பெண் குழந்தைகள் கொல்லப்பட்டார்களா?

குழந்தைகள் கொலை பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது?


Bracket போட்டவுடன் எந்தக் குழப்பமுமின்றி நமக்கு ’டக்’கென்று விளங்கிவிடுகிறது. இதுதான் அடைப்புக் குறிகளின் அற்புதம்! இது மற்ற புத்தகங்களுக்கில்லாமல் குர்ஆனுக்கென்றே அல்லாஹ்வால் வழங்கப்பட்ட சிறப்பாகும். இங்கு குர்ஆன் ஹதீஸ்களை விவாதிப்பதால்  அடைப்புக்குறிகளைப் பயன்படுத்த சிறப்பு அனுமதி நமக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. என்ன செய்வது குர்ஆனையும், முல்லாக்களின் விளக்கங்களையும் வாசித்து... கேட்டு... வாசித்து...   நாமும் இப்படியாகிவிட்டோம்!



குர்ஆன் இப்படிச் சொல்கிறது,

81:8 (உயிருடன் புதைக்கப்பட்ட) பெண் குழந்தை விசாரிக்கப்படும் போது.
81:9 “எந்தப் பாவத்திற்காகக் கொல்லப்பட்டாள்?” என்று.
இதற்கான பதிலையும் குர்ஆனே கூறிக்கொள்கிறது,

17:31 வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.
இந்த செய்தியை ஹதீஸ்களிலும் காணப்படுகிறது.

புகாரி 7214
ஆயிஷா(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள் பெண்களிடம் 'நபியே! இறைநம்பிக்கைக் கொண்ட பெண்கள் உங்களிடம் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கமாட்டார்கள்; திருடமாட்டார்கள்; தங்கள் குழந்தைகளைக் கொலை செய்யமாட்டார்கள்; தாங்களாக அவதூறு இட்டுக்கட்டி பரப்பமாட்டார்கள்; நற்செயலில் உங்களுக்கு மாறுசெய்யமாட்டார்கள் என்று உறுதிமொழி அளித்தால் அவர்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்' எனும் (திருக்குர்ஆன் 60:12 வது) இறைவசனத்தை ஓதி வாய்மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு வாங்கமாட்டார்கள்.) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கை, அவர்களுக்குத் சொந்தமான பெண்களை (-துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை.

..அவர்களின் கை, அவர்களுக்குத் சொந்தமான பெண்களை (-துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை. என்ற வரிகளைப் படித்து அதிர்ச்சியடைந்திருப்பீர்கள்Don’t get emotion!. ஒரு கிராமத்தையே அந்தப்புரத்தில் வைத்திருந்தவருக்கு, தனியாக மறுபடியும், மற்ற  பெண்களைவேறு தொட்டுப்பார்க்க வேண்டுமா? ”இது உங்களுக்கே நியாயமா இருக்கா?” என்று எரிச்சலடைய வேண்டாம். தன் கணவரைப்பற்றி, ஆயிஷா வலிந்து கூறவேண்டிய அவசியம் என்னவோ? முஹம்மது பெண்மோகம் கொண்டவர் என்ற குற்றச்சாட்டு அன்றே இருந்திருக்கிறது போலும்!



நாம் பெண்சிசுக் கொலைக்கு வருவோம். இது இன்றும் நமது சமுதாயத்தில் தொடரும் ஒரு அவலம்தான். குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்ட சிசுக்களின் உடலை நாய்கள் குதறின என்ற செய்திகளைக் கேட்கும் பொழுது நமது கண்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கிறது. பெண் சிசுக் கொலைக்கு மிக முக்கியமான காரணம் திருமணச் சந்தையில் கேட்கப்படும் வரதட்சனைதான்! இல்லாமை மட்டுமே காரணமென்றால் ஆண், பெண் பேதமின்றி அனைத்து  சிசுக்களும் கொல்லப்பட்டிருக்கும் என்பது எனது கருத்து.

நான் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள், அண்ணன் பீ.ஜேவையே சொல்லச் சொல்கிறேன்! மஹ்ர் என்ற மணக் கொடையின் சிறப்பைப்பற்றி அண்ணன் பீ.ஜே சொல்லும் பொழுது இவ்வாறு கூறுகிறார்.

வரதட்சணை வழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் முன்கூட்டியே உணர்பவர்கள் பெண்குழந்தை பிறந்ததும் தாமே தமது குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர்.
108. மஹர் (மணக்கொடை)
இங்கு விவகாரம் என்னவென்றால், அன்றைய அரேபியாவில் மணமகனுக்கு வரதட்சனை வழங்கும் வழமையில்லை. உதாரணத்திற்கு, நமது கண்மணி முஹம்மது பின் அப்துல்லாவே கதீஜாவிற்கு ஒட்டகங்களை மணக்கொடையாக வழங்கி திருமணம் செய்தார் என்கின்றனர்  எனவே அங்கு பெண்குழந்தைகளைக் கொல்வதற்கு வரதட்சணை காரணமில்லை; வறுமையும் காரணமில்லை. அல்லாஹ் சொர்க்கலோக பானத்தை அருந்திவிட்டு ஏதோ உளறியிருக்கிறான் என்று நினைக்கிறேன்.

