இஸ்லாமிடம் தேனீயின் போராட்டம்
காபிர்கள் தங்களை காபிர்கள் என்று அல்லாஹ் திட்டுவதால், அவர்களைத் தேற்றுவதற்காக இந்த பதிவு எழுதுகிறேன்.
மனம் வருந்த வேண்டாம். உங்களை மாதிரியே நிறைய உயிரினங்கள் காபிர்களாகத்தான் இருக்கின்றன.
காபிர்கள் என்று அல்லாஹ் ஏன் உங்களை திட்டுகிறான் என்று சிந்தித்து பாருங்கள். அல்லாஹ் ஆறு நாளில் இந்த வானம், பூமி, கடல், ஆறு மலை, விலங்குகள், செடிகொடிகள், ஆண் பெண் என்று எல்லாம் படைத்தான். பிறகு என்ன சொன்னான்? என்னை கும்பிடு என்று சொன்னான். அப்புறம் கொஞ்சம் ரூல்ஸ் போட்டான். கேட்டார்களா? இல்லையே. அல்லாஹ் சொன்னதை கேட்டிருந்தால் உங்களை ஏன் காபிர் என்று திட்டப்போகிறான்?
சரி கடைசி கடைசியாக ஒரு சான்ஸ் கொடுத்தான். அதற்காக அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் நபிஹள் நாயகம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் காதில் குசு குசு என்று சொன்னதை அவர் அப்படியே எறக்கினார். அந்த பேச்சையாவது கேட்கலாமில்லையா? இந்த காபிர்கள் என்ன செய்கிறார்கள்? அவர் காதில் அல்லாஹ் சொன்னதற்கு என்ன அத்தாட்சி என்கிறார்கள்? அவரை அல்லாஹ் இறைதூதராக நியமித்தார் என்பதற்கு என்ன அத்தாட்சி என்று கேட்கிறார்கள். அவர் எறக்கிய திருமறையில் எல்லாம் பொய் புளுகும் வன்முறையும், அறிவுக்கு பொருந்தாத உயிரியலும், வானவியலும் இருக்கிறதே என்று கேட்கிறார்கள். இதற்குத்தான் பகுத்தறிவு பகுத்தறிவு என்ற ஒன்றை அல்லாஹ்வின் அடியார்கள் வலியுறுத்துகிறார்கள். பகுத்தறிவு என்றால் என்ன என்பதை முஹம்மது ஆஷிக் உரையின் விளக்க உரையை பார்க்கவும். காபிர்களுக்கு மடத்தனம் அதிகமாக இருப்பதால் திரும்பச் சொல்கிறேன். ஒருவர் வந்து நான் தான் இறுதி இறைதூதர் என்று சொன்னால் கேள்வி கேட்காமல் நம்புவதன் பெயர்தான் பகுத்தறிவு.
சரி விஷயத்துக்கு வருகிறேன்.
அல்லாஹ் என்ன சொன்னான்? ரொம்ப சிம்பிளாக ஒரு விஷயம் சொன்னான். கலிமா சொல் என்று சொன்னான்.
(ம்ம்.. கலிமா சொல்லவேண்டும் என்று எந்த இடத்திலாவது அல்குரான் கூறுகிறதா என்று பிஜே விளக்கலாம். (3:18, 37:35 இல் மட்டுமே லா இலாஹா இல் அல்லாஹ் என்ற வார்த்தை வருகிறது. அது மட்டுமே கலிமா. எந்த இடத்திலும் முஹம்மதுல்லாஹ் ரஸூலல்லா என்ற வரியும் இதுவும் சேர்ந்து வருவதில்லை. லா இலாஹா இல் அல்லாஹ் சொன்னால் மட்டுமே போதுமானது என்று அல்குரானே பல இடங்களில் சொல்கிறது. கலிமா பற்றி தனி பதிவு எழுதி விளக்குகிறேன். சுன்னி கலிமா வேறு ஷியா கலிமா வேறு. ஷியா கலிமாவில் அலி(றலி)யை பற்றியும் ஒரு வார்த்தை சேர்த்துகொள்ளப்படும்)
ஓகே கலிமா சொல்லவேண்டும் என்று அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் நபிஹள் நாயகம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னார். அப்புறம் ஒரு பெரிய லிஸ்டு கொடுத்தார். அதையெல்லாம் பின்பற்றனும். அவ்வளவுதானே? ஓகே இன்னொரு பெரிய லிஸ்டு ஹதீஸ்ல இருக்கு, அதனையும் பின்பற்றணும். நீங்க ஷியாவா இருந்தா வேறொரு ஹதீஸ் லிஸ்டு இருக்கு. அதனை பின்பற்றணும். (புர்யுதா? இதனாலதான் ஷ்யாவுக்கு சுன்னி காபிர் சுன்னிக்கு ஷியா காபிர். அதே மாதிரி சுன்னத் வல் ஜமாத்துக்கு தவ்ஹீத் ஜமாத் காபிர். தவ்ஹீத் ஜமாத்துக்கு சுன்னத் வல் ஜமாத் காபிர். காபிர்னா கல்யாணம் பண்ணியிருந்தாலும் தலாக் சொல்லி பிரியணும்னு அர்த்தம்.)
உள்ள போயி காபிர்னு பெயர் வாங்குறதுக்கும், அங்க நடக்குற வெட்டு குத்து கொலைக்கும் பேசாம வெளியிலயே காபிராவே இருக்கலாம்னு எல்லா காபிர்களும் சில முஸ்லீம்களும் முடிவு பண்ணியிருக்கலாம். நம்ம ஈமான் தாரிகள் ஏன் மசூதியா பாத்து குண்டு வைக்கிறார்கள் என்று கூட ஒரு அசிங்கம் பிடித்த அழுக்கு நஜஸ் காபிர் ஒருத்தர் என்னை கேட்டார். அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் மூன்றாவது அருட்கொடையை பத்தி பதிவே எழுதியிருக்கேன். கேட்கற கேள்வியைப் பாரு!
ஸோ, அல்லாஹ் பேச்சை கேட்காதவன் காபிர். (தவ்ஹீத் அண்ணன் பேச்சை கேக்காதவனும் காபிர்தான். அத அப்பறம் பாப்பம்)
மனிதர்கள் மட்டுமா அல்லாஹ் பேச்சை கேட்பதில்லை? புல் பூண்டு, தாவரங்களிலிருந்து மரம் செடி கொடி, மலை பூமி சூரியன் என்று யாருமே கேட்பதில்லை. கேவலம் ஒரு தேனீ கூட கேட்பதில்லை. ஓகே..ஓகே. ஒரு தேனியும் கேட்பதில்லை.
