குர்ஆன் இறைவேதமா? -2
பொதுவாக ஹதீஸ்கள் என்னதான் வலுவான அறிவிப்பாளர்கள் வரிசை கொண்டிருந்தாலும், குர்ஆனுக்கு, அதாவது ஆயிஷாவின் கணிப்பின்படி 6666 வசனங்களைக் கொண்ட தொகுப்பிற்கு (மற்றவர்களின் கணிப்பின்படி இதுவும் 6212 வரை மாறுபடுகிறது) முரண்பட்டால் நிராகரித்துவிடுகின்றனர். ’வஹீ’ ஹதீஸிலும் இருக்கிறது என்பது குழப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
மற்ற வேதங்கள் மாற்றப்பட்டுவிட்டதாக குர்ஆன் கூறுகிறது. “குர்ஆனில் இல்லாத வஹீ”க்களும் உண்டு என்கிறார் பீஜே. இப்பொழுது ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டவைகளா? என்ற கேள்வி தவிற்க முடியாததாகிறது.
ஹதீஸ்களின் நிலையை நான் சொல்வதைவிட அறிஞர் பீஜே சொல்வதைக் கேளுங்கள்.
பீஜே இங்கு, குர்ஆனில் சொல்லப்படாத வஹீயான ஹதீஸ்களின் பரிதாப நிலையைப்பற்றி மட்டும் கூறவில்லை. ஆவணத்தின் முக்கியத்துவத்தையும் பதிவு செய்கிறார். இதற்கு மேலும் நாம் ஹதீஸ்களைப்பற்றி விவாதிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
குர்ஆனில் இல்லாத ‘வஹீ’க்களின் பரிதாப நிலையைபற்றி அறிஞர் பீஜே கூறுவதை பார்த்தோம்.
ஹதீஸ்களின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நம்பிக்கை என்பதைத்தவிர இவர்களால் வேறெந்த பதிலையும் கூறமுடியாது; அதற்கு விடை தெரிந்திருந்தால், குர்ஆனியவாதிகளும், ரஷாது கலீபாவின் “Submitters” உருவாக வேண்டிய அவசியமில்லை.
குர்ஆனில் இல்லாத வஹீக்(ஹதீஸ்)களைப் பற்றிய அறிஞர் பீஜே வின் மாறுபட்ட நிலைகள்.
ஹதீஸ்களை ஏற்பதிலும் நிராகரிப்பதிலும் தங்களுக்கு எவ்விதமான பங்குமில்லை, அது ஹதீஸ் கலை ஆய்வாளர்களின் முடிவுதான் என்றவர், இன்று தனது மனம் போன போக்கிற்கு ஹதீஸ்களை நிராகரிப்பதப் பார்த்தோம். ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டவைகளல்ல என்பதுதான் அறிஞர் பீஜேவின் இந்த குழப்பங்களுக்குக் காரணம். அவர் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார். ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை எனும் பொழுது, குர்ஆனில் இல்லாத வஹீ என்ற கருத்து அர்த்தமற்றது.
நாம் முஹம்மதின் நிலையையும் சற்று கவனிக்கலாம்…
தனக்கு அறிவிக்கப்படும் செய்திகளை அதாவது ’வஹீ’க்களை, முஹம்மது எவ்வாறு பாதுகாத்தார்?
தனது தோழர்களின் உதவியால் எழுதி பாதுகாக்க முயன்றதாக ஹதீஸ்கள் கூறுகின்றன.
அல்பராஉ பின் ஆஸிஃப் (ரலி )கூறியதாவது.
”இறை நம்பிக்கை கொண்டோரில்(அறப் போரில் கலந்து கொள்ளாமல்)தங்கி விடுவோரும், இறைவழியில் தம் உடைமைகளாலும் உயிர்களாலும் அறப்போர் புரிபவர்களும் சம அந்தஸ்துகொண்டவர்களாக முடியாது…” என்னும் வசனம் அருளப்பட்ட போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் இப்னுஸாபித் (ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டு வந்து,அந்த வசனத்தை எழுதினார்….
