இஸ்லாமும் அடிமைமுறையும் (-1)

இஸ்லாம் பின்பற்றும் அடிமை முறை


அடிமை முறை என்பது இன்றளவும் முஸ்லிம்களால் பின் பற்றப்படுகிறது. ஆனால் முஸ்லிம்களிடம் கேட்டால் , அவர்கள் சொல்லுவது இஸ்லாம் அடிமைத்தனத்தை ஒழித்தது என்று கூறுவார்கள்..  இதில் எது உண்மை என்று பார்க்கலாம்....

முதலில் அல்லா என்ன சொல்கிறான் என்று பார்ப்போம் ....

  2:178ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமைபெண்ணுக்குப் பெண்.

      அடிமையை கொல்லலாம்...... அடிமை என்பவர் முஸ்லிம்களுக்கு , அவர்கள் வைத்திருக்கும் ஒரு பொருளே!!!!!!!. 

   2:221(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;இணை வைக்கும் ஒரு பெண்,உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும்அவளைவிட முஃமினான ஓர்அடிமைப் பெண்நிச்சயமாக மேலானவள் ஆவாள்; . 

       அல்லா சொல்வது என்னவென்றால் . ஹிந்து, கிறிஸ்தவ,யூத பெண்கள் முஸ்லிம் அடிமைப்பெண்ணைவிட ( அதாவது அடிமையாக இருக்கும் போது முஸ்லிமாக மாறியவள்)   மட்டமானவள்.  .. இது மற்ற பெண்களை மதம் மாற்ற கூறப்பட்டது. அப்படி மாற்ற முடியாத பட்சத்தில் (ஒருவேளை முஸ்லிம் ஆண்கள் பிற பெண்களை மோகத்தால் மணந்து இவன் மதம் மாறி விட்டால் என்ன செய்வது என்று பயந்து அல்லா(முகமது) கூறியது ) போனா போகுது அடிமைப்பெண்ணை மணந்து கொள்...  முஸ்லிம்கள் சொல்வார்கள் அடிமைப்பெண்களை மணப்பதின் மூலம் அடிமைத்தனத்தை ஒழிக்க அல்லா கூறியது தான் என்று கூறுவார்கள்....... பொருமையாக இருங்கள்......   கீழே இதை விலாவாரியாக அலசி ஆராய்வோம்...


4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லதுஉங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

பாலியல் நடைமுறை சட்டங்கள் பற்றி இங்கே:



  1. இஸ்லாமிய பாலியல் சட்டங்கள் (-1)
  2. இஸ்லாமிய பாலியல் சட்டங்கள் (-2)



இதில் அல்லா சொல்வது உன்னால் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளிம் நியாயமாக( நியாயமாக நடப்பது என்றால் என்ன என்று அல்லா சொல்லவில்லை?) நடக்கமுடியாது என்று நினைத்தால் . ஒரே ஒரு சுதந்திரமான பெண்ணை மணந்துகொள். அல்லது உன்னிடம் இருக்கு அடிமைப்பெண்ணிடம் சுகம் தேடிக்கொள்(கற்பழித்துக்கொள்).
Tafsir Ibn Kathir - Quran Tafsir 
(But if you fear that you will not be able to deal justly (with them), then only one or what your right hands possess.) The Ayah commands, if you fear that you will not be able to do justice between your wives by marrying more than one, then marry only one wife, or satisfy yourself with only female captives, for it is not obligatory to treat them equallyrather it is recommended. So if one does so, that is good, and if not, there is no harm on him. In another Ayah, Allah said

3. 4:24இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிரகணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிரமற்றப் பெண்களைதவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல்,அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும்,ஞானமுடையோனுமாக இருக்கிறான்.

 இது தான் அல்லாவின் மிக உயர்ந்த கருத்து.........  இந்த வசனம் நாம் நினைப்பது மாதிரியான திருமணமல்ல ...   அந்த அடிமைப்பெண்ணுக்கு திருமணம் ஆகியிருந்தாலும்,அவளுக்கு கணவன் இருந்தாலும் அவளைஅனுபவிக்கலாம்(அடிமைப்பெண்ணின் திருமணத்தைப்பற்றிய வசனம் அடுத்து வருகின்றது). இந்த வசனத்தில் நம்ம தமிழ் முஸ்லிம்களின் ப்ரேக்கெட் உள்ளே இருப்பதை எடுத்துவிட்டு பார்ப்போம்... :)     இவர்களைத் தவிரமற்றப் பெண்களைதவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல்அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து கொடுத்துத் தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும்ஞானமுடையோனுமாக இருக்கிறான். 