மத்ததை அப்புறம் பாப்பம். இப்ப தேனியை பாப்பம்
பாருங்களேன்.
அல்லாஹ் தேனிக்கள் கிட்ட ரெண்டு சின்ன கட்டளைகள்தான் கொடுத்தார். கலிமா கொடுக்கலை, அல்குரான் மாதிரி எதுவும் அந்த தேனீ கூட்டத்து தலை மேல எறக்கலை. ஹஜ் யாத்திரை போகணும், கொள்ளையடிச்சதில ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வோட இறைதூதருக்கு கொடுக்கணும், அவுஹ பொண்டாட்டிமேல கண்ணு போடக்கூடாது, உக்காந்துகிட்டு உச்சா போகணும், நின்னுக்கிட்டு தண்ணீ குடிக்கணும், தாடி வளக்கணும், இடது பக்கம் துப்பணும் மாதிரி எந்த பெரிய லிஸ்டும் அந்த தேனீக்களுக்கு கொடுக்கலை. சும்மா ரெண்டு சின்ன கட்டளைகள்தான். (ஒருவேளை தேனீக்களுக்கும் இது மாதிரி இறைதூதர் அனுப்பி அனுப்பி எந்த தேனியும் கேக்கறமாதிரி தெரியலைன்னு அலுத்து போய் போங்கடான்னு உட்டுட்டாரோ தெரியலை. ஒருவேளை தேனீ இறைதூதர் நம்ம இறைதூதரை விட ரொம்ப அலும்பு பண்ணியிருப்பாரோ என்னவோ? அது கெடக்கட்டும். அங்க இறைதூதர் இல்லாததனால அங்க நல்ல வேளையா ஹதீஸும் இல்லை, அங்க நம்ம தவ்ஹீத் அண்ணன் மாதிரி தேனீக்கள் இல்லாததினால் அங்க, ஷியா, சுன்னி, இருநூறு தவ்ஹீத் ஜமாத்துகளோ சுன்னத் வல் ஜமாத்துகளோ இல்லை. கொடுத்து வைத்த தேனீக்கள்)
ஆமா இரண்டு சின்ன கட்டளைகள்தான் கொடுத்தான். அவை என்ன?
16:68 وَأَوْحَىٰ رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ
16:68. உம் இறைவன் தேனீக்கு அதன்உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்),
16:69 ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا ۚ يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
16:69. “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும்) உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
இந்த பக்கம் இப்படி மொழிபெயர்க்கிறதுமொழிபெயர்க்கிறது.
இங்கு குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் அந்த வசனத்தை (16:69) எப்படி தமிழாக்கம் செய்துள்ளனர் என்பதைக் காணலாம்.
1.திருக்குர்ஆன்-தமிழாக்கம் (பி.ஜைனுல்ஆபிதீன்)– 2002, 2003, 2005, 2008,
2013ஆம் ஆண்டு பதிப்புகள்.
................பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உமதிறைவனின்............
2. அன்வாறுல் குர்ஆன்(இ.எம். அப்துர் ரஹ்மான்)-பாகம்10,1982ஆம் ஆண்டு பதிப்பு
பின்னர் கனிகள் அனைத்திலிருந்தும் புசித்துஅப்பால் எளிதாக்கப்பட்ட ...................
3. தப்ஸீருல் ஹமீத் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜீத்
(எஸ்.எஸ்.அப்துல் காதிர் பாக்கவி) – பாகம் 7 –2010 ஆம் ஆண்டு பதிப்பு
பின்னர் எல்லாக் கனிகளிலிருந்தும் புசிப்பாயாக.........................
4. தர்ஜுமத்துல் குர்ஆன் பிதன்வீரில் பயான் (பி.அப்துல் கரீம் ஹளரத்)
பாகம் 3 – ஜனவரி 2009ஆம் ஆண்டு பதிப்பு
பிறகு, ஒவ்வொரு கனிகளிலிருந்தும் உணவருந்தி...........................
5. குர்ஆன் பேசுகிறது (கே. முஹம்மது முஸ்தபா அஸ்-ஸிராஜி)
ஜூன் 2010ஆம் ஆண்டு பதிப்பு
பிறகு, கனிகள் யாவிலும் உண்டு, உன் இரட்சகரின்......................
6. திருக்குர்ஆன் – அரபி மூலத்துடன் தமிழாக்கம்
(இஸ்லாம் இன்டர்நேஷனல் பப்ளிகேஷன்ஸ் லிட், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்)
1989ஆம் ஆண்டு பதிப்பு (16:அந் நஹ்ல்:70)
பின்னர் எல்லாவகையான பழங்களிலிருந்தும் தின்று.......................
7. திருக்குர்ஆன் தமிழாக்கம் (டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான்)
ஹெல்த் டைம் பப்ளிகேஷன்ஸ், மே 2007 ஆம் ஆண்டு பதிப்பு
பின், எல்லாவிதமான கனிகளிலிருந்தும் உணவருந்தி....................
8. குர்ஆன் – இறுதி வேதம் (ரஷாத் காலீஃபாவின் ஆங்கில மூலத்தின் தமிழாக்கம்)
ஏப்ரல் 2009ஆம் ஆண்டு பதிப்பு
பின்னர்,மிகத் துல்லியமாக, உன் இரட்சகரின் திட்டத்தைப் பின்பற்றி அனைத்து கனிகளிலிருந்தும் உண்டுகொள்....................
9. குர்ஆன் – இறுதி ஏற்பாடு (ரஷாத் காலீஃபாவின் ஆங்கில மூலத்தின் தமிழாக்கம்)
ஏப்ரல் 2008ஆம் ஆண்டு பதிப்பு
பின்னர்,மிகத் துல்லியமாக, உன் இரட்சகரின் திட்டத்தைப் பின்பற்றி அனைத்து கனிகளிலிருந்தும் உண்டுகொள்....................
10. திருக்குர்ஆன்,(சையித் அபுல் அஃலா மௌதூதியின் உர்து மூலத்தின் தமிழாக்கம்)
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், (அக்டோபர் 1989, ஆகஸ்ட் 2005, செப்டம்பர்
2008, ஜனவரி 2009ஆம் ஆண்டு பதிப்புகள்.
மேலும் பலதரப்பட்ட பழகளிலிருந்து சாற்றை உறிஞ்சிக்கொள்........................
இங்கு எடுத்துக்காட்டிய பத்து (வரிசை எண்:1முதல் 10வரை) தமிழாக்கங்களில் பழங்களிலிருந்து, அல்லது பழங்களை, அல்லது பழச்சாற்றை தேனீக்களின் உணவாக-தேனீக்கள் உண்பதாக- எந்தவொரு திரித்தலும் இல்லாமல் தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளதை கவனத்தில் கொள்வோம். குர்ஆன் அரபு மூலத்திற்கு ஓரளவு பொருந்திய தமிழாக்கம் இது எனலாம்.
