ஹலாலாகும் ஹராம்கள்...

இஸ்லாத்தின் அறியாமை


இந்த நவீன உலகில்,உலகத்தையே தன் கையில் அடக்கி கொண்டு முகநூல் மூலமாக பல ஆயிரம் மையில்கள் தொலைவில் உள்ளவனை பத்தே வினாடிகளில் தொடர்பு கொள்ள கூடிய அளவில் விஞ்ஞானம் வளர்ந்து வருக்கின்ற இத்தருணத்தில் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு உருப்பெற்ற புனித(?) குரான் தான் மனிதனின் எக்காலத்துக்கும் பொருந்தும் எனவும் அதுவே உலகத்துக்கு வழிக்காட்டும் மறை என ஆட்டம்போடும் இஸ்சுலாமியர்களின் கருத்துக்கள், இப்பொழுது இஸ்சுலாமியர்களாலே நடைமுறைபடுத்த முடியாமல் தவுடுபொடியாக்கபடுகின்றது. இது தான் இன்று இஸ்லாம் இவ்வுலகில் தோற்கடிக்கபடுகின்றது என்பதற்கான ஒரு அத்தாட்சி..

எக்காலத்திற்கும் பொருந்தும் குரான் முஹம்மது இறந்த பின்னே தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்பது தான் வரலாறு (காலிபாக்களுக்குள் ஏற்பட்ட சண்டை). இருந்தாலும் இந்த காலகட்டத்தில் அது எப்படி எல்லாம் தோற்கடிக்கப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டவே இந்த இடுக்கை.

   எந்த ஒரு தத்துவம் அது நடைமுரையில் பின்பற்றப்படவில்லையோ அல்லது பின்பற்றமுடியவில்லையோ அத்தத்துவம் எல்லாம் தோற்கடிக்கப்படுகின்ற தத்துவங்களே என்று இஸ்லாமியர்கள் அதிகமாக கூறி கூப்பாடு போடுவதை அறிந்து கொள்ளுங்கள்.இப்பொழுது இடுக்கைகு செல்வோம்.

ஹலால் என்றால் என்ன?
  குரான் அனுமதித்தது மற்றும் எதை எல்லாம் முஹம்மது செய்தாரோ (அ) செய்ய சொன்னாரோ அவை எல்லாம் ஹலாலாக கருதப்படும்
ஹராம் என்றால் என்ன?
  குரான் தடுத்தது மற்றும் எதை எல்லாம் முஹம்மது செய்யவில்லையோ (அ) செய்ய சொல்லவில்லையோ அவை எல்லாம் ஹரமாக கருதப்படும்.

முக்கிய குறிப்பு
 எவர் எல்லாம் குரானின் போதனையும் முஹம்மதுவின் நடைமுறையின்படி நடக்கவில்லையோ அவர் எல்லாம் சொர்கம் செல்ல மாட்டார்கள்.அவர்கள் எல்லாம் காஃபிர் என கருதப்படுவர்.[ ஹராமான பொருளை சாப்பிடுபவன் சொர்கம் செல்ல மாட்டான். அண்ணன் பி.ஜெ]
முஸ்லிம்களால் மீறப்படும் முக்கிய ஹராம்களை பற்றி பார்ப்போம்.

1. உருவப்படம் ஒழித்தல்

'உங்கள் இறைவனை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் 'அவனே ஒளியானாவன். எப்படி அவனை நான் காணமுடியும்?' என விடையளித்தார்கள் என்று அபுதர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.இந்த ஹதிஸ் முஸ்லிம்யில் இடம்பெற்றுள்ளது.
                                                                                                                    onlinepj.com/books/ 

(அண்ணன் பிஜே அல்லாவுக்கு உருவம் உண்டு என்று கூறிவறுவது தனிக்கதை)
ஆகவே இவ்வுலகத்தை படைத்தவன் ஒரே இறைவன். அவனே ஏகஇறைவன் அவனுக்கு உருவமே கிடையாது (ஏன் அவள்(பெண்) படைத்து இருக்க கூடாத என்று எல்லாம் கேட்க கூடாது) என்று ஹதீஸ்கள் கூறுகின்றது. அதனால்தான் முஹம்மதுவும் உருவப்படங்களுக்கு எதிரியாக இருந்தார். முஹம்மது எங்கேயும் குரூப்போட்டோ எடுத்ததாக குரானிலோ ஹதிஸ்சிலோ குறிப்பிடபடவில்லை.அதனால் தான் முஹம்மதுக்கு முன்னாடி வாழ்ந்த இயேசுவின் {ஈசா நபி} உருவபடம் கணிக்கப்பட்டுவிட்டாலும் முஹம்மதுவின் உருவபடம் கணிக்கப்படவில்லை. இதுவே முஸ்லீம்களுக்கு உருவபடம் ஹராம் என்பதற்க்கான ஒரு முக்கிய அத்தாட்சி. சரி உருவபடம் ஹராமனதுக்கு காரணம் என்ன என யோசிகின்றீர்களா? உருவப்படத்தை முஹம்மது அனுமதித்தால் பிற்காலத்தில் அவை உருவ வழிப்பாடுக்கு வழிவகுக்குமாம், அது அவரின் ஏக இறைக்கொள்கைளுக்கு விரோதமாக அமையுமாம் அதனால் தான் உருவபடத்தை தடை செய்தார் என பல மூஃமீன்கள் சொல்லுகின்றார்கள். எது எப்படியோ போகட்டும் ஆக மொத்தம் உருவப்படம் ஹராம் என்பதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஆனால் சுவணத்துக்கு பை-பாஸ் ரோடு போடும் பி.ஜெ அண்ணன், ஜாகிர் நாயக், ஜவாருல்லா காதர் மொய்தீன் இன்னும் என்னற்ற மூஃமீன் தலைவர்களின் உருவபடம் மட்டும் சுவர் எங்கும், இனையதளம் எங்கும் பயனித்து கொண்டு இருக்கின்றதே, இவர்களுக்கு இவை எல்லாம் ஹராமாக தெரியவில்லையா? ஏன் இவர்கள் போடும் 10ரூபாய் சி.டியில் கூட இவர்கள் படம் இல்லாமல் வருவதுயில்லை. இவர்கள் தான் நபி வழியை பின்பற்றுபவர்களா? முஹம்மதுவின் போட்டோவை கார்ட்டூனாக போட்டாலே கோவப்பட்டு பத்வா கொடுக்கும் நம் மூஃமீன்கள் இவர்களை ஏன் கண்டுக்கொள்வதில்லை? ஓ... ஒட்டுமொத்த இசுலாமியர்களுக்கும் இவர்கள் தான் அதாரிட்டியோ ! அதனால் அவர்களை பிறர் கேளவி கேட்க முடியாதுதானே.


புகாரி 7042. (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

சரி இது ஒருபுறம் இருக்கட்டும், ஹராமான உருவப்படத்தை பொதித்த ரூபாய் நோட்டுக்காக நாம் எவ்வளவு சண்டையிடவேண்டியிருக்கின்றது. இதில் அந்த ஹராமான உருவபடத்தை பாக்கெட்டுகுள்ளே வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கின்றோமே! அதை என்னவென்று சொல்லுவது? இந்திய போன்ற பல மதங்கள் கொண்ட நாட்டில் ரூபாய் நோட்டில் காந்தியின் உருவப்படம் போட்டு இருக்கின்றதே! காபிர்கள் நாட்டில் வேறு வழியே இல்லை பயன்படுத்திதான் ஆகவேண்டும் என்பதால் நம் மூஃமீன்கள் பயன்படுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று கூட சப்புக்கட்டிக்கொள்வோம். ஆனால் இஸ்லாத்தை தூக்கிபிடிக்கும் மற்றும் இஸ்லாம் பிறந்த நாடுகளின் ரூபாய் நோட்டுகளில் கூட உருவப்படம் இல்லாமல் அச்சடிக்கப்படுவதுயில்லை ஏன்?. பீயூர் முஸ்லீம் (pure muslim) என்று சொல்லிக்கொள்ளும் தாலிபான்கள் ஆட்சியாண்ட ஆப்கானிஸ்த்தானில் கூட உருவப்பட ரூபாய் நோட்டுக்கள் தான் பயன்படுத்தபடுகின்றது. ஏன் இவர்கள் கூட ஹராமான உருவபடத்தை ஹலாலாக்க முயற்சிக்கின்றார்கள்?.


 2.பிரியானி
    
      உச்சா,கக்கா போவுரதுக்கு கூட நபி வழி தேடும் நம் மூஃமீன்களில் ஒருவர் அண்ணன் பி.ஜெவிடம் சிறிது அளவு ஆல்காஹல் கலந்த மவுத் வாஷ்சரை பயன்படுத்தலாமா என்று ஒரு கேள்வியை கேட்டு உள்ளார். அதற்கு நம் விஞ்சானி பி.ஜெ அளித்த பதில்,

      'ஆல்காஹாலை உண்டால் போதை ஏற்படும் என்பதால் இதில் சிறிதளவையும் பயன்படுத்தாக் கூடாது. ஆல்காஹால் கலந்த பானத்தை வாய் கொப்பளிக்கும் போது வாய்க்குள் அந்த ஆல்காஹால் சிறிதளவேனும் தங்கிவிடும். இது எச்சிலின் வழியாகவோ நாம் உண்ணும் உணவின் வழியாகவோ வயிற்றுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. எனவே உண்ணுவதற்கு தடை செய்யப்பட்ட இது போன்ற பொருட்களைக் கொண்டு வாய் கொப்பளிப்பதும் சுவைப்பதும் கூடாது.
                                                13/05/2011 -onlinepj.com
      'அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக்கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான்'. என்று முஹம்மது அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர்(ரலி).
                                                நூர்திர்மதி 1788,நஸபி 5513
ஆக சிறிது அளவு போதை தரும் பொருட்கள் கூட ஹராமாகும்.ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் போதை பொருள் என தடை செய்யப்பட்ட கசகசாவை(ஒப்பியம் செடியின் விதை)கொண்டு தான் இன்று நம் மூஃமீன்கள் ருசிகரமான பிரியானியை சமைத்து கொண்டு இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஹராமான பிரியானியை தான் நல்ல நாள் பெருநாளில் கூட நம் மூஃமீன்கள் சாப்பிடவேண்டியிருக்கின்றது. இதில் கூடுதல் சிறப்பு என்னவெனில் நம் மூஃமீன்கள் நடத்தும் ஓட்டல்களில் 'ஹாலால் பிரியானி' கிடைக்கும் என ஹராமான உணவை போர்டு(board)போட்டு வியாபாரம் செய்வதுதான். இப்படி ஹராமான பிரியாணியை சாப்பிட்டால் எப்படி இவர்கள் சுவனத்துக்கு போவார்கள்?