புஹாரி 2831
இவ்வாறு தனக்கு அறிவிக்கப்படும் செய்திகளை எழுதச் செய்துவந்தார் (இது மதீனாவில் நிகழ்ந்தது புரிதலுக்காக இங்கு குறிப்பிடுகிறேன்.) அவைகள் தவறுதலாக வேறு செய்திகள் எழுதப்பட்டுவிடக் கூடாதென்பதிலும் முஹம்மது கவனமாக இருந்ததாகவும் ஹதீஸ்கள் கூறுகின்றன.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள், "நான் கூறுவதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும்…
முஸ்லீம் 5734
பீஜே குர்ஆனில் கூறப்படாத வஹீ உள்ளதென்கிறார். ஆனால் முஹம்மதுவோ குர்ஆனைத் தவிர வேறெதையும் எழுத வேண்டாமென்கிறார். அதாவது தான் கூறுபவைகள் அனைத்துமே குர்ஆன் அல்ல, என்பதுதான் முஹம்மதின் பதில். அவர் குர்ஆன் என்ற ஏதோஒன்றை பிரித்து காண்பித்திருக்கிறார்; அதை தனக்குத் தெரிந்தமுறையில் பாதுகாகவும் முயற்சித்திருக்கிறார் என்பதுதான் இதன் பொருள்.
முஹம்மது சொல்-செயல் அனைத்துமே அல்லாஹ்வின் கட்டளைப்படியே இருந்ததென்ற இஸ்லாமிய நம்பிக்கையைக் கருத்தில் கொண்டால், அவர் இவ்வாறு எழுதச் செய்ததும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே இருந்திருக்கவேண்டும் மாறாக அவரது சொந்தவிருப்பமில்லை என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
…மனிதர்களிடம் குர்-ஆனை பாதுக்காக்கும் பொறுப்பை சாட்டாமல் அதனை தன்னளவில் வைத்துக்கொண்டான்.இதன் மூலம் உலகமுடிவு நாள் வரையிலும் குர்-ஆன் பாதுக்காப்பிற்கு எந்த ஒரு மனிதனும் தனிப்பட்ட முறையில் சிரத்தை மேற்கொள்ள தேவையில்லை என்பதை தெளிவாக இவ்வசனத்தில் விளங்கலாம்…
நான் முஸ்லீம் தளத்திலிருந்து…
முஹம்மதை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. நான் முஸ்லீம் தளத்திற்கு இருக்கும் அறிவுகூட இல்லாமல், மனனம் செய்து, கல், கட்டை, விட்டை, மரப்பட்டை, தோல், எலும்பு என்று கையில் கிடைத்தவற்றிலெல்லாம் எழுதிப் பாதுகாக்க முயன்றிருக்கிறார் என்பதை நினைத்தால் பரிதாபப்படாமல் வேறென்ன செய்யமுடியும்?
குர்ஆனை எழுத்தில் பாதுகாக்கும் முஹம்மதின் பணி எப்பொழுதிலிருந்து துவங்கியது?
மதீனாவில் முஹம்மது, தனக்குத் தானே அரசராக முடிசூட்டிக் கொண்டதும், அவருக்கு பணியாளர்கள் உதவியாளர்கள் அடிமைகள் என்று ஆட்களின் உதவி இருந்தது; தனக்கு வரும் வஹீயை எழுதச் செய்து கொண்டார்.
ஆனால் மக்காவில்?
அன்றைய அரேபியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் சிலர் இருந்துள்ளனர். ஏனோ அல்லாஹ்விற்கு எழுத்தறிவற்ற முஹம்மதைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் மிகுந்திருந்தது. இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, தனது தூதராக யாரைத் தேர்தெடுப்பது என்பது அல்லாஹ்வின் உரிமை அதில் நாம் தலையிடமுடியாது.
ஒரு பிரசங்கியாக முஹம்மதின் மக்கா வாழ்கையையை இரண்டாகப் பிரிக்கலாம். அதாவது முதல் மூன்றாண்டுகள் மறைமுக அழைப்புப் பணி, அதன் பிறகு பகிரங்க அழைப்புப்பணி என்று ஹிஜ்ரத் வரை, 13 ஆண்டுகள் மக்காவில் இருந்திருக்கிறார். அதன் பிறகு மதீனா வாழ்க்கை. முதலில் நாம் கவனிக்க வேண்டியது முஹம்மதின் மக்கா வாழ்க்கையைப் பற்றிதான். 13 ஆண்டுகளில் அவர் மிக சொற்பமான எண்ணிக்கையில்தான் (70-80) அடியாட்களைத் திரட்டியிருந்தார். அவர்களில் பெரும்பாலனவர்கள் அடிமைகளும், குடும்பத்திற்கு கட்டுப்படாமல் வெட்டித்தனமாக திரிந்து ஊரைச்சுற்றிக் கொண்டிருந்தவர்களும்தான். இந்த காலகட்டத்தில் முஹம்மதிற்கு எழுத்தர்கள் என்று எவரும் இருந்தாக ஹதீஸ்களில் தகவல் இல்லை.
