பனூ ஃபஸாரா குலத்தலைவி
முஹம்மதின் கால அரேபியாவில் அரசாங்கமும் இல்லை ஆட்சியாளர்களும் இல்லை. இனக்குழுக்கள்தான். ஒவ்வொரு இனக்குழுவுக்கும் ஒரு முக்கிய நபர் அதன் தலைவரகாக இருப்பார். இனக்குழு... இனக்குழு என்று சொல்லிக் கொண்டிருந்தால் அந்நியமாக இருக்கிறது எனவே இதை சற்று எளிமையாக ஜாதிக் கட்சிகளும் அதன் தலைவர்களும் என்று சொல்லலாம். இதுதான் அன்றைய அரேபியா. நம்முடைய முஹம்மது அவற்றில், சற்று உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டு திரிந்த ஒரு குழுவைச் சேர்ந்தவர். அதிலும் கஅபாவை நிர்வகிக்கும் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்!
அவர்களது கடவுள் நம்பிக்கை பாகன் நம்பிக்கை, கிறிஸ்தவம் அல்லது யூதம் என்று பலவாறாக இருந்தாலும் இந்த இனக்குழு அதாவது ஜாதி தலைமைக்கு கட்டுப்படுபவர்களாக இருந்தனர்.
முஹம்மது தன்னுடைய வம்ச சிறப்பைக் கூறுகிறார்
வாஸிலா பின் அல்அஸ்கஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் "கினானா"வைத் தேர்ந்தெடுத்தான்; "கினானா"வின் வழித்தோன்றல்களில் குறைஷியரைத் தேர்ந்தெடுத்தான்; குறைஷியரிலிருந்து பனூ ஹாஷிம் குலத்தாரைத் தேர்ந்தெடுத்தான். பனூ ஹாஷிம் குலத்தாரிலிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தான்.
முஸ்லீம் 4573
முஹம்மதிற்கு ஜாதிப்பற்று இருந்ததென்று நாம் சொன்னால், முஹம்மது, ஜாதி வேறுப்பாட்டை களைந்து அனைவரையும் ஒற்றை நம்பிக்கையின்கீழ் கொண்டுவந்தார்; அரேபிய ஜாதிகளிடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தவே வெவ்வேறு ஜாதிகளிலிருந்து திருமணமும் செய்து கொண்டார் என்று நம்முடைய முல்லாக்கள் ‘பீலா’விடுவார்கள்.
உண்மை என்னவென்றால் கோழி எதுவாக இருந்தால் என்ன குழம்பு ருசியாக இருக்க வேண்டுமென்பது முஹம்மதுவின் கொள்கை! நாம் எடுத்துக் கொண்ட தலைப்பு அதுவல்ல எனது கோழிக்கதையை கடந்து விடுவோம்.
”உங்களில் இறைநம்பிக்கையாளரே சிறந்தவர்” என்ற தத்துவ கப்ஸாவெல்லாம் அவர் அல்லாஹ்வைப்பற்றி பேசும் பொழுதுமட்டும்தான். ஆட்சி அதிகாரம் என வந்துவிட்டால்,
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை.
புகாரி 3501
உண்மையில் முஹம்மது தான் சார்ந்திருந்த குறைஷி என்ற ஜாதியின் ஆதிக்கத்தின் கீழ் மற்ற அனைவரையும் கொண்டு வந்தார். பாகன் அரேபியர்களின் கடவுளான அல்லாஹ்வை, தனது அடிமையாக்கிக் கொண்டார். இல்லாத அல்லாஹ்வின் பெயரால் இனக்குழுக்களின் மீது திடீர்த் தாக்குதல்களை நிகழ்த்தினார், கொள்ளையடித்தார், கற்பழிப்புகளை நிகழ்த்தினார். உஸ்மான் குர்ஆனை (உருவாக்கி)த் தொகுத்த பொழுது அதை குறைஷியர் மொழிவழக்கில் பதிவு செய்ய கட்டளையிட்டதை இவர்களது ஜாதிவெறிக்கு சான்றாகச் சொல்லலாம்.