அதனல் மூஃமீன்கள் முடிவு எடுக்கவேண்டிய தருணம் இது பிரியானியா? இல்ல நபி வழியா?

"விசுவாசிகளே! தங்களுக்கு பிரியானியில் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சிந்திப்பவருக்கு நிறைய அத்தாட்சியுள்ளது".
                                          


3.கணினிக்கும் தடை;


நாம் முன்பே குறிப்பிட்டது போல இந்த நவீன உலகத்துக்கு பழைய ஏற்ப்பாடுலாம் {குரான்} செட்டாகாது என்பதை நிறுப்பிக்க நம் மூஃமீங்களின் நவீன கால ஹராமை சுட்டிக்காட்டினாலே போதும் என நினைக்கின்றேன்.

'உலகமே கணினிமூலம் சுருங்கிவிட்டது' என கொக்கரித்துக் கொண்டு இருக்கும் 21ம் நூற்றாண்டில் நாம் பயனப்பட்டுக்கொண்டு இருக்கின்றோம். மனிதர்களால் தவிற்க்கவே முடியாத ஒன்றாக இப்பொழுது கணினி மாறிக்கொண்டு வருக்கின்றது.ஆனால் இப்படிப்பட்ட கணினியை கூட நாம் முஃமீங்கள் பயன்ப்படுத்துவதில் அல்லாவுத்தாலாவும் நம் முத்திரை நபியும் ஆப்பு சீவி வைத்துவிட்டார்களே என நினைக்கும் போது தான் மனசு மிக வருத்தப்படுக்கின்றது. என்ன செய்வது 'கூத்தாடிக்கு வாக்கப்பட்டால் ,'டங்கு' டங்கு'னு தான் ஆடியாக வேண்டும். பாவம் நம் மூஃமீங்களுக்கும் அப்படித்தான். இப்பொழுது மையக்கருத்தை பற்றி விவாதிப்பதற்கு முன் எங்கள் ஊரில் நடந்த ஒரு உண்மை கதையை பற்றி சுருக்கமாக சொல்லி முடிக்கின்றேன்.அந்த கதை இந்த இடுக்கையை புறிந்துக்கொள்வதற்கு சுலபமாக இருக்கும்..

எங்கள் ஊரில் ஒரு பெரிய நகரத்தில் ஜாக் & தவ்ஹீத் அமைப்பை சார்ந்த இரண்டு உண்மை மூஃமீங்கள் கம்ப்யூட்டர் சர்வீஸ் செண்டர் நடத்தி வந்தார்கள்.எல்லா வியாபாரிகள் போல பொய், பழைய பொருளை பொருத்துவது, நல்லா இருக்கின்ற பொருளை பழுதாகிவிட்டது என கூறி ஏமாற்றுவது என அனைத்தையும் செய்து மிக வேகத்தில் மூன்றே ஆண்டுகளில் பல லட்சம் ரூபாய் சம்பாத்துவிட்டார்கள். (இப்படியல்லாம் மூஃமீங்கள் செய்ய கூடாதே இது ஹராம் இல்லையா?என நாம் கேட்டாள். அதற்கு மூஃமீங்கள் அண்ணன் பி.ஜெ முறையில் பதில் சொல்லுவார்கள், 'வியாபாரமே ஹலாலாகும் அதில் என்ன ஹராம் என்று'. அதனால் நாம் அதை விட்டுவிடுவோம்} கதைக்கு வருவோம்.

திடீர் என்று ஒரு நாள் அந்த கம்ப்யூட்டர் சர்வீஸ் செண்டரை விற்றுவிட்டார்கள், காரணம் என்ன என்றால் அவர்கள் சர்வீஸ் செய்யும் அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பைரேட்டட் OS (Pyrated OS) மற்றும் பைரேட்டட் சாஃப்ட்வேர் (Pyrated software) தான் போடுகின்றார்களாம். பைரேட்டட் (Pyrated) என்றால் என்ன என யோசிக்கின்றீர்களா? அதாவது ஒருவரின் பொருளை அவரின் காப்புரிமை இல்லாமல் பயன்ப்படுத்துவது ,புரியும்படி சொல்லனும்னா திருட்டு பொருள். அப்படிப்பட்ட திருட்டு பொருளில் வியாபாரம் செய்வதால் அவர்கள் சுவனம் செல்லமாட்டார்கள் என்பதால் விற்றுவிட்டார்கள் என கேள்விப்பட்டேன் . அய்யகோ என்னே இது உண்மை மூஸ்லீம்களுக்கு வந்த சோதனை. இந்தியாவில் உள்ள நம் மூஃமீங்கள் அனைவரும் இப்படித்தானே கணினியை உபயோக செய்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள். ஏன் நபி கணினியை கூட விட்டுவைக்காமல் போய்விட்டர். முஸ்லீம்கள் அறிவை வளர்ப்பதில் அவருக்கு இஷ்டம் இல்லையோ!
 சரி முகமது இப்படிப்பட்ட திருட்டுக்குலாம் என்ன ஃபைன் விதித்தார் என அறிய ஹதீஸ்களை புரட்டினேன்.


புஹாரி 6789 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கால் தீனார் (பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புஹாரி 6799 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது உண்டாகட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக் கவசத்தைத் திருடுகிறான்; அதற்காக அவனது கை துண்டிக்கப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதற்காகவும் அவனது கை துண்டிக்கப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸில் இருந்து நபி நமக்கு சொல்ல வரும் செய்தி என்ன? கால் தினார், தலை கவசம், கேவலம் கயிற்றை திருடினால் கூட மூஃமீங்களின் கையை வெட்ட வேண்டும் என அறிவுறித்திருக்கிறார். அப்போ இவ்வளவு திருட்டை செய்யும் நம் மூஃமீங்களுக்கு எதை வெட்ட வேண்டும்? மேலும் இவ்வளவு பெரிய திருட்டு நம் பி.ஜெ அண்ணனுக்கு தெரியாமலையா இருக்கும் என onlinepj யில் நுழைந்தேன். நம் மூஃமீங்களில் ஒருவர் ஒரிஜினல் சாப்ட்வேரை காப்பி செய்து பயன்ப்படுத்துலாமா? என்று கேட்டுவிட்டார். அதற்கு அண்ணன் பி.ஜெ நபியைவிட எப்படி காட்டுத்தனமாக உளறுகின்றார்கள் என்று பாருங்களேன்.

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/saftwrai_kapi_etuthal/

//நாம் ஒரு சாப்ட்வேரை வாங்கினால் அது நமக்குச் சொந்தமாகி விடுகிறது.நமக்கு சொந்தமான ஒரு பொருளை மற்றவர்க்களுக்கு கொடுக்கும் உரிமையைத் தடுத்தால் அது நம் உரிமையை பறிக்கின்றது//

//இந்த அளவுக்குக் கொள்ளை அடிப்பதால் தான் காப்பி எடுக்கின்றார்கள் என்று உணர்ந்து குறைந்த விலைக்கு விற்க அவர்கள் முன் வர வேண்டும்//

மேற்க்கண்ட உளறலிருந்து நம் தமிழ்நாடு நபி என்ன சொல்ல வருகின்றார் என்றால் ஒருவன் தான் காசு கொடுத்து ஒரு பொருளை வாங்கிவிட்டாள் அந்த பொருளை அவன் விருப்பம் போல் என்ன வேணும்னாலும் செய்துக் கொள்ளலாம், விற்றவருக்கு அதில் எந்த சம்மந்தமும் இல்லை என கூறுகின்றார். சாப்ட்வேர்/OS போன்றவற்றை பற்றி அரியாத ஆசாமி காய்கரி, மளிகை சாமான் வாங்குவதை போல் சகடுமேனிக்கு உளறியிருக்கின்றார்.
மேலும் ஒரு நிறுவனம் வெளியிடும் ஒரிஜினல் சாப்ட்வேர்/OS ஒரே ஒரு கம்ப்யூட்டருக்கு தான் பொருந்தும் வகையில் விற்கப்படுக்கின்றது என்பதை அதில் இருக்கும் Terms&Conditions முழுமையாக படித்து பார்த்தாள் தெரியும்.என்ன தான் ஒரு நபர் எவ்வளவு காசு கொடுத்து ஒரு OS/சாப்ட்வேரை வாங்கியிருந்தாலும் அவர் ஒரு கணினியில் பயன்ப்படுத்தினால் தான் அது ஒரிஜினல்(Genuine) OS/சாப்ட்வேர் என கருதப்படும். அவரே வேற கணினியில் பயன்படுத்தினால் அது பைரேட்டட் OS/சாப்ட்வேர் என்ற வகையில் தான் வரும். இது புறியாமல் கண்டமேனிக்கு உளறுகின்றார் நம் அண்ணன் பி.ஜெ. தெரியாததை தெரியாது என்று சொன்னால் என்னவாம்.அவர் சொன்னதில் முக்கியமான உளறல் என்னவேனில் அதிக விலைக்கு நிறுவனம் விற்ப்பதனால் தான் சாப்ட்வேரை காப்பி போடுகின்றார்களாம். அப்படி என்றால் அதிகமான விலையில் ஒரு பொருள் விற்றால் அதை திருடலாம? அது மட்டும் திருட்டாகாத? உணவுகே வழியில்லாமல் இருப்பவன் தான் கால் தினார் திருடுவான், அவனின் கையை மட்டும் ஏன் நபி வெட்டினார். ஒரு வேளை நவீன முறையில் திருடினால் ஹராமாகாமல் ஹலாலாகுமோ?

இந்தியாவில் பயன்ப்படுத்தும் 100ரில் 90 கம்ப்யூட்டர்களின் பைரேட்டட் OS/சாப்ட்வேர் தான் பயன்படுத்துப்படுகின்றதாம் என்று நான் சொல்லவில்லை மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சர்வே சொல்லுகின்றது..
என்ன மூஃமீங்களே! புறிக்கின்றதா முகமதுவின் ஏற்ப்பாடுலாம் இப்போ செட்டாகாது என்று? இப்பொழுதாவது சிந்து(தியு)ங்கய்யா....