முதலில் மறைமுக அழைப்பு என்ற காலகட்டத்தைக் கவனத்தில் கொண்டால், அவர் தனது உறவினர் மற்றும் நண்பர்கள் என்ற தனிநபர்களிடம் மட்டுமே தனது பணியை செய்திருக்கிறார். அப்பொழுது வெளியான ’வஹீ’க்கள் எவ்வாறு, யாரால் பாதுகாக்கப்பட்டது?
முஹம்மது மக்கவில் பகிரங்க அழைப்புப்பணி செய்த பொழுது எழுத்துவடிவிலான குர்ஆனின் பகுதிகள் இருந்துள்ளதாக இப்ன் இஸ்ஹாக் கூறுகிறது.
..Thereupon ‘Umar returned to his sister and brother-in-law at the time when khabbab was with them the manuscript of Ta Ha, which he was reading to them. When they heard ‘Umar’s voice Khabbab hid in a small room, or in a part of the house, and Fatima took the page and put under her thigh…
(Page 156, Life of Muhammad a Translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah By A.Guillaume)
உமரின் சகோதரி ஃபாத்திமாவிடம் இருந்த குர்ஆனின் பிரதி யாரால் எழுதப்பட்டது?
முஹம்மது எழுதவோ, படிக்கவோ தெரியாதவர் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. மிக சொற்பமான ஆட்களுடன் வலம் வந்து கொண்டிருந்த மக்கா கலகட்டத்தில், முஹம்மதின் எழுத்தர்கள், தெரிந்தோ தெரியாமலோ தவறாக எழுதியிருந்தாலும் எழுத்தறிவற்ற முஹம்மதால் எழுதப்பட்டவைகளை சரிபார்க்கவும் இயலாது. எழுத்தர்களின் பணியை சரிபார்த்தவர்கள் யார்?
இந்தக் கேள்வி, முஹம்மது மதீனாவிலிருந்த காலகட்டத்திற்கும் பொருந்தும். அவரது தோழர்கள் பலரும் அவரது வஹீயை எழுத்துவடிவில் தொகுத்துக் கொண்டிருந்தனர்.
…ஆனால் இவ்வேதம் அருளப்பட்டகாலத்தில் வாழ்ந்த மக்களால் இந்தக் குர்ஆனைப் பாதுகாக்க முடியும் என்று கருத முடியாது. மிகவும் பலவீனமான நிலையிலும், எதிரிகளால் பலவகையான இன்னல்களுக்கு இலக்காக்கப்பட்ட நிலையிலும்,படிப்பறிவற்ற நிலையிலும் உள்ள சமுதாயம் தமக்கு வழங்கப்படும் போதனையை முழுமையாகப் பாதுகாக்கும் என்று யாராலும் எண்ணிப்பார்க்க முடியாது…
143. பாதுகாக்கப்படும் திருக்குர்ஆன் onlinepj.com
மனிதர்களுக்காக ஒரு புத்தகத்தை வழங்குவதுதான் அல்லாஹ்வின் மிகமிக நீண்டகாலத் திட்டம். அதை ஏழாம் நூற்றாண்டில் ஏறத்தாழ கல்வியறிவற்ற ஒரு சமுதாயத்தில், அவர்களுக்கு அதற்குமுன் புத்தகமென்றால் என்ன, அதை எவ்வாறு கையாளுவது, எவ்வாறு பாதுகாப்பது என்றெல்லாம் அறிந்ததிராத சமூகத்தில் வழங்கினான். குர்ஆனை வெளியிட்டதாகக் கூறப்படும் அல்லாஹ்வோ அல்லது முஹம்மதுவோ அதைக் கற்பிக்கவில்லை என்பதையே பீஜேவின் விளக்கம் கூறுகிறது. இது அவர்கள் குர்ஆனில் அனைத்துவகை தவறுகளும் இடம்பிடிக்கச் செய்திருப்பார்கள் என்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
மட்டுமல்ல, அரபி எழுத்து முறை முழுமையாக வளர்ச்சியடையாத காலகட்டத்தில் குர்ஆன் வெளிப்பட்டுள்ளது. அரபியில் தோற்றத்தில் ஒரே மாதிரி உச்சரிப்பில் மாறுபடும் எழுத்துக்கள் உள்ளன. இது முஹம்மது மரணமடைந்து நீண்ட காலத்திற்கு பிறகே புள்ளிகளும், குறியீடுகளும் சேர்க்கப்பட்டு சரிசெய்யப்பட்டது. மேலும், கவிதையின் சில பகுதிகளை மட்டுமே கூறி எஞ்சியதை வாசிப்பவர்களின் முடிவிற்கு விடுவது என்ற வழக்கமும் இருந்துள்ளது. இன்றும் குர்ஆனில் இந்த நிலையைப் பார்க்கமுடியும். குர்ஆனின் இத்தகைய அமைப்பு பிற்காலத்தில், இஸ்லாமிய அறிஞர்களுக்கு அடைப்புக்குறிகளுக்குள் “கபடி” விளையாட ஏதுவாக அமைந்துவிட்டது.
