இஸ்லாமும் பெருவெடிப்பு கொள்கையும்

குர்ஆன் பெருவெடிப்புக் கொள்கை பற்றி சொல்கிறதா?



குர்ஆன் 21:30
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரி லிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?

அறிஞர் பீஜே மொழிபெயர்ப்பு

குர்ஆனின் இந்த வசனம் பெருவெடிப்புக் கொள்கையை முன்னறிவிப்பு செய்கிறது. இந்தப்பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாகத் திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூறமுடியும். எனவே திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது என்கின்றனர் இஸ்லாமிய அறிஞர்கள்.

இந்த வசனத்திலிருக்கும் அறிவியல்(?) பேருண்மைகளைக் காணும் முன் மொழிபெயர்ப்பிலிருக்கும் குழப்பத்தைக் காண்போம்.



கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் மொழிபெயர்ப்பு
... என்பதை காபிரானவர்கள் (சிந்தித்துப்) பார்க்கவில்லையா? ...

இக்பால் மதனி மொழிபெயர்ப்பு
... இந்நிராகரிப்போர் பார்க்கவில்லையா? ...


YUSUFALI:
 Do not the Unbelievers see that...


PICKTHAL:
Have not those who disbelieve known that ...


SHAKIR:
Do not those who disbelieve see that ...

இந்த வசனத்தில் கையாளப்பட்டிருக்கும் சொல் “awalam yara”  
Awalam - Do not
yara – see

”பார்க்கவில்லையா?” என்பதே சரியான மொழிபெயர்ப்பு.

“பார்க்கவில்லையா?” என்பதை கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ ”(சிந்தித்துப்)பார்க்கவில்லையா?” அடைப்புக் குறியுடன் சரிகண்டதை, எதற்காக அறிஞர் பீஜே, ”சிந்திக்க வேண்டாமா?” என வேண்டுமென்றே மொழிபெயர்க்க வேண்டும்?

உதாரணத்திற்கு, “இராமசாமியை நீங்கள் பார்க்கவில்லையா? என்று ஒருவர் உங்களிடம் கேட்கிறார் எனில், உங்களுக்கு இராமசாமியைத் தெரியும் என்பதுதான் பொருள்.

அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும்... காஃபிர்கள் பார்க்கவில்லையா?...

என்றால்,

அன்றைய காஃபிர்கள் அறிந்த ஒரு செய்தியைத்தான் முஹம்மது கேள்வியாக வைக்கிறார் என்றுதான் பொருள்விளங்க முடியும். எல்லோரும் நன்கு அறிந்த ஒரு செய்தியை எப்படி முன்னறிவிப்பாகக் கருதமுடியும்?

ஆதியாகமம் 1:6
பிறகு தேவன், ”இரண்டு பாகமாக தண்ணீர்ப் பகுதியை பிரிந்து ஆகாய விரிவு உண்டாகக்கடவது” என்றார்.

மெசபடோமியர்களின் மதநம்பிக்கைப்படி, தியமத்(Tiamat) என்ற பெண் கடவுள், ஆதியிலிருந்த அப்ஜு என்ற நன்னீர் கடவுளுடன் இணைந்து இளைய கடவுள்களை உருவாக்கி பெரும் குழப்பம் விளைவித்தவள். தியமத்திற்கு இரண்டு உருவகங்கள் இருந்ததாக அவர்கள் நம்பிக்கை கூறுகிறது. ஒன்று, நன்னீர் மற்றும் உப்பு நீருக்கும் புனித் திருமணம் செய்து பிரபஞ்சத்தை அடுத்தடுத்த தலைமுறைகள் மூலம் அமைதியாக உருவாக்குவது. இரண்டாவது, படைப்பைப்பற்றி கூறும் எனுமா எலிஷ் என்ற பாபிலோனிய காவியத்தில், டியமத்தை கொடூரமான பெண் டிராகன் போன்று உருவகம் செய்கிறது. அவள், தெய்வங்களின் முதல் தலைமுறை பெற்றெடுக்கிறாள்; புயல் கடவுளான மார்டக் அவள் மீது போர் செய்து அவளது உடலை இருகூறாக பிளந்து வானம் மற்றும் பூமியை உருவாக்குகிறார்.

இது போன்ற ஆதிகால நம்பிக்கைகளைத்தான் குர்ஆன் 21:30 மறு ஒலிபரப்பு செய்கிறது. இதில் மூடநம்பிக்கைக்ளைத் தவிர எதுவுமில்லை. இத்துடன் இக்கட்டுரையை முடித்துவிட முடியும், ஆனால் பெருவெடிப்புக் கொள்கையுடன் குர்ஆன் எவ்வாறு முரண்படுகிறது என்பதை நாம் காணவேண்டியுள்ளதால், வாதத்திற்காக குர்ஆனில் கூறப்பட்டுள்ளது பெருவெடிப்புக் கொள்கையேன்றே வைத்துக் கொண்டு, மீண்டும் தொடர்கிறேன்.