அல்லாஹ்வின் பெயரால் தான் விரும்பியவாறு ஒவ்வொரு இனக்குழுவையும் அடக்கி தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார். "பனூ ஃபஸாரா' வும் அவற்றில் ஒன்று!
பனூ ஃபஸாரா குலத்தினரின் தலைவியாக உம்மு கிர்ஃபா என்ற வயதான பெண்மணி இருந்தார். தனது சமுதாயத்தை அந்தப் பெண்மணி ஒரு தாயைப்போல அரவணைத்து பாதுகாத்துவந்தார். அதனால் அவருக்கு அந்த சமுதாய மக்களிடையே மட்டுமல்லாமல் மற்றவர்களிடம்கூட செல்வாக்கு இருந்தது. முஹம்மது என்ற சக்கரவர்த்தித் திருமகன் இருக்கும் பொழுது, இன்னொரு தலைமையா? அதிலும் ஒரு பெண் தலைமைப் பொறுப்பில் இருப்பதை எப்படி அனுமதிக்க முடியும்?
”தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது" என்று கூறினார்கள்.
புகாரி 4425
என்று முஹம்மதிற்கு அல்லாஹ் கற்பித்துக் கொடுத்திருக்கிறான். எனவே பனூ ஃபஸாரா குலத்தை உருப்படச் செய்ய வேண்டுமென்ற ஒரு நல்ல நோக்கத்திற்காக பனூ ஃபஸாரா நோக்கி தனது அடியாளான ஜைத் பின் ஹாரிதாவை அனுப்புகிறார்.
தபரி V-8, பக்- 96
அங்கு நடந்த புனிதப் போரில், ஜைத் மரணஅடி வாங்கியதுடன் தனது சகாக்கள் சிலரையும் இழந்துவிடுகிறார். எஞ்சி இருந்தவர்களும் ஜைத்தும் அங்கிருந்து தப்பிவிடுகின்றனர். ஜைத்தின் மனதில் அடக்க முடியாதவெறி; பனூ ஃபஸாராவை வெற்றி கொள்ளும்வரை தன்னை சுத்தப்படுத்திக் கொள்வதில்லை (அதாவது குளிக்கமாட்டேன்) என்பதாக சபதம் செய்கிறார்.
ஜைத் பின் ஹாரிதா காயங்களிலிருந்து உடல்நிலை தேறியதும் அண்ணல் முஹம்மது, தனக்கு அந்தப்புரத்தில் அலுவல்கள் நிறைய இருப்பதால் பனூ ஃபஸாரா மீது தாக்குதல் நடத்த ஜைத் பின் ஹாரிதா தலைமையில் மீண்டும் ஒரு படையை அனுப்புகிறார்.
பனூ ஃபஸாராத்தினரை வாதில் குர்ரா என்ற இடத்தில் நேருக்குநேர் சந்தித்து வெற்றி கொள்ளகிறார். ஃபஸாரா தரப்பில் பெருத்த உயிர்சேதம் ஏற்படுகிறது. வழக்கம் போல அவர்களின் தலைவி உம்மு கிர்ஃபா மற்றும் அவரது அழகிய மகள்கள் உட்பட பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாகக் கைப்பற்றப்படுகின்றனர். உம்மு கிர்ஃபாவின் இயற்பெயர் ஃபாத்திமா பின்த் ராபியா பின்த் பத்ர் அவர், மாலிக் பின் ஹுதைஃபா பின்த் பத்ர் என்பவரின் மனைவியாக இருந்தார். ஆனால் நான் முன்பே சொன்னது போல உம்மு கிர்ஃபா மிகவும் வயதான பெண்மணி.
அடிமையாக ஒரு படுகிழவியைப் பிடித்துக் கொண்டுபோய் முஹம்மதின் முன்னால் நிறுத்தினால் கோபத்தில் ஜைத்தின் முகத்திலேயே துப்பிவிடுவார். அதன் பிறகு ஜைத் பின் ஹாரிதாவின் நிலை என்னாவகும் என்பதைப்பற்றியும் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஜைத் பின் ஹாரிதாவிற்கு ஏற்கெனவே அடி வாங்கிய வெறி, எத்தனை நாட்கள் குளிக்காமல் இருந்தாரோ தெரியவில்லை, உம்மு கிர்ஃபாவைக் கொடூரமாகக் கொல்லை செய்யுமாறு கைஸ் பின் அல் முஸஹ்ஹர் என்பவருக்கு உத்தரவிடுகிறார்.