ஆனால் இயற்கை அறிவியலுக்கு இது முரணானது என்பது அனைவரும் அறிந்ததே!நடைமுறைக்கு பொருந்துவதாக இல்லாத இந்த வசனத்தை எப்படி உண்மை என்று நிரூபணம் செய்வது என்று சிந்தித்த குர்ஆனிய அறிஞர்கள் இருக்கவே இருக்கிறது அடைப்புக்குறி (பிராக்கெட்) என்று பூந்துவிளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.
மலர்களிலுள்ள நெக்டார் எனப்படும் பூந்தேனை உறிஞ்சி தனது வயிற்றில் சுரக்கும் சில சுரப்புகளைக் கலந்து தேனாக மாற்றி, தேனீக்கள் தனது கூடுகளில் (தேனடைகளில்) சேகரித்து வைக்கின்றன. தேனின் முக்கிய மூலப்பொருள் நெக்டார் எனப்படும் பூந்தேனே யாகும். இதுவே இயற்கை அறிவியல். மக்கள் அனைவருக்கும் பொதுவாகத் தெரிந்த இந்த அறிவியல் உண்மை குர்ஆனை அருளிய அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போய்விட்டதுதான் உச்சகட்ட காமெடி!
இனி, கீழ்வரும் தமிழாக்கங்களைப் பாருங்கள்.
11. தர்ஜுமதுல் குர்ஆன் -பி- அல்தபில் பயான் (அ.கா.அப்துல் ஹமீது பாகவி) –
1961 ஆம் ஆண்டு பதிப்பு
அன்றி நீ எல்லாவிதமான கனி(களின் மலர்)களிலிருந்தும் அருந்தி உமதிறைவனின்............
12. குர்ஆன் மஜீத் (பா.தாவூத் ஷா ஸாஹிப், என்.பி.அப்துல் ஜப்பார் ஸாஹிப்)
1966 ஆம் ஆண்டு பதிப்பு.
பிறகு சகலவகைக் கனிகளி(ன் பூக்களி)லிருந்தும் அருந்தி................
13. சங்கைமிக்க குர்ஆன் மற்றும் தமிழ்மொழியில் அதன் கருத்துக்களின் மொழி
பெயர்ப்பு (முஹம்மது இக்பால் மதனீ – சௌதி அரேபியப் பதிப்பு)
பின்னர், நீ எல்லா விதமான கனி(யின் மலர்)களிலிருந்தும் உணவருந்தி...............
14. தஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் (வேலூர், ஜாமியா அல்பாகியாத்துஸ்
ஸாலிஹாத் - அரபிக்கல்லூரி) – பாகம் 8, ஜூலை 2010ஆம் ஆண்டுபதிப்பு.
அதன் பிறகு, எல்லா வகையான கனிகளி(ன் பூக்களி)லிருந்தும் நீ அருந்தி.................
15. குர்ஆன் மஜீத் – முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு, 1/1983 ஆண்டு பதிப்பு
பின் நீ எல்லாவிதமான கனிக(ளின் மலர்க)ளிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன்..........
மேலே எடுத்துக்காட்டிய வரிசை எண் 11 முதல் 15 வரையில் உள்ள மொழிபெயர்ப்பு செய்த அறிஞர்கள், அடைப்புக் குறி (பிராக்கெட்) போட்டு அதனுள், மலர்கள் என்றும், பூக்கள் என்றும் இட்டு நிரப்பி ஓரளவு அல்லாஹ்வை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயினும் பிராக்கெட் குறியை எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது என்பது புரியாமல் குழம்பிப்போன வேறு சில அறிஞர்கள் தொடங்கிய அடைப்புக்குறியை முடிக்காமலும், அல்லது எங்கோ தொடங்கி எங்கோ முடித்தும் தங்களின் மேதாவிலாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டார்கள். இதனை வரிசை எண் 16, 17 களில் காணலாம்.
16. குர்ஆன் மஜீத் – முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு, 1990,1993ஆம் ஆண்டு
பதிப்புகள்
பின் நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன்..........
(அடைப்புக்குறி முடிவு பெறவில்லை)
17. குர்ஆன் மஜீத் – முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு, 2010ஆம் ஆண்டு பதிப்பு
பின் நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் காட்டித்தரும்) எளிதான வழிகளில்..........................
(நீண்டுவிட்ட அடைப்புக்குறியும் தொடர்பற்ற வாக்கிய அமைப்பும் கொண்டுள்ளது)
இதில் வேடிக்கை என்னவென்றால், முதல் பதிப்பில் (வரிசை எண் 15 -1983) அல்லாஹ்வைக காப்பாற்ற, சரியாக பிராக்கெட் போட்ட ஹாஜி ஜான் டிரஸ்ட் குர்ஆன் பதிப்புக் குழுவினரே பின்னர் வெளியிட்ட பதிப்புகளில் (வரிசை எண் 16, 17 – 1990, 1993, 2010) இவ்வாறு குழம்பிப்போனதை நாம் காணமுடிகிறது. இப்படி குழம்பிப்போனவர்கள் தானா, குர்ஆனை உள்ளது உள்ளபடி நமக்கு விளங்கவைக்கப் போகிறார்கள்?
18. தர்ஜமா அல்குர்ஆனில் கரீம் (ஏ. முஹம்மது சிராஜுத்தீன் நூரி)
1/2002, 2/2002, 8/2006 ஆம் ஆண்டின் பதிப்புகள்
பின்னர் நீ, எல்லாக் கனி (மலர்) வகைகளிலிருந்தும் உணவருந்தி...............
19. குர்ஆன் தர்ஜமா (எம்.அப்துல் வஹ்ஹாப், கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி,
ஆர்.கே.அப்துல் காதிர் பாகவி)
ஜனவரி2000, மே2002, செப்டம்பர்2002, செப்டம்பர்2004, ஜூன்2007,
ஜூலை2011 ஆம் ஆண்டின் பதிப்புகள்
பிறகு எல்லாக் கனி (மலர்) வகைகளிலிருந்தும் நீ உணவருந்தி..................
20. திருமறையின் தேன்மலர்கள் (திருக்குர்ஆன் வெண்பா) – வே.ப.பாபுல் –
2007ஆம் ஆண்டு பதிப்பு
வண்ணக் கனி மலரில் வாய்வைத்துறிஞ்சித் தேன்
உண்டு களித்திறைவன்...............
