
குர்ஆன் இறைவேதம்னு "நம்பனும்"... (ஆதாரம் :- 2:1,2 )
இதை கொஞ்சம் விளக்கமா பார்த்திடுவோம்..
2:1 அலிஃப், லாம், மீம், அதாவது அல்லாஹுதாலா (இந்த அல்லாஹ்தாலா - பெரிய இறைவன் வேற யாருமில்ல. பழைய சந்திரக்கடவுள் (ஹூபால்), இப்போதைய அல்லாஹ்..), வானவர் ஜிப்ரீல் - அலைஹிஸ்ஸலாம் - அவர்கள் மூலமாக, நபி முஹம்மது அவர்களுக்கு அருட்செய்த திருக் குர்-ஆனாகிய,
2:2 இது, திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு நேர்வழிகாட்டியாகும்.அதாவது நம்ம க.கா.கே என்ன சொல்றாருன்னா... அல்லாஹ் ஜிப்ரியேலை தன்கிட்ட அனுப்பி... உலக (அரேபியா மட்டும்தான்.) மக்களுக்கு இது, தான் கொடுக்கும் வேதம்னு முகம்மதுவை சொல்லச்சொன்னாப்டியாம்... அல்லாஹ் முகம்மதுவை நோக்கி ஆகுகன்னு சொல்லியிருந்தா வேலை சட்டுன்னு முடிஞ்சிருக்குமேன்னு காபிர்தனமாக கேட்காதீர்கள்.. அல்லாஹ்வுக்கு அன்னிக்கு தொண்டை கட்டிக்கிச்சாம்.. அதனாலதான் ஜிப்ரியேலை செட்டப் பண்ணியிருக்காப்டி. இதுபற்றிய வஹீ எனக்கு இப்போதான் வந்திச்சு.. )குர்ஆன் அல்லாவே இறக்கினதுன்னு "நம்பனும்"... (மேலே உள்ள விளக்கம்தான் இதுக்கும்... கூடவே இன்னொரு வசனம் 41:42 ... )
குர்ஆன்-ல மெக்கா-மதீனா-மெக்கா வசனங்கள் பல இடத்தில் இடிச்சுக்கிட்டாலும்... அதெல்லாம் காலத்துக்கு ஏற்ப 23 வருசத்து வேறுபாட்டால வந்தது. ஆனால் அதெல்லாம் முரண்பாடு இல்லைன்னு "நம்பனும்"...
மெக்கா (முகம்மது ஹிஜ்ரத்-க்கு முன்பு) அத்தியாயம்--109; மதீனா (முகம்மது ஹிஜ்ரத்-க்கு பின்பு) அத்தியாயம்--09; குகைக்குள்ள வானத்துக்கும் பூமிக்குமாக ஜிப்ரியேல் நின்னதை "நம்பனும்".
வானத்துக்கும் பூமிக்குமாக நின்ன ஜிப்ரியேல் முகம்மதுவை கட்டிப்பிடிச்சதை "நம்பனும்"... அத்தியாய வசனம் 96:1... , 74:1-5
இதையும் கொஞ்சம் விரிவாக பார்ப்போம்..ஏன்னா.. முகம்மதுங்கிற காபிர், முமீன் ஆகிய கதையையோட முதல் இடம் இதுதான்..
96:1 படைத்த உமது இறைவனின் திருப்பெயரால் ஓதுவீராக!ஏன்?.. எங்கே ?.. எப்படி?..
:- முகம்மது-ங்கிற கோவில் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட காபிர் ( புஹாரி:- 364 )... 40 வயசுல ஜிப்ரியேல் மூன்றாம் முறையாக கட்டிப்பிடிச்சு ஓதச்சொல்ல... முகம்மது முமீன் ஆகி ஓத ஆரம்பிச்சாப்டி.. (புஹாரி:- 3, 4, 4953, 6982 மற்றும் முஸ்லிம்:- 252,253,254,255,256,257,258) அப்புறம் சிலநாட்கள் இடைவெளியில் மீண்டும் வஹீ் வர ஆரம்பிச்சது.. (74:1-5 படிச்சிட்டு புஹாரி , முஸ்லிம் ஹதீஸ் வசனங்களை படிச்சு சிரிச்சீங்கன்னா... அல்லாஹ் உங்களை நரகத்துல போட்டுருவாரு...)
நிகரற்ற அன்புள்ள அல்லாஹ் நரகத்தை படைச்சதை "நம்பனும்"... ( 1:1 ) , ( 7:179 )
நரகத்துக்கு போறது மனிதனோட தப்புன்னு "நம்பனும்"... (4:140 , 7:8, 9 , 11:119 , 18:100) மற்றும்.... 23: 102, 103. [[ 103: ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்.]]