 [இதற்கு பெயர் முத்ஆ திருமணம்.. முத்ஆ திருமணம் பற்றி இங்கு விளக்கமாக படிக்கலாம்.
அதாவது குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும்.. உதாரணத்துக்கு .. நீங்கள் ஒரு வேலையாக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து அங்கு ஒரு பெண்ணை 3 நாட்களுக்கு மணந்து கொண்டு எல்லா காரியமும் செய்யலாம்... அந்த 3 நாள் முடிந்து ஊர் திரும்பும் போது பேசிய தொகையை ..மன்னிக்கவும் வரதட்சனையை குடுத்தால் போதும்.. அதன் பின் அவளுக்கும் உங்களூக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. இந்த வழக்கத்தை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது இல்லையா?] அதுமட்டுமல்ல.
 (எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது) அதாவது முஸ்லிமுக்கு முழு சந்தோஷம் வரும் அளவில் அந்த பெண் நடக்கவில்லை என்றால் பேசிய தொகையில் இருந்து குறைவாக கொடுக்கலாம். அதே மாதிரி ரொம்ப சந்தோஷம் அடைந்தால் பேசிய தொகையை விட அதிகமாக கொடுக்கலாம்.(அல்லாவின் தீர்க்க தரிசனத்தை இதில் காணமுடிகிறது. பர்தா போட்டு மூடியிருக்கும் போது    அந்த பெண் எப்படி இருப்பாள் என்று தெரியாது. நல்ல ஒரு தொகையை பேசி முடித்த பின் , அவள் அட்டு ஃபிகராக இருந்தால் பாவம் அந்த முஸ்லிம் ஏமாற்றம் அடைவான் அதனால் இந்த குறைத்து கூட்டி கொள்ளும் உரிமை, வல்லாஹி , அதனால் இது கட்டாயமாக கடவுளிடம் இருந்துதான் வந்திருக்கவேண்டும்) முஸ்லிம்கள் இது இஸ்லாமில் கிடையது முகமது இதை தடை செய்துவிட்டார் என்று கூறுவார்கள்... 

புஹாரி- 889. 
கைபர் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘முத்அத்துன்னிஸா.”.. (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்றும், நாட்டுக் 
கழுதைகளை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்.

ஆனால் நாம் பார்க்கவேண்டியது இதில் என்னவென்றால்.. அல்லா பெரியவனா முகமது பெரியவனா என்று தான்.. அல்லா கூறியதை முகமதால் மாற்ற முடியுமா.. இதற்கு முஸ்லிம்கள் தான் பதில் சொல்லவேண்டும்.

4:25உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோஅவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;)அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டுமணமுடித்துக் கொள்ளுங்கள்............
உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்



இந்த வசனத்தை தான் நாம் நன்றாக அலசி ஆராய வேண்டும்........
இதில் முதலில் அல்லா கூறுவது சுதந்திரமான முஸ்லிம் பெண்ணை மணக்க முடியாதவர்கள் , வசதியில்லாதவர்கள் , அடிமைப்பெண்ணை மணம் புரியலாம்.. [அவனிடம் இருக்கும் அடிமைப்பெண்ணைப்பற்றி இல்லை இந்த வசனம் , அவனிடம் அடிமைப்பெண் இருந்தால் அவன் அல்லாவை கேட்காமலே அவளை அனுபவிக்கலாம் -- அந்த வசனங்கள் கீழே வருகின்றது] இது ஒரு பெண் அடிமையாக மற்றொரு முஸ்லிமிடம் இருக்கும்போது(உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்)   அந்த மற்றொரு முஸ்லிம் எஜமானனிடம் அனுமதி பெற்று திருமணம் செய்யலாம்.  அதிலும் அல்லா கூறுவது என்னவென்றால் .. உன்னால் பொத்திக்கொண்டு சும்மா இருக்கமுடியவில்லை என்றால் , கள்ள ... போய்விடுவாய் என்று பயந்தால் ..... இந்த மாதிரி அடிமைப்பெண்ணை மணந்துகொள் . அப்படி உன்னால் உன்னை கட்டுப்படுத்தி கொண்டு இருக்க முடியும் என்றால் அடிமையை திருமணம் செய்யாமல் இருந்து கொள் என்கிறான்.(ஏனென்றால் அடிமைப்பெண்ணூக்கு பிறக்கும் குழந்தை அந்த எஜமானனையே சேரும், மேலும் அந்த அடிமைப்பெண் அடிமையாகத்தான் இருப்பாள்). அதாவது அல்லா சொல்வது , நீ பஞ்ச பரதேசியாக காசிலாமல் இருந்து சுயகட்டுப்பாடும் இல்லாமல் இருந்தால் முஸ்லிமாக இருக்கும் அடிமையை மணந்து கொள்..(இதில் அல்லாவுக்கு அடிமையை விடுவிக்கும் நல்ல எண்ணம் எல்லாம் இல்லை  ,மேலும் திருமணம் செய்தாலும் அடிமையாகத்தான் இருக்கவேண்டும் ) முஸ்லிம்கள் நான் இந்த வசனத்தை தவறாக கூறுகிறேன் என்று சொல்வார்கள் ..அதனால் ...(கீழே உள்ள இணைப்பில் போய் படித்துக்கொள்ளவும்)