21. திருக்குர்ஆன் – மூலம் – தமிழுரை (எம்.எம்.அப்துல் காதிர் உமரி) – டிசம்பர்2011
பின்னர், ஒவ்வொரு கனிகளிலிருந்தும்(மலர்களிலிருந்தும்) உணவருந்தி.................
அடுத்து வரும் மொழிபெயர்ப்புகள் இன்னும் வித்தியாசமாக அமைந்துள்ளதைக் காண்கிறோம். வரிசை எண் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று பதிப்புகளிலும் ........எல்லாக்கனி (மலர்)வகைகளிலிருந்து...........என்றும், கனிமலரில் என்றும் கூறப் பட்டுள்ளது. கனி (மலர்) என்ற சொற்றொடருக்கு, கனியைத் தரும் மலர் அல்லதுகனியின் மலர் என்றும், கனி மற்றும் மலர் என்றும் இரண்டு விதமாகப் பொருள்கொள்ள முடியும்.உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகக் கருதி, கனியின் மலர் - கனியைத் தரும் மலர் என்று –பொருள் கொண்டால், இது முன்னர் குறிப்பிட்ட வரிசை எண் 11முதல் 17வரையில் உள்ள பதிப்புகளுடன் இணைந்து கொள்ளும். இது முதல் பத்து வரிசை எண்களில் கொடுக்கப்பட்ட குர்ஆன் வசனத்துக்கு – கனிகளிலிருந்துதான் தேன் சேகரிக்கப்படுகிறது என்பதற்கு எதிரடியான உண்மையை, அதாவது, மலரிலிருந்துதான் தேன் சேகரிக்கப்படுகிறது என்ற உண்மையை - பிராக்கெட் போட்டதன் மூலம், குர்ஆனிய அறிஞர்கள் ஒத்துக் கொண்டவர்கள் ஆகிறார்கள். அதே சமயத்தில்,கனியைத் தரும் மலர் - கனியின் மலர் - என்று கூறுவதன் மூலம், மல்லிகை, முல்லை, ரோஜா முதலிய கனி கொடுக்காத மலர்களிலிருந்தும், தேனீக்கள் தேனை சேகரிக்கின்றன என்ற அறிவியல் உண்மையை அவர்கள் நிராகரித்தவர்கள் ஆகிறார்கள். இதனால், இயற்கை அறிவியலுக்கு எதிரானவர்களாக, இவர்கள் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு விடுகிறார்கள்.
இல்லை, கனி மற்றும் மலர் என்று எண்ணிக்கை யாகக் கருதி பொருள் கொண்டால். இந்த மொழிபெயர்ப்பு வரிசை எண் 21-ஐ ஒத்ததாக ஆகிவிடும். அதாவது, கனிகளிலிருந்தும் மலர்களிலிருந்தும் (இரண்டு வெவ்வேறு மூலத்திலிருந்து) தேன் சேகரிக்கப்படுவதாக கூறி இயற்கை அறிவியலிலிருந்து (மலரிலிருந்துதான் தேன் சேகரிக்கப்படுகிறது என்ற கோட்பாட்டிலிருந்து) முரண்பட்டு விடுகிறார்கள்.
இது, இயற்கை அறிவியலுக்கும் ஜால்ரா அடிக்க வேண்டும்; அதே சமயத்தில் குர்ஆனுக்கும் எதிரியாகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு மிகுந்து சர்க்கஸ் காட்டுவதாக அமைகிறது. பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டும் விலாங்கு மீனை ஒத்த இரட்டை நிலையாகும் இது. இதிலிருந்தே குர்ஆனின் குழப்ப நிலை தெளிவுபட்டு விடுகிறது.
மேலும், இந்த வசனங்களில், கனிகளை (பழங்களை) மட்டும் குர்ஆன் குறிப்பிடுவது ஏன் என்ற வினா நமது மனதில் எழாமல் இல்லை. பழங்கள் இனிப்பானவை; தேனும் இனிப்புள்ளது;ஆகவே, பழச்சாற்றிலிருந்துதான் தேனீக்கள் தேனை சேகரிப்பதாக அக்காலத்திய அரபுமக்கள் கருதியிருக்கலாம். மேலும் அரபுநாட்டில் அதிகம் விளைவதும், அம்மக்களின் முக்கிய உணவுப்பொருட்களில் ஒன்றாக அமைந்துள்ளதுமான பேரீச்சம்பழத்தின் நிறமும் தேனின் நிறமும் பெரும்பாலும் ஒத்திருப்பதாலும், பழங்களிலிருந்தே தேனீக்கள் தேனை சேகரிக்கின்றன என்ற கருத்து அக்காலத்திய மக்களுக்கு பொருத்தமானதாகப்பட்டிருக்கலாம். அக்கருத்தையே குர்ஆனில் அல்லாஹ்வும் வஹி மூலம் நபிக்கு அறிவித்துவிட்டார். பாவம் அல்லாஹ்!பின்வரும் காலத்தில், தேன் சேகரிப்பைப் பற்றிய அறிவியல் அறிவு இந்தளவுக்கு வளரும் என்றோ, குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்களும், விரிவுரையாளர்களும் நம்மிடம் மாட்டிக்கொண்டு முழிபிதுங்கத் திண்டாடுவார்கள் என்றோ, அவர் - அல்லாஹ் - முன்கூட்டியே அறிந்திருக்க வில்லை என்பதையே இது காட்டுகிறது.
இன்னும் சில அறிவாளிகள் (?) இவர்களுக்கு துளியும் அறிவு நாணயம் இல்லை என்பது, இவர்தம் தமிழாக்கங்களிலிருந்தே நாம் அறிந்துகொள்ளலாம். இவர்கள் இந்த 16:69 வசனத்திற்கு நேரடியாகவேபூக்கள், புஷ்பங்கள் எனறெல்லாம் மொழிபெயர்த்து தங்களின் அரபு மொழியறிவை வெளிச்சம்போட்டுக்காட்டிக்கொள்கிறார்கள். வரிசை எண்:22 மற்றும் 23 ஆகியவற்றைப் பாருங்கள். அரபு மூலத்தில் இல்லாத சொற்களை இட்டுநிரப்புவது என்பது, அல்லாஹ்வுக்கே அரபு மொழி கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதுதானே உண்மை!
22. தர்ஜுமதுல் குர்ஆன் – பி – அல்தபில் பயான் (அ.கா.அப்துல் ஹமீது பாகவி)
செப்டம்பர் 2004, ஆகஸ்ட் 2007 ஆம் ஆண்டு பதிப்புகள்
அன்றி நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்துஉமதிறைவன் உனக்கு அறிவித்த............