அதே நேரத்தில் அல்லாஹ் நாடாமல் யாராயிருந்தாலும் தனக்குத்தானே எந்த நன்மையையோ, தீமையையோ செய்து கொள்ள முடியாதுன்னு "நம்பனும்"...(4:78, 4:79, 5:76, 6:71, 7:188, 10:18, 10:49, 10:106, 13:16, 20:89, 21:66, 25:3, 25:55, 26:73, 34:42, 72:21)
அவரவர்க்கு அவரவர் மதம்னு சொல்வதாக "நம்பனும்"... (109:6)
பிறமதத்தவர்கிட்ட ஜிஸ்யா வசூல் பண்ண சொல்வது சரின்னும் "நம்பனும்"... (9:29)
சாராயம், விபச்சாரம் மற்றும் இன்னபிற போதை வஸ்துகள் எல்லாம் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டதுன்னு "நம்பனும்"... (2:219, 5:90,91)
அதே நேரத்தில் சாராயம் காய்ச்சும் முறை பற்றியும், விபச்சாரத்தில் ஈடுபடுவது பற்றியும் அல்லாஹ் அல்லாத யாராலும் கற்பிக்க முடியாதுன்னு "நம்பனும்"...வேறு யாரும் கற்பித்ததாக சொன்னாலும் அவர்களுக்கும் அல்லாஹ்வே அதை கற்பித்ததாக "நம்பனும்"... (12:36, 12:41, 16:67, 47:15, 83:25 மற்றும் மேலுள்ள நன்மை , தீமைக்கான எண்களையும் சேர்த்துக்கோங்க)
குர்ஆன்படி விபச்சாரம் தப்புன்னு "நம்பனும்"... (4:16, 25, 17:32, 60:12)
ஆனால் அடிமைப்பெண்களை புணருவது விபச்சாரமில்லைன்னு "நம்பனும்"... (4:3, 23:6, 33:50,52 , 70:30)
நேரடி ரத்தபந்த திருமணம் தவறுன்னு "நம்பனும்"... (4:23)
அதேநேரத்தில் ஆதாமுக்கு ஹவ்வா நேரடி ரத்தபந்த உறவு இல்லைன்னும் " நம்பனும்"...ஆதாமோட பிள்ளைகளுக்கு நடுவில் நேரடி ரத்தபந்த உறவு இல்லைன்னும் "நம்பனும்".. (4:1)
கணவன் இறந்த பிறகு மனைவிக்கு மறுவிவாகம் என்பது பெண்ணுக்கு உடல் இச்சை மற்றும் சமூகரீதியான ஆதரவுன்னு "நம்பனும்"... (2:232)
ஆனால் இந்த ஆதரவு முகம்மதுவின் மனைவிகளுக்கு தேவைப்படாது என "நம்பனும்"... (33:53)
முகம்மது ஈமாந்தாரிகளுக்கு தந்தை இல்லைன்னு "நம்பனும்"... (முகம்மதுவின் பிள்ளைகள் உட்பட)... (33:40)
ஆனால் முகம்மதுவின் மனைவிகள் ஈமாந்தாரிகள் அனைவருக்கும் அன்னைன்னு "நம்பனும்"... (முகம்மதுவின் மாமனார்கள் உட்பட)... (33:6)
வளர்ப்பு மகனோட மனைவிமேல் இச்சை கொண்டு மணமுடிப்பது தவறில்லைன்னு "நம்பனும்"...(33:37)
ஆனால்... வளர்ப்பு மகனின் மனைவி, பால் ஊட்டிய வளர்ப்பு தாய் மக்கள்னு எந்த பந்தமும் இல்லாட்டியும், மற்ற ஈமாந்தாரிகள் முகம்மதுவின் மனைவிகளை தங்களுக்கு அன்னைன்னு "நம்பனும்"...(33:53)
தாய், சகோதரி உறவல்லாத எந்த பெண்ணை வேண்டுமானாலும் முகம்மது மணமுடிக்கலாம் என "நம்பனும்"...(33:50)
திருமணம் அல்லாது, பிற பெண்கள் முகம்மதுவுடன் உடலுறவு கொள்ளவும் முடியும்னு "நம்பனும்"...(33:52)
ஆனால் அது விபச்சாரம் கிடையாதுன்னு "நம்பனும்"...(33:50)
இத்தனை "நம்பனும்"களுக்கு மேலே கட்டமைக்கப்பட்ட குர்ஆன்-ல எந்த முரண்பாடுமே இல்லைன்னு "நம்பனும்"... (4:82)
சிலகேள்விகள்:-
1) அல்லா நாடினால் எனக்கு நேர்வழி கிடைக்குமா?..நான் ஆராய்ந்தால் எனக்கு நேர்வழி கிடைக்குமா?
2) அல்லா வானத்தை முதல்ல படைச்சாரா?பூமியை முதல்ல படைச்சாரா?
3) வானத்தையும் , பூமியையும் முன்மாதிரி இன்றி என்றால்... (2:117 , 6:101)உயிரினங்களை முன்மாதிரி கொண்டுதான் படைச்சாப்டியா?
4) மனைவி எவரும் இல்லாதிருக்க என்றால்.... (6:101) அல்லாஹ் ஆணா?
5) வான"ங்களு"ம், பூமி மட்டுமே இணைந்திருந்தது என்றால்... (21:30) சூரியன், சந்திரன்... பிற கோள்கள் எல்லாம்... எங்க இருந்திச்சாம்?
6) களைப்பாற இரவு என்றால்.. (6:96)நைட்ஷிப்ட் பாக்குறவன் பகல்லதானே தூங்குவான்/ களைப்பாறுவான்.அவனுக்கு இந்த குர்ஆன் வசனம் பொருந்தாதா?
7) வான"ங்களை" தூண் இன்றி என்றால்... (13:2) பிற கிரகம்லாம்... அதாவது.. சூரியன், சந்திரன், பூமி மற்றும் பிற கிரகங்கள் எல்லாம் பாலம் போட்டு இணைக்கப்பட்டுள்ளதா?வானம் , வானங்கள் என்றால் என்ன?
8) மொத்த வானங்களில்... (13:2)எந்த வானத்திலிருந்து மழை பொழிகிறது?... (2:22)
9) ஒவ்வொன்றும் வட்டவரைக்குள் நீந்துகின்றன எனில்..(21:33)பூமியில் விழும் விண்கல், எரிநட்சத்திரம்--வால் நட்சத்திரம் என்பதெல்லாம் என்ன?