4:36மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும்அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

என்னடா அல்லா திடீர் என்றூ பல்டி அடிக்கிறானே என்று பார்க்கிறீர்களா?  அல்லாவைப்பொருத்தவரை அவனுக்கு இணைவைப்பது மிகப்பெரிய பாவம். அவர்களை கொன்றாலும் தவறில்லை... இந்த வசனம் அடிமையாக இருக்கும் முஸ்லிம்களுக்கு. ( முஸ்லிம் அடிமையைத்தான் விடுவிக்கமுடியும் அதனால் பிடித்து வரப்பட்ட அடிமை முஸ்லிமாக மாறாமலா இருப்பான் ). மேலும் அடிமையாக இருப்பவனுக்கு சோருபோடாமல் அவன் மண்டையைப்போட்டால் யாருக்கு நஷ்டம்.? அதனால் கொஞ்சம் பரிவு அவ்வளவு தான்.


4:92தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்;......... 

இதோ வந்து விட்டதே இந்த வசனத்துக்கு முன்னால் நான் கூறியது சரி என்று நிருபிக்க :)  அடிமை முஸ்லிமாக இருந்தால் மட்டுமே விடுதலை ....

5:89உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்;எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்அல்லது ஓர் அடிமையைவிடுதலை செய்ய வேண்டும்;

 இந்த வசனத்தில் . முதலில் , 10 ஏழைகளுக்கு உணவு அல்லது ஆடை அணிவிக்க வேண்டும் (அம்மனமாக வாக இருப்பார்கள் :) ) , அப்படி இல்லை என்றால் ஒரு அடிமையை (முஸ்லிமை) விடுதலை செய்யவேண்டும். முஸ்லிம்கள் என்ன அந்த அளவுக்கு மடையர்களா , முதல் இரண்டில் ஒன்றை செய்யாமல் அடிமையை விடுவிக்க ....

16:75. அல்லாஹ் (இருவரை)உதாரணம் கூறுகிறான்:பிறிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார)உரிமை பெறாத ஓர் அடிமை;மற்றொருவனோநம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்)பொருள்களும் கொடுத்திருக்கின்றோம்அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்)செலவு செய்கிறான்இவ்விருவரும் சமமாவாரா

 இது அல்லாவின் வாக்கு ... அல்லா தன்னையும் , சிலையையும் ஒப்பிட்டு அதற்கு கூறும் உதாரணம் .. சுதந்திரமானவன் - முஸ்லிம் (அல்லாவை நம்புபவன்) மாதிரியாம் .  அடிமை என்பவன் ஒரு அதிகாரமும் (ஒன்றும் செய்ய முடியாத)  இல்லாதவன் அதாவது அல்லா மீது நம்பிக்கையில்லாதன் போல்...  இந்த இருவரும் ஒன்றாகுமா என்று கேட்கிறான்.... ஒரு கடவுளே இந்த மாதிரி கேட்டா , பாவம் அடிமை என்ன செய்யமுடியும்......

 16:76மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன்ஊமை(யானஅடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா? 

மேலே குடுத்த விளக்கமே இதற்கும். 

23:6ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

  கருணைமிக்க அல்லா கூறுகிறான்.  முஸ்லிம்கள் அவர்களின் மனைவியிடமும் அவர்கள் வைத்திருக்கும் அடிமைப்பெண்களிடமும் உடலுறவு கொண்டால் தப்பில்லை.......
 ( இது அடிமைப்பெண்ணை கற்பழிப்பது இல்லாமல் வேறு என்ன ?) அவள் என்ன ஆசைப்பட்டா வருவாள். மேலும் இதில் திருமணமாகாத அடிமைப்பெண் என்று சொல்லவில்லை .. அதானால் அவளுக்கு  திருமணம் ஆகியிருந்தாலும் அவளை கற்பழிக்கலாம் , அதானால் தான் கருணைமிக்க அல்லா முஸ்லிம்கள் அடிமைப்பெண்ணை திருமணம் செய்யாமல் கட்டுப்பாடுடன் இருக்கும் படி அறிவுருத்துகிறான். மாஷா அல்லா . அல்லாவின் ஞானமே ஞானம். இந்த மாதிரியான கருணையை பெண்களிடத்தில் யார் காட்ட முடியும் அல்லாவைத்தவிர.