23. திருக்குர்ஆன் தமிழுரை – முதல் பாகம் (வி.எம்.ஏ. பாட்சாஜான்) – 1955ஆம்
ஆண்டு பதிப்பு
பின்னர் நீ சகல பூக்களிலிருந்தும் புசித்து.....................
இதில் இன்னுமொரு வேடிக்கையும் உண்டு. முதன்முதலாக குர்ஆன் முழுவதற்குமான தமிழாக்கத்தை வெளியிட்டவர் திருவாளர்.அ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களாவார். 1926இல் தொடங்கப்பட்ட இம்மொழிபெயர்ப்பு பணி 1949இல் முழுமைபெற்றுதர்ஜுமதுல் குர்ஆன் -பி- அல்தபில் பயான் என்ற பெயரில் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டது. பின்னர் ஒன்றிரண்டு மறுபதிப்புகளும் வெளிவந்தன. 1955இல் திருவாளர்.அ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்கள் மறைவெய்தினார்கள். அதற்கு பின்னர் அவரின் வாரிசுகளால் வெளியிடப்பட்ட பதிப்புகள் சிறிதுசிறிதாக திருத்தப்பட்டு திருவாளர்.அ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்கள் பெயரிலேயே வெளிவருகின்றன. இவ்வாறு திருத்தியவர்கள், அத்திருத்தங்களுக்கான காரணங்கள் பற்றிய அடிக்குறிப்புகளைக்கூட வெளியிடுவதில்லை. இதனால் அ.கா.அ. பாகவியின் மறைவுக்குப் பின்னர் வெளிவந்த பதிப்புகளில் உள்ள திருத்தங்கள் யாவும் அவரே செய்தது போன்ற ஒரு மாயையை படிப்பவர்களின் உள்ளத்தில் ஏற்படுத்திவிடுகிறது என்பதே உண்மை. இது ஒரு அறிவு மோசடியல்லாமல் வேறென்ன?
1962இல் லால்பேட்டை மார்க்கத் தீர்ப்பு மையத்திலிருந்து மௌலானா அமானி ஹளரத்அவர்கள், திருக்குர்ஆன் மூலமில்லா மொழிபெயர்ப்பு கூடுமா? என்ற மார்க்கத் தீர்ப்பில், அ.கா.அ. பாகவியின் முன்பதிப்பிலுள்ள பல வரிகள், பின்னர் வெளிவந்த பதிப்புகளில் திருத்தப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டி கண்டித்துள்ளார் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். கீழே எடுத்துக்காட்டியுள்ள வசனம் அ.கா.அ. பாகவியின் இரு வெவ்வேறு பதிப்புகளில் உள்ளதாகும்.
1961 ஆம் ஆண்டு பதிப்பில் (வரிசை எண்:11),
அன்றி நீ எல்லாவிதமான கனி(களின் மலர்)களிலிருந்தும் அருந்தி உமதிறைவனின்............
என்று உள்ள சொற்றொடரை,
2004 மற்றும் 2007ஆம் ஆண்டு பதிப்புகளில் (வரிசை எண்:22)
அன்றி நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து உமதிறைவன் உனக்கு அறிவித்த............
என்று உள்ள சொற்றொடருடன் ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களுக்கே இந்த தில்லுமுல்லு தெளிவாக விளங்கிவிடும்.
தொடக்கத்தில் எடுத்துக்காட்டியுள்ள மொழிபெயர்ப்புகளில் ஒரேயொருவர் மட்டும் இன்னும் ஒருபடி மேலே சென்றார். அவர் கம்பம், பி.எம்.பீர்முஹம்மது பாகவி அவர்கள். இவர் இவ்வசனத்தை, பழங்களிலுள்ள பூச்சிகளிலிருந்தேதேனீக்கள் தேனை உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றனஎன்ற கருத்தமைய தமிழாக்கம் செய்துள்ளதையும் உங்கள் முன் சமர்பிக்கிறோம்.
24. திருக்குர்ஆன் தெளிவுரை, பாகம் 1 (கம்பம், பி.எம்.பீர்முஹம்மது பாகவி)
1/ஜூலை 2010.
பின்னர் அனைத்து வகையான பழங்களின்(பல்வகையான பூச்சிகளி)லிருந்து உனக்குரியஉணவை உறிஞ்சி எடுத்து உண்டு (தேக்கி வைத்துக்)கொள்.......................
இம்மொழியாக்கத்தில், தேனை சேகரிப்பது, இயற்கை அறிவியலான பூக்களிலிருந்து என்பதும் இல்லை; குர்ஆன் அறிவியலான கனிகளிலிருந்துஎன்பதும் இல்லை; இரண்டுமற்ற ஒரு புதிய தகவல்,கனிகளிலுள்ள பூச்சிகளிலிருந்து எனற தகவல் இங்கு தரப்படுகிறது. இதுதான் குர்ஆனின் அறிவியல்? குர்ஆனிய அறிஞர்களின் பொது அறிவு?
இவ்வாறெல்லாம் இவர்கள் குழப்ப அல்லது குழம்பக் காரணம் என்ன? தேன் பெரும்பாலும் மலர்களிலிருந்தே சேகரிக்கப்படுகிறது என்பது, இவர்கள் அனைவருக்குமே தெரியும். இதனை இங்கு நிரூபிக்க ஒரேயொரு எடுத்துக்காட்டை மட்டும் பார்த்தாலே போதும்.
மவ்லானா. கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி (1941-2012) அவர்கள் ஷைகுத் தப்ஸீர் என்று பாராட்டப்பட்டவர். தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று தமது இறுதிகாலம் வரையில் பணியாற்றியவர். திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். (மற்ற மொழிபெயர்ப்பாளர்கள்: எம்.அப்துல் வஹ்ஹாப், ஆர்.கே.அப்துல் காதிர் பாகவி; பார்க்க:வரிசை எண் 19, குர்ஆன் தர்ஜமா) முன்னர் பல பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட இவர்களின் இந்த மொழிபெயர்ப்பு, பின்னர் கோயம்புத்தூர் திருக்குர்ஆன் அறக்கட்டளை வெளியீடாக 12 பதிப்புகளுக்கும்மேல் வெளியிடப்பட்டு, விரும்பும் மக்களுக்கு இலவசமாவே அனுப்பப்பட்டு வருகிறது. மவ்லானா. கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி அவர்கள் தமது வாழ்நாளில் செய்த மார்க்கச் சொறபொழிவின் காலஅளவு ஏறத்தாழ10,000 மணிநேரம் என்று திரு.பி.எம்.கலிலுர் ரஹ்மான் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அப்படிப்பட்ட சிறந்த மார்க்க அறிஞர், மவ்லானா.ஷைகுத் தப்ஸீர் அவர்களின் ஒரு தயாரிப்பு,புரசைவாக்கம் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றுவரும் திருக்குர்ஆன் விரிவுரை 500வது வாரவிழா –பல்சுவை மலராகும். அம்மலரில் பக்கம் 35இல் வெளியிடப்பட்ட தேனும் தேனீயும் என்ற கட்டுரையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். அக்கட்டுரையிலிருந்து ஒரு பகுதி வருமாறு: (பக்கம் :38)
ஒரு தேனீ 500கிராம்(½ கிலோ) தேனைத் தயாரிப்பதற்கு சுமார் 75,000 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து செல்கிறது. ஒரு கிலோ தேன் சுமார் 50,000 மலர்களிலிருந்து சேகரிக்கப் படுகிறது. சில சமயங்களில் ஒரு தேக்கரண்டி தேனை 2,000 மலர்களிலிருந்து எடுத்துவர வேண்டிய கடின உழைப்பும் தேனீக்களுக்கு ஏற்படுகிறது.