10) 5) வான"ங்களு"ம், பூமி மட்டுமே இணைந்திருந்தது என்றால்... (21:30) சூரியன், சந்திரன்... பிற கோள்கள் எல்லாம்... எங்க இருந்திச்சாம்?...
9) ஒவ்வொன்றும் வட்டவரைக்குள் நீந்துகின்றன எனில்..(21:33)பூமியில் விழும் விண்கல், எரிநட்சத்திரம்--வால் நட்சத்திரம் என்பதெல்லாம் என்ன?பார்ப்போருக்கு அலங்காரமாகவும்... (15:16)விண்கல் பூமியில் விழுவது அலங்காரமா?...https://youtu.be/V2TmJZZQfrohttp://www.jaffnamuslim.com/2013/02/400.html?m=1இது என்ன?...
11) ஆனால் குர்ஆன் வானத்துக்கும், பூமிக்கும் மட்டுமே முன்மாதிரி இல்லை என்று சொல்கிறது. (2:117, 6:101)அப்படியானால் உயிரினம்?...79:27 என்ன சொல்லுது?அந்த வசனம் பொய்யா?..
12) மண்ணிலிருந்து படைத்துதான் குன் அப்படின்னு சொன்னா ஆகும் என்றால் (3:59) பின்ன எதுக்கு குன்?குன் சொன்னாலே ஆகும்னா பின்ன எதுக்கு மண்?3:47, 16:40, 19:35, 36:82, 40:68இந்த வசனங்கள் என்ன சொல்லுது?
13) அல்லாஹ் தேவையற்றவன்... (112:2)ஜிப்ரீல் யாரு?... அல்லாஹ்வோட மனைவியா பாய்?... 19:16--21 மற்றும் 66:12 என்ன சொல்லுது ?
அல்லாஹ்வின் வசனங்கள் முஹம்மது நபி அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறே இறங்கியது அல்லது இட்டுக்கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்களின் பதில்
தன் பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்கவேண்டுமென பெரிதும் விரும்பினார்கள்.
நீ விரும்புபவரை எல்லாம் உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது (28:56) என்ற வசனம் இறங்கியது.
உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்களின் அவர்களின் பல் உடைந்தபோது எதிரிகள் எப்படி உருப்படுவார்கள்? என்று கோபப்பட்டார்கள்.
உமக்கு அதிகாரத்தில் யாதொருபங்குமில்ல (3:128) என்ற வசனம் இறங்கியது.
குருடர் ஒருவரது விஷயத்தில் நபியின் அணுகுமுறையைக் கண்டித்து (80:1) வசனம் இறங்கியது.
செல்வந்தர்களுக்கும், உயர் குலத்தவர்களுக்கும் தனி மதிப்புத் தரலாம் என்று விரும்பிய போது (6:52) வசனம் இறங்கியது.
கைதிகளை என்ன செய்யலாம் என்ற விஷயத்திலும், பெண்களின் ஆடைகள் பற்றியும், நயவஞ்சகர்களுக்கு தொழுகை நடத்துவது பற்றியும் இவரது விருப்பம் வேறாக இருந்தது. இவரது தோழரான உமருடைய விருப்பம் நோற்பது, தன் சுகத்தைத் தியாகம் செய்வது போன்ற காரியங்களை இயல்பிலேயே எவரும் விரும்ப மாட்டார்கள். அவற்றைச் செய்யுமாறு அவருக்கும் சேர்த்தே கட்டளை வருகிறது.
குர்ஆன் முழுவதும் அல்லாஹ்வின் வார்த்தைகளே முஹம்மது இட்டுக்கட்டிக் கூறவில்லை. வேத வசனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்பதைத் குறிப்பிடும் வசனங்கள்.
1. முஹம்மத் நம் மீது எதையாவது இட்டுக்கட்டிக் கூறி இருப்பாரானால் வலக்கரத்தால் அவரைப்பிடித்து அவரது நாடிநரம்புகளைத் துண்டித்திருப்போம்.
(குர்ஆன் 69:44)
2. நாமே இந்த போதனையை அருளினோம் அதை நாமே பாதுகாப்போம்.
(குர்ஆன் 15:9)
3. ஓதுவதற்காக அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர் அதைத்திரட்டி (உம் உள்ளத்தில்) பதியச் செய்வதும், ஓதச் செய்வதும் நம்முடைய வேலையாகும்.
(குர்ஆன் 75:16)
4. முஹம்மது தம் இச்சைப்படி பேசமாட்டார், அது இறைவனால் அறிவிக்கப்பட்ட செய்தியைத்தவிர வேறு இல்லை.
(குர்ஆன் 53:3)
மேற்கண்ட குர்ஆன் வசனங்கள், முஹம்மது நபி அவர்கள் பொய்யுரைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களாக முன்வைக்கப்படுகிறது. இவர்களது இந்த பதில் பகுத்தறிவிற்கு ஏற்புடையதா? என்று சிந்தித்துப் பாருங்கள். குர்ஆனில் உள்ள ஒவ்வொரு சொல்லும் இறைவனின் வாக்கு என்று நிரூபித்தால் மட்டுமே இவர்களது பதிலை ஏற்க முடியும்.
இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கங்களுக்கு சுருக்கமான முறையில் மறுப்புகள்.
ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு, ரமளான் மாதம். மக்காவினுள் நுழையும் நாளுக்கு முந்தைய இரவு. நபிகள் தன் தோழர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அதைக் குறிப்பிட்டார்கள். “மக்காவில் நான்கு பேர் இருக்கிறார்கள். உருவ வழிபாட்டில் மிகவும் மூழ்கிப் போயிருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன்”.