24:32இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

அல்லா மறந்துவிட்டான் என்று நினைக்கிறேன்...  மேலே அடிமையை மணம் செய்யாமல் கட்டுப்பாடோடு இருக்கவேண்டும் என்று கூறுகிறான்... அப்படி கூறும் போது எவன் அடிமையை மணக்க முன்வருவான். (ஒரு வேளை அடிமைகளுக்குள்ளேயேவா?) அதுமட்டுமல்ல முஸ்லிம் அந்த அடிமையை நினைத்த போது படுக்க கூப்பிடலாம் என்னும் போது ..எவன் அவளை திருமணம் செய்ய முன்வருவான்? 
 ஒரு முக்கியாமான பாய்ண்ட்.  திருமணம் ஆனாலும் அவர்கள் அடிமைகளே. அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் அடிமைகளே.

24:33. விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில்(அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக; மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்;
அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

இதில் அல்லா சொல்வது வழக்கம் போல் அடிமைப்பெண்ணை மணம் புரியவேண்டாம்(  அதாவது கொள்ளை அடித்து காசு சம்பாதிக்கும் வரை அவர்கள் ஒழுக்கம் பேணட்டும்). அதன் பின்பு அந்த அடிமையை விடுவிக்க வேண்டுமானால் ,, அந்த அடிமை திரும்பவும் காசை ஒழுங்காக குடுப்பான் என்று முஸ்லிம் நம்பினால் மட்டும், அந்த அடிமையை விடுதலை செய்யலாம். (அந்த மாதிரி அடிமை விடுதலை செய்யப்பட்டு அவன் சம்பாதிக்கும் சொத்துக்கு வாரிசு யார் தெரியுமா? அந்த அடிமையை விடுதலை செய்தவர் - இது சூப்பர் இல்லையா). இதற்கு பின் வருவது தான் அதைவிட சூப்பர் . அடிமைப்பெண்ணை விபச்சாரம் செய்ய நிர்பந்தபடுத்தி காசு சம்பாதிக்காதே(கட்டாயப்படுத்தி மாமா வேலை செய்யாதே). அப்படி நீ செய்தால்........ அதனால் பரவாயில்லை அல்லா உங்களை மன்னித்துவிடுவான்..... இதில் இன்னும் ஒன்று பார்க்க வேண்டும்.. அந்த பெண்ணே விபச்சாரம்(கற்பை பேணிக்கொள்ள நினைக்காவிடில்) செய்ய நினைத்தால் ....செய்து கொள்ளலாம். நம்ம மாமா முஸ்லிமும் காசு பார்த்துக்கொள்ளலாம். அது மட்டுமல்ல -- அடிமையை விடுதலை செய்தாலும் அந்த முன்னாள் அடிமையின் வாரிசாக ஆவதினால் ஒரு லாபம். மேலும் முகமது அந்த நாட்களில் தொடர்ந்து மற்ற மக்களை தாக்கி, அவர்களை அழித்து பெண்களையும் சிறுவர்/சிறுமிகளையும் அடிமைகளாக பிடித்ததினால்.. முஸ்லிம்களுக்கு ஏராளமான அடிமைகள் எளிதாக கிடைத்தனர்.(அடிமைகிடைக்கும் என்று போருக்கும் வருவார்கள்) மேலும் முஸ்லிமாக மாறியவர்களே விடுவிக்கப்பட்டதினால் இஸ்லாமும் வளரும்.. இதில் அல்லா ஒரே கல்லில் ,இரண்டு மாங்கா, இல்லை மூன்று மங்கா, இல்லை நான்கு மாங்கா அடிக்கிறான்.

(மைக்கேல்,மதன காம ராஜனில் வரும் வசனம் போல..

அல்லாஹ் மன்னிப்பவனாகவும்- மன்னிப்பு என்பது எப்போது வரும்? தவறே செய்யவில்லை என்றால் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்த அடிமைபெண்கள் நிர்பந்திக்கப்பட்டதினால் அவர்கள் மேல் தவறில்லை என்பது நமக்கே தெரியும் போது கடவுளுக்கு தெரியாதா? பின் எதற்காக மன்னிப்பு என்று கூறவேண்டும். இது அந்த பெண்களுக்கு அல்ல , அந்த மாமாவுக்கு அதாவது முஸ்லிமகள் என்ன செய்தாலும் அல்லா மன்னித்துவிடுவான்).