உம்மு கிர்ஃபாவின் இரண்டு கைகளையும் கால்களையும் தனித்தனியாக கட்டி இரண்டு ஒட்டகங்களுடன் இணைத்து அவரது உடலை இரண்டாக கிழித்து எறிந்தனர்.
பின்னர் உம்மு கிர்ஃபாவின் மகளையும் அப்துல்லா பின் மஸாதா என்பவரையும் முஹம்மதின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தினர்.
உம்மு கிஃபாவின் மகளை முஹம்மது சலமா பின் அல்அக்வஉ வழங்குகிறார். உம்மு கிர்ஃபாவின் மகள் அந்த சமுதாயத்தினரால் அதிகம் மதிக்கப்படுபவராக இருந்தார்.
இந்த பனூ ஃபஸாரா குலத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றிய செய்தியும் கொடூரமாக உம்மு கிர்ஃபாவைக் கொலை செய்ய உத்திரவிடப்பட்டது பற்றியும் இப்ன் இஸ்ஹாக்கில் (Page 655, The Life of Prophet Muhammad, Translated by A.Guilllaume) பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த செய்தி புகாரி ஹதீஸ் தொகுப்பில் பதிவு செய்யப்படவில்லை. எனவே நம்முடைய முஃமின்களுக்கு உம்மு கிர்ஃபாவின் கொடூர மரணம் பற்றித் தெரியாது. வழக்கம் போல முல்லாக்கள் இதை மழுப்பி மறைத்து வைத்திருக்கின்றனர். பொதுவாகவே நமது முஃமின்கள், கண்மணி முஹம்மது பங்கேற்காத தாக்குதல்களைப்பற்றி சிலேகித்துப் பேசமாட்டார்கள்.
உம்மு கிர்ஃபாவின் அழகிய மகள் சலமாவிற்கு வழங்கப்பட்டதை, ஒரு இறைத்தூதரால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அதுவும் அந்த சமுதாயத்தினரால் மதிக்கப்படும் ஒரு பெண்ணை தனது படைவீரன் அனுபவிப்பதா?
கூடாது…!
கூடவே கூடாது!!!
அல்லாஹ் ஒருக்காலும் இதை அனுமதிக்க மாட்டான்.
உடனே ஒரு திட்டத்தை முஹம்மதின் மனதில் உள்ளுதிப்பாக அல்லாஹ் அனுப்பினான்.
முஸ்லீம் ஹதீஸில் இதைப்பற்றிய ஒரு செய்தி இருக்கிறது. சற்று வேறு வடிவத்தில்.
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் "(பனூ) ஃபஸாரா' குலத்தார்மீது போரிடப் புறப்பட்டோம். எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக இருந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எங்களுக்குத் தளபதியாக நியமித்தார்கள்.
எங்களுக்கும் (ஃபஸாரா குலத்தாரின்) நீர் நிலைக்குமிடையே ஒரு மணி நேரப் பயணத்தொலைவு இருந்தபோது, இரவின் இறுதி நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களை ஓய்வெடுக்கச் சொன்னார்கள்.
பின்னர் (காலைத் தொழுகைக்குப் பின்) பல்வேறு திசைகளிலிருந்து அதிரடித் தாக்குதல் தொடுத்தோம். அப்போது (ஹவாஸின் குலத்தாரின்) நீர்நிலைக்கு வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அங்கு சிலரை வெட்டி வீழ்த்தினார்கள்; வேறுசிலரைச் சிறைப்பிடித் தார்கள்.
அப்போது நான் (எதிரிகளில்) ஒரு கூட்டத்தைப் பார்த்தேன். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் என்னை முந்திக்கொண்டு (என்னிடமிருந்து தப்பி) மலைக்குச் சென்றுவிடுவார்களோ என்று நான் அஞ்சினேன். உடனே அவர்களுக்கும் அந்த மலைக்குமிடையே ஓர் அம்பைப் பாய்ச்சினேன். அந்த அம்பைப் பார்த்ததும் அவர்கள் நின்றுவிட்டனர்.