பெண்சிசுக் கொலை என்ற செய்திகள் வெளியாகும் பொழுது, முல்லாக்கள் மேற்கண்ட குர்ஆன் வசனங்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டும், கற்பழிப்பு செய்திகள் வரும்பொழுது புர்க்காவைத் பிடித்து தொங்கிக் கொண்டு, சந்தில் சிந்துபாட முயற்சிப்பது நாம் அறிந்த விஷயமே!




அவர்களது கூற்றிலேயே நாம் தொடர்வோம். 


பெண் குழந்தைகளைக் கொல்பவர்களை, அல்லாஹ் குர்ஆனில் எச்சரிப்பதுடன், போதாக் குறையாக இஸ்லாமை ஏற்க வருபவர்களிடம். அவ்வாறு செய்யக்கூடாதென்ற உறுதிமொழி வாங்கவும் முஹம்மதிடம் ஆணையிடுகிறான்.


குர்ஆன் 60:12
"நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக!

அப்படியானால் அன்றைய அரேபியகளிடம், நெடுங்காலமாக, பெண்சிசுக் கொலையென்பது பரவலாகக் காணப்பட்ட ஒரு செயலாக இருந்திருக்க வேண்டுமென்பதுதான் இதன் பொருள். மேலும் இல்லாததை இட்டுக் கட்டுவது, திருடுவது விபச்சாரம் செய்வது போன்றவைகள் பெண்களின் முக்கியமான பணியாகவும் இருந்திருக்கிறது. இஸ்லாம் பெண்களை மிகவும் கண்ணியப்படுத்துகிறது(புல்லரிக்கிறது!). இன்றும் இஸ்லாமியப் பெண்மணிகள் இப்படித்தானோ?  எதற்குக் கேட்கிறேன் என்றால் குர்ஆன் எக்காலத்திற்கும் பொருந்தும் வேதம் என்றல்லவா முழம்போட்டுக் கொண்டிருக்கின்றனர்! அதனால் விளைந்த சந்தேகம் இது!

ஓரிச்சேர்க்கை செய்தார்கள் என்பதினாலும்,  ஒட்டகத்தின் கால்நரம்புகளை துண்டித்தார்கள் என்பதினாலும் ஊரையே அழித்ததாகவும், சனிக்கிழமை மீன் பிடித்தார்கள் என்ற காரணத்திற்காக குரங்குகளாக மாற்றிவிட்டதாகவும் பீற்றிக் கொள்ளும் ஒரு வெங்காயம், அநியாயமாக ஒரு பாவமும் அறியாத குழந்தைகள் கொல்லப்படும் பொழுது ஹூரிலீன்களைப் பார்த்து ஜொள்ளுவிட்டுக் கொண்டிருந்தானோ என்னவோ!

இஸ்லாமியர்கள் அன்றைய அரேபியர்களை இழிவாகப் பேசுவதை அறிவீர்கள். அப்பொழுதானே முஹம்மது உயர்ந்தவர் என்று காண்பிக்க முடியும். எல்லாம் இருகோடுகள் தத்துவம்தான்.

இஸ்லாம் தோன்றும் வரை இருந்த அரபியர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள்; அவர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தார்கள்; தங்களுக்குள் தொடர்ந்து போர் புரிந்து கொண்டார்கள்; பெண்கள் ஒட்டகத்தைவிடக் குறைத்து மதிப்பிட்டனர்; முஹம்மது மட்டுமே இக்குறைகளை களைந்து பெண்களுக்கு  மனித அந்தஸ்து கொடுத்தார், கூடவே தாயின் காலடியில் சொர்க்கமிருக்கிறது கண்மணி நாயகம் கூறினார் என்றெல்லாம் கதைப்பார்கள்.

இவர்களின் கூற்றில் எந்த அளவிற்கு உண்மையிருக்கிறது?

முஹம்மதின் மனைவி கதீஜா மிகப் பெரும் வியாபாரத்தை நிர்வகித்தார் என்று கூறுவதும் இவர்கள்தான். கதீஜாவின் பணியாள் தானே இவர்களது கண்ணுமணி பொண்ணுமணி? இவர்கள் சொல்வது போல, அரேபியர்கள், பெண்களை இழிவாக கருதும்  ஒரு சமுதாயமாக இருப்பின், எப்படி கதீஜா என்ற ஒரு பெண்மணி இந்த அளவிற்கு உயர்ந்திருக்க முடியும்?

