அல்லாஹ்வும் விண்வெளியும்

அல்லாஹ் - வானம் - முஸ்லிம் - சுவர்க்கம் - இஸ்லாம்.



ந்த Universe எவ்வளவு பெரிதென்று தெரியுமா?  சுமாராக 130* Billion light years விட்டம் இருக்கலாம் என்று இன்றைய அறிவியலின் கணிப்பு. நாம் வாழும் சூரியக் குடும்பம் இருப்பது ஒரு Galaxy-ன் விளிம்பில். இதன் பால்வெளியின் விட்டம் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள். முப்பது ஆயிரம் ஒளி ஆண்டுகள் மையத்தில் சூரியன் இருக்கிறது.
நாம் வாழும் இந்த Galaxy-ல் சுமார் 400 Billion நட்சத்திரங்களும் கோள்களும் உள்ளது. இது போல சுமார் பல லட்சம் Galaxy இருப்பதாகவும் இன்றைய அறிவியல் சொல்கிறது. அமெரிக்காவின் Hubble என்ற தொலை நோக்கியில் Universe ன் ஒரு சிறிய பகுதியை நோக்கி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மட்டும் சுமார் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட Galaxy தெரிவதாக ஒரு ஆய்வு தகவல் கூறுகிறது. இன்றும் நம் பார்வையில் தென்படும் நட்சத்திரங்களில் பல உண்மையில் நட்சத்திரங்களில்லை. அவைகளும் ஒரு Galaxy என்கின்றனர் வானியல் வல்லுநர்கள்.
 வெற்றிடத்தில் ஒளியின் வேகம் வினாடிக்கு299792 கி.மீ. உதாரணத்திற்கு இரண்டாக பிளந்து (குர் ஆன் 54:1,5)  இணைக்கப்பட்டதாக  குர் ஆன் தெரிவிக்கும் சந்திரனை பூமியிலிருந்து1.26754 வினாடிகளில் அடையும் வேகம். நாம் ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் ஒரு ஆண்டில் 9,454,240,512,000 கி.மீ தூரம் செல்ல முடியும்.  சுமார் 13000* கோடி ஆண்டுகளில் பிரபஞ்த்தின் மறுபகுதியை அடையலாம் என யூகிக்கிறது.
இன்றுவரை அடையாளம் காணமுடியாத Dark energy எனும் சக்தியால் Galaxy- கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றது இதனால் Universe மேலும் மேலும் விரிவடைந்து வருகிறது.  நாம் வசிக்கும் இந்த Galaxy யும் நகர்ந்து கொண்டிருக்கிறது. Galaxy நகர்வதால் Space -ல் இருக்கும் Forced / Charged Electron கள் Galaxy யை தாக்கமலிருக்க ஒரு Electromagnetic field சூழ்ந்துள்ளது. Ozone படலம் பூமியை சூழ்ந்துள்ளதைப் போல. நமக்கு மிக அருகில் இருக்கும் Galaxy-லிருந்து ஒளி நம்மை வந்து சேர்வதற்கு சுமார் இருநூற்று ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகிறது. இதே போல பல பிரபஞ்சங்கள்  இருக்கலாம் என்கின்றனர் வானியல் அறிஞர்கள். இந்த அளவுகள் இன்றைய கணிப்பு மட்டுமே. நாளை அறிவியலின் கணிப்பில் இன்னும் அதிகமாகலாம்.
இப்பொழுது Universe ன் பிரம்மாண்டம் எவ்வளவு என கற்பனை செய்து பாருங்கள்.  பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தைப் பற்றி கூறவே இத் தகவல்களைக் கூறுகிறேன். இறைவனுடைய படைப்பில் மனிதன் ஒரு மிகப்பெரிய அற்புதம்.சுமார் ஆயிரத்து முன்னூறு கிராம் எடை மூளையில் பத்து மில்லியன் நியுரான்கள் உள்ளது. இந்த பத்து மில்லியன் நியுரான்களுக்கும் ஒரு மில்லியன் பில்லியன் இணைப்புகள் உள்ளது. இதே போல ஒவ்வொரு மிகச் சிறிய உயிரினத்திற்கும் மிக நேர்த்தியான உடலமைப்பும்உணர்வுகளும் உள்ளது.