முஹம்மதின் காலத்தில் குர்ஆன் எழுத்துவடிவத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார் பீஜே.
மக்காவில் முஹம்மதிற்கு எழுத்தர்கள் என்று எவரும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அறிஞர் பீஜே, குர்ஆன் பதிவு செய்யப்பட்டதை நேரில் கண்டதைப் போன்று அடித்து விளையாடுகிறார்.
முஹம்மது மக்காவிலிருந்து வெளியேறுவதற்குமுன் அல்லாஹ், முஹம்மதை அழைத்து ஒரு முக்கியமான பேரத்தை பேசியாதாகவும் இறுதியில் சில கட்டளைகளை நேரடியாக வழங்கியதாகவும் ஹதீஸ்கள் கூறுகின்றன.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி)தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது.பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்)நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது…
புகாரி 3207
“Open heart surgery”, ஈமானை நிரப்ப முடியுமா? அதென்ன அத்தகையதா? என்ற கேள்விகள் நியாயமானவைகளே! ஆனால் என்ன செய்வது இஸ்லாம் பகுத்தறிவை ஒப்புக்கொள்ள வேண்டுமே?
விண்வெளிப் பயணத்தின் துவக்க சடங்குகள், கனவு போன்ற காட்சியாம், புராக்கில் பறந்து சென்றது உண்மையான நிகழ்வாம். நடைமுறை வாழ்வுடன் முரண்படும் ஹதீஸ்களைப் புறக்கணிக்கவேண்டும் என்கிறார் அறிஞர் பீஜே. இப்படியொரு வாகனத்தை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?
அறிஞர் பீஜே வேடிக்கையான மனிதர். ஹதீஸை அவரது விருப்பம் போல மறுத்துக் கொண்டிருக்கிறார். நாமும் அவரது விளக்கத்தின் வழியிலேயே சென்று, அல்லாஹ்வும் முஹம்மதுவும் நிகழ்த்திய நேரடி பேரத்தை கவனிக்கலாம்.
….நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்"என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி)சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன்.அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு(ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை)லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது.
புகாரி 3207
இஸ்லாமின் அடிப்படை கடமைகளுள் ஒன்றான ஐங்காலத் தொழுகை என்பது குர்ஆனில் எங்குமே சொல்லப்படவில்லை. உருட்டி, மருட்டி, திரட்டி, திரித்து, திணித்தால் மட்டுமே ஐவேளைத் தொழுகை என்ற கருத்தைக் குர்ஆனிலிருந்து பெறமுடியும்.
முஹம்மதிடம் அல்லாஹ் கூறியவாறே சிறிய மாற்றம்கூட இல்லாமல் அல்லாஹ் நேரடியாக முஹம்மதிடம் வழங்கிய இந்தக் கட்டளைகளை அல்லாஹ் வழங்கியவாறே கூறமுடியுமா?
இங்கு அல்லாஹ் நேரடியாக ” 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்"என்றேன்… நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன்.ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்…" என்று வழங்கியதாகக் கூறப்படும் இந்தக்கட்டளை ஏன் குர்ஆனில் இடம் பெறவில்லை?
