முகமதுவுக்கு எழுத படிக்க தெரியுமா?

முகமதுவுக்கு படிப்பறிவு உண்டா?

இஸ்லாம் வாளால் பரப்பட்ட மதம் என்றொரு வாதம் அதன் தொடக்க காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. 
இதற்கான முதன்மையான ஆதாரங்களாக அவ்வாதத்தை கூறுபவர்கள் முகம்மது நடத்திய போர்களையும், பிற நாடுகளுக்கு முகம்மது அனுப்பிய கடிதங்களையும் முன்வைக்கிறார்கள். 

முதலில் முகமதுவே எழுதியதாக இருக்கும் ஒரு ஒப்பந்தத்தை பார்த்துவிடுவோம்..

நம்ம முஸ்லிம்கள் சொல்வது , முகமதுவுக்கு எழுத படிக்க தெரியாது . அப்படி இருக்கும் ஒருவர் எப்படி இந்த மாதிரி குரானை குடுக்கமுடியும். அதனால் அது அல்லாவிடம் இருந்துதான் வந்து இருக்கவேண்டும்.
முதலில் நாம் கவனிக்க வேண்டியது . முகமது கதிஜாவிடம் வேலை பார்த்தபோது வெளியூர்களுக்கு போய் வியாபாரம் செய்து இரண்டு மடங்கு இலாபம் கொண்டு வந்தார் என்பது. எழுத படிக்க தெரியாதவனிடம் இந்த மாதிரி வியாபாரம் செய்ய வேலைக்கு அமர்த்துவார்களா?.

அடுத்தது .. முகமதுவே தன் கைப்பட எழுதியதாக இருக்கும் இந்த ஹதிஸை பாருங்கள்.

Translation of Sahih Bukhari, Book 49:
Volume 3, Book 49, Number 863:
Narrated Al-Bara:
When the Prophet intended to perform 'Umra in the month of Dhul-Qada, the people of Mecca did not let him enter Mecca till he settled the matter with them by promising to stay in it for three days only. When the document of treaty was written, the following was mentioned: 'These are the terms on which Muhammad, Allah's Apostle agreed (to make peace).' They said, "We will not agree to this, for if we believed that you are Allah's Apostle we would not prevent you, but you are Muhammad bin 'Abdullah." The Prophet said, "I am Allah's Apostle and also Muhammad bin 'Abdullah." Then he said to 'Ali, "Rub off (the words) 'Allah's Apostle' ", but 'Ali said, "No, by Allah, I will never rub off your name." So, Allah's Apostle took the document and wrote, 'This is what Muhammad bin 'Abdullah has agreed upon: No arms will be brought into Mecca except in their cases, and nobody from the people of Mecca will be allowed to go with him (i.e. the Prophet ) even if he wished to follow him and he (the Prophet ) will not prevent any of his companions from staying in Mecca if the latter wants to stay.' When the Prophet entered Mecca and the time limit passed, the Meccans went to 'Ali and said, "Tell your Friend (i.e. the Prophet ) to go out, as the period (agreed to) has passed." So, the Prophet went out of Mecca. The daughter of Hamza ran after them (i.e. the Prophet and his companions), calling, "O Uncle! O Uncle!" 'Ali received her and led her by the hand and said to Fatima, "Take your uncle's daughter." Zaid and Ja'far quarrel ed about her. 'Ali said, "I have more right to her as she is my uncle's daughter." Ja'far said, "She is my uncle's daughter, and her aunt is my wife." Zaid said, "She is my brother's daughter." The Prophet judged that she should be given to her aunt, and said that the aunt was like the mother. He then said to 'All, "You are from me and I am from you", and said to Ja'far, "You resemble me both in character and appearance", and said to Zaid, "You are our brother (in faith) and our freed slave."