இப்பிரபஞ்சத்தின் அளவுகளுடன் மனிதனை ஒப்பிட்டுப்பாருங்கள், எந்த நுண்நோக்கியிலும்  தென்படவாய்பில்லாத நுண்துகள்களே.மனிதன் என்ற இந்த அற்ப துகள்கள் தன்னை வழிபடவில்லையே என்று கவலைப்படுபவனா இப்பிரபஞ்சத்தின் காரணகர்த்தா?
புகாரி ஹதீஸ் : 7513        
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதப் பாதிரியார் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “மறுமை நாள் ஏற்படும்போது அல்லாஹ் வானங்களை ஒரு விரலிலும் பூமிகளை ஒரு விரலிலும் தண்ணீரையும் ஈர மண்ணையும் ஒரு விரலிலும் மற்ற படைப்புகளை ஒரு விரலிலும் வைத்துக் கொண்டு பிறகு அவற்றை அசைப்பான். பின்னர் ‘நானே அரசன், நானே அரசன், என்று சொல்வான்” எனக் கூறினார். அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்தாலும், அதை ஆமோதிக்கும் வகையிலும் நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் வெளியே தெரியும் அளவுக்குச் சிரிப்பதை நான் கண்டேன்.…
கற்பனைக்கு எட்டாத அளவிற்கு வல்லமையுடையவனாக வர்ணனை செய்யப்படும் அல்லாஹ், வழிபாடுகளை விரும்புகிறானா? ஆனால், குர்ஆனில் சில வசனங்களில், மனிதர்களிடத்தில் தனக்கு எவ்வித தேவையுமில்லை என்று கூறுகிறான்.
…நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார்களை விட்டும் தேவையற்றவனாக இருக்கிறான்
(குர்ஆன் 3:97)

… அல்லாஹ்வாகிறவன் -அவனே (எவரிடத்தும்) தேவையில்லாதவன் புகழுக்குரியவன்
(குர்ஆன் 35: 15)
என்று கூறினாலும், குருட்டுத்தனமாக ஏற்பவர்களையும், வழிபாடுகளையும், புகழ்ச்சியையும் மிகவும் விரும்புகிறான்.
மனிதர்களே ! உங்களுடைய ரப்பை நீங்கள் வணங்குங்கள்
(குர்ஆன் 2:21)
ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை
(குர்ஆன் 51:56)

வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும் அவற்றின் நிழல்களும் விருப்பத்துடனும், நிர்பந்தத்துடனும் காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்கின்றன.

(குர்ஆன் 13:15)

…வானங்களிலும் பூமியிலும் உள்ளவை (அனைத்து) படைப்புகளும்) விருப்பத்துடனோ (அல்லது) நிர்பந்தமாகவோ அவனுக்கே பணிந்துநடக்கின்றன
(குர்ஆன் 3: 85)
தன்னை வணங்க வேண்டும் அல்லது ஆணைக்கு கீழ்படிய வேண்டுமென்று அல்லாஹ் கூறுவதின் அடிப்படை காரணம் என்ன? இவை போதாதென்று தன்னைத் தானே வேறு புகழ்ந்து கொள்கிறான்.
புகாரி ஹதீஸ் 4634
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்  (ரலி) அவர்கள்கூறியதாவது :
அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான் மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்கமானவை அனைத்திற்கும் தடைவிதித்துள்ளான். தன்னை புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. ஆகவேதான் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான் (என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்). அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், நான் அபூவாயில் ஷகிக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் இதை நீங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா? என்று கேட்க, அவர்களும் ஆம் என்று பதிலளித்தார்கள். நான், இதை  நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்களா? அவர்கள் ஆம் என்று பதில் சொன்னார்கள்.