இந்த வரிகளின் மூலம் நாம் அறிவது என்ன?குர்ஆனில் கூறப்பட்டதை ஒப்பி, பழங்களிலிருந்தே தேனீக்கள் தேனை சேகரிக்கின்றன என்று திருவாளர் கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி அவர்கள் மறந்தும் கூறிவிடவில்லையே என்ன காரணம்?குர்ஆன் விரிவுரையாளராக இருந்தும் இயற்கை அறிவியலுக்கு மாற்றமாக இவர்களால் எந்த செய்தியும் கூறமுடியவில்லை என்பதே உண்மை. அதனால்தான் குர்ஆனின் இந்த ஆயத்தின் மொழிபெயர்ப்புகள், எப்படியெப்படியெல்லாம் உருட்டி– புரட்டி – செதுக்கி – சேர்த்து அல்லாஹ்வைக் காப்பாற்ற இவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது.
அடுத்ததாக, பழக்கடைகளில், குறிப்பாக திராட்சைப்பழக்குலைகளில், ஒன்றிரண்டு தேனீக்கள் மொய்ப்பதை, நாம் பல சமயங்களில் பார்த்திருக்கலாம். அதேபோல கரும்புச்சாறு கடைகளிலும் சிலதேனீக்களை நாம் பார்க்கலாம். அவ்வளவு ஏன்? கள்ளிறக்கும் கலயங்களில் கூட, கள்ளுண்ண முயற்சித்த தேனீக்கள் சில, அதிலேயே வீழ்ந்து இறந்து கிடப்பதையும் நாம் பார்க்கமுடியும். இதனாலெல்லாம், திராட்சை பழச்சாறு, கரும்புச்சாறு, கள் ஆகியவையே தேனீக்களால் உறிஞ்சப்பட்டு தேனாகின்றன என்று முடிவுசெய்துவிட முடியாது. இவைகளெல்லாம் சில விதிவிலக்குகள்;அவ்வளவே!
தென்னிந்திய மக்கள் அரிசி சோறு உண்பவர்கள் என்பது பொதுவான உண்மை. சிலர் கோதுமை உண்ணலாம்; சிலர் கம்பு – கேழ்வரகு முதலிய புன்செய் தானியங்களை உண்ணலாம்; எனினும் பெருவாரியான மக்களின் உணவே இங்கு பேசப்படும் உண்மையாகும். அதுபோலத்தான் தேனும் மலர்களிலிருந்து எடுக்கப்படுவது என்ற பெருவாரியான உண்மை இங்கு பேசப்படுகிறது. அதனை மாற்றி, விதிவிலக்குகளை யெல்லாம் பொதுவான உண்மைகளாக ஏற்க இயலாது. அது திருமறைகளில் இறைவன் பெயரால் சொல்லப்பட்டு இருந்தாலும் கூட!
இங்கு மற்றுமொரு கற்பனை விளக்கத்தையும் காண்போம். தன்னை இறைதூதர் என்று அறிவித்துக்கொண்ட ஒருவர், கீழ்கண்ட ஒரு வசனத்தை வேதவாக்கியமாக அறிவிப்பதாகக் கொள்வோம்.
இறைவன் மலைகளைப் படைத்தான். மலைகளிலிருந்து பாறைகளையும், பாறைகளிலிருந்து கற்களையும், கற்களிலிருந்து மண்ணையும் உண்டாக்கினான். மண் சுவையுள்ளதாகவும், மனிதன் முதற்கொண்டு உயிரினங்கள் அனைத்தும் உண்ணும் உணவாகவும் ஆயிற்று. இதில் சிந்திக்கும் மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சி உள்ளது.
மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் நீ கூடுகளை அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனி வர்கத்திலும் சாப்பிடு! உன் இறைவனின் பாதையில் எளிதாகச் செல் என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயறுகளிலிருந்த மாறபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.(அல்குர்ஆன் 16:68,69)
(சிந்திக்கிற சமுதாயத்துக்கு இதில் என்ன சான்று இருக்கிறது என்றும் பார்ப்போம்)
நம் மக்கள் தமிழில் மொழிபெயர்க்கும் போது அல்லாஹ்வுக்கே பிராக்கெட்டெல்லாம் போட்டு இதைத்தான் அல்லாஹ் சொல்லியிருக்கிறான் என்று அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையெல்லாம் அறிந்து விளையாடிவிடுவார்கள். கனிகள் என்பது மலர்கள் ஆகிவிடும். ”உள்ளுணர்வை அளித்தான்” என்பதெல்லாம் ஒரு உட்டாலக்கடி. ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்கள் revealedஅதாவது தன் இறைதூதர்களுக்கு செய்திகளை கொடுப்பதற்கும் revealed தான். ஆகையால், இந்த தேனிக்களுக்கும் வஹிவஹியாக கொடுத்து இந்த ரூல்களை இறக்கியிருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும். (வஹி வந்தாலே ஜிகாத் தானோ என்னமோ? பக்கத்தில போனா குத்தி கொதறி புடுதுங்கள்)
ஆகையால் ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுத்திருக்கிறேன்.
Your Lord revealed to the bees: “Build dwellings in the mountains and the trees, and also in the structures which men erect. Then eat from every kind of fruit and travel the paths of your Lord, which have been made easy for you to follow.” From inside them comes a drink of varying colours, containing healing for mankind. There is certainly a Sign in that for people who reflect. (Qur’an, 16:68-69)
”மலை, மரம் மற்றும் மனிதன் உருவாக்கும் கட்டடங்களில் கூடுகளை கட்டு” என்று ஒரு ரூல்.