“அல்லாஹ்வின் தூதரே, யார் அவர்கள்?” தோழர்கள் கேட்டார்கள்.
“அத்தாப் இப்னு உஸைத், ஜுபைர் இப்னு முத்இம், ஹகீம் இப்னு ஹிஸாம், சுஹைல் இப்னு அம்ரு”
அந்த விருப்பம் வீணாகவில்லை. நிறைவேறியது, முழுவதுமாய் நிறைவேறியது. பின்னர் அந்த நால்வருமே இஸ்லாத்தினுள் நுழைந்தனர்.
அபூதாலிப், முஹம்மதின் போதனைகளை ஏற்க வில்லை எனினும், எதிரிகளிடமிருந்து முஹம்மதை கண்ணும் கருத்துமாக பாதுகாத்தார். இதற்காக முஹம்மதுவிடம் எவ்வித பிரதிபலனையும் அவர் எதிர்பார்க்கவில்லை. அத்தாப் இப்னு உஸைத், ஜுபைர் இப்னு முத்இம், ஹகீம் இப்னு ஹிஸாம், சுஹைல் இப்னு அம்ரு ஆகியவர்களை விட அபூதாலிப் மோசமானவரா? முஹம்மதிற்காகவே இப்பிரபஞ்சத்தையே படைத்தவனால் ஒரு அபூதாலிப்பின் கொள்கை உறுதியை உடைத்து தனது அன்பிற்கும் ஆசைக்கும் உரிய தூதரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லையா?
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முஹம்மது விரும்பியவர்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் உள்ளனர். அதைப் புறக்கணித்தவர்களும் உள்ளனர் என்பதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. அந்த நால்வரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது கூட சூழ்நிலையின் நிர்பந்தம்.
நீ விரும்புபவரை எல்லாம் உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது (28:56) என்ற வசனம், தன்னை மிகுந்த அன்புடன் பாதுகாத்தவரே தன்னை அல்லாஹ்வின் தூதரென்று நம்பவில்லையே என்று முஹம்மது அடைந்த விரக்தியின் உச்சக்கட்ட வெளிப்பாடு என்பதைத்தவிர வேறில்லை!
உஹது போரில் ஏற்பட்ட தோல்விக்கு காரணமாக யாரைக் குறைகூறுவதென்று தெரியாமல், முதலில், போரில் பின் வாங்கியவர்களையும், அவர்களது ஈமானையும், பிறகு வழக்கம்போல சைத்தானையும், அல்லாஹ்வின் சோதனை என்றும் புலம்பிய குர்ஆனின் வசனங்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.
தனது முடிவுகளை அடிக்கடி மற்றிக் கொள்ளும் இயல்புடைய முஹம்மதிற்கு, குருடரின் விஷயத்திலும் செல்வந்தர்களின் விஷயத்திலும் தனது முடிவை மற்றிக் கொண்டதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.. தன்னைத் தேடிவந்த குருடரைப் புறக்கணித்து, வலியச் சென்று செல்வந்தரிடம் பேசியது பயனளிக்கவில்லையே என்ற முஹம்மதின் புலம்பல்தான் அது. (தனது சுட்டுவிரலை தனது முகத்திற்கு எதிரே சுட்டிக் காண்பித்தவாறு “உனக்கு இது தேவையா… தேவையா …?” என்று வடிவேலு தன்னைத்தானே நெந்துகொள்ளும் காமெடி கட்சியை கற்பனை செய்து கொள்ளவும்…!)
முந்தின வேதங்களை மாற்றியதாக அல்லாஹ்வால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் எத்தனை பேர்களது நாடிநரம்புகளை வலக்கரத்தால் பிடித்து துண்டித்திருக்கிறான்? ஒருவரும் தண்டிக்கப்படவில்லை!
முஹம்மது தம் இச்சைப்படியே பேசினார், தம் இச்சைப்படியே வாழ்ந்தார். குர்ஆன் இறைவனின் செய்திஅல்ல என்பதை நிருபிக்கவே இவ்வளவு ஆதாரங்களையும் குர்ஆனிலிருந்து எடுத்து முன்வைக்கிறேன்.
மீணடும் “அது இறைவனால் அறிவிக்கப்பட்ட செய்தியைத்தவிர வேறு இல்லை.” என்ற குர்ஆன்வசனத்தையே சுட்டிக் காட்டி, குர்ஆன் இறைவனின் வார்த்தைகள்தான் என்று சிறுபிள்ளைத்தனமாக விளக்கம் கூறுகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தான் குற்றவாளி இல்லை என்று கூறுவதை மிக முக்கியமான ஆதாரமாகக் கொண்டு அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று வாதிடுவதைப் போன்று உள்ளது.
குர்ஆன் வசனங்களை அல்லாஹ் கூறுவதையோ அல்லது ஜிப்ரீல் மூலம் கூறப்பட்டதையோ ஒருவரும் கண்டதில்லை. முஹம்மது நபியின் வாய்மொழி மட்டுமே ஆதாரம். அவர் பொய்யுரைத்திருக்க மாட்டார் என்று நம்புகிறார்கள் அல்லது நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள். குர்ஆன் வசனங்களிலுள்ள பலவிதமான முரண்பாடுகள், குர்ஆன் சர்வ வல்லமையுடைய இறைவனின் வார்த்தைகளாக இருக்க முடியாது என்பதற்கு ஆதாரங்களாகின்றன.