தன்னுடைய உத்தரவை நிறைவேற்றுபவர்களுக்கு மறுமையில் மனிதனுக்கு எவ்வித பலனுமில்லாத உலகின் அற்ப பொருட்களான வைரம், முத்து, தங்கம் வெள்ளி என்ற அற்ப பொருட்களையும், அற்பமான இச்சையை தீர்க்க ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நூறு முறை காமப்பதுமைகளுடன் இணையும் ஆண்மையை தருவதாக உறுதியளித்து உற்சாகப்படுத்துகிறான்.
காரணங்களைக் கொண்டே காரியங்கள் ஆகும் என்பதே அல்லாஹ் நமக்கு கற்பிக்கும் வழிமுறை என்கின்றனர் இஸ்லாமிய அறிஞர்கள்.  எனவே அல்லாஹ்வின் ஆணைகளுக்கு மனிதன் கட்டுப்படுவதாலும், புகழ்ச்சிகளாலும் ஏதோ ஒரு மிகப்பெரிய பலன் அல்லாஹ்விற்கு  கிடைக்க இருக்கிறது என்று எளிதாக கூறலாம். அவ்வாறு இல்லையென்றால், தனக்குகோ அல்லது பிற மனிதர்களுக்கோ எவ்வித பலனுமில்லாத கீழ்ப்படிதல், வழிப்படுதல் அல்லது அல்லாஹ் புகழ்ந்து செய்யப்படும் வழிபாடுகளை ஏன் வலியுறுத்த வேண்டும்? எவ்விதமான தேவைகளுமற்ற அல்லாஹ், தன்னை போற்றி, புகழ்ந்து வழிபடக் கூறுவது ஏன்? தன்னுடைய உத்தரவை நிறைவேற்றதவர்களுக்கு கடுமையான நரக நெருப்பையும் இன்னும் இதர  கொடுமையான தண்டனைகளைக் கூறி அல்லாஹ் அச்சமூட்டி எச்சரிக்கிறான்.
எனவே கொழுந்து விட்டெரியும் நரகத்தைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன்
(குர்ஆன் 92:14)
கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பில் அவை புகும்
(குர்ஆன் 88:4)
கொதிக்கும் ஊற்றிலிருந்து (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்
(குர்ஆன் 88:5)
உதாரணத்திற்கு,  எங்கள்  தோட்டத்தில்  சின்னஞ்சிறிய எறும்புகளும் பூச்சிகளும் உள்ளன. அவைகள் என் ஆணைகளுக்கு அடிபணியாமலும்  என்னை மதிக்காமலும் இருக்கின்றன எனக்கூறி கொழுந்துவிட்டு எறியும் தீயில் தூக்கி எறிந்து விட்டேன். அவைகளை இன்னும் பலவிதமாக தண்டித்து விட்டேன் என்று உங்களிடம், நான் கூறினால், என்னை ஒரு முற்றிய பைத்தியக்காரன் என்று கூறமாட்டீர்களா? இதற்கும், முஹம்மது அவர்கள் கூறும் அல்லாஹ்வின் தண்டனை அச்சுறுத்தல்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? முஹம்மது அவர்கள்  ஏன் அவ்வாறு அல்லாஹ்வின் தண்டனைகளைக் கூறி பயமுறுத்த வேண்டும்?