இஸ்லாமும் ஹிஜ்ரத்தும்

முகமதுவின் ஹிஜ்ரத்


கிபி 622 –ல் முஹ்ம்மது மக்காவிலிருந்து யஸ்ரிப் என்ற மதீனாவிற்கு புலம்பெயர்ந்தார்இதை ஹிஜ்ரத் என்றும்அன்றிலிருந்து புதிய சகாப்தத்துடன்,இஸ்லாமியக் காலக்கணக்கு துவங்குவதாக கூறுவதையும் நாம் அறிவோம்புதிய சகாப்த்தம் என்று அவர்கள் கூறுவதில் உண்மை இருக்கிறதுஆம்,முஹம்மதின் வாழ்கைஹிஜ்ரத்திற்குமுன் ஹிஜ்ரத்திற்குப்பின் என்று முரண்பட்ட இரண்டு பகுதிகளாக காணப்படுகிறதுஹிஜ்ரத்திற்குமுன் அவரது செயல்களில் கற்பனையாக உளறிக் கொண்டிருந்தது மற்றும் குழந்தை ஆயிஷாவுடன் திருமணம் என்பதைத் தவிர குறைகாணவேறொன்றுமில்லை. அல்லாஹ்வின் அனுமதி என்ற பெயரில் அவர்வன்முறையாளராக பெரும் அளவிலான குற்றச்செயல்களை நிகழ்த்தியது ஹிஜ்ரத்திற்குப் பின்னர்தான்மக்கா நகரத்து குரைஷியர்களால் முஹம்மது மற்றும் அவரது அடியார்களின் உயிருக்கு மிகப்பெரும் அச்சுருத்தல் ஏற்பட்டதாலேயே ஹிஜ்ரத் நிகழ்ததென்றும்,அவர்களுக்கு பதிலடிகொடுக்கவே வேறுவழியின்றி தாக்குதல்களும்சூறையாடல்களும் மேற்கொள்ளப்பட்டதாக கூறும் அதேவேளையில்,அல்லாஹ்வின் அறிவுறுத்தல் அல்லது ஆணை காரணமாகவே முஹம்மதுவும்அவரது சீடர் குலாமும்,தங்களது தாயகமான மக்கா நகரை பிரிந்து செல்ல நேர்ந்தது என்று முரண்பாடகவும் கூறுவார்கள்.
இஸ்லாமியர்களின் கூற்றுப்படிமுஹம்மதிற்கு ஆதரவாக இருந்த அபூதாலிப்சீமாட்டி கதீஜா ஆகியோரின் மரணத்திற்குப்பிறகு அவரது வாழ்க்கையும்பொருளாதார நிலைமையும் கேள்விகுறியாகிறதுஇன்றைய ரூபாய் மதிப்பில் சுமார் 264 ஆயிரம் கோடி மதிப்புடைய சீமாட்டி கதீஜாவின் செல்வம் முழுவதையும் இஸ்லாமின் வளர்ச்சிக்காக செலவு செய்து ஓட்டாண்டியாகிவிடுகிறார் என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
முஹம்மதுவைப்பற்றி வர்ணனை செய்யும் பொழுது அவர் குறைஷிகளின் கூட்டத்திலேயே மிகச்சிறந்த பண்பாளர்நம்பிக்கையாளர் ”அல்அமீன்என்றெல்லாம் கதையளப்பார்கள்ஆனால் குர்ஆனோ முஹம்மதிற்குகுறைஷிகளிடையே அப்படியொன்றும் மகத்தான மரியாதை இருந்ததில்லை என்கிறது.
"இவ்விரு ஊர்களில் உள்ள மகத்தான மனிதருக்கு இந்தக் குர்ஆன் அருளப்பட்டிருக்கக் கூடாதா?''எனக் கூறுகின்றனர்.
(குர் ஆன் 43:31)
தங்களது கடவுளர்களை தரக்குறைவாக ஏசுகிறார் என்ற முறையில் முஹம்மதின் மீது மக்கத்து குறைஷிகளுக்கு கோபமிருந்திருக்கிறது அதை அபூதலிப்பிடம் தெரிவித்திருந்தனர்அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு மக்காவில்முஹம்மதின் உயிருக்கு அச்சுருத்தல் இருந்ததாமுஹம்மது தரப்பில் முன்வைக்கப்படும் ஹதீஸ்களில் இரண்டைப் பார்ப்போம்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது (அபூஜஹ்ல்உக்பா பின் அபீமுஐத் உள்ளிட்ட) குறைஷிக் குழாம் ஒன்று தங்கள் அவையில் கூடியிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவன், (பொது இடத்தில் தொழும்) இந்த பகட்டுக்காரரை நீங்கள் பார்க்கவில்லையா?என்று கூறிவிட்டுஇறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகத்தை நோக்கிச் சென்று அதன் சாணத்தையும்அதன் இரத்தத்தையும் அதன் கருவைச் சுற்றியுள்ள சவ்வையும் கொண்டுவந்துமுஹம்மத் சிரவணக்கம் செய்யும் நேரம் பார்த்து அவரது முதுகின் மீது அதை வைத்து விட வேண்டும். (யார் இதற்குத் தயார்?) என்று கேட்டான். அங்கிருந்தவர்களிலேயே படுபாதகனாயிருந்த ஒருவன் (அதற்கு) முன்வந்தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் செய்த போது அவர்களுடைய முதுகின்மீது அ(ந்த அசுத்தத்)தைப் போட்டனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியே சிர வணக்கம் செய்தவாறே இருந்தார்கள்.
(இதைப் பார்த்துக் கொண்டிருந்த குறைஷியர்) ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். உடனே ஒருவர் (நபி (ஸல்)அவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கிச் சென்றார். -அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சிறுமியாக இருந்தார்கள். (செய்தியறிந்த) ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஓடோடி வந்தார்கள்.
அவர்கள் வந்து அசுத்தங்களை அவர்களை விட்டும் எடுத்தெறியும்வரை நபியவர்கள் அப்படியே சிரவணக்கம் செய்தபடியே இருந்தார்கள். அ(வ்வாறு செய்த)வர்களைப் பார்த்து ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஏசினார்கள்...
(புகாரி 520)
ஃபாத்திமா மட்டும் அங்கு வரவில்லையென்றால் மூச்சுதிணறி முஹம்மது இறந்திருப்பார் என்று கண்ணீர்மல்க மதப்பரப்புரை செய்வதை நீங்கள் அறிவீர்கள்மற்றொரு ஹதீஸையும் பார்ப்போம்.
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எதுஎன்று நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், (ஒரு முறை மக்காவில்) உக்பா பின் அபீ முஐத் என்பவன்நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களுடைய கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததை நான் பார்த்தேன்...
(புகாரி 3678)
அபூதாலிப்மற்றும் சீமாட்டி கதீஜாவின் மரணத்திற்குப் பிறகுமக்கத்து குரைஷிகளால் முஹம்மதின் உயிருக்கு பாதுகாப்பில்லாமல் இருந்ததெனக் கூறிக்கொள்வது அல்லாஹ்விற்கும்குர்ஆனுக்கும்,ஹதீஸ்களுக்கும் எதிரானதுஏனெனில் முஹம்மது,அல்லாஹ்வின் உயர்மட்ட பாதுகாப்பிலிருப்பவர்முஹம்மதிற்கு எதிராக சூழ்ச்சி செய்வதைக்கூட அனுமதிக்க முடியாதென்கிறது குர்ஆன்      
… எனவேநிச்சயமாக அவன்அவருக்கு முன்னாலும்அவருக்குப் பின்னாலும் பாதுகாவலரை நடத்துகிறான்
(குர் ஆன் 72:27)
தீய காரியங்களுக்காக சூழ்ச்சி செய்தோரை பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்து விடுவான்;அல்லது அவர்கள் அறியாத விதத்தில் வேதனை அவர்களுக்கு வந்து விடும்அல்லது தமது காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்களை அவன் பிடிப்பான்..
 (குர்ஆன் 16:45)
அபூதாலிப் அல்லது கதீஜா இருந்தாலும் இல்லையென்றாலும் அல்லாஹ்விவின் பாதுகாப்பில் எந்த மாற்றமும் இருக்க முடியாதல்லவா? ஆனால் இவர்களோ முஹம்மதிற்கு எதிராககுறைஷிகள் கடுமையான தொல்லைகள் விளைவித்ததாகவும்,கொலைசெய்ய முயன்றதாகவும், கூறுவதன் மூலம் அல்லாஹ்வை கையாலாகாத கடவுளாக மாற்றிவிட்டனர். மக்காவில் முஹம்மதிற்கு,  அல்லாஹ் பாதுகாப்பு ஏற்பாடுகளைப்பற்றி ஹதீஸ் கூறுவதைப் பாருங்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்காவில் ஒரு முறை) அபூஜஹ்ல், "உங்களிடையே முஹம்மத் (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கிறாரா?'' என்று கேட்டான். அப்போது "ஆம்'என்று சொல்லப்பட்டது. அவன், "லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்துகொண்டிருப்பதை நான் கண்டால்,அவரது பிடரியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்'' என்று சொன்னான்.
அவ்வாறேஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது,அவர்களது பிடரியின் மீது மிதிப்பதற்காக அவர்களை நோக்கி வந்தான். அப்போது அவன் தன் கைகளால் எதிலிருந்தோ தப்பிவருவதைப் போன்று சைகை செய்தவாறு வந்தவழியே பின்வாங்கி ஓடினான். இதைக் கண்ட மக்கள் திடுக்குற்றனர். அவனிடம், "உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவன், "எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழ் ஒன்றையும் பீதியையும் இறக்கைக(ள் கொண்ட வானவர்)களையும் கண்டேன்'' என்று சொன்னான்.
(இதைப் பற்றிக் கூறுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் மட்டும் என்னை நெருங்கியிருந்தால் அவனுடைய உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்கள்'' என்று சொன்னார்கள்.
(முஸ்லீம்)
இங்குமுஹம்மதைத் தாக்கும் நோக்கில்,அபூஜஹ்லால்நெருங்கக்கூட முடியவில்லைமீறி நெருங்கியிருந்தால் அவனது உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்களாம்இதே அபூஜஹ்லும் அவரது நண்பர்களும் ஒட்டகத்தின் கருப்பை சவ்வுகளை முஹம்மதின் தோள்மீது இட்டபொழுதும்,உக்பா பின் அபீமுஐத் போர்வையால் மூச்சு திணறுமளவிற்கு முஹம்மதின் கழுத்தை நெரித்த பொழுதும் எதுவும் நிகழவில்லைபாதுகாப்பிற்காக அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட மலக்கு எங்கே போனதுஅவர்களது உடல் உறுப்புகள் பிய்த்தெடுக்கப்படவில்லையே ஏன்இதற்கான பதிலை இஸ்லாமியர்கள்தான் கூறவேண்டும். (அல்லாஹ்வின் நாட்டம் அல்லது திட்டப்படியே முஹம்மது யஸ்ரிப்(மதீனா) சென்றார் என்பதுதான் அவர்களது பதில்!)
சரி..! இப்படியொரு படுபயங்கரமான(!?)வானவர்களின் பாதுகாப்பு இருக்கையில்மக்காவை விட்டு எதற்காக ஓடவேண்டும்மதீனாவாசிகளிடன் ஏன் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டும்அல்லது இதே வானவர்கள் மதீனாவிற்கு வந்து பாதுகாக்கமாட்டாராஹிஜ்ரத்தின் அவசியம்தான் என்ன? தனது ஏற்பாடுகளின் மீது அல்லாஹ்விற்கே நம்பிக்கையில்லையா?, அல்லது மலக்குகள் மனிதர்களைவிட மிகபலவீனமானவர்களா?.
ஹிஜ்ரத்திற்கு காரணம் என்னவென்று இப்படி மண்டை பிய்த்துக் கொள்ளவேண்டியதில்லை.மதீனாவில் தனக்கு ஆதரவு பெருகியிருப்பதாக முஹம்மது கருதினார் அதனால் மதீனா சென்றுவிட்டார் அவ்வளவுதான்.
முஹம்மது தன்னை அல்லாஹ்வின் தூரென்று அறிவித்துக் கொண்ட பத்தாம் ஆண்டில் தனது கொள்கைகளை மக்கா நகருக்கு வெளியிலிருப்பவர்களுக்கும் கூறத்துவங்குகிறார்.ஹஜ்ஜின் காலம் துவங்கியவுடன் கஅபாவை வணங்க வந்த யஸ்ரிப்வாசிகளிடமும் தனது மதவியாபாரத்தை செய்கிறார்அது அவருக்கு நல்ல பலனைக் கொடுத்ததுஅதன் பயனாக தனது விற்பனைப் பிரதிநிதிகளை யஸ்ரிப் என்ற மதீனாவில் நியமித்து வியாபாரத்தை வளர்த்தெடுக்கிறார்இந்நிலையில் கல்வியறிவு இல்லாத யஸ்ரிப்(மதீனா)வாசிகளுடன் அகபாவில் ரகசியமாக சந்தித்து இரண்டுமுறை ஒப்பந்தங்களையும் செய்துகொள்கிறார்.