“ஒவ்வொரு வகை கனியையும் புசித்து அல்லாஹ் சொல்லும் எளிதான பாதையில் செல்” இது இன்னொரு ரூல்.
முதல் ரூலை ஒன்னும் பண்ணமுடியாது. கூடுகளை கட்டினால், மலையில் கட்ட வேண்டும். இல்லையேல் மரத்தில் கட்டவேண்டும். இல்லையேல் மனிதன் கட்டிய கட்டடங்களில் கட்ட வேண்டும்.
http://www.harunyahya.com/miracles_of_the_quran_p1_08.php#9 என்ற ஹாரூன் யாஹ்யா தளத்தில்அந்த தேனீக்கள் பெண் தேனீக்கள் என்பதை இந்த அரபிய வசனம் குறிக்கிறது என்று கண்டபடி புல்லரிக்கிறார். நாமும் நன்றாக அரித்துகொள்வோம். இதோ இங்கே ஒருத்தர் கண்டபடி அரிக்கிறார். ( ஆனால், இந்த விஷயத்தை அரிஸ்டாட்டில் ஏற்கெனவே சொல்லிவிட்டார் என்பதை நாம் காபிர்களிடம் சொல்லிவிடக்கூடாது. இந்த லிங்கை ரகசியமாக வைத்துகொள்ளவும்.http://www.beeclass.com/DTS/aristotle_on_bees.htm )
மொத ரூலாவது ஓரளவுக்கு பரவாயில்லை. செடிகொடியில் கட்டினால்கூட, அல்லாவின் பார்வையில் இந்த செடி ஒரு மரம்தான் என்று ஒரேயடியாக சாதித்துவிடலாம்
ஆனால் இரண்டாவது ரூலைத்தான் சுத்தமாக கேட்பதே இல்லை இந்த தேனீக்கள். கனிகளிலிருந்து சாப்பிடு என்று அல்லாஹ் கட்டளையிட்டான். இதுவரை கனிகளிலிருந்து சாப்பிடும் ஒரு தேனீ கூட இல்லை. என்ன காபிர்தனம் பாருங்கள். அல்லாஹ் வேலைமினக்கெட்டு ரெண்டே ரெண்டு ரூல்ஸ் போடறான். அதில ஒரு ரூலை சுத்தமா கேட்பதே இல்லை இந்த தேனீக்கள். எப்போதுமே மலர்களில் உள்ள இனிப்பையும் மகரந்தத்தையுமே இந்த தேனீக்கள் சாப்பிடுகின்றன. அந்த இனிப்பைத்தான் தேனாக மாற்றி சேமிக்கின்றன. கனியை சாப்பிடு என்று அல்லாஹ் கட்டளையிட்டும் கனியை தொட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் இந்த தேனீக்களை காபிர் தேனிக்கள் என்று அழைக்காமல் எப்படி அழைப்பது?
(தேனீக்கள் கனிகளை சாப்பிடுவதில்லை. மலர்களிடம் உள்ள மகரந்தத்தையும் தேனையும்தான் சாப்பிடுகின்றன என்பதை வைத்து நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் அல்லாஹ் ஒன்றும் சொல்லவில்லை. எல்லாம் நபிஹள் நாயகம் அவர்களாக விடும் டுபாக்கூர் என்று காபிர்கள் சொல்லுகிறார்கள்.
wasp என்ற குளவியும் தேனீ மாதிரியே இருக்கும். அவற்றை பலர் தேனீ என்று நினைத்து ஏமாந்துவிடுகிறார்கள். ஆனால், குளவி பழத்தை சாப்பிடும். பூவில் இருக்கும் தேனையும் சாப்பிடும். ஆனால், கூடு கட்டி தேனை சேமிக்காது. குளவியை தேனீ என்று நினைத்து நமது அல்லாஹ் தப்பு தப்பாக எறக்கிவிட்டார் என்றும் காஃபிர்கள் சொல்லுவார்கள். ஆனால், மனிதர்களை போலவே தேனீக்களிலும் காபிர்கள் இருக்கலாம் என்பதை ஏனோ அவர்கள் கவனிப்பதில்லை. அல்லாஹ் தேனீக்களுக்குத்தான் ரூல்ஸ் போட்டார். அவை கேக்கலை. ஆகையால் அவை காபிர் தேனீக்கள்தான். எப்படி நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவசல்லத்தை தப்பிக்க வைச்சிட்டேன் பாத்தீயளா? இல்லன்னா ஒரு தேனீயை புடிச்சி அத ஒரு பழத்தை சாப்பிட வைச்சி அல்குரானை அல்லாஹ் எறக்கியது என்றும் நிரூபிக்கலாம். நமது இஸ்லாமிய அறிவியல்காரர்களால் முடியாதது எதுவுமில்லை. அல்லாஹ்வால் முடியாதது கூட நமது இஸ்லாமிய அறிவியல்காரர்களால் சாத்தியப்பட்டுவிடும்.)
இப்படித்தான் ஒரு மூமின் குளவி படத்தை போட்டு தேனீ என்று சொல்வதா? இதுவா மார்க்கத்தை பரப்பும் வழிமுறை?
ஒரு திராட்சை மீது ஒரு தேனி போட்டிருப்பதாக போட்டாஷாப் படத்தையாவது போட்டு நமது மார்க்கத்தை பரப்பவேண்டாமா?
கழுத்துக்கு பின்னால் கம்பளி ஜாக்கெட் போடாமல் கருப்பு தெரிவதை பாருங்கள்.
இது தேனீ,
கம்பளி ஜாக்கெட் போட்டிருப்பதை பாருங்கள்
ஆகவே இந்த தேனீக்கள் அனைத்தும் அல்லாஹ்வின் வழியிலிருந்து விலகி காபிர்களாகிவிட்டன என்றுதான் குரான் ஒளியில் தெரிகிறது.
மேலும் ஆதாரத்துக்கு இந்த படத்தை பாருங்கள். ஒரு பர்தா போடாத அந்நிய பெண்ணோடு ஒரு தேனி பேசிக்கொண்டிருக்கிறது. இதுவே இந்த தேனீக்கள் எல்லாம் காபிர்கள் என்பதற்கு ஆதாரமாக இல்லையா?
ஆகவே நமது இஸ்லாமிய போராளிகள் ஒருவேளை இந்த காபிர் தேனீக்கள் மீதும் ஜிகாத் தொடுத்து வருகிறார்களோ என்ற சந்தேகமும் வருகிறது. சமீபகாலமாக பல தேனீ கூட்டங்களின் காலனிகள் அழிந்து வருகின்றன. இதனால் எதிர்கால தாவரஙகளின் உற்பத்தியே தடை பட்டுவிடுமோ என்று விஞ்ஞானிகள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். இதனால், மனிதர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக ஆகிவருகிறது என்றும் அஞ்சுகிறார்கள்.