அல்லாஹ் ஐம்பது நேரத் தொழுகையையும் ஆறுமாத நோன்பையும் முஸ்லீம்களின் மீது விதியாக்கியதாகவும்முஹம்மது அவர்கள் அல்லாஹ்வுடன் பேரம் பேசி ஐந்து நேரத் தொழுகை ஒரு மாத நோன்பாகவும் குறைத்ததாக புகாரி கூறுகிறது
புகாரி ஹதீஸ் : 7517
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபா பள்ளிவாசலிலிருந்து (விண் பயணத்திற்கு) இரவில் அழைத்துச் செல்லப்பட்டது பற்றி அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது :
…அப்போது அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்தவற்றில், “நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகள் உங்கள் சமுதாயத்தார் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது” என்பதும் அடங்கும். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந்து) இறங்கி மூசா (அலை) அவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்திய மூசா (அலை) அவர்கள், “முஹம்மதே! உங்கள் இறைவன் உங்களிடம் என்ன உறுதிமொழி வாங்கினான்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகளை (நான் கட்டாயம் தொழ வேண்டுமென) அவன் என்னிடம் உறுதிமொழி வாங்கினான்” என்று பதிலளித்தார்கள். மூசா (அலை) அவர்கள், “உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது. ஆகவே, நீங்கள் திரும்பிச் சென்று, உங்கள் இறைவனிடம் உங்களுக்கும் (உங்கள் சமுதாயத்தாரான) அவர்களுக்கும் (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைக்கு மாறு கேளுங்கள்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அது தொடர்பாக ஆலோசனை கேட்பதைப் போன்று ஜிப்ரீல் (அலை) அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள். நீர் விரும்பினால் ஆகட்டும், என்று கூறுவதைப் போன்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சைகை செய்தார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சர்வ வல்லமை படைத்த (வனான இறைவ)னிடம் உயர்ந்தார்கள். (முதலில் தாம் நின்றிருந்த) அதே இடத்தில் நின்றவாறு நபி (ஸல்) அவர்கள், “என் இறைவா! எங்களுக்காக (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்திடுவாயாக! ஏனெனில், என் சமுதாயத்தாரால் இதை நிறைவேற்ற இயலாது” என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ் அவர்களுக்குப் பத்து தொழுகைகளைக் குறைத்தான். பிறகு நபி (ஸல்) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். மீண்டும் அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அவ்வாறே மீண்டும் மீண்டும் நபி (ஸல்) அவர்களை இறைவனிடம் மூசா (அலை) அவர்கள் திருப்பி அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள். முடிவில் அந்த (ஐம்பது) தொழுகை (நாள் ஒன்றுக்கு) ஐந்து தொழுகைகளாக மாறியது. ஐந்துக்கு வந்த போதும் மூசா (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தி, “முஹம்மதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் என் சமுதாயத்தாரான பனூ இஸ்ராயீல்களுக்கு  இதைவிடக் குறைந்த அளவிலான தொழுகையையே கோரிப்பெற்றேன். ஆனால், அவர்கள் (அதைக்கூட நிறைவேற்றாது) பலவீனமடைந்து கைவிட்டுவிட்டார்கள். உங்கள் சமுதாயத்தாரோ உடலாலும் உள்ளத்தாலும் மேனியாலும் பார்வையாலும் கேள்வியாலும் பலவீனமானவர்கள். ஆகவே, திரும்பச் சென்று உங்களுக்காக (உங்கள் ஐநேரத் தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்துக் கேளுங்கள்” என்று கூறினார்கள். ஒவ்வொரு தடவையும் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் யோசனை பெறுவதற்காக