2699. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்தார்கள். மக்காவாசிகள் அவர்களை மக்காவிற்குள் நுழைய விட மறுத்தார்கள். இறுதியில், நபி(ஸல்) அவர்கள், 'மக்காவில் (வரும் ஆண்டில்), தாம் (தம் தோழர்களுடன்) மூன்று நாள்கள் தங்க (அனுமதிக்க) வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் மக்காவாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். ஒப்பந்தத்தை அவர்கள் எழுதியபோது, 'இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்துகள்" என்று எழுதினார்கள். உடனே மக்காவாசிகள், 'நாங்கள் இதை ஒப்புக் கொள்ள மாட்டோம்; நீங்கள் இறைத்தூதர் தாம் என்று நாங்கள் அறிந்திருப்போமாயின் உங்களை (மக்காவில் நுழையவிடாமல்) தடுத்திருக்க மாட்டோம். ஆயினும், நீங்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் அல்லாஹ்வின் தூதராவேன்; அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது ஆவேன்" என்று பதிலளித்துவிட்டு, அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர்' என்பதை அழித்து விடுங்கள்" என்று கூறினார்கள். அலீ(ரலி), 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தங்கள் (அந்தஸ்தைக் குறிக்கும்) பெயரை ஒருபோதும் அழிக்க மாட்டேன்" என்று கூறிவிட்டார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்திரத்தை எடுத்து, 'இது அப்துல்லாஹ்வின் குமாரர் முஹம்மத் செய்த சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்து(கள் கொண்ட பத்திரம்) ஆகும். (அந்த ஷரத்துகளாவன:) (முஸ்லிம்களின்) ஆயுதம் எதுவும் உறையிலிருந்தபடியே தவிர, மக்காவினுள் நுழையக்கூடாது. மக்காவாசிகளில் எவரும் முஹம்மதைப் பின்தொடர்ந்து வர விரும்பினாலும் கூட, அவரை முஹம்மது தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. மேலும், தம் தோழர்களில் எவரும் மக்காவில் தங்கிவிட விரும்பினால் அவரை முஹம்மது தடுக்கக் கூடாது" என்று எழுதினார்கள். (அடுத்த ஆண்டு) நபி(ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழைந்தபோது (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) தவணையான மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரிடம் எங்களை (எங்கள் நகரை)விட்டு வெளியேறும்படி கூறுங்கள். ஏனெனில், தவணைக் காலம் கழிந்துவிட்டது" என்றார்கள். நபி(ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா(ரலி) அவர்களின் (அனாதை) மகள், 'என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!" என்று (கூறிக் கொண்டே) அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ(ரலி) அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளுடைய கையைப் பிடித்தார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், 'இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை (இடுப்பில்) சுமந்து கொள்" என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ(ரலி) அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும், ஜஅஃபர்(ரலி) அவர்களும் (ஒவ்வொரு வரும், 'அவளை நானே வளர்ப்பேன்' என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டு சச்சரவிட்டுக் கொண்)டனர். அலீ(ரலி), 'நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்" என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), 'இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத்தின்) கீழ் இருக்கிறாள்" என்று கூறினார்கள். ஸைத்(ரலி), '(இவள்) என் சகோதரரின் மகள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், 'சிற்றன்னை தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள்" என்று கூறினார்கள். அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்" என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கிறீர்கள்" என்றார்கள். மேலும், ஸைத்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எம்முடைய பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்)" என்று கூறினார்கள்.


இதே வாசகங்களை இன்னும் இரு ஹதீஸ்கள் குறிப்பிடுகிறது..
3184. 4251.

அதாவது அலி எழுதியதை அழிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்த பின் , முகமது வேறுவழியில்லாமல் தானே அந்த குறிப்பிட்ட வாசகத்தை  அழித்துவிட்டு திருத்தி எழுதியதாக இருக்கிறது ... 

இல்லை நான் தான் இதை படித்து தவறாக புரிந்துகொண்டு இருக்கிறேனா?


 அடுத்து முகம்மது அனுப்பிய கடிதங்களைக் கவனிப்போம்.

முகமது பிற மன்னர்களுக்கு அனுப்பியதாக சொல்லப்படும் சில கடிதங்கள்


மதீனாவில் முகம்மது ஓர் அரசை ஏற்படுத்திய பிறகு, தொடர்ச்சியாக போர்களை நடத்தி பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் அந்த அரசை உறுதிப்படுத்திய பிறகு அண்டை நாடுகளுக்கு முகம்மது கடிதங்களை அனுப்புகிறார். இஸ்லாத்திற்கு அழைப்புவிடுத்து எழுதப்பட்டதாக கூறப்படும் அந்தக் கடிதங்களில் அவர் குறிப்பிட்டிருக்கும் முதன்மையான செய்தி, “மதீனாவில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள், அவ்வாறு நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் போர் தொடுக்கப்பட்டு உங்கள் நாடு கைப்பற்றப்படும்” என்பது தான். அந்த கடிதங்களில் ஒன்று ஓமன் நாட்டில் சோஹார் கோட்டையில் இன்றும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இவ்வாறு இருக்கிறது,

Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God’s Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom.