அறிவியலைக், குருட்டு நம்பிக்கைகளின் குவியலான குர்ஆனுடன் ஒப்பிட்டு விவாதிப்பதற்கு மன்னிக்க வேண்டும். படைப்பற்றி கூறும் சில குர்ஆன் வசனங்களக் காண்போம்.

7:54 உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.
41:9 "பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்?
41:10 நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.
41:11 பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான்.
41: 12 இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான்.

இரண்டு நாட்களில் வானமும், பூமியும் உருவானதாகக் கூறுவது பெருவெடிப்புக் கொள்கை வரையறை செய்யும் காலத்திற்கு முரணானது. மேலும் இரண்டு நாட்களில் பூமியையும், இரண்டு நாட்களில் மலைகளையும் உணவுவகைகளையும்(யாருக்கானது?) படைத்த பின்னர் புகையாக இருந்த வானத்தை படைக்க நாடினானாம்!. பூமியின் பணி முழுமையடைந்த பின்னர் வெளியை முழுமை செய்தானாம்! அதாவது, பெருவெடிப்பில் முதலில் முழுமையடைந்தது பூமி என்ற கிரகம்தான். இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான உளறல்களை அறிவியல் எனக்கூறி சிறிதும் கூச்சமின்றி மதவியாபாரம் செய்யும் இஸ்லாமிய அறிஞர்களின் தன்னம்பிக்கையை(!?) நினைக்கையில் நான் மெய்சிலிர்த்துப் போகிறேன்.
பெருவெடிப்பைப் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.

ஒளியை, நிறமாலையின் மூலமாக சிவப்பிலிருந்து ஊதா நிறம் வரை பிரிக்க முடியும் என்பதையும், சிவப்பு நிறத்தின் அலையளவு நீளமானதாகவும், ஊதாவின் அலை நீளம் குறைவானது என்பதையும் அறிவீர்கள். நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து வெளியேரும் ஒளியை அவ்வாறு பிரிக்கும் பொழுது அவை சிவப்பு நிறத்திற்கு மாறுவதை அறிந்தனர். இதன் பொருள் அவை நம்மைவிட்டு விலகிச்செல்கின்றன என்பதுதான்.

அப்படியானால் காலங்களுக்கு முன் அவைகள் நெருங்கியிருந்திருக்க வேண்டுமே என்ற சிந்தனை அறிவியளர்களுக்கு உண்டானது. இப்படியே காலத்தை பின்னோக்கி செலுத்தினால் இப்பிரபஞ்சம் முழுவதுமே ஒரு புள்ளியில் சுருங்கிவிடும் என்று யூகித்தனர். இதை ஒருமைநிலை (Singularity) என்றனர். ஏதோ காரணங்களால் இந்த ஒருமை விரிவடைந்து இப்பிரபஞ்சம் ஏற்பட்டது; அப்பொழுதிலிருந்து காலம், வெளி, பொருள் பிறந்திருக்கிறது; இதற்கு சுமார் 13700 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என்பது தற்பொழுதைய அறிவியலின் கணிப்பு. இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது என்பதற்கு வருங்கால அறிவியல் பதில் கூறும்!.  

பெரும் விரிவிலிருந்து பிரபஞ்சம், இன்றைய நிலையை அடைய சுமார் 13700 கோடி ஆண்டுகள் தேவைபட்டிருக்கிறது என்பதை முன்பே பார்த்தோம். இதில் பூமி 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னும், 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிர்களும், அதைத் தொடர்ந்து பலசெல் உயிரினங்கள் பரிணாமம் அடைந்திருக்கலாம் என்கிறது. அந்த ஒருமையில் அடங்கியிருந்தது நெபுலா இல்லையென்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் ... என்று பாறைக்கு வெடிவைத்துப் பிரித்ததைப் போன்று குர்ஆன் கூறுகிறது. பெரும் விரிவு பிரபஞ்சம் அமைய அடித்தளம் அமைத்தது. கோடிக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்களையும், நட்சத்திரங்களைச் சுழன்றுவரும் கிரகங்களையும் உருவாக்கியது. அதில் ஒரு அங்கமாக, அதனுள் இருக்கும் பூமி, எப்படிப் பிரிய முடியும்?

இஸ்லாமியர்கள் கூறும் இந்த அறிவியல்(!) கதைகளை, நாத்தீகர்களோ அல்லது மாற்று நம்பிக்கைகளில் இருப்பவர்கள் ஒருபொழுதும் ஏற்கப்போவதில்லை. பின் எதற்காக இப்படிக் கதையளக்கின்றனர்?

மூடுமந்திரமாக, திரித்து, மழுப்பி மறைக்கப்பட்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் உளறல்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. எதையாவது இட்டுக்கட்டி தங்களவர்களை தக்கவைத்துக் கொள்ள, அறியவில் என்ற பெயரில் கதைகளை அவிழ்த்து விடுகின்றனர் என்பதைத் தவிர வேறில்லை.