முஹம்மது குர்ஆன் என்ற ஒன்றைத் தணித்து பதிவு செய்ய முயன்றதை முஸ்லீம் ஹதீஸ் 5734-ல் கவனித்தோம். முஹம்மது கனவில் கண்டவைகளும், மனதில் உதித்தவைகளும் குர்ஆன் என்றும் அல்லாஹ்வின் கட்டளைகளென்றும் கூறி எழுதிவைத்துக் கொண்டவர்கள், அல்லாஹ், நேரடியாக வழங்கிய கட்டளைகளை காற்றில் பறக்க விட்டது ஏனோ?
குர்ஆன் மற்றும் ஹதீஸ் இஸ்லாமின் அடித்தளம் என்ற போதிலும் குர்ஆன் மட்டுமே வேதம். எனவே அல்லாஹ்வின் உறுதிமொழி குர்ஆனுக்கு மட்டுமே பொருந்தும். இஸ்லாமின் ஒரு பிரிவு, போற்றிப் புகழும் புகாரி, முஸ்லீம் போன்ற ஹதீஸ் தொகுப்புகளை, மற்றொரு பிரிவு ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஹதீஸ்களின் உதவியில்லாமல் ஐவேளைத் தொழுகை என்ற கருத்தை அறியவே முடியாது.
தொழுகைகளின் எண்ணிக்கைபற்றி அல்லாஹ், நேரடியாகவே வழங்கிய கட்டளை குர்ஆனில் இடம் பெறவில்லை என்பது வேடிக்கையானது. எந்தக் காலத்திலும் குர்ஆன் பாதுகாப்பாக இருந்ததில்லை என்பதற்கு இது எளிய உதாரணம். ரமளான் நோன்பையும் அதன் சடங்கு முறைகளைப்பற்றியும் குறித்துவைத்தவர்கள் நோன்பைவிட முதன்மையான தொழுகையை எப்படி விட்டார்கள்?
அல்லாஹ் தனது வஹீயை மனிதக்கரங்களிலிருந்து பாதுக்காப்பதாக கூறிக் கொண்டாலும், அவைகளை மறைந்து போவதற்கான வழிமுறைகளை செயல்படுத்தியதாகத்தான் தோன்றுகிறது.
குர்ஆனின் முழு அத்தியாயங்களையும் மறந்துவிட்டதைப் பற்றி,
அபூமூசா (ரலி) அவர்கள்(பின்வருமாறு) கூறினார்கள்:
பஸ்ராவாசிகளிலேயே நீங்கள்தாம் சிறந்தவர்கள் ஆவீர்கள் அவர்களிலேயே குர்ஆனை நன்கறிந்தவர்களும் ஆவீர்கள்.எனவே (தொடர்ந்து) குர்ஆனை ஓதிவாருங்கள். காலம் நீண்டுவிட்டபோது உங்களுக்கு முன்வாழ்ந்த (வேதம் அருளப் பெற்ற சமுதாயத்த) வர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டதைப் போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிட வேண்டாம். நாங்கள் (நபி(ஸல்) அவர்களதுகாலத்தில்) ஓர் அத்தியாயத்தை ஓதி வந்தோம் கடுமை(யான எச்சரிக்கை விடுக்கும் தோரணை)யிலும் 'பராஅத்"எனப்படும் (9ஆவது)அத்தியாயத்திற்கு நிகராக அதைநாங்கள் கருதினோம்.ஆனால், அந்த அத்தியாத்தை நான் மறக்கச்செய்யப்பட்டு விட்டேன்.ஆயினம், அதில் 'ஆதமின் மகனுக்கு(மனிதனுக்கு) இரு ஓடைகள்(நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை (சவக்குழியின் மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன்.மேலும், மற்றோர் அத்தியாயத்தயும் நாங்கள் ஓதிவந்தோம். அதை(சப்பஹ, யுசப்பிஹ, சப்பிஹ் என)இறைத்துதியில் தொடஙகும் அத்தியாயங்களில் ஒன்றுக்கநிகராகவே நாங்கள் கருதினோம். அந்த அத்தியாயத்தையும் நான் மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும்,அதில் 'நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அவ்வாறுநீங்கள் செய்யாததைப் பிறருக்குச் சொல்வீர்களாயின்) அது உங்களுக்கு எதிரான சாட்சியாக உங்களுடைய கழுத்துகளின் மீது எழுதப்படும். பின்னர் மறுமைநாளில் அது குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன்.