இது அப்பட்டமாக ஓமன் நாட்டு மன்னரை மிரட்டுகிறது. இது போன்று அபிசீனியா, எகிப்து, பாரசீகம், ரோம் யமாமா, சிரியா நாட்டு மன்னர்களுக்கும் அனுப்பப் பட்டிருக்கிறது. அந்தக் கடிதங்களில் மிரட்டல் தான் இருக்கிறதே அன்றி அழைப்பு இல்லை. இதைக் கொண்டு தான் இஸ்லாம் வாளால் பரப்பட்ட மதம் என்கிறார்கள். இதை எதிர் கொள்வதற்காக தமிழ் இஸ்லாமிய பரப்புரையாளர்கள் அந்தக் கடிதங்களை அதன் வீரியத்தைக் குறைத்து “நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் ஈடேற்றம் பெறுவாய்” என்று மொழிபெயர்த்து சமாளிக்கிறார்கள்.

அபிசீனிய(எத்தியோப்பியா) மன்னனுக்கு எழுதிய கடிதம்

Peace be upon him who follows true guidance and believes in Allah and His Messenger. I bear witness that there is no god but Allah Alone with no associate, He has taken neither a wife nor a son, and that Muhammad is His slave and Messenger. I call you unto the fold of Islam; if you embrace Islam, you will find safety,
நேர்வழியைப் பின்பற்றி அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ அல்லது பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகுக! நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்.

எகிப்து மன்னனுக்கு எழுதிய கடிதம்

Peace be upon him who follows true guidance. Thereafter, I invite you to accept Islam. Therefore, if you want security, accept Islam. If you accept Islam, Allah, the Sublime, shall reward you doubly. But if you refuse to do so, you will bear the burden of the transgression of all the Copts.
நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான். ”நீங்கள் புறக்கணித்து விட்டால் கிப்தி இனத்தவர்களின் குற்றமும் உங்களையே சாரும்”

பெர்சிய (ஈரான்) மன்னனுக்கு எழுதிய கடிதம்

Peace be upon him who follows true guidance, believes in Allah and His Messenger and testifies that there is no god but Allah Alone with no associate, and that Muhammad is His slave and Messenger. I invite you to accept the religion of Allah. I am the Messenger of Allah sent to all people in order that I may infuse fear of Allah in every living person, and that the charge may be proved against those who reject the Truth. Accept Islam as your religion so that you may live in security, otherwise, you will be responsible for all the sins of the Magians
நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்ட தூதராவேன். உயிருள்ளவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, இறைநிராகரிப்பாளர்களுக்கு அவனது தண்டனையின் வாக்கு உறுதி ஆவதற்காக என்னை அவன் தூதராக அனுப்பியிருக்கிறான். நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள் ”நீங்கள் மறுத்துவிட்டால் மஜூஸிகளின் (நெருப்பை வணங்குபவர்களின்) குற்றமெல்லாம் உங்களையே சாரும்

ரோம் நாட்டு மன்னனுக்கு எழுதிய கடிதம்

Blessed are those who follow true guidance. I invite you to embrace Islam so that you may live in security. If you come within the fold of Islam, Allah will give you double reward, but in case you turn your back upon it, then the burden of the sins of all your people shall fall on your shoulders
நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய் இஸ்லாமை ஏற்றுக்கொள் அல்லாஹ் உனக்கு கூலியை இருமுறை வழங்குவான் நீ புறக்கணித்து விட்டால் உமது கூட்டத்தினர் அனைவரின் குற்றமும் உன்னையே சாரும்.