33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும்உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்;அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும்,உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும்உம் மாமன் மார்களின் மகள்களையும்உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களையும் ;அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து,நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும்,அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்;உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்)மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்மிக்க அன்புடையவன்.

  இந்த வசனம் முகமது தனக்கு தானே ,மன்னிக்கவும் . அல்லா முகமதுக்கு கூறியது .. அதாவது முகமது யார்கூட எல்லாம் படுக்கலாம் என்பதைப்பற்றி கூறுகிறான். இது திருமணத்தைப்பற்றி அல்ல... ஏனென்றால் மனைவியரையும், அடிமையையும் படுக்கவைப்பது ஹலால். இதில் மனைவியைப்பற்றி சொல்லாமல் இருந்திருந்தால் இது திருமணத்தைப்பற்றி கூறுகிறது என்று சொல்லலாம்.. மனைவியை திரும்ப மணம்புரியவேண்டியது இல்லை.. எந்த முஸ்லிம் பெண் வந்து முகமது கூட படுக்க ஆசைப்பட்டாலும் ....  இந்த வசனம் முடிவது , மத்த முஸ்லிம்கள் மனைவி மற்றும் அடிமைப்பெண்ணுடன் படுப்பது பற்றி.. அதானால் இது திருமணம் பற்றி அல்ல.... அதாவது இதிலும் அல்லா கூறுவது அடிமைப்பெண் கற்பழிப்பை பற்றி தான் (போரில் எளிதாக கிடைத்த பெண்கள் -அதாவது கணவனை, தந்தையை,சகோதரர்களை கொன்ற பின் அனாதரவாக இருக்கும் பெண்களை அன்று இரவே படுக்கவைப்பது ).  இதிலும் அல்லா கருணை மழை பொழிகிறான்.. முகமதுக்கு எந்த ஒரு சங்கடமும் வந்து விடக்கூடாது என்று அவனுக்கு மட்டும் விதிவிலக்கு -- அதாவது யார் கூட வேண்டுமானாலும் படுக்கும் உரிமை.


33:52இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன். 

  இது என்னடா திரும்பவும் அல்லா குழப்புகிறான். மேலே தான் ஊரில் இருக்கும் அனைவருடனும் படுக்கும் உரிமையை வழங்கினான்.. சரி, இதில் அல்லா என்ன சொல்லவருகிறான் என்றால் முகமது அவனின் மனைவிகள் , மற்றும் அடிமைப்பெண்கள் உடன் மட்டும் படுக்கலாம்(அடிமையை கற்பழிக்கலாம்). அதைதவிர வேறுயாராக இருந்தாலும் திருமணம் செய்த பின் தான் படுக்க முடியும்...  



58:3. மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் - மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.
58:4. ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் - வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும்; அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.


இந்த இரண்டு வசனங்களையும் சேர்த்து பார்கவேண்டும்.. முதலில் அல்லா யோசிக்காமல் உளறிவிட்டான்.. அதன் பின் பார்த்தால் . (இந்த சம்பவம் நடந்தபோது) இது யாருக்காக அருளப்பட்டதோ அவரிடம் அடிமையே இல்லை .. அதானால் இந்த இரண்டாவது வசனம்... 
 மேலும் “எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால்,”  இந்த மாதிரி யாராவது வந்தால் அடிமை விடுதலை,அப்படி வசதியில்லை என்றால் 2 மாதம் நோம்பு.... இதிலும் அடிமையை விடுவிக்கும் நல்ல எண்ணம் எல்லாம் இல்லை அல்லாவுக்கு..தெரியாமல் உளறியதால் தான் இது...

70:30தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
மீண்டும் அதே கற்பழிப்பு (அடிமைப்பெண்களை)...இப்படி செய்ய அல்லாவே கூறும் போது யார் அந்த பெண்களை திருமணம் செய்வார்கள்.  (அதனால் தான் அல்லா முஸ்லிம்களிடத்தில் கருணை கொண்டு அடிமைப்பெண்களை திருமணம் செய்யவேண்டாம் என்று வலியிருத்துகிறான்.)


இப்படிதான் அல்லாஹ் நிகரற்ற அன்புள்ளவனாக இருக்கிறான் போலும்.

(தொடரும்)