முகமது குடித்த தேன் எது?






நம்ம அல்லாஹ் நமக்கு, தேனீ, தேன் பற்றி தனது கண்மணி தூதர்மூலம் உலகுக்கு அறிவித்த இந்த இரு வசனங்கள் வெகு முக்கியம்...

16:68. உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள்.

16:69. “பின், நீ எல்லாவிதமான கனிகளிலிருந்தும் உணவருந்தி உன் இறைவனின் எளிதான வழிகளில் ஒடுங்கிச் செல்” . அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம்  வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

இனி காபிர்களின் தேன் பற்றிய அறிவை வெகு சுருக்கமாக காண்போம்... பின்பு க.கா.கே தேன் குடிச்ச கதைக்கு போவோம்...

தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன.

இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை.

தேனீக்களில் மொத்தம் மூன்று பிரிவு உண்டு. ராணி தேனீ (ஒரு சில), ராணி தேனீக்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டு இனப்பெருக்கம் செய்வதற்காக மட்டுமே (பேருக்கு மட்டும்) ராஜா தேனீ (சில நூறு), அப்புறம் வேலைக்காரத் தேனீக்கள் (பல ஆயிரம்). இதில், ராணி தேனீதான் சர்வ வல்லமை பொருந்தியது தேனீ குடும்பத்தில்! அப்படின்னா, ராணி தேனீ வச்சதுதான் சட்டம் தேனீக்கள் சமுதாயத்துல. இது உங்கள்ல பல பேருக்குத் தெரிஞ்சிருக்கும். இல்லீங்களா?

ஆனா, நம்மில் பல பேருக்குத் தெரியாத ஒரு வினோத பழக்கம் உண்டாம் தேனீக்கள் சமுதாயத்தில். அதாவது, பொதுவா ஒரே ஒரு ராணி தேனீ மட்டும்தான் இருக்குமாம் ஒரு தேனீ குடும்பத்துல. ஆனா, சில சமயங்கள்ல ஒன்றுக்கு மேற்பட்ட ராணி தேனீக்களும் உருவாகிவிடுமாம். இதுபோன்ற சமயங்களில், எந்த ஒரு ராணிக்கு அதிக சந்ததியை உருவாக்கி, பாதுகாக்குகிற திறமை(!) இருக்குதோ, அந்த ராணி தேனீயை மட்டும் விட்டுட்டு, அந்தத் திறமை குறைந்த மத்த எல்லா ராணி தேனீக்களையும் தயவு தாட்சன்யம் இல்லாம் கொன்னுடுமாம் வேலைக்காரத் தேனீக்கள்.

திறமையுள்ள குறிப்பிட்ட அந்த ஒரு ராணி தேனீயை மட்டும் வேலைக்காரத் தேனீக்கள் எப்படிக் கண்டுபிடிக்குமுன்னா,  ராணி தேனீக்களின் உடலில் சுரக்கும் ஒரு வகை வேதியல் திரவமான “ஃபீரோமோன்” அப்படீங்கிற திரவத்தின் அளவை வச்சித்தானாம்.  இந்த வகை ஃபீரோமோன் திரவத்தை அதிகமாக சுரக்கும் ராணி தேனீயை அடையாளம் கண்டு, அதை மட்டும் உயிரோடு விட்டுவிட்டு, மத்த எல்லா ராணி தேனீக்களையெல்லாம் போட்டுத் தள்ளிவிடுமாம் வேலைக்காரத் தேனீக்கள்.

கர்நாடகாவில் ஜானுகிருபாஸ் என்னும் பழங்குடியினருக்கு நிரந்தர உணவே தேன்தான்.
தலக்காடு வனச்சரகத்தில் வசிக்கிற அவர்களுக்கு மரமேறுவதுதான் வேலை.

 தினமும் 30 கி.மீ நடந்தாக வேண்டும். 40 மரங்கள் ஏறி இறங்க வேண்டும். இடையே சாப்பிட உணவு கட்டி எடுத்துச் செல்கிற பழக்கமெல்லாம் அவர்களுக்கு இல்லை.

 பசித்தால், காணக்கிடைக்கிற தேன் கூட்டைக் கலைத்துத் தேனெடுத்துப் பருகுவார்கள். காலையில் 7 மணிக்கெல்லாம், மூங்கில் டம்ளர்களில் முக்கால் லிட்டர் வரை தேனைக் குடிக்கிறார்கள்.

கடுமையாய் உழைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவு தேன் என்பதற்கு அந்தப் பழங்குடியினர் வாழும் சாட்சி.

சுத்தமான தேனை சிராய்ப்பு போன்ற காயங்களில் தடவினால் பலன் வெகு சீக்கிரமே தெரியும்..

உலகில் இதுவரைக்கும் 15,000 வருடங்கள் பழமையானதாக கருதப்படும் தேன் எடுப்பதை குறிக்கும் குகை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 நாம  கதைக்கு போவோம்...

முகமது தேன் குடித்த கதை அல்லாஹ் இறக்கிய வஹீயால...
 குரான் அத்தியாயம் 66:1-ல ஆரம்பிச்சு... 66:5-ல முடித்து வைக்கப்படுது...

66:1. நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்?

66:2. அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்;

66:3. மேலும், நபி தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அவர் அதை அறிவித்ததும், அதை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கி வைத்தான்; அவர் அதில் சிலதை தெரிவித்தும், சிலதை புறக்கணித்தும் இருந்தார், அவர் அதைத் தெரிவித்த போது “உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?” என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர்: “ நன்கறிந்தோனும் உணர்ந்தோனும் எனக்குத் தெரிவித்தான