யமாமா நாட்டு மன்னனுக்கு எழுதிய கடிதம்

Peace be upon him who follows true guidance. Be informed that my religion shall prevail
everywhere. You should accept Islam, and whatever under your command shall remain yours
நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்

சிரியா நாட்டு மன்னனுக்கு எழுதிய கடிதம்

Peace be upon him who follows true guidance, believes in it and regards it as true. I invite you to
believe in Allah Alone with no associate, thenceafter your kingdom will remain yours
நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்

இந்தக் கடிதங்கள் மூலம் இஸ்லாம் பரவியதா என்றால் இல்லை என்பது தான் பதில். ஒரு சில மன்னர்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள். சில மன்னர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் எகிப்துக்கு அனுப்பிய கடிதத்துக்கு பதிலாக முகம்மதின் கோரிக்கையை நாசூக்காக மறுத்து மரியா, ஷிரின் எனும் இரண்டு அழகிய பெண்களை பரிசாக அனுப்பிவைக்கிறான் எகிப்தின் மன்னன். முகம்மது தன்னிடம் மரியாவை வைத்துக் கொண்டு (இஸ்லாமிய வரலாற்றில் இந்த மரியாவைச் சுற்றி பெரும் பூகம்பமே ஏற்பட்டது. மட்டுமல்லாமல் குரானில் பல வசனங்களை இரக்க(!) வேண்டியதிருந்தது. அதை பின்னர் பார்க்கலாம்) ஷிரினை ஹசன் பின் தாபித் என்பவருக்கு வழங்கி விட்டார். (ஷிரின் ஒரு அரவாணி என்றும் கூறப்படுகிறது) ஆக இஸ்லாத்திற்கான அழைப்பு அழகான ஒரு அடிமைப் பெண்ணோடு முடிந்து போனது.

இந்த நாடுகளுக்கு கடிதம் அனுப்பியதுடன் முகம்மதின் பணி முடிந்து விட்டது. உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்க வந்த அல்லாவின் தூதன் நானே என அறிவித்துக் கொண்ட முகம்மது அந்த நாட்டு மக்களை இஸ்லாமுக்கு மாற்றுவதற்கு செய்த முயற்சிகள் என்ன? ஒன்றுமில்லை ஆனால் அடிபணிந்த நாடுகளிடமிருந்து முறையாக வரி வசூல் செய்யப்பட்டன. ஆளுனர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இது அரசியலில் சேருமா? ஆன்மீகத்திலா?

முதன்மையான கேள்விக்கு வரலாம். என்னுடைய புதிய கொள்கையை அல்லது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவதற்கும், உன்னுடைய நாட்டை நான் பிடித்துக் கொள்வேன் என்று கூறுவதற்கு என்ன தொடர்பு? இஸ்லாத்துக்கு வாருங்கள் என அழைக்கலாம், வந்தால் ஏற்றுக் கொள்ளலாம், மறுத்தால் புரியவைக்கலாம் அல்லது விட்டு விடலாம். ஆனால், உன்னுடைய நாட்டை நான் பிடித்துக் கொள்வேன் என்று கூறினால் அதன் பொருள் என்ன? முகம்மது ஒற்றை ஒருவரைக் கூட இஸ்லாத்துக்கு மாற்றிவிட முடியாது. ஏனென்றால் யார் இஸ்லாத்துக்கு மாற்றுவது யாரை வழிகேட்டில் விட்டு விடுவது என்பதை தீர்மானிப்பது அல்லாதான். அதிகாரத்தில் முகம்மதுக்கு எந்த பங்கும் இல்லை. இதைக் கூறுவதும் ஒரு குரான் வசனம் தான். முகம்மது தன் நெருங்கிய உறவினர் ஒருவரை சாகும் தருவாயிலும் எப்படியவது இஸ்லாத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக கடும் முயற்சிகளை மேற்கொள்கிறார். அப்போது இரங்கும்(!) குரான் வசனம் முகம்மதால் ஒற்றை ஒருவரைக்கூட இஸ்லாத்திற்கு மற்றவைக்க முடியாது, அல்லாவின் உதவி இல்லாவிட்டால் என்று முகம்மதை எச்சரிக்கிறது. அப்படி என்றால் முகம்மது எகிறிக்குதித்து முஸ்லீமாக மாறவில்லை என்றால் நாட்டை பிடுங்கிக் கொள்வேன் என்று கடிதம் எழுதுவது ஏன்? இதற்கு ஆட்சி அதிகாரம் தவிர வேறேதும் நோக்கங்கள் இருந்திருக்க முடியுமா? 

No comments:

Post a Comment