மேலும்,  லாத், மனாத் உஸ்ஸா என்ற பெண் தெய்வங்களையே அவர்கள் வழிபாடு செய்தனர் என்பதை குர்ஆனும் ஒப்புக் கொள்கிறது.  மேலும் அவர்கள் தங்களது பெண்களை ஆபரணங்களைக் கொண்டு அழகுசெய்து பார்த்திருக்கின்றனர் என்கிறது குர்ஆன்.
குர்ஆன் 43:18
...ஆபரணங்களைக் கொண்டு வளர்க்கப்பட்டதும் வழக்கில் தெளிவாக எடுத்துக் கூற இயலாததுமான ஒன்றையா (அல்லாஹ்விற்கு சந்ததிகளாக்குகின்றனர்)
கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயீ மொழிபெயர்ப்பு
(குர்ஆன் 43:18-ல் ஒரு விவாதம் இருக்கிறது. கட்டுரையின் மையக்கருத்திற்கு தேவையில்லாததால் அதைப்பற்றி நாம் பிறகு பார்க்கலாம்.)

அதைப்பற்றியெல்லாம் நாங்கள் பேசத் தயாரில்லை. அன்றைய அரேபியர்கள் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்து கொலை செய்தனரென்று எங்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது அதை மட்டுமே நாங்கள் பேசுவோம் என்பார்களோ?
சரி.. அப்படியே வைத்துக் கொள்வோம்.

தனது வாழ்நாளில் எத்தனை பெண்சிசுக்களின் கொலையை முஹம்மது தடுத்திருக்கிறார்? அல்லது குறைந்தபட்சம் பார்த்திருக்கிறார்? அல்லது அவரது தொண்டரடிப் பொடிகளேனும் பார்த்துள்ளனரா? இப்படியொரு செய்தியை முஹம்மதின் வரலாற்றிலிருந்து காண்பிக்க முடியுமா?

முஹம்மது பெண் குழந்தைகளைப் பார்த்திருக்கிறார். அதை இல்லையென்று நாமும் மறுக்கப் போவதில்லை. அப்பொழுது அவரது வக்கிர உணர்வுகள் கிளர்ந்தெழுந்ததைத் தவிர வேறொன்றும் நிகழ்ந்ததில்லை. ஆயிஷாவின் நிலைமை நாமறியாததா?
பெண்குழந்தைகளை அன்றைய அரேபியர்கள் கொன்று குவித்ததாக வருத்தப்படும் அல்லாஹ்வின் கூற்றை வேறொரு கோணத்திலிருந்து அணுகலாம். முஹம்மது அல்லாஹ்வின் பெயரால் அனுமதித்த பலதாரமணத்தைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் முல்லாக்கள் இவ்வாறு கூறுகின்றனர்...

...இந்த பலதாரமணம் ( Polygyny) என்பது அரேபியாவில் இஸ்லாம் அறிமுகமான பிறகுதான் இவ்வுலகில் நடைமுறைக்கு வந்தது என்று கூறுவது வரலாற்று அபத்தம். இதற்கு மாறாக வரலாற்றில் தொன்று தொட்டு பலதாரமணம் வழக்கிலிருந்து வந்தது என்பதுதான் உண்மை. ஆப்ரஹாம் மூன்று மனைவிகளையும், சாலமன் நூற்றுக்கணக்கான மனைவிகளையும் பெற்றிருந்ததை வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது...
Islamkalvi.com
நபிகள் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் அண்ணன் பீஜே இவ்வாறு கூறுகிறார்...
அன்றைய அரபுகள் சர்வ சாதாரணமாகப் பத்து முதல் இருபது மணைவியர் வரை மணந்து கொண்டிருந்தனர். அன்றைய காலத்து ஆண்களோ, பெண்களோ எவருமே பலதார மணத்தைத் தவறான ஒன்றாகக் கருதில்லை...
இரண்டு விளக்கங்களுமே பலதார மணமென்பது அன்றைய அரேபியக் கலாச்சாரத்தில் மிக சாதரணமாக இருந்ததொரு வழிமுறையென்று கூறுகிறது. அதாவது மிகப் பெரும்பான்மையானவர்களின் செயலை அடிப்படையாகக் கொண்டு முல்லாக்கள் இவ்வாறு கூறுகின்றனர். பெரும்பான்மையான ஆண்கள் குறைந்தபட்சம் பத்து பெண்களைத் திருமணம் செய்தனர் எனில், அன்றைய அரேபியாவில் ஆண்-பெண் விகிதம் எப்படி இருந்திருக்க வேண்டுமென்பதை நீங்களே யூகித்துப்பாருங்கள்!

பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்துக் கொன்றிருந்தால், முஹம்மதின் சமகால அரேபியாவில் திருமணத்திற்கு பெண்கள் இல்லாமல் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டு, ஒரு பெண் பல ஆண்களுடன் வாழ்ந்திருக்க வேண்டும் (இந்த லாஜிக் அவர்கள் சொல்வதுதான்). அண்ணன் பீ.ஜே மற்றும் இதர முல்லாக்கள் சொல்வதுபோல அறியாமை காலத்து அரேபியர்கள், பத்து முதல் இருபது மனைவியர்களை திருமணம் செய்வதற்கு எங்கிருந்து பெண்களைப் பெற்றனர்?

சொல்லுங்க... பிஜெயாணிகளே... பதில் சொல்லுங்க...