உடனே அவர்களைப் பிடித்துக் கொண்டுவந்தேன். அவர்களிடையே பனூ ஃபஸாரா குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியும் இருந்தாள். அவளது உடலில் தோலினாலான "கஷ்உ' ஒன்று இருந்தது. ("கஷ்உ' என்பதற்கு "விரிப்பு' என்று பொருள்.) அவளுடன் அவளுடைய மகளும் இருந்தாள். அவள் அரபியரிலேயே அழகிய பெண் ஆவாள். அவர்களைப் பிடித்துக்கொண்டு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவளுடைய மகளை எனக்குக் கூடுதல் பங்காக வழங்கினார்கள்.
இந்நிலையில் நாங்கள் (மதீனாவுக்கு) வந்தோம். நான் அவளுக்காக ஆடையைக்கூடக் களைந்திருக்கவில்லை. (தாம்பத்திய உறவு கொள்ளவில்லை. மதீனாவின்) கடைத் தெருவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தபோது, "சலமா! அப்பெண்ணை என்னிடம் கொடுத்துவிடு'' என்று கூறினார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே! அவள் என்னைக் கவர்ந்துவிட்டாள். நான் அவளுக்காக ஆடையைக்கூட களைந்திருக்கவில்லை'' என்று கூறிவிட்டேன்.
பிறகு மறுநாள் கடைத் தெருவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்த போதும் "சலமா! அப்பெண்ணை என்னிடம் ஒப்படைத்துவிடுவாயாக! உன் தந்தை (உன்னைப் போன்ற மகனைப் பெற்றெடுத்ததற்காக) அல்லாஹ்வுக்கே (நன்றி)'' என்று கூறினார்கள்.
நான் "அல்லாஹ்வின் தூதரே! அவள் உங்களுக்கே உரியவள் (அவளை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்). அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவளுக்காக ஆடையைக்கூட களைந்திருக்கவில்லை'' என்று கூறினேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளை மக்காவாசிகளிடம் அனுப்பிவைத்து, மக்காவில் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களில் சிலரை விடுவித்தார்கள்
முஸ்லீம் 3609
இவர்கள் பெண்களின் சதைக்காக எப்படி அலைந்தனர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
வம்படியாக சென்று குடியிருப்புகளைத் தாக்கிக் கொல்ல வேண்டியது கையில் அகப்பட்டதையெல்லம் சுருட்டிக் கொண்டு போரில் பெற்ற செல்வம் என்று அனுபவிக்க வேண்டியது இதுதான் குர்ஆன் கூறும் போதனை.
ஒரு வயதான பெண்மணியை ஈவு இரக்கமின்றி இரண்டாகக் கிழித்தெறிந்திருக்கிறாயே?
என்று ஜைத்தை கண்டிக்கவும் தண்டிக்கவும் அல்லாஹ்வினாலும் அவனது தூதரினாலும் முடியவில்லை. அவ்வாறு செய்வதிலிருந்து தடுத்தது எது?
அதிகாரவெறி!
எப்படியாவது தங்களது அதிகாரம் நிலைநாட்டப்படவேண்டுமென்ற வெறி இவர்களை மிருகங்களிலும் கீழாக்கியுள்ளது.
வேறொரு கோணத்திலிருந்து நோக்கினால் முஹம்மதின் மனநிலை எப்படியிருந்திருக்கிறது என்பதயும் விளங்கிக் கொள்ள முடியும்.
அடிமைகள்முறையென்பதே மிகுந்த வெறுப்பிற்குயது. அதிலும் பெண்களை பாலியல் அடிமைகளாக்குவதை மனிதாபிமானம் கொண்டவர்காளால் ஒரு பொழுதும் சகித்துக் கொள்ளவே முடியாது. இங்கு தனது படைவீரனுக்கு அழகிய பெண் கிடைத்துவிட்டாள் என்பதை சகித்துக் கொள்ள முடியாமல் அல்லாஹ்வின் தூதர் நிகழ்த்திய பேரம் மகா கேவலம்.