முஸ்லீம்1897
வசனங்களை தவறவிடப்பட்டது பற்றி…
…He also said: Ibn Abu Maryam reported to us from Ibn Lahi`a, from Abu l-Aswad, from `Urwa b.l-Zubair, that A’sha said: ”During the time of the Prophet (s) two hundred verses of the chapter l-A¡zab were recited but when compiling the Quran Uthman was only able to collect what now exists”. ..
(உர்வா பின் ஜுபைர் அறிவிக்கிறார்
ஆயிஷா கூறினார்: தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் அஹ்ஜாப் அத்தியாயத்தில் 200 வசனங்கள் ஒதப்பட்டு வந்தது. குர்ஆனைத் தொகுத்த பொழுது, இப்பொழுது எவ்வளவு இருக்கிறதோ அதைமட்டுமே உத்மானால் திரட்ட முடிந்தது)
He also said: Ismail b. Ja`far reported to us from ‘l-Mubarak b. Fudala, from `Asim b. Abu l-Nujud, from Zirr b. Hubaish who said: Ubayy b. Ka`b told me:”How many verses do you count in the chapter ‘l-A¡zab? I said: ‘72 or 73 verses. ’He said: ‘At one time it had as many verses as ‘l-Baqara, including the verse on stoning which we used to recite.’ I said: What is the verse of stoning? ‘He said: ‘If a married man or woman fornicates, stone them without hesitation; a fitting punishment from God. God is Mighty, and all Wise’ a fitting punishment from God. God is Mighty, and all Wise.’
Al-Itqan fi Ulum al-Qur’an by Jalaluddin Suyuti
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன் என்று ஒருவர் கூறுவதே அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும்.உண்மையில், அவர் மறக்கவைக்கப்பட்டுவிட்டார்.
புகாரி 5039
ஆயிஷா(ரலி) கூறினார்
இரவு நேரம் பள்ளிவாசலில் ஒருவர் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பதை நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.அப்போது நபியவர்கள், 'அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்!இன்ன அத்தியாயங்களிலிருந்து நான் மறந்துவிட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டிவிட்டார்' என்று கூறினார்கள்.
புகாரி 5042
இதைப் போன்ற முரண்பாடுகளுக்கு, குறிப்பிட்ட அந்த ஹதீஸ்கள் பலவீனமானவைகளென்றுப் புறக்கணித்துக் கொண்டிருப்பதைத் தவிர இஸ்லாமியர்களிடம் வேறு எவ்விதமான பதிலும் இல்லை. இதற்கு அல்லாஹ் என்ன பதில் சொல்கிறான்?
இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும்.
குர்ஆன் 56:77, 78
அல்லாஹ் குர்ஆனை ஒரு பாதுகாப்பான ஏட்டில் வைத்திருப்பதாக கூறுகிறான். இஸ்லாமிய நம்பிக்கைகளின் படி, அது எங்கோ ஏழாம் வானத்தில் இருக்குமென்று நினைக்கிறேன். அது அவர்களுக்கு மட்டுமல்ல எவருக்குமே உதவப் போவதில்லை. நாம் இன்றிருக்கும் குர்ஆனின் கதையைப்பார்போம்.
ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்கள் கூறினார்.
யமாமா போர் நடைபெற்ற பின்(கலீஃபா) அபூ பக்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரக் கூறினார்கள். (நான் சென்றேன்.அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் இப்னு கத்தாப்(ரலி)இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்:
உமர் அவர்கள் என்னிடம் வந்து, 'இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி(நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,)தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்' என்று கூறினார்கள்.நான் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?' என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள்…
புகாரி 4679
குர்ஆனைத் தொகுக்கும்பணியை ஸைத் இப்னு ஸாபித் என்ற (22-23 வயது) இளைஞரை அழைத்து ஒப்படைக்கிறார்கள். அதற்கு அவர்,
...’அல்லாஹ்வின் மீதாணையாக!மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், நபி(ஸல்)அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?'…
புகாரி 4679
என்று மறுத்துவிடுகிறார். அபூபக்ர் மற்றும் உமரின் வற்புறுதல்களுக்குப் பிறகு ஒப்புக்கொள்கிறார். முஹம்மதின் காலத்தில் குர்ஆன் முழுத் தொகுப்பாக இருக்கவில்லையென்ற முடிவிற்கே நாம் வர வேண்டியுள்ளது(!).