“இந்தக் குர்ஆனை ஆய்ந்துணர வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடம் இருந்துள்ளதாக இது இருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்”
(குர்ஆன் 4:82)
குர்ஆனின் இந்த கருத்தின்படி குர்ஆன் இறைவனின் வார்த்தைகளல்ல. அறிவியல் மற்றும் சமுக வாழ்க்கைச் செய்திகளிலும் நான் கண்ட சில முரண்பாடுகளை மட்டும் உங்கள் முன் வைத்து விட்டேன் பதில் என்ன?
மேற்கண்ட குழப்பங்களைப் பற்றி சிலரிடம் விளக்கம் பெற முற்பட்டவுடன்,
நம் திருவசனங்களைப் பற்றி வீண் விவாதத்தில் மூழ்கியிருப்போரை நீர் பார்த்தால். அது அல்லாத வேறு விஷயத்தில் அவர்கள் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணித்து (ஒதுங்கி) விடுவீராக ; …
(குர் ஆன் 6:68)
என்ற வசனத்தை முன் நிறுத்தி, என்னையும் 72 கூட்டத்தில் ஒரு கூட்டமாக (அவர்கள் குறிப்பிட்ட குழுவின் பெயர் நினைவில் இல்லை) கருதி பதில் சொல்லாமல் நழுவி சென்று விட்டனர். சிலர் முஹம்மது நபி அவர்களைப் பற்றி விமர்சிக்க நீ யார்? அதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்கின்றனர். சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பதற்கென்று ஏதாவது சிறப்புத் தகுதிகள் வேண்டுமா?
குர்ஆனின் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டுவது வீண் விவாதங்களாம். குர்ஆனில் முரண்பாடுகளே இல்லையெனில் அதைப் பற்றி விவாதிப்பதற்கு அச்சம் ஏன்? Internet என்ற பாதுகாப்பான ஊடகம் மட்டும் இருப்பதனால் இணையதளங்களில் முஹம்மது அவர்களைக் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுமேடைகளில் பகிரங்கமாக இஸ்லாமை விமர்சி்க்க வழியில்லை.
சிலர், உங்களது கேள்விகள் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் நேரிடையாக போர் செய்வதைப் போன்றது என்றனர். அதாவது, குர்ஆனை ஆராய்சிகள் செய்யலாம், ஆராய்ச்சிகள் குர்ஆனுக்கு ஆதரவாக மட்டுமே இருக்க வேண்டும். நடுநிலையாகவோ, குறை கூறும் விதமாகவோ முடிவுகளைக் கூற கனவிலும் கூட நினைக்கக் கூடாது. முரண்பாடுகளைப் பற்றி வாய் திறக்கக் கூடாது. ஒருவேளை முரண்பாடுகளைப்பற்றி விவாதித்தால் அது வீண் வேலை என்று புறக்கணித்து விடுவார்கள். மேலும் அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் எதிராகப் போர் செய்பவராகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுவார்கள்.
எங்களைப் போன்றவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் குர்ஆனும் விழி பிதுங்கி, அத்தகையவர்களைக் கொடூரமாக கொலை செய்யுமாறு உத்தரவிடுகிறது.
அல்லாஹ்வுடனும் அவன் ரஸூலுடனும் போர் செய்து கொண்டு பூமியில் குழப்பத்தை உண்டாக்கித் திரிபவர்களுக்குரிய தண்டனையானது கொல்லப்படுதல் அல்லது மாறுகால் மாறுகை வாங்கப்படுதல்…
(குர்ஆன் 5: 33)
Sahih Bukhari Volume 9, Book 84, Number 57: Narrated ‘Ikrima:
Some Zanadiqa (atheists) were brought to ‘Ali and he burnt them. The news of this event, reached Ibn ‘Abbas who said, “If I had been in his place, I would not have burnt them, as Allah’s Apostle forbade it, saying, ‘Do not punish anybody with Allah’s punishment (fire).’ I would have killed them according to the statement of Allah’s Apostle, “Whoever changed his Islamic religion, then kill him.”
இதில் போர் எனக் குறிப்பிடப்படுவது, முஹமம்மதிற்கு எதிரான அனைத்து விதமான செயல்களையும் குறிப்பிடும்.
முஹம்மது நபியின் செயல்களும், போதனைகளும் முரண்பாடற்றவைகளே எனில், மரண தண்டனைகளுக்கான அவசியம் என்ன? எதற்காக மாறுகால் மாறுகை வாங்கி கொல்ல உத்தரவிட வேண்டும்? முஹம்மது நபியின் செயல்கள் முரண்பாடற்றவைகள் என்பதில் உறுதியானவர்களாக இருந்தால், அதை பகிரங்கமாக விவாதிப்பதற்கு எதற்காக தயங்க வேண்டும்?
நடைமுறை வாழ்க்கையில், விவாதத்திற்கு சரியான பதில் செல்ல கையாலாகாத முரடர்கள் கோபமடைந்து எதிராளியைத் தாக்குவார்கள். அப்படியானால், நிச்சயமாக இந்தக் கட்டளை எல்லாம் அறிந்த இறைவனின் சொல்லாக இருக்க முடியாது. இது கையாலாகாத ஒரு முரட்டு மானிடப் பிறவியிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறலாம்.