ஆனால் நாம் நன்றாக சாப்பிட்டு நன்றாக இருப்பது முக்கியமா? அல்லது அல்லாஹ்வின் சொல் பேச்சை கேட்காத காபிர் தேனீக்கூட்டம் அழிக்கப்படுவது முக்கியமா என்று சிந்திக்க வேண்டும்.
1400 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் ஒரு வேளை அல்லாஹ்வுக்கு நாம் சொன்ன பேச்சை இந்த தேனீக்கள் கேட்கவில்லை என்று தெரியவந்திருக்கலாம். அதனால் அல்லாஹ் இந்த தேனீக்களை அழிக்கவும் முடிவு செய்திருக்கலாம்.
என்ன லாம் ?
நமக்குத்தான் அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கை எல்லாம் அத்துப்படி ஆயிற்றே. ஒரே போடா போடுவோம். அல்லாஹ் இந்த தேனீக்களை அழிக்க முடிவு செய்துவிட்டான். டான் டான்.
உண்மையை அறியும் நோக்குடன் அல்லாஹ்வுடைய திருவேதத்தை ஒருவர் நாடுவாரேயானால் அங்கு நிச்சயமாக நிறைய சான்றுகளையும் அவனுடைய வல்லமையையும் அவர் காண்பார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. எவருடைய இதயத்தில் நோய் உள்ளதோ அவர்களோ இது பொய்யே தவிர வேறு இல்லை. இதை இவரே இட்டுக் கட்டிக் கொண்டார். மற்ற சமுதாயத்தினரும் இதற்காக இவருக்கு உதவினார்கள் என்று மறுப்போர் கூறுகின்றனர். அவர்கள் அநியாயத்தையும் பாவத்தையுமே கொண்டு வந்துள்ளார்கள். (அல்குர்ஆன் 25:04)
யா அல்லாஹ்
இன்ஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
—
பின்குறிப்பு
நம்ம ஆஷிக் போட்ட படத்தை விட உருப்படியான படத்தை போட்டு நம்ம தவ்ஹீத் அண்ணன் சான் அண்ணாச்சிகளுடன் தேனீ பத்தி பேசும்போது போட்டிருக்கிறார்
கூகுளில் honey bee on fruit என்று போட்டால் வரக்கூடிய முதல் படத்தை போட்டிருக்கிறார்
அந்த படம் இதுதான்
சேச்சே இது இல்லை. இது ஒருவேளை நம்ம காககககே கண்டுபிடித்த அல்லாஹ் அல்குரானில் தேனீக்கள் தரையில் ஊற்றிய ஜூஸை குடித்து வாழச் சொல்லியிருந்தால் போட்டிருக்க வேண்டிய படம்.
சேச்சே இதுவுமில்லை.. மரத்திலிருந்து ஒழுகும் tree sapஐ குடித்து வாழச்சொல்லியிருந்தால் போட்டிருக்க வேண்டிய படம்.
ஓக்கே இதுதான்
இந்த படத்திலுள்ள தேனீ மட்டுமே மூமின் தேனீ.
ஸா பால்மிட்டோ என்ற மரத்தின் பூக்களிலிருந்து தேனை எடுத்துகொண்டு அப்படியே அதன் பழங்களில் உட்கார்ந்திருக்கும்போது படேலென்று அமுக்கிய போட்டோ.. அப்பாடா ஒருவழியா மூமின் தேனீயை கண்டுபிடித்தாயிற்று.
தேனீக்களிடம் மலத்தை சாப்பிடு என்று என்று அல்லாஹ் சொல்லியிருந்தால், மலத்தில் உட்கார்ந்திருக்கும் தேனீயையும் போட்டு அதனை நிரூபிப்பீர்களா என்று காபிர்கள் கேட்கலாம்.
பொதுவா தேனீ என்ன சாப்பிடுமோ அதனைத்தானே சொல்லணும். டீ குடிக்கிற தேனீ, காபி குடிக்கிற தேனீ என்று எத வேணாலும் சொல்லுவீங்களா.. அல்லாஹ்தேனீக்கள் கிட்ட பழத்தைதானே சாப்பிடச்சொன்னார்? அப்ப பழம்தானே அதோட முதல் உணவா இருக்கணும்? அப்புறம் ஏன் அது பழத்தை முதல் உணவா வச்சிக்காம, பூவோட தேனை முதல் உணவ வச்சிக்குது என்று காபிர்கள் கேட்கலாம்.
அதற்காகத்தான் நான் அப்போதே சொன்னேன். இவையெல்லாம் காபிர் தேனீக்கள். பழம் சாப்பிடும் தேனீ மட்டுமே சரியான மூமின் தேனீ. இப்ப அல்லாஹ் அல்குரான்ல் காபிரை கண்ட எடத்திலெல்லாம் கழுத்தை வெட்டுன்னு சொல்லியிருக்கார். எல்லா முஸ்லீம்களும் கேக்கறாங்களா? இல்லையே. ஏதோ ஒரு சில முஸ்லீம்கள் மட்டுந்தேன் கேக்கறாங்க. அதனால அவங்க மட்டும் தான் மூமின். காபிரை பாக்கிற எடத்திலெல்லாம் கழுத்டை வெட்டாத மத்த முஸ்லீமெல்லாம் பெயர்தாங்கி முஸ்லீம்னு சொல்றோம்ல? அது மாதிரி பழத்தை சாப்பிடுற இந்த தேனீ மட்டும்ந்தான் மூமின் தேனீ. மத்ததெல்லாம் காபிர் தேனீ. ஆனால் இந்த மூமின் தேனீயும் பூவில இருக்கிற தேனை குடிச்சிதின்னா அப்ப காபிர் தேனீயா ஆயிடும்.
சரியா…
ஆகவே வளைகுடாவில் தண்ணீர் தொட்டி கழுவி அரபுகளிடமிருந்து காசு வாங்கி வீட்டுக்கு அனுப்புவதை விட முக்கியமாக, இந்த காபிர் தேனீக்களை அழிக்க வேண்டியது முக்கியம் என்பதை வளைகுடா அன்பர்கள் உணர்ந்திருப்பார்கள்.
ஆகவே தேனீ தவ்ஹீத் ஜமாத் என்ற ஒன்றை ஆரம்பித்து இந்த காபிர் தேனீக்களின் கழுத்தை கண்ட இடத்திலெல்லாம் வெட்ட மனமுவந்து நன்கொடை அளித்து காககககே கண்டுபிடித்து சொன்ன அல்லாஹ்வின் அருளை பெற அழைக்கிறோம்.