முதல் ஒப்பந்தத்தில்தன்னைப் பற்றிய செய்தியை யஸ்ரிப்பில் பரப்ப ஏற்பாடு செய்கிறார்இதன் பயனாக முஹம்மதை ஏற்றுக் கொண்டவர்களுடன் இரண்டாம் ஒப்பந்தமும் ஏற்படுகிறதுஇப்னு அப்பாஸ் அப்துல் முத்தலிப்,முஹம்மதின் சார்பாக பேசுகிறார்.
கஸ்ரஜ் கூட்டத்தினரேமுஹம்மது எங்கள் மக்களிடம் பாதுகாப்புடனும்,கண்ணியத்துடனும் இருக்கிறார்எனினும் அவர் உங்களுடன் இணைந்துவும்உங்களுடன் ஒன்றிவிடவும் விரும்புகிறார்அவரது பாதுகாப்பை கவனத்தில் கொள்ளவதாக இருந்தால் நீங்கள் அழைத்துச் செல்லலாம்என்றார்கஅப் என்பவர் மதீனாவாசிகளின் சார்பாக உறுதிமொழி அளிக்கிறார்.
(இப்ன் ஹிஷாம்)
“O people of al-khazraj (the Arabs used the term to cover both Khazraj and Aus). You know what position Muhammad hold among us. We have protected him from our own people who think as we do about him. He lives in honour and safety among his people, but he will turn to you and join you. If you think that you can be faithful to what you have promised him and protect him from his opponents, then assume the burden you have undertaken. But if you think that you will betray and abandon him after he has gone out with you, then leave him now. For he is safe where he is.” …
(Page 203, Life of Muhammad a Translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah By A.Guillaume)
மக்காவில் முஹம்மது,  தக்க பாதுகாப்புடன்தான் இருந்திருக்கிறார்அவராது தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாகவே மதீனா செல்கிறார் என்பதை கவனிக்கவேண்டும்ஆனால்முஹம்மது ஹிஜ்ரத் செய்ததற்குஅல்லாஹ் கூறும் காரணங்களை கவனித்துப் பாருங்கள்,
தமது உடன்படிக்கைகளை முறித்துஇத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களேஅக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?
(குர்ஆன் 9:13)
மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சிகுறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களுக்குப் புகலிடம் அளித்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.
(குர் ஆன் 8:26)
முஹம்மதை குறைஷிகள் என்ன செய்தனர் என்பதில் அல்லாஹ்வினால் ஒரு தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை போலும்!. மேலும் ஹிஜ்ரத்தின் பொழுது மக்காவில் 70-80 பேர்களே முஹம்மதை ஏற்றிருந்தனர்.
உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ,உம்மைக் கொலை செய்யவோஉம்மை வெளியேற்றவோ  மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.
(குர்ஆன் 8:30)
1.     மக்காவாசிகள் முஹம்மதை பிடித்து வைத்துக்கொள்ள சூழ்ச்சி செய்தனர்,
2.     மக்காவாசிகள் முஹம்மதை கொலை செய்ய சூழ்ச்சி செய்தனர்,
3.     மக்காவாசிகள் முஹம்மதை மக்காவிலிருந்து வெளியேற்ற சூழ்ச்சி செய்தனர்.
அல்லாஹ் கூறும் இந்த மூன்று காரணங்களும் ஒன்றுக்கொன்று முரணானவைகள்.
1.     முஹம்மதைமக்காவிலிருந்து வெளியேற்ற விரும்புபவர்கள்அவரை எதற்காக பிடித்து வைக்க வேண்டும்?
2.     முஹம்மது தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக பிடித்துவைக்க சூழ்ச்சி செய்பவர்கள்எதற்காக  அவரைக் கொல்வதற்காக சூழ்ச்சி செய்ய வேண்டும்?
3.     முஹம்மதை கொல்ல சூழ்ச்சி செய்பவர்கள்ஊரைவிட்டு எதற்காக வெளியேற்ற சூழ்ச்சி செய்ய வேண்டும்?
இதற்கெல்லாம் மேலாக அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறானாம்சர்வவல்லமையுடையதாக கூறிக்கொள்ளும் அல்லாஹ்விற்குமக்காவில் புகலிடம் அளிக்கவோபலப்படுத்தவோ முடியவில்லை.இதை அல்லாஹ்வின் இயலாமை என்று கூறுவதே சரியானது. இதனால்தான் அல்லாஹின் திட்டப்படியே முஹம்மது மதீனா சென்றார் என்றொரு சமாளிப்பை கூறுகின்றனர். அல்லாஹ் அளித்ததாக கூறிக்கொள்ளும் தூய்மையானவைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியும்இருப்பினும் அடுத்துவரும் பதிவுகளில் அதைப்பற்றி பார்க்கலாம்.உண்மையில்முஹம்மதின் ஆதரவாளர்கள் அனைவருமே ஹிஜ்ரத் செய்வதை விரும்பினர் என்று கூறுவதற்கில்லைஅவர்களில் சிலருக்கேனும் விருப்பமில்லாமல் இருந்திருக்க வேண்டும், ஹிஜ்ரத் செய்வதற்காக எப்படியெல்லாம்கெஞ்சுகிறான்,மிரட்டுகிறான் என்பதைப் பாருங்கள்.
நம்பிக்கை கொண்டுஹிஜ்ரத் செய்து தமது செல்வங்களாலும்உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும்அடைக்கலம் தந்து உதவிகள் செய்தோரும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யாதோர்ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
(குர் ஆன் 8:72)
அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்பவர் பூமியில் அதிகமான புகலிடங்களையும்,வசதிகளையும் பெற்றுக் கொள்வார். அல்லாஹ்வை நோக்கியும்அவனது தூதரைநோக்கியும் ஹிஜ்ரத் செய்து தன் வீட்டை விட்டு புறப்பட்டுச் செல்பவருக்கு மரணம் ஏற்பட்டால் அவருக்குரிய கூலி அல்லாஹ்விடம் கிடைத்து விடும்.
(குர் ஆன் 4:100)
.. உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நீங்கள் நம்பியதற்காக இத்தூதரையும்உங்களையும் (ஊரை விட்டு) அவர்கள் வெளியேற்றினார்கள்.அவர்களிடம் இரகசியமாக அன்பைச் செலுத்துகிறீர்கள். நீங்கள்பகிரங்கப்படுத்தியதையும்மறைத்ததையும் நான் நன்கு அறிபவன். உங்களில் இதைச் செய்பவர் நேர்வழி தவறி விட்டார்.
(குர் ஆன் 60:1)
மக்காவாசிகளின் நோக்கம் என்னவாக இருந்தது என்பதைக்கூட எல்லாம் வல்ல அல்லாஹ்வால் தெளிபடக் கூறமுடியவில்லைமுன்னுக்குபின் முரணாக ஏதேதோ உளறுகிறான். தங்களை அடித்து விரட்டியவர்களிடம் எவனாவது இரகசியமாக அன்பைச் செலுத்துவானா? இருக்க முடியாது! அப்படியெனில் விரட்டப்பட்டதாகக் கூறுவது பொய்! குறைஷிகள் மக்காவைவிட்டு வெளியேறுபவர்களைத் தடுக்க முயன்றனர் என்பதே மெய்! ஹுதைபியாஒப்பந்தத்திலும்கூட குறைஷிகள், தங்கள் தரப்பிலிருந்து முஹம்மதிடம் வருபவர்களை திருப்பி தங்களிடமே அனுப்பிட வேண்டுமென்ற நிபந்தனை விதித்தனர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
முஹம்மதின் சீடர்களில் பெரும்பாலும், அடிமைகளும், போக்கிரித்தனமாக ஊரைச்சுற்றிக் கொண்டிருந்த சில இளைஞர்களுமே! அரேபியர்கள், அடிமைகளைத் தங்களது உடமைகளாகவே கருதிவந்தனர். உதாரணத்திற்கு, உங்களுக்குச் சொந்தமான கால்நடைகளை பகிரங்கமாக கவர்ந்து செல்லப்படுவதை நீங்கள் அனுமதிப்பீர்களா? நிச்சயமாக இல்லை!  குறைஷிகள் அதையே செய்தனர்.
 முஹம்மதின் மக்கா வாழ்க்கையில் யூதர்கள் இடம்பெறவில்லைஎனவே பழி குறைஷிகளின் தலையில் போடப்பட்டதுஇதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது முஹம்மதிற்காக பரிந்து பேசிய அவரது பெரிய தந்தை இப்ன் அப்பாஸ்,முஹம்மதையும்அவரது கூட்டத்தினரையும் அழிக்க அபூஜஹ்லுடன் இணைந்து பத்ருகளத்திற்கு வந்துமுஹம்மதிடம் கைதியாக மாட்டிக்கொண்டதுதான்(முஹம்மதின் கதைமிகவும் பலவீனமான திரைக்கதைமுன்னாள் சென்றால் கடிக்கிறது பின்னால் சென்றால் உதைக்கிறது)
முஹம்மதியர்களிடம்ஹதீஸ்கள் ஏன் இவ்வளவு கேணத்தனமாகமுன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது என்றால் அது யூதர்களின் சதி என்பார்கள். சில வாரங்களுக்கு முன், இஸ்லாமிய அறிஞர்கள் சிலருடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, ”கற்றறிந்த உங்களைப் போன்ற ஆலீம்களே குர்ஆனுக்கும்ஹதீஸ்களுக்கும் பலவிதமாக குழப்பமாக பொருள் கூறிக்கொள்வது  ஏன்?” என்றேன்.அதற்கு ஒரு ஆலீம் கூறினார், “இஸ்ரேலில்குர்ஆன்,மற்றும் ஹதீஸ்களை தீவிரமாக ஆய்வு செய்வதற்கென்றே தனித்துறை ஒன்று செயல்படுகிறதுஅங்கு நடைபெறும் மிக முக்கியமான பணி என்னவெனில்குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் தவறானகுதர்க்கமான பொருளையும்அதை முஸ்லீம்கள் மத்தியில் கூறும் போலி ஆலீம்களை உருவாக்கிஉலகம் முழுவதிலும் பரவச்செய்து குழப்பத்தை உருவாக்கி இஸ்லாமை அழிப்பதுதான் யூதர்களின் நோக்கம்” என்றார்.
நான், ”நமது ஆலீம்களான ஜாகீர் நாயக்பீஜே,அப்துல்லா ஜமாலிசம்ஸுதீன் காஸிமி, Dr.K.V.S. ஹபீப் முஹம்மது போன்றவர்களும் அந்த யூதர்களின் மதரஸாவில் படித்தவர்களோ?” என்றபொழுது அந்த ஆலீமின் முகத்தில் தெறித்த எரிச்சலை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்கருத்து சொன்னால் கேட்கவேண்டும் ஆராயக்கூடாது. இதுதான் இஸ்லாம்!
 இவர்கள் இப்படியே தொடந்தால்இமாம்கள் அபூஅப்தில்லாஹ்அல்ஹஜ்ஜாஜ் போன்றவர்களின் வேடத்தில்கூட யூதர்கள் வந்தனர் என்று விரைவில் கூறிவிடுவார்கள் என்று நம்பலாம்அல்லாஹ்வின் மற்றொரு வஹீயான ஹதீஸ்களில் விதவிதமாக கைவரிசையை காட்டிய யூதர்கள்குர்ஆனை விட்டு வைத்திருப்பார்களாநாம் ஹிஜ்ரத்தை தொடர்வோம்.
இவ்வாறாக யஸ்ரிப்(மதீனா)வாசிகள் தங்களது உயிரைகொடுத்து பாதுகாப்போம் என்று உறுதிமொழியளித்த பின்னர், தனக்குத் தக்கபாதுகாப்பு கிடைக்கும் என்று தெளிவடைந்தபிறகுதான் முஹம்மதிற்கு ஹிஜ்ரத் செய்வதற்கு அல்லாஹ்(!)விடமிருந்தும் அனுமதி வருகிறது. (இல்லாதஅல்லாஹ் எப்படியும் தன்னை பாதுகாப்பான் என்று குருட்டுத்தனமாக முடிவெடுத்து ஓடுவதற்கு அவரென்ன அப்பாவி முஹாஜிரா?
இல்லாத எதிரியைக் கண்டு அஞ்சி நடுங்கிய முஹம்மதுஒருவழியாக மனதை திடப்படுத்திக் கொண்டுகிபி 622 செப்டம்பர் 12ல் தனது நண்பர் மூளைசெத்துப்போன அபூபக்கர் துணையுடன் வீட்டிலிருந்து வெளியேறி கிபி 622 செப்டம்பர் 23ல் குபா சென்றடைந்தார்மதீனா வந்த பிறகும் முஹம்மதின் அச்சம் தீரவில்லை தனது கூடாரத்தை பாதுகாக்க இரவுநேர காவலுக்கும் ஏற்பாடுசெய்து கொள்கிறார்.மலக்குகளின் பாதுகாப்பு என்னவாயிற்றுஎன்று குறுக்கு கேள்விகள் கேட்கக்கூடாது. கேள்வி கேட்காமல் இதுமாதிரி மறைவானவற்றை தயவு செய்து நம்பிவிடுங்கள்... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