இது மனிதர்களுக்கு விளக்கமாகவும் நேர்வழி காட்டியாகவும் பயபக்தியாளர்களுக்கு நற்போதனையாகவும் இருக்கிறது
(குர்ஆன் 3:138)
அவர்கள் பயபக்தியுள்ளவர்களாவதற்காக கோணலில்லாத அரபிமொழியில் குர்ஆனை (அருளியுள்ளோம்)
(குர்ஆன் 39:28)
உண்மையிலேயே குர்ஆன் தெளிவான, கோணலில்லாத நேர்வழிகட்டும் புத்தகமாக இருந்தால் கேள்விகளும் சந்தேகங்களும் எப்படி உருவாக முடியும்? நீண்ட நெடிய தப்சீர் (குர்ஆன் விரிவுரை) குறிப்புகளின் துணையுடன்தான் அல்லாஹ்வின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியுமென்றால், குர்ஆன் கோணலில்லாதது, விளக்கமானது, மனிதர்களுக்கு நேர்வழிகாட்டி என்று அல்லாஹ் கூறுவது பொய்தானே? அல்லாஹ்விற்குத் தெளிவாகப் பேசத் தெரியாதா?
குர்ஆன் விளக்கமானது என்று அல்லாஹ் கூறிய பின்னரும், தப்சீர்கள் என்ற பெயரில் விளக்க உரைகளையும், அந்த தப்சீர்களுக்கு விரிவுரைகளையும் கூறிக் கொண்டிருப்பவர்களை என்னவென்று அழைக்கலாம்? இவர்கள் அல்லாஹ்வை விட புத்திசாலிகளா? உண்மையில், குர்ஆன் இறைவனின் சொல்லாக இருப்பின் புத்திபேதலித்தவனால் கூட எளிதாக புரிந்து கொள்ள முடியும். எவரும் விரிவுரைகளும், விளக்கவுரைகளும் எழுத வேண்டிய அவசியமில்லை. இவ்வளவு விரிவுரைகளும், விளக்கவுரைகளும் எழுதவேண்டிய அவசியம் என்ன?
குர்ஆனிலுள்ள முரண்பாடுகளையும் அபத்தங்களையும் மறைப்பதற்காகவே மீண்டும் மீண்டும் விரிவுரைகளும், விளக்கவுரைகளும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். குர்ஆன் எல்லாம் அறிந்தவனும், ஞானமிக்கவனும், நுண்ணறிவாளனுமாகிய இறைவனின் சொல்லாக இருக்க முடியாது என்பது இன்னும் புரியவில்லையா?
மார்க்கத்ததை ஆய்வு செய்து தேர்ந்தெடுப்பது படைப்பினங்களுக்குத் தரப்பட்டுள்ள பகுத்தறிவின் சுதந்திரம் என்று கூறும் குர்ஆனின் விளக்கத்தை ஏற்பதானால், குர்ஆனில் மிகுதியாக உள்ள விதியின்வலிமை, வற்புறுத்தல்கள், சர்வாதிகாரம் நிறைந்து காணப்படும் வசனங்கள் பொருளற்றது.
படைப்பினங்களின் ஒவ்வொரு இயக்கமும் அல்லாஹ் முன்பே முடிவு செய்த விதியின் வழியே நிகழ்கிறது என்ற குர்ஆனின் வசனங்களை ஏற்பதானால், படைப்பின் ஆரம்பத்தில் துவங்கி இறுதித் தீர்ப்பு நாள் வரையுள்ள அனைத்து நிகழ்வுகளையும், அதன் அடிப்படையையும், விளக்கங்களையும் பொருளற்றதாக்கி விடுவதுடன், மேலும் மேலும் வேடிக்கையான கேள்விகளையே உருவாக்குகிறது. இந்த முரண்பாடுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மரண தண்டனைக்குரிய குற்றவாளிகளா? இதைக் கண்டும் காணமல் விடுபவர்கள் இறைநேசர்களா?
இது இன்று புதிதாக துவங்கியதல்ல. முஹம்மதுவின் தில்லுமுல்லு வேலைகளை இனம் கண்டு அவரது காலத்திலேயே அதை மக்களுக்குத் தெரிவிக்கவும் செய்தனர். அதன் பிறகு அவர்கள் உலகில் வாழ அனுமதிக்கப்படவில்லை.
புகாரி ஹதீஸ் : 3617
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது
ஒருவர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு, அவர் இஸ்லாத்தைத் தழுவினார். “அல்பகரா” மற்றும் “ஆலு இம்ரான்” அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிறிஸ்தவராகவே மாறிவிட்டார். அவர் (மக்களிடம்) ‘முஹம்மதுக்கு, நான் அவருக்கு எழுதித் தந்ததை தவிர வேறதுவும் தெரியாது” என்று சொல்லி வந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு மரணத்தையளித்தான். அவரை மக்கள் புதைத்து விட்டனர். ஆனால் (மறு நாள்) அவரை பூமி துப்பி விட்டிருந்தது. உடனே, (கிறிஸ்தவர்கள்), ‘இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களைதனது தனது விட்டு ஓடி வந்துவிட்டதால் அவரின் மண்ணறையத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டுவிட்டார்கள்” என்று கூறினார். எனவே, அவருக்காக இன்னும் அழகாக ஒரு புதைகுழியைத் தோண்டினர். (அதில் புதைத்த பின்பு) மீண்டும் பூமி அவரை (வெளியே) துப்பி விட்டிருந்தது. அப்போதும், ‘இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களுடைய வேலைதான். நம் தோழர் அவர்களை விட்டு வந்துவிட்ட காரணத்தால் அவரைத் தோண்டி எடுத்து மண்ணறைக்கு வெளியே போட்டுவிட்டனர்” என்று கூறினர். மீண்டும் அவர்களால் குழியை அவருக்காகத் தோண்டி அதில் அவரைப் பூமி அவரை முடிந்த அளவிற்கு மிக அழமான குழியை அவருக்காகத் தோண்டிப் புதைத்தனர். ஆனால், அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போதுதான் அது மனிதர்களின் வேலையல்ல. (அல்லாஹ்வின் தண்டனை) என்று புரிந்து கொண்டனர். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டுவிட்டனர்.