அவர் பக்கம் திரும்பிப்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவரும் அதை வெறுக்கவில்லை. ஐந்தாவது தடவை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகளாரை மேலே அழைத்துச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள், “என் இறைவா! என் சமுதாயத்தார் உடலாலும், உள்ளத்தாலும், கேள்வியாலும், பார்வையாலும், மேனியாலும் பலவீனமானவர்கள். ஆகவே, (தொழுகைகளை) குறைத்திடுவாயாக” என்று கோரினார்கள். அதற்கு சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன், “முஹம்மதே”, என்று அழைத்தான். அதற்கு “இதோ இறைவா! நான் காத்திருக்கிறேன், கட்டளையிடு” என்று பதிலளித்தார்கள். அதற்கு அல்லாஹ், “(ஒருமுறை சொல்லப்பட்ட) சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை, அதை (-ஐவேளைத் தொழுகையை) நான் உங்கள் மீது, லவ்ஹுல் மஹ்ஃபூல், எனும் பாதுகாக்கப்பெற்ற பதிவேட்டில் கடமையாக(ப் பதிவு) ஆக்கிவிட்டேன். மேலும், ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகள் உண்டு. ஆகவே, அவை உங்களுக்கு ஐந்து நேரத் தொழுகைகளாக இருப்பினும், பாதுகாக்கப் பெற்ற பதிவேட்டில் அவை ஐம்பது நேரத் தொழுகைகள் (உடைய நன்மைக்கு நிகர்) ஆகும்” என்று சொன்னான். பின்னர் நபி (ஸல்) அவர்கள், மூசா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அப்போது “என்ன செய்தீர்?” என்று மூசா (அலை) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (ஐம்பதாயிருந்த தொழுகைகளின் எண்ணிக்கையை ஐந்தாக) அவன் குறைத்தான். ஒவ்வொரு நற் செயலுக்கும் அதைப் போன்ற பத்து மடங்கு நன்மைகளை வழங்கினான்” என்று சொன்னார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதைவிடக் குறைவான எண்ணிக்கையையே பனூ இஸ்ராயீல்களுக்கு நான் (இறைவனிடம்) கோரிப்பெற்றேன். அப்படியிருந்தும் அதைக் கூட அவர்கள் கைவிட்டார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று இன்னும் உங்களுக்காகக் குறைக்கும்படி கேளுங்கள்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மூசாவே ! அல்லாஹ் வின் மீது சத்தியமாக ! திரும்பத் திரும்ப இறைவனிடம் நான் சென்று விட்டதனால் (மீண்டும் செல்ல) வெட்கப்படுகிறேன்” என்றார்கள்.
            இவ்வாறாக அல்லாஹ்வை விட இரக்க குணமும் அடியார்களின் தேவைகளையும்,இயலாமைகளையும் நன்கு உணர்ந்தவராக முஸ்லீம்களிடையே தன்னைக்  காண்பித்துக் கொண்டார்.  மனிதர்களின் இயலாமைகளைக்கூட அறியாதவனா அல்லாஹ்?
மனிதனைப் படைத்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முறையே வழிபாடுகள் எனக்கூறும் மதவாதிகள், இந்த ஒரு ஹதீஸைப் பகுத்தறிவுடன் அணுகினால் எல்லா உண்மைகளும் வெட்ட வெளிச்சமாகிவிடும்.  அல்லாஹ், தனக்கு தினமும் ஐம்பது முறை தொழுகையும்வருடத்தில் ஆறு மாதமும் நோன்பிருந்தும் நன்றி  கூற விரும்பி கேட்டுக் கொண்டானாம், முஹம்மது பேரம் கூறி குறைத்தாராம்மேலும் குறைத்துக் கேட்பதற்கு வெட்கப்பட்டு கேட்கவில்லையாம்நன்றி என்ன வியாபாராப் பொருளா? நன்றி என்ற வார்த்தையின் பொருள் என்னவென்று தெரியாதவனா அல்லாஹ்? நன்றியை ஆணையிட்டு கேட்டுப் பெற்றுக் கொள்ளமளவிற்கு அல்லாஹ்வின் தன்மானம் தாழ்ந்து விட்டதா?  
மனிதனைப் படைத்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முறையே வழிபாடுகள் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம்இந்த மனித வாழ்க்கைக்கு மனிதனுடைய விருப்பமோ அல்லது கோரிக்கைகளோ காரணம் அல்ல என்று குர்ஆன் கூறுகிறது.   மேலும் இந்த வாழ்க்கையில் இருக்கும் நிலையை தக்க வைப்பதற்கே பெரும் போராட்டங்களும்,தவறுகளையும் நிகழ்த்த வேண்டியுள்ளதுஇதில் நன்றிக்கு ஏது இடம்?