அனஸ்(ரலி) அறிவித்தார்
இந்த நால்வரைத் தவிர வேறு எவரும் (குர்ஆனைக் கேட்டுத்)திரட்டியிராத நிலையில் நபி(ஸல்)அவர்கள் இறந்தார்கள்.
1. அபுத்தர்தா
2. முஆத் இப்னு ஜபல்
3. ஸைத் இப்னு ஸாபித்
4.அபூ ஸைத்,
5. உபை இப்னு கஅப் (புகாரி 5004)
நாங்களே (என் தந்தையின் சகோதரர்களில் ஒருவரான) அபூ ஜைத்(ரலி) அவர்களுக்கு வாரிசானோம். (அன்னாருக்கு வேறு வாரிசுகள் இல்லை.)
புகாரி 5004
அதாவது குர்ஆன் தொகுக்கப்பட்ட காலத்தில் இந்த நபர்களைத் தவிர வேறு எவருக்கும் குர்ஆன் முழுமையாகத் தெரியாது. முஹம்மதை நிழல்போல பின்தொடர்ந்து கொண்டிருந்த அபூபக்கர், உமர், உஸ்மான் இன்னும் அவரது தோழர்கள் பலருக்கும் குர்ஆன் முழுமையாகத் தெரியவில்லை. யமாமா போரில் கொல்லப்பட்டவர்களுக்கும் குர்ஆன் முழுமையாகத் தெரியாது.
உண்மையிலேயே இவர்களைத் தவிர வேறு எவருக்கும் குர்ஆன் முழுமையாகத் தெரியாதா? அதை பிறகு கவனிப்போம்.ஸைத் இப்னு ஸாபித் தலைமையிலான குழு தொகுத்த குர்ஆன், அபூபக்ர், உமர் ஆகியவர்களைக் கடந்து ஹப்ஸாவை அடைகிறது. அதன்பிறகு சுமார் 19 ஆண்டுகளுக்கு குர்ஆன் தொகுக்கப்பட்டதை அடியோடு மறந்துவிடுகின்றனர்.
அனஸ் இப்னு மாலிக் (ரலி)அறிவித்தார்
ஹுதைஃபாயமான் (ரலி)உஸ்மான்(ரலி) அவர்களிடம்(அவர்களின் ஆட்சிக் காலத்தின் போதும தீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது)உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர்பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கான போரில் கலந்து கொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள்.ஹுதைஃபா (ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம்நாட்டு)முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்து வேறுபாடு கொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே,ஹுதைஃபா (ரலி) உஸ்மான் (ரலி)அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடு கொண்டதுபால் இந்தச் சமுதாயமும் இந்த(த்திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்துவேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்றுகூறினார்கள்...
புகாரி 4987
அனஸ்(ரலி) அறிவித்தார்
உஸ்மான்(ரலி) (அன்னை ஹஃப்ஸாவிடமிருந்து குர்ஆன்பதிவுகளை வாங்கி வரச்செய்து) ஸைத் இப்னு ஸாபித்,அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்,ஸயீத் இப்னு ஆஸ், அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம் (ரலி) ஆகியோரை அழைத்து, (அவற்றைப் பிரதியெடுக்கப் பணித்தார்கள்)அவர்கள் ஏடுகளில் அவற்றைப் பிரதியெடுத்தார்கள்.உஸ்மான்(ரலி) (அன்சாரியான ஸைத் இப்னு ஸாபித் தவிர உள்ள)குறைஷிகளின் மூன்றுபேர் கொண்ட அந்தக் குழுவிடம், 'நீங்கள் மூவரும் ஸைத் இப்னு ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஒரு (எழுத்து இலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறைஷிகளின் மொழி வழக்கிலேயே அதை எழுதுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷிகளின் மொழி வழக்கில்தான் இறங்கியது" என்று கூறினார்கள். அக்குழுவினரும் அவ்வாறே செய்தார்கள்.
புகாரி 3506
ஹப்ஸாவிடமிருந்த குர்ஆன் தொகுப்பைப் பிரதியெடுப்பதோடு நின்றுவிடாமல் திருத்தங்களையும் மேற்கொள்கிறார். குர்ஆன் குறைஷிகளின் மொழிவழக்கில் மட்டுமே இறங்கியதென்பதை ஹதீஸ்கள் ஒப்புக்கொள்ளவேண்டுமே?