முஹம்மது அவர்களிடம் எழுத்தராக இருந்த கிருஸ்துவர் கூறியது அபாண்டமான பொய்யாக இருப்பின், தனது வேதத்தை ஏளனம் செய்தவரை எல்லோரும் அறிய வெளிப்படையாக ஏன் தண்டிக்கவில்லை? இரகசியமாக தண்டிக்க வேண்டியஅவசியம் என்ன? பிணத்தைத் தோண்டி வெளியில் எடுத்துக் கொண்டிருப்பதைப்பதை மற்ற கிருஸ்துவர்கள் பார்த்து விட்டால் தன்னிடமிருந்து பிடுங்கி தனது திட்டத்தை தடுத்து விடுவார்கள் என்று அல்லாஹ் அஞ்சி விட்டானா?
கிருஸ்துவர் கூறியது தவறென்றால் தக்க ஆதாரங்களின் அடிப்படையில் மறுப்பதற்கு தனது தூதருக்கு கற்பித்துக் கொடுத்திருக்க வேண்டும். தனது தூதரின் கண்ணியத்தை நிரூபித்திருக்க வேண்டும். அதைவிடுத்து கோழைத்தனமாக கிருஸ்துவரின் சடலத்தையும் தண்டித்த அல்லாஹ்வின் வல்லமையை நினைக்கையில் காறியுமிழவும் அருவருப்பாக இருக்கிறது. இது சர்வவல்லமையுடைய இறைவனின் செயல் என்று கற்பனை செய்வதைக்கூட பெரும்பாவமாக நினைக்கிறேன்.
இத்தனை முரண்பாடுகளையும் நான் புதிதாக கண்டுபிடித்துக் கூறுவதாக நினைக்க வேண்டாம்.
முஹம்மது தன்னை இறைத்தூதராக அறிவித்தவுடனே ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கியவைகள். அவற்றை மீண்டுமொரு முறை தொகுத்துக் கூறுகிறேன். அன்றைய காலகட்டத்திலேயே இஸ்லாமை ஆய்வு செய்து அதை கடுமையாக விமர்சித்த முஸ்லீம்களில் சிலர் Zakaria Razi, Ibn Sina, Ibn Rushd, Khayyam, Ibn Arabi, Al Muari.
இதற்கு முஸ்லிம்கள் கூறும் சில சமாதானங்கள்:-
1 பெரும்பான்மையான முஸ்லீம்கள் பலதாரமணம் புரிவதில்லை. அதில் அவர்களுக்கு விருப்பமும் இல்லை.
2 1400 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களை அடிமைகளாக்குவதும், அடிமைப் பெண்களுடன் கூடுவதும் தவறாக நினைக்கப்படவில்லை. அத்தகைய செயல்கள் இன்று நம்மிடையே நடைமுறையில் இல்லை. சில முஸ்லீம் நாடுகள் கூட இந்த நாகரீகமற்ற செயல்களை அங்கீகரிக்காது.
3 ஆறு வயது குழந்தையைத் திருமணம் செய்வதும் நடைமுறையில் இல்லை. இன்றைய காலத்தில் மிக அரிதாக நிகழும் ஒரு சில சம்பவங்களைப் பெரிதுபடுத்திப் பார்ப்பது சரியல்ல.
4 பொதுவாக சொல்வதென்றால் 1400 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நாகரீகத்தை இன்றைய நாகரீகத்துடன் ஒப்பிடுவது முட்டாள் தனமானது.
உங்களது மனதில் தோன்றும் மூன்றாவது முடிவை ஏற்கிறேன். ஏனெனில் இது முற்றிலும் உண்மையே.
இங்கு மிக முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனிக்கவில்லை.
முஹம்மது அவர்கள் தன்னைப்பற்றி வர்ணனை செய்யும் பொழுது,
“உலகின் மிகச்சிறந்த படைப்பு ” என்கிறார்.
அல்லாஹ் குர்ஆனில்,
நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கின்றீர்
(குர்ஆன் 68:4)
அல்லாஹ்வுடைய ரஸூலிடத்தில் அழகிய முன்மாதிரி திட்டமாக இருக்கிறது.
(குர்ஆன் 33:21)
அனைத்து உலகத்தினருக்கும் அருளாகவே தவிர (நபியே) உம்மை நாம் அனுப்பவில்லை.
(குர்ஆன் 21:107)
மேலும் அல்லாஹ்வின் பக்கம் அவனுடைய ஏவலைக் கொண்டு அழைப்பவராகவும் பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை நாம் அனுப்பி வைத்துள்ளோம்)
(குர்ஆன் 33:46)
நாம் முன்பு பார்த்த ஜுவேரியா, ஷஃபியா, ரைஹானா மற்றும் பல பெண்களின் வரலாற்றிலிருந்தும் முஹம்மது அவர்களின் தலைமையில் அவரது படையினர் நிகழ்த்திய பல்வேறு போர்களிலிருந்தும் அவர் நமக்கு போதித்திருக்கும் சிறந்த முன்னுதாரணங்களை முஸ்லீம்களால் பின்பற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? முஹம்மது நபியை நீங்கள் பின்பற்றியே தீரவேண்டும் என்று வற்புறுத்தும் பல வசனங்களை குர்ஆன் முழுவதும் நீங்கள் பார்க்கலாம்.