இஸ்லாமும் குரான் குழப்பங்களும் -4

குர்ஆன் இறைவேதமா? -4



இப்ன் மஸ்வூத் அல் ஃபத்திஹா, அல் நாஸ் மற்றும் அல் ஃபலக் ஆகிய அத்தியாயங்களை குர்ஆனின் பகுதிகளல்ல என்று இறுதிவரை நிராகரித்தார் என்பதை கடந்த பகுதியில் பார்த்தோம். அல் ஃபத்திஹா, அல் நாஸ் மற்றும் அல் ஃபலக் ஆகியன பிரார்த்தனை வடிவிலானவைகள்;  எனவே அவைகள் குர் ஆனின் பகுதிகளல்ல என்பதே இப்ன் மஸ்வூத்தின் வாதம்.


ஆனால் உபை இப்ன் கஅப், தனது குர்ஆன் தொகுப்பில், பிரார்த்தனை வடிவிலான ஹப்த், கஹ்ல் என்ற இரண்டு அத்தியாயங்களை கூடுதலாக இணைத்திருந்தார் தொகுத்திருந்தார். 




முஹம்மதின் தோழர்கள் தங்கள் மனதில் தோன்றியவாறெல்லாம் குர்ஆனை உருவாக்கினர். அவர்களின் தொகுப்பிலிருந்த குழப்பங்களை இதுவரை கவனித்தோம். 

கடந்த பகுதியில் நாம் பார்த்த காணொளியில் ’இஜ்மா’ பற்றிய அறிஞர் பீஜே, கொடுத்த விளக்கம் நமது வாதங்களை உறுதிசெய்கிறது.  இரண்டு நிமிட காணொளியில் எத்தனை விதமான முரண்பட்ட விளக்கங்களைத் தருகிறார் என்பதை நன்கு கவனித்தால் விளங்கும்.  முஹம்மதுவின் தோழர்கள் குர்ஆன் தொகுப்பது உள்பட எந்த விஷயத்திலும் இஜ்மாவாக இருந்ததில்லை. ஆனால் குர்ஆன் ஹதீஸ்கள் கூறும் விஷயங்களில் ஒன்றுபட்டார்களாம்.  அவரும் விதவிதமாக சமாளித்துப் பார்க்கிறார்… முடியவில்லை!

அறிஞர் பீஜே அவர்களின் இந்த விளக்கத்தின் அடிப்படையிலும் கூட, குர்ஆன் என்ற புத்தகம் ஏக மனதுடன் ஒருமித்த கருத்துத்துடன் உருவாக்கப்பட்டவில்லை, பெரும்பான்மையோர் கூறியதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தொகுப்பு என்ற முடிவையே நாம் அடைய முடிகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட குர்ஆனின் தொகுப்பையே, அல்லாஹ்வின் வார்த்தைகள் என்று நம்புகின்றனர். அவர்கள் எதை வேண்டுமானாலம் நம்பலாம் அது அவர்களது தனிப்பட்ட உரிமை. அவர்களது மூடநம்பிக்கைளை, மற்றவர்கள் அறிவியல் பூர்வமான ஆதாரமாக ஏற்கவேண்டுமென்று வாதிடுவது அறிவார்ந்த செயல் அல்ல!

ஆய்வுகளோ, ஆதரங்களோ இல்லாமல், பெரும்பாண்மையோரின் கருத்தை உண்மையென்று ஏற்கமுடியுமா?

குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதற்கு குர்ஆன் வசனங்களையே ஆதரமாக காண்பிக்கும் சிறுபிள்ளைத்தனமான வாதங்களைத் தவிர வேறு ஆதாரங்கள் இருக்கிறதா?

குர்ஆனை பாதுகாக்கப்பட்ட முறைகளைப்பற்றி பீஜே கூறுவதை கவனிப்போம்.  



ஜனவரி 2010-ம் ஆண்டு ஒன்பதாம் பதிப்பாக வெளியான “இதுதான் பைபிள்” என்ற நூலில் அவர் எழுதியிருப்பதைப் பாருங்கள்.



இவ்வாறெல்லாம் குர்ஆன் பாதுகாக்கப்பட்டடிருக்கிறது என்பதை இன்று எவ்வாறு உறுதிசெய்வது?

முஹம்மது எழுதிப்பாதுகாத்ததாகக் கூறப்படும் குர்ஆனில் இருந்தவைகளும் தாஸ்கண்ட், சாமர்கண்ட் போன்ற இடங்களிலிருக்கும் குர்ஆனையும் ஒப்பிட்டுப்பார்க்க இஸ்லாமியர்களிடம் நம்பிக்கை என்பதைத் தவிர வேறு எந்த ஆதரமும் இல்லை.

சரி…

உஸ்மான் காலத்தில் எழுதப்பட்டதாகாக் கூறப்படும் தாஸ்கண்ட், சாமர்கண்ட் கையெழுத்துப் பிரதிகளின் மீது நடைபெற்ற ஆய்வுகள் என்ன? அவை உஸ்மான் காலத்தை சேர்ந்ததவைகளே என்பதை எவ்வாறு உறுதி செய்கிறார்கள்? இதற்கு நம்பிக்கை என்பதைத் தவிர வேறு பதில் இல்லை.
இதுபோன்ற கேள்விகளை இஸ்லாமிய அறிஞர்கள் விரும்புவதில்லை.  பாதுகாக்கப்பட்டது என்றால் ஆஹா… என்ன அற்புதம்..! என்று புல்லரித்துக் கொண்டிருக்கவேண்டும். மாறாக ஆதாரங்களைக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது.
ஆதரங்களைக் கேட்பவர்களுக்கான பதில் இதுதான்!
நபிகள் நாயகம் (ஸல்அவர்களுக்கு எழுத்து வடிவில் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர்திருக்குர்ஆன்6:7 வசனம் அவர்களுக்கு நேரடியான மறுப்பாக உள்ளதுஎழுத்து வடிவில் தந்திருந்தாலும் இவர்கள் ஏற்க மாட்டார்கள்என்று கூறப்படுவதில் எழுத்து வடிவில் அருளப்படவில்லை'என்ற கருத்து அடங்கியுள்ளதை அறியலாம்வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும் என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். (திருக்குர்ஆன் 4:153) எழுத்து வடிவமாக ஒரு நூல் வானிலிருந்து இறங்க வேண்டும் என அன்றையமக்கள் கேட்டதிலிருந்து அவ்வாறு அருளப்படவில்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி அறியலாம்இவ்வேதம் எழுத்துவடிவில் அருளப்படவில்லை
152. எழுத்து வடிவில் திருக்குர்ஆன்onlinepj.com

அதுபோலவே அண்மைக் காலங்களில் இஸ்லாமிய அறிஞர்கள், குர்ஆனை அல்லாஹ் முஸ்லீம்களின் இதயங்களில் வைத்துப் பாதுகாக்கிறான். எங்கள் இதயங்களில் பாதுகாப்பாக இருக்கிறது என்று அருகிலிருக்கும் ஹாஃபிஸ்களை(குர்ஆனை மனனம் செய்தவர்களை)ச் சுட்டிக்காட்டியும், குர்ஆனின் எழுத்துமுறைகளில் பிழைகள் இருப்பினும் நாங்கள் அதை எங்களது உள்ளங்களில் மனனமாக உள்ளதைக் கொண்டு திருத்தி வாசித்துக் கொள்கிறோம் என்றும் விளக்கமளிக்கின்றனர்.



’குர்ஆன் முஸ்லீம்களின் இதயத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது’ என்பது, அறிஞர் பீஜே அவர்களின் கருத்து மட்டுமல்ல.  பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களும் பரப்புரையாளர்களும் இக்கருத்தில் இப்பொழுது ஒன்றினைகின்றனர்.
இங்கு குர்-ஆனின் பாதுக்காப்புக்கு தானே பொறுப்பேற்பதாக இறைவன் கூறுகிறான்.ஆதாவது மனிதர்களிடம் குர்-ஆனை பாதுக்காக்கும் பொறுப்பை சாட்டாமல் அதனை தன்னளவில் வைத்துக்கொண்டான்.இதன் மூலம் உலகமுடிவு நாள் வரையிலும் குர்-ஆன் பாதுக்காப்பிற்கு எந்த ஒரு மனிதனும் தனிப்பட்ட முறையில் சிரத்தை மேற்கொள்ள தேவையில்லை என்பதை தெளிவாக இவ்வசனத்தில் விளங்கலாம்.ஒலி வடிவில் இறக்கப்பட்ட குர்-ஆனை மக்கள் மத்தியில் பாதுக்காக்க இப்படி ஒரு பிரத்தியேக ஏற்பாட்டையும் இறைவன் செய்தான்.

அப்படியல்லஎவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில்தெளிவான வசனங்களாக இது இருக்கிறது -அநியாயக்காரர்கள் தவிர (வேறுஎவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். (29:49)

மேற்கூறப்பட்ட வசனத்தில் "கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில்" என்ற வாசக அமைப்பை இறைவன் குறிப்பிடுவதன் மூலம் அறிவுமிகுந்தவர்களுக்கு மனன சக்தி மூலம் அவர்களின் மனங்களில் இறைவசனங்கள் பாதுக்காக்கப்படுகின்றன எனபதையும் அறியலாம்…
’நான் முஸ்லீம்’ தளத்திலிருந்து

குர்ஆனை மனதில் மட்டுமே பாதுகாப்பது மட்டுமே சரியானதென்று இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கமளிப்பது  சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

முஹம்மது எழுதிப்பாதுகாத்த குர்ஆனின் எழுத்துபூர்வமான ஆதாரங்களை காண்பிக்க முடியுமா? என்ற கேள்வியை எதிகொள்ளமுடியாமல், ”நபிகள் நாயகம்(ஸல்அவர்களுக்கு எழுத்து வடிவில் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர்” என்று கேள்வியை திரித்துக் கூறுகிறார். அந்த சிலர் யாரோ?

அதாவது குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதற்கு  ஆதாரம் குர்ஆன் வசனம்தான். குர்ஆன் உள்ளங்களின் வழியாகவே கடத்தப்பட்டது என்ற இவர்களது இந்த வாதம் அன்றைய முஸ்லீம்கள் அபார நினைவாற்றல் கொண்டவர்கள் என்ற மூடநம்பிக்கையைத்தான் சார்ந்திருக்கிறது; மாறாக ஆதாரங்களைக் கொண்டதல்ல.

ஹிப்ஸுல் உலமா மதரஸாக்களில் குர்ஆனைத் தங்களது உள்ளங்களில் கடத்துவதற்கும், அதை சரிபார்ப்பார்க்கும் பொழுதும் விவாதங்களில் ஆதாரமாக கேட்கும் பொழுதும் எழுத்து மற்றும் அச்சுக்கலையின் பங்கை வசதியாக மறந்து விடுகின்றனர். உள்ளங்களில் வைத்துப் பாதுகாப்பதாக அல்லாஹ்வே கூறிய பின்னரும் எழுதி அச்சடித்து விற்பனையாகவும், இலவசமாகவும் வெளியிடுவது அல்லாஹ்வின் மீது இவர்கள் கொண்ட அளவற்ற அவநம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறது.

உஸ்மான் காலத்தில் குர்ஆனின் இதர பிரதிகள் எரிக்கப்பட்டதாக கூறுவது கூட, இத்தகையதொரு தந்திரமாகத்தான் இருக்க வேண்டும்!

முஹம்மது அதிகாரப் பூர்வமாக எந்த ஆவணத்தையும் விட்டுச் செல்லவில்லையா?

ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) - அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை)எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார்.
...எனவேநான் எழுந்து சென்று(மக்களின் கரங்களிலிருந்தகுர்ஆன்(சுவடிகளைத்தேடினேன்அவற்றை துண்டுக் தோல்கள்அகலமான எலும்புகள்போரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்தமனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன்
புகாரி 4679

குர்ஆனைப் பாதுகாக்க வேண்டிய முதல் கடமையும் பொறுப்பும் முஹம்மதிற்குத்தான் இருக்கிறது. அல்லாஹ்விடமிருந்து தனக்கு வந்த ’வஹீ’க்களை எழுதச் செய்ததுடன் பிரதிகள் எடுத்தும் பயன்படுத்த அனுமதித்திருந்தார்.

முஹம்மதை கொலை செய்வதற்காக செல்லும் உமர், அவரது சகோதரி ஓதும் குர்ஆன் வசனங்களை கேட்டு மனம் மாறி முஹம்மதின் ஆதரவாளராக மாறியதாகக் கூறப்படும் நிகழ்ச்சியில் குர்ஆனின் பகுதி இடம்பெற்றிருந்தன என்பதை முன்பே கவனித்தோம்.

..Thereupon ‘Umar returned to his sister and brother-in-law at the time when khabbab was with them the manuscript of Ta Ha, which he was reading to them. When they heard ‘Umar’s voice  Khabbab hid in a small room, or in a part of the house, and Fatima took the page and put under her thigh…
(Page 156, Life of Muhammad a Translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah By A.Guillaume)
மதீனாவின் ஆட்சியாளராக முழு அதிகாரத்துடன் இருந்திருக்கிறார். சுமார் 48 எழுத்தர்கள் அவருடன் இருந்தாகவும் கூறுகின்றனர். குர்ஆனை ஓதும் முறையிலும் கருத்திலும் குழப்பங்கள் தோன்றியுள்ளதை முஹம்மது (அல்லாஹ்) அறிந்திருந்திருந்தார் என்பதை முன்பே பார்த்தோம்.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலிஅவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களிடம் சென்றேன்அப்போது இரண்டுபேர் குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாகக் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள்.அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்அவர்கள் தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, "உங்களுக்கு முன்னிருந்தோர்வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர்'' என்று சொன்னார்கள்.
(முஸ்லீம் 5180)

அப்படியிருக்க, முஹம்மது குர்ஆனைத் முழுமையாகத் தொகுத்து, தெளிவான விளக்கங்களுடன் அதிகாரப்பூர்வமாக ஒன்றை வழங்கியிருக்க வேண்டுமல்லவா?

பொதுவாக முஹம்மதைப்பற்றி கூறும் பொழுது எழுத, படிக்கத் தெரியாதவர் என்பார்கள். அத்தகையவரிடமிருந்து எப்படி இலக்கிய நயமிக்க குர்ஆன் வெளிப்படமுடியும்? எனவே குர்ஆன் கடவுளின் வார்த்தைகளே என்றொரு வாதத்தை முன் வைப்பதை அறிவீர்கள். முஹம்மது எழுத்தறிவற்றவரா?

முஸ்லீம்கள் முஹம்மதை ”உம்மி நபி” என்பார்கள் அதாவது எழுத்தறிவற்றவராம்.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரைஇந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர்...
 ...அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! ..
குர்ஆன் 7:157, 158

அறிஞர் பீஜே தரும் விளக்கத்தைக் காண்போம்

….7:157,158 வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்அவர்களை உம்மீ'என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.உம்மு என்றால் தாய் என்பது பொருள்உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது பொருள்.கைக்குழந்தைகள் தாயையே சார்ந்திருப்பதால் கைக்குழந்தைகளுக்குஉம்மீ எனக்குறிப்பிடப்பட்டனர்பின்னர் எழுதவும்வாசிக்கவும் தெரியாதவர்கள் இந்த விஷயத்தில் கைக்குழந்தைகளின் நிலையில் இருப்பதால் உம்மீ எனப்பட்டனர்...

312. எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி

42:7. (மக்கா எனும்) நகரங்களின் தாயையும் அதைச் சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும்..
’உம்முல் குரா – நகரங்களின் தாய்'

உம்மி என்பது எனது தாய் என்ற பொருளையே முதன்மையாகத் தரும். உதாரணத்திற்கு இஸ்லாமியர்கள் தங்களது தாயை “உம்மா” என்றழைப்பதைப் பரவலாகக் காணலாம்.
அறிஞர் பீஜே சொல்வதை போல உம்மி என்றால் தாயைச் சார்ந்திருப்பவர்கள் என்றே பொருள் கொள்வோம். தாயைச் சார்ந்திருப்பவர்கள் என்றால் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்று எப்படிப் பொருள் விளங்க முடியும்?  

உம்மி என்பதற்கு யூதரல்லாதவர்கள் என்ற பொருளும் உண்டு. அதாவது யூதர்களிடம் இருப்பதைப் போன்ற வேதத்தைப் பெறாத சமுதாயம் என்று இதன் பொருளை விவரிக்கின்றனர்.(கோயமுத்தூரில் ’அல்-உம்மா’ என்றொரு இயக்கம் இருந்தது அதன் பெயரை எப்படிப் பொருள் கொள்வது?)

 இறுதிவரை முஹம்மது எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தாரென்று எப்படி பொருள் கொள்கின்றனர் என்பது இன்னும் எனக்கு விளங்கவில்லை. இவர்களது இந்த முடிவு குர்ஆனுக்கு எதிரானது.

முதன்முதலாக முஹம்மதிற்கு வந்த வஹீயைப் பாருங்கள்.
அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.
குர்ஆன் 96:4,5

முஹம்மது எழுத்தறிவற்றவர் என்று பொருள்கொள்வது சரியல்ல!  ஆவணத்தின் முக்கியத்துவத்தை அறிந்தவராகவும் இருந்திருக்கிறார். 

இது முன்னோர்களின் கட்டுக் கதை. அதை இவர் எழுதச் செய்து கொண்டார்…
குர்ஆன் 25:5

குர்ஆனை மனித உள்ளங்களில் வைத்து பாதுகாப்பதே அல்லாஹ்வின் ஏற்பாடு எனில் குர்ஆனை எழுதச் செய்த முஹம்மதின் செயல் அல்லாஹ்வின் திட்டத்திற்கு எதிரானதல்லவா?

திருக்குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டவுடன், "இந்த வசனங்களை இந்த வசனத்திற்கு முன்னால் எழுதுங்கள்இந்த வசனங்களை இந்த வசனத்திற்குப் பின்னால் எழுதுங்கள்இந்த வசனங்களை இந்தக் கருத்தைக் கூறும் அத்தியாயத்தில் வையுங்கள்'' என்று நபிகள் நாயகம் கட்டளையிடுவார்கள். அதன்படி நபித்தோழர்கள் எழுதிக் கொள்வார்கள். மனனம் செய்தும் கொள்வார்கள். (பார்க்க: திர்மிதீ3011)

...இவ்வாறு எழுதப்பட்டவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இது தவிர குர்ஆனை மனனம் செய்தவர்கள் தாமாகவும் எழுதி வைத்துக் கொண்டார்கள்.

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு
onlinepj.com

எழுதப்பட்ட ஏடுகளை முஹம்மது தனது இல்லத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தாராம். பிறகு ஏன் ஜைத் பின் தாபித் குர்ஆன் தொகுக்கும் பணியை மலையை நகர்த்தும் வேலை என்று நொந்து கொள்ள வேண்டும்? நேராக முஹம்மதின் இல்லத்திற்குச் சென்று ஏடுகளை சேகரித்திருக்க வேண்டும். ஏனெனில் அவைளை மட்டுமே முஹம்மதின் அங்கீகாரம் பெற்றவைகளாக கருத வாய்ப்புள்ளது!

முஹம்மதின் இல்லத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஓலை, தோல், கற்பலகைகள், மற்றும் விலங்குகளின் எலும்புகளில் எழுதி வைக்கப்பட்டிருந்த குர்ஆனின் பகுதிகள் எங்கே போனது?

முஹம்மதுவின் மரணத்தின்  பொழுது ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்திய   ஆடு(!) ஒன்று பால்குடி வசனங்களை தின்றுவிட்டதாக ஆயிஷா கூறுகிறார். மற்றவைகள் எங்கே? உஸ்மான் எரித்தது மக்களிடையே புழக்கத்திலிருந்த குர்ஆனின் பிரதிகளைத்தான். முஹம்மதின் வீட்டில் பாதுகாக்கப்பாக இருந்தவைகளையல்ல!

ஆடுகள் தின்ற வசனத்தை இன்றைய குர்ஆனில் பார்க்க முடியுமா? இல்லை,  குர்ஆனை  மனதில் வைத்துப் பாதுகாக்கிறோம் என்பவர்களால்தான் சொல்ல முடியுமா?

இவ்விஷயத்தில் அவர்கள் பதில் சொல்லும் வரை பொறுத்திருப்போம். அதுவரை நாம் அடுத்த குழப்பங்களைப் பார்க்கலாம்…

குர்ஆன், சந்தேகத்திற்கு இடமில்லாமல் தன்னை ஒரு புத்தகம் என்று கூறிக்கொள்கிறது.
இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (தாலிகல் கிதாப். லா ரைப ஃபீஹீ)
குர்ஆன் 2:2
’கிதாப் – புத்தம்’ 
...தனித்தனி ஏடுகளாக இருக்கும் போது ஸுஹுஃபு என்றும்அந்த ஏடுகள் அனைத்தையும் ஒன்றாக வரிசைப்படுத்தித் தொகுக்கும் போது அது கிதாப் என்றும் சொல்லப்படும். நபிகள் நாயகம் காலம் வரை திருக்குர்ஆன் ஸுஹுஃபு என்ற தொகுக்கப்படாத ஏடுகள் வடிவத்தில் தான் இருந்தது...
திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு,
onlinepj.com

முஹம்மதின் காலத்தில் மட்டுமல்ல அபூபக்கரின் காலத்திலும் குர்ஆன் புத்தகவடிவில் இல்லாமல் தனித்தனியாக ஏடுகளின் வடிவிலேயே இருந்தது. இரண்டாம் முறையாக உமரின் காலத்தில் ஒரே சுருளாக மாற்றப்பட்டது என்கிறது தபரியின் குர்ஆன் விரிவுரை. 
இவர்களோ முஹம்மதின் காலத்தில் குர்ஆன் புத்தக வடிவில் இல்லை என்கின்றனர். இதில் எதை ஏற்கவேண்டும்?

...நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு வரிசைப்படுத்தித் தொகுக்கப்படும் என்று இறைவனுக்குத் தெரியும். எனவே திருக்குர்ஆனை கிதாப் என்றும் இறைவன் குறிப்பிடுகின்றான்...
திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு

எதையாவது கூறி குர்ஆனின் உளறல்களை சரிகட்ட வேண்டுமென்ற வேகத்தைத் தவிர இவர்களிடம் வேறு எதுவுமில்லை.  ”பிறகு வரிசைப்படுத்தித் தொகுக்கப்படும்” என்ற அறிஞர் பீஜே வின் தரும் இந்த விளக்கத்தை, முஹம்மது அறிந்திருந்தாரா?

குர்ஆனைப், புத்தகவடிவில் பாதுகாக்கவேண்டுமென்ற எண்ணம் முஹம்மதிற்கு இருந்ததாகவோ, அல்லது பிற்காலத்தில் அல்லாஹ் அதை புத்தக வடிவிற்கு மாற்றிவிடுவான் என்று முஹம்மது நினைத்ததாகவோ, ஒரேஒரு ஆதாரத்தையாவது  காண்பிக்க முடியுமா?

இன்று குர்ஆன் மட்டுமல்ல புத்தகங்கள் அனைத்தும் மென்பொருள் வடிவில் வந்துவிட்டன. அல்லாஹ் அவற்றை அறியவில்லை போலும்! அதனால்தான் முன்னுக்குப்பின் முரணாக கூறிக்கொண்டிருக்கின்றனர்.

தாஸ்கண்டிலிருக்கிறது, துருக்கியிலிருக்கிறது என்று கூறியவர்கள், குர்ஆன் மூலப்பிரதிகளை திடீரென கைவிட்டது ஏன்?

ஜனவர் 2010 வரை குர்ஆன் எழுத்துப்பூர்வமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறென்றுதான் அறிஞர் பீஜேவும் கூறிவந்தார். ஆக மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை குர்ஆன் வரிவடிவில்தான் பாதுகாக்கப்பட்டிருந்தது. இடைப்பட்ட காலத்தில் குர்ஆனை ஒலிவடிவில் பாதுகாப்பதாக முடிவு செய்து கொண்டுள்ளனர்.

1400 ஆண்டுகளாக குர்ஆன் எழுத்துவடிவில் பாதுகாக்கப்படுகிறது எழுத்துவடிவத்தில் பாதுகாக்கப்படுவதாகக் கூறிவந்த இஸ்லாமிய அறிஞர்கள், இன்று குர்ஆன் ஒலிவடிவத்தில்தான் இறங்கியது, மனிதர்களின் இதயத்தில் வைத்துப் பாதுகாப்பது மட்டுமே சிறந்ததென்று வாதிடுவதற்கு, அவர்களிடம் எவ்விதமான ஆதாரமும் இல்லையென்பது மட்டுமே காரணம்.

சில இஸ்லாமிய அறிஞர்கள், குர்ஆன் ஒலிவடிவத்தில் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது என்பதை மறுக்கின்றனர்

ன்று குர்ஆனில் எழுத்துப் பிழை என்று வாதிடும் சகோ.பி.ஜே அவர்கள் குர்ஆனை அல்லாஹ் ஓசை வடிவில்தான் பாதுகாத்தான் என்று கூறி அதன் எழுத்து வடிவத்தைக் கொச்சைப் படுத்தியும் அதில் பிழை உள்ளது என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார். இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்தே குர்ஆனை எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட அதன் கண்ணியத்தின் மீது ஏற்படுத்தும் ஒரு களங்கமாகும்.

குர்ஆனின் எழுத்துக் கலையும் அறியாமை வாதங்களும். தொடர் – 2
வல்ல அல்லாஹ் தான் இறக்கியருளிய வேதத்திலேயே – “எழுதுகோல் மீதும் (அதனால்) அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக” (68:1) என்றும் அவனே எழுது கோலைக்  கொண்டு கற்றுக் கொடுத்தான்”(96:4) என்றும் எழுதுவதன் மகத்துவத்தையும் அவசியத்தையும் வலியுறுத்திக் கூறுகின்றான்.  இவ்வாறிருக்க அவனது அற்புத வேதமாகிய குர்ஆனின் எழுத்து வடிவ தொகுப்பு என்பது இறை ஏற்பாடல்ல என்பது அறியாமை வாதமன்றோ!

எழுதுவதன் மகத்துவத்தையும் அவசியத்தையும் வலியுறுத்தும் இறைவன், தான் அருளிய வேதத்தை எழுத்து வடிவிலும் பாதுகாப்பதற்கு அற்புதமான ஏற்பாட்டைச் செய்திருந்தான் என்பதே நமது சிந்தனைக்கு எட்டிய உண்மையாகும். ..
சத்தியமுழக்கம் தளத்திலிருந்து…

குர்ஆன் பாதுகாப்புபற்றி இஸ்லாமிய அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லையென்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

குர்ஆன் கடவுளின் வார்த்தைகளே என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் இது பாதுகாக்கப்பட்டது என்கின்றனர். மாறாக சான்றுகளின் அடிப்படையில் அல்ல!

உண்மையிலேயே குர்ஆன் கடவுளிடமிருந்து(!?) வந்ததெனில் அது இல்லாமல் மனிதன் வாழ முடியாது என்பதை சொல்லத் தேவையில்லை. குர்ஆன் இல்லாமல் வாழ முடியுமென்பதுதான் எதார்த்த நிலை. மட்டுமல்லாமல் அது மனிதனை கற்காலத்திற்கு அழைத்துச் செல்கிறதென்பதையும் சொல்லத் தேவையில்லை. பொதுவாகவே வேதங்கள் சொல்லும் பல விஷயங்கள் மனிதர்களால் சீண்டப்படுவதே இல்லை.

முந்தின வேதங்கள் பாதுகாக்கப்படவில்லை, மாற்றப்பட்டது என்பதுதான் குர்ஆனின் மிக முக்கியமான குற்றச்சாட்டு.  இப்படி இருக்கையில் இப் பிரபஞ்சத்தின் அதிமுக்கியமான ஆவணத்தை இப்படி ‘அம்போ’ என விட்டுச் சென்றது ஏன்? இறுதிக் காலத்தில் அவருக்கு அந்தப்புரத்தில் அழகிகளை சேகரிக்கப்பதற்கே காலம் சரியாக இருந்தது. இதில் அல்லாஹ்வாம் குர்ஆனாம்!

பிறகு எங்கிருந்து, எதற்காக குர்ஆன்?

குர்ஆன் எழுத்துவடிவத்தில் முழுதொகுப்பாக மாற மிக முக்கிய காரணியாக இருந்தது, யமாமாவில் இஸ்லாமியர்கள் தரப்பில் நிகழ்ந்த மரணங்கள்தான். நாம் இங்கு கவனிக்க வேண்டியது,
..நான் 'இறைத்தூதர்(ஸல்அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?' என்று உமர் அவர்களிடம் கேட்டேன்அதற்கு உமர் அவர்கள்அல்லாஹ்வின் மீதாணையாகஇது (குர்ஆனைத் திரட்டுவதுநன்மை(யான பணி)தான்என்று கூறினார்கள்
புகாரி 4679
குர்ஆனை ஒரு புத்தகமாக உருவாக்க வேண்டுமென்று, முஹம்மது கனவிலும் நினைக்காத ஒரு செயலில் அபூபக்ரும் உமரும் ஈடுபடுகின்றனர். இரண்டு சாட்சியங்களின் அடிப்படையில் குர்ஆன் தொகுக்கும் பணியை செய்கின்றனர்.  குர்ஆனை இப்படித்தான் தொகுக்க வேண்டுமென்ற முஹம்மதின் வழிகாட்டுதல் ஏதேனும் இருந்ததா? அப்படி எதுவும் இல்லலையென்று நாம் உறுதியாகக் கூறமுடியும்!

பெரும் குழப்பங்களுக்கிடையே உத்மான் குர்ஆனைத் தொகுத்து வெளியிடும்வரை அதிகாரப்பூர்வமான குர்ஆன் என்ற ஒன்று புழக்கத்தில் இல்லை. அதுவரை அபூபக்கரின் தொகுப்பு ரகசியமாகவே இருந்துள்ளது. ஒருவரும் அறியாமல் வாசிக்க அதென்ன ”சரோஜாதேவி” புத்தகமா?

மனிதர்களைவிட்டு குர்ஆன் மறைந்துவிடக் கூடாது என்று அபூபக்கர் உருவாக்கிய தொகுப்பை மக்களிடையே கொண்டு சேர்க்கமல் ரகசியமாக வைத்ததேன்? அவரை அடுத்தவந்த உமரும் இரகசியத்தைத் தொடர்ந்து பாதுகாக்கிறார். மக்களைச் சென்றடையவேண்டிய கடவுளின்(!?) கட்டளைகளை, பொதுவில் வைக்காமல் தனது மகள் ஹஃப்ஸாவிடம் ஒப்படைடைத்துவிட்டு இறந்துபோகிறார்.

அபூபக்ர் மற்றும் உமர் முயற்சியால் உருவாக்கப்பட்ட தொகுப்பு இரகசியாமாக்கப்பட்டதற்கு ஏற்புடைய எந்த பதிலும் இஸ்லாமியர்கள் தரப்பில் இல்லை. அப்படியொரு தொகுப்பிருந்ததற்கு ஹதீஸ்களைத்தவிர எவ்விதமான ஆதரமும் இல்லை.

சற்றேறக்குறைய 15 ஆண்டுகள் எவருக்கும் குர்ஆனைப்பற்றிய நினைவு வரவில்லை. ஏனெனில் ஆட்சியாளர்களது கவனம் எல்லைகளை விரிவுபடுத்துவதிலிருந்தது. மெக்கா, மதீனா, இனக்குழுக்கள் என்று சிறிதாக இருந்த முஹம்மதின் அரசாங்கம், கலீஃபாக்களின் காலத்தில் வெற்றிகளை வாரிக்குவித்ததுடன் எல்லைகள் மிகபிரம்மாண்டமாக விரிவடையத் துவங்கியது.

முஹம்மது உயிருடன் இருந்தவரை அவரின் ஆன்மீக மற்றும் அரசியல் வழிகாட்டுதல் அந்த இனக்குழு சமுதாயத்திற்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் பரந்து விரிந்த ஒரு அரசாங்கமாக வளர்ச்சியடைந்த பொழுது வேறுபட்ட மக்களையும், கலாச்சாரங்களையும், சிந்தனைகளையும் ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

முஹம்மதின் காலத்தில் இருந்ததை விட பல நூறுமடங்குகள் இஸ்லாமிய அரசாங்கம் விரிவடைந்திருந்தது. அதே அளவிற்கு பிரச்சனைகளும் குழப்பங்களும் விரிவடைந்திருந்து என்பதை சொல்லத் தேவையில்லை.  முஹ்ம்மது உயிருடன் இருந்த பொழுது குர்ஆனைக் கற்றறிந்தவர்கள், மதகுருக்காளாக உருவவெடுத்தனர். பெரும்பாலும் இவர்களே ஆட்சியாளர்களுக்கு எதிராக இருந்தனர். ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்ட குர்ஆனையும் முஹம்மதின் செயல்களையும் ஆதாரமாகக் கொண்டனர்.  சக இஸ்லாமிய அமைப்பை எதிர்க்க, குர்ஆன், சுன்னா என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பவர்களை இன்றும் காணமுடியும்.

இத்தகைய குழப்பமான சூழலில், பரந்துவிரிந்திருந்த அரசாங்கத்திற்கு மக்களைக் கட்டுப்படுத்தி ஒரே அமைப்பின்கீழ் திரட்ட சடங்குகளும், வழிமுறைகளும் தேவைப்பட்டது. அது கடவுளின் சொல்லாக உருமாறியது.

சுருக்கமாக கூறவேண்டுமென்றால், அரசியல் காரணங்களால் ஏற்பட்ட சிக்கலான சூழலை எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில், அல்லாஹ் என்ற கடவுளின் பெயரைக் கூறி, ஒரு கூட்டம் குர்ஆன் என்ற ஒன்றைக் காண்பித்து மிரட்ட, பின்னர் வந்த இன்னொரு கூட்டம் முஹம்மதுவின் வழிமுறை என்ற பெயரில் ’ஹதீஸ் அல்வா’ கொடுத்துள்ளது.

முஹம்மதிற்குப்பின் வந்த அவரது தோழர்கள் குர்ஆன் என்ற புத்தகத்தை உருவாக்கினர் என்பதை ஹதீஸ்களின் வாயிலாகப் பார்த்தோம்.  ஹதீஸ்கள் எனப்படும் வாய்வழிச் செய்திகளை வரலாற்று ஆதாரமாகக் கருதமுடியாது. ஏனென்றால், குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் என்பார்கள். இங்கு வேடிக்கை என்னவென்றால், குர்ஆன் எவ்வாறு உருவானது என்பதை நமக்கு விளக்குவது ஹதீஸ்கள்தான். ஆக, இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி குர்ஆனைத் தாங்கி நிற்பது ஹதீஸ்கள்தான்.

முஹம்மதின் மரணத்திற்குப்பின், பல தலைமுறைகளாக, வாய்வழிச் செய்தியாக கடத்தப்பட்டு, சுமார் 200 ஆண்டுகளுக்குப்பின் எழுதப்பட்ட, ஹதீஸ்கள் இல்லையெனில் குர்ஆன் என்ற புத்தகத்தின் நிலை கேள்விக் குறிதான்.

ஹதீஸ்களின் நிலைமையோ அதைவிட மோசமாக உள்ளது. உதாரணத்திற்கு, இமாம் புகாரி, தான் கேட்டறிந்த ஆறு லட்சம் ஹதீஸ்களிலிருந்து 7563 ஹதீஸ்கள் மட்டுமே  நம்பகமானது என்ற முடிவிற்கு வருகிறார்.  இதற்கு மேலும் ஹதீஸ்களின் பரிதாப நிலையை நான் கூறவிரும்பவில்லை.

தொகுக்கப்பட்ட சூழலும், முறையும் குர்ஆன் கடவுளின் வார்த்தைகளாக மட்டுமல்ல அல்ல முஹம்மதின் வார்த்தைகளாக இருக்கலாம் என்று நம்புவதற்குக்கூட தகுதியற்றது என்பதையே காணமுடிகிறது. 

(முற்றும்)