நம்மில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் குறிப்பிடத்தக்க அளவு இருக்கின்றனர். அவர் எவ்விதமான எதிர்பார்ப்புமின்றியே அவற்றை வளர்கின்றனர். உதாரணத்திற்கு ஒரு பூனைக்கு உணவு தருகிறீர்கள். உணவை தின்றுவிட்டு நன்றி கூறவில்லையே என்று அந்த பூனையைக் கொல்வதற்கும்,  சித்திரவதை செய்வதற்கும் எவரும் விரும்பவதில்லை. ஏனென்றால் அவர்களும், அந்த செல்லப் பிராணிகளிகளும் அத்தகைய உடன்பாடு எதுவும் செய்து கொள்ளவில்லை. தன்னை ஒரு செல்லப்பிராணியாக வளர்க்க அதுவும் அவர்களைக் கேட்கவுமில்லை. செல்லப் பிராணிகளிடம் நிபந்தனையற்ற அன்பையே அவர்கள் செலுத்துகிறார்கள். சர்வ வல்லமையுடைய இறைவன், செல்லப் பிராணிகளிடம் நிபந்தனையற்ற அன்பைச் செலுத்தும் மனிதனை விட  குறைந்தவனா? தரம் தாழ்ந்தவனா?
விடை என்ன?
            இறைவனுக்கும் அடியார்களுக்கும் இணைப்புப் பாலமாக  தங்களைக் காட்டிக் கொண்ட  மதத்தலைவர்களின் செயல்படுகளில் விடை இருக்கிறது.
நமக்கு வழிபாடுகளை போதித்தவர்கள் மதத் தலைவர்களே.  தங்களைப் பின்பற்றுபவர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்களைப் போல தங்களைக் காட்டிக் கொள்வார்கள்அவர்கள் நம்மீது அன்பொழுக வழிபாடுகளை  பயிற்றுவித்தனர். ஆனால் அவர்களின் அன்பு அதிகாரத்துடனே இருக்கும், அவர்களின் அன்பு,தங்களின் தேவைகளை நிறைவேற்ற உற்சாகப்படுத்த மட்டுமே வெளிப்படும்அப்பாவி அடியார்களோ தங்களை ஒரு பாதுகாவலராகவும் மற்றவர்களின் வாழ்க்கையைக் காப்பாற்ற வந்த அவதாரமாகவும் எண்ணிக் கொள்வார்கள். முட்டாள்கள் தங்களின் குருவுக்காக எதையும் செய்வார்கள்.  மதத்தலைவர்கள் மகிழ்ச்சியில் இருப்பார்கள் மாட்டிக் கொண்ட அடியார்கள் அவர்களின் குருவின் தேவை கடுமையாக இருந்தால் தங்களுடைய நம்பிக்கை உண்மையென நம்பவைக்கப் படுகிறார்கள்No Pain No Gain என்ற மனோபாவத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதே இதற்கு காரணம்.
புஹாரி ஹதீஸ்     : 3024,
ஸாலிம் அபூநள்ர் (ரலி)அறிவிக்கின்றார்கள்.
…எதிரிகைளச் சந்திக்க நேரிட்டால் (போரின் துன்பங்கைளச் சகித்துப்) பொறுமையாக இருங்கள். மேலும், ‘சொர்க்கம் வாட்களின் நிழல்களுக்குக்  கீழே இருக்கிறது ’ என்பைத அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். …
தங்கள் விருப்பம் போல வழிபாடுகளை போதித்து தங்களுடைய ஆதிக்கத்தை பிற மனிதர்களின் மீது செலுத்தி அவர்களை முற்றிலும் தங்கள் ஆளுமையின் கீழ் கொண்டு வருகிறார்கள். வழிபாடுகள் என்ற பெயரில் தங்களைப் பின்பற்றுபவர்களை மூளைச் சலவை செய்கிறார்கள். தினமும் இத்தகைய வழிபாடுகளால் தங்களைத் தாங்களே மூளைச்சலவை செய்து கொள்ள பயிற்றுவிக்கப்படுகிறார்கள். எல்லா மதங்களிலும் கடுமையான நம்பிக்கைகள் உள்ளது அத்தகைய வழிபாடுகளை ஏற்க மனம் அலைபாயும் பொழுது பெரும் குற்றம் நிகழ்ந்ததாக கூறி கடுமையான தண்டனைகளை எச்சரிக்கை செய்து மிரட்டி பணியவைக்கிறார்கள். இவர்களும் பகுத்தறிவற்று அடிமைகளாகி விடுகின்றனர்.

No comments:

Post a Comment