(நபியே) நீர் கூறுவீராக நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான்
(குர்ஆன் 3:31)
ஆம்…! என்று கூறினால், மாற்று மதத்தினரைக் கொன்று அவர்களது மனைவியர்களை வன்புணர்சி செய்து, உடைமைகளை கொள்ளையிட வேண்டும். இல்லை…! 1400 ஆண்டுகளுக்கு முன் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை 21 ம் நூற்றாண்டிற்கு பொருத்தமற்றது என்று கூறினால், முஹம்மதை பின்பற்றுமாறு கூறும் மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் அர்த்தமற்றதாகி விடுகிறது.
முஸ்லீம்களால் இதை ஏற்க முடியாது. முஹம்மது அவர்களின் உதாரணங்களை பின்பற்றுவீர்களா? இல்லையா? அவர், மனிதகுலம் என்றென்றும் பின்பற்றத்தக்க சிறந்த முன்னுதாரணங்களை செய்திருக்கிறாரா? இல்லையா?
அந்த உதாரணங்கள் இன்றைய காலத்திற்கு சிறந்தவைகள் அல்ல என்று நினைக்கலாம். அதனால் தான் இன்றைய நாகரீகத்துடன் அவரை ஒப்பிடக்கூடாது என்றும் அவருடைய காலத்தில் அவரது செயல்கள் தவறில்லை என்றும் நீங்கள் அவருக்காக பரிந்து பேசுகிறீர்கள். அதனால் அவரது செயல்கள் அனைத்துமே சிறந்த முன்உதாரணம் அல்ல. இது உங்களின் முடிவென்றால் முஹம்மது அவர்கள் இன்றைய காலத்திற்கு பொருத்தமற்றவராகத் தெரியவில்லையா?
போர்களத்தில் எதிரிகளின் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக்குவதென்பது, முஹம்மது அவர்கள் மட்டுமல்ல வரலாற்றில் அன்றைய காலத்தில் ஏறக்குறைய அனைத்து ஆட்சியளர்களாலும் பின்பற்றப்பட்ட நடைமுறை முஹம்மது அவர்களை மட்டும் ஏன் கடுமையாக விமர்சிக்க வேண்டும்?
அந்த ஆட்சியாளர்கள் யாரும் தங்களது செயல் இப்பிரபஞ்சத்திற்கே சிறந்த முன்மாதிரி என்றும் தங்களைப் பின்பற்றினால் இறைநேசர்களாக ஆகலாம் கூறிக் கொண்டு இருக்கவில்லை. அன்றைய நடைமுறையில் முஹம்மது அவர்கள் செய்தது குற்றமா? இல்லையா? என்பதல்ல கேள்வி. அவர் மனிதகுலம் எப்பொழுதும் பின்பற்றத்தக்க மிகச்சிறந்த முன்னுதாரணமாக செயல்பட்டாரா? இல்லையா? என்பதே கேள்வி.
முஹம்மது அவர்கள், குற்றமற்றவராக இருந்தபோதிலும், பின்பற்றத்தக்க சிறந்த முன்னுதாரணம் இல்லையென்பது பதிலாக இருந்தால், அவரை புகழ்ந்து கூறும் குர்ஆன்வசனங்கள் தவறானவை. அந்த குர்ஆன் வசனங்களை பொருட்படுத்த வேண்டியதில்லை, காலங்கள் மாறுவதால் முஹம்மது நபியை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பது உங்கள் பதிலாக இருந்தால், எதிர்காலத்தில் (உதாரணத்திற்கு 1400 ஆண்டுகளுக்குப் பிறகு) குர்ஆனின் போதனைகளையோ, அல்லது முஹம்மது அவர்களால் கற்பிக்கப்பட்ட வழிமுறைளையோ பின்பற்றுவதை நிறுத்திவிடுமாறு அல்லாஹ், உங்களுக்கு கட்டளை ஏதேனும் விதித்திருக்கிறானா?
முஹம்மது அவர்களின் செயல்முறை நீங்கள் கண்டிப்பாக பின்பற்றியே தீரவேண்டும். என்பதை வலியுறுத்திக்கூறும் பின்வரும் ஹதீஸைக் கவனியுங்கள்.
புகாரி ஹதீஸ் -6101
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபி(ஸல்) அவர்கள் ஒன்றைச் செயதார்கள். (மற்றவர்களுக்கும்) அதைச் செய்ய அனுமதி அளித்தார்கள். அப்போது ஒரு கூட்டத்தார் அதைச் செய்வதிலிருந்து தவிர்த்து கொண்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோபாது (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘சிலருக்கு என்ன நேர்ந்தது? நான் செய்கிற ஒன்றைச் செய்வதிலிருந்து தவிர்த்து கொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களை விட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்” என்றார்கள்.
உங்களால் இயன்றதையோ, உங்களுக்குப் மனதிற்கு விருப்பமானதையோ அல்லது உங்கள் பகுத்தறிவிற்கு சரியென்று தோன்றுவதையோ விருப்பம் போல பின்பற்றலாம் என்று அனுமதிகள் ஏதேனும் வழங்கப்பட்டுள்ளதா?
நிச்சயமாக குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் அப்படி எதுவும் கூறப்படவில்லை!
முஹம்மது அவர்களின் செயல்கள் எல்லா காலத்திலும் பின்பற்றத்தக்க உதாரணமல்ல என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். அவரை மிகச்சிறந்த உதாரணம் எனக் கூறும் குர்ஆன் வசனம் உண்மையல்ல. இதன்மூலம், குர்ஆன் இறைவனின் வார்த்தைகளல்ல என்பதும் தெளிவாகிறது.