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல்(திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின்படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார)மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது.
புகாரி 3219
மேடை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பலகுரலில் பேசுபவர்கள், ஒரே வசனத்தை வெவ்வேறு நபர்கள், வேவ்வேறுவிதமான மொழிவழக்கில் பேசுவதைப் போன்று பேசி நம்மை வியக்க வைப்பதை பார்த்திருப்பீர்கள். ஜிப்ரீலிடம், முஹம்மதுவும் அத்தகைய ’மிமிக்ரி’ பயிற்சியை எடுத்திருக்கிறார்.
பலகுரல் வித்தையில் பயிற்சி பெறுவதைவிட அல்லாஹ்வின் வஹீயை குறைந்தபட்சமாக இன்னொரு மொழியிலும் வெளியிட முயன்றிருக்கலாம். இதை எதற்காகக் கூறுகிறேன் என்றால், அரபியில் உள்ளது மட்டுமே குர்ஆன் எனவும் மொழிபெயர்ப்பிலுள்ளவைகள் குர்ஆன் இல்லை எனவே தர்ஜமாவிலிருப்பவைகள் தவறான பொருளைக் கொடுத்தால் அதற்கு அல்லாஹ்வைக் குறைகாணக் கூடாது என்கிறனர்.
தமிழில் உள்ளது குர்ஆன் அல்ல..!
(முஹம்மதே!) அவர்கள் படிப்பினை பெறவே இதை உமது மொழியில் எளிதாக்கியுள்ளோம்.
குர்ஆன் 44:48
அவர்கள் படிப்பினை பெற்றார்களா? இல்லையா? என்பது நமக்குத் தேவையில்லை. அரபு அல்லாத மொழியைத் தாய்மொழியாக கொண்டவர்களுக்கு என்ன பதில்? என்பதையே நாம் கவனிக்கவேண்டும்! குர்ஆனை மற்ற பிறமொழிகளால் ஒருகாலும் புரிந்து கொள்ளவே முடியாது. உதாரணத்திற்கு, தமிழர் ஒருவர் சர்வ்வல்லமையுடைய அல்லாஹ்வின் கட்டளைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அரபியைப்பயின்று மொழியிலக்கணத்தில் கற்றுத்தேர்ந்து முனைவர் பட்டம் வாங்கினாலும் குர்ஆனை புரிந்து கொள்ள முடியாது!
ஏனெனில்,
அப்துல் வஹ்ஹாப், நிஜாம்தீன் மன்பயீ, அப்துல் காதிர், அஷஹைக் நாகூர் பிச்சை, முஹம்மது அபூபக்ரு அஸ்ஸித்தீக்,இக்பால் மதனி, அஷ்ஷைக் முஸ்தஃபா, அஷ்ஷைக் முஹம்மது, மக்தூம் அஹ்மது ஃபாரூக், அஷ்ஷைக் முத்து வாப்பா அப்துஸ் ஸமது… (இன்னும் உங்களுக்குத் தெரிந்த தமிழ்-அரபிமொழி வல்லுனர்களைச் சேர்த்துக் கொள்ளவும்) போன்ற அரைகுறை(?!) மொழிவல்லுனர்களும் மொழிபெயர்த்த குர்ஆனில் குறைவு ஏற்பட்டுவிட்டது.
இக்குறையை சரிசெய்ய அரபிகளுக்கே அரபி சொல்லிக் கொடுக்கும் அறிஞர் பீஜே மற்றும் அவரது உதவியாளர்கள் களத்திற்கு வந்தனர். அவர்கள் மொழிபெயர்த்தும் விதவிதமாக விளக்கமளித்தும் திருத்தங்கள் செய்த பிறகும் தமிழில் உள்ளதை அவர்களே குர்ஆனாக ஏற்கமறுக்கின்றனர், மட்டுமல்லாமல் குறைகள் இருக்குமென்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவும் செய்கின்றனர்.
குர்ஆன் அனைவருக்கும் பொதுவான இறைவேதமாக இருக்கிறதென்று ’பீலா’ விடுபவர்கள்,
பதில் சொல்லட்டும் திறமையிருந்தால்!
தொடரும்…
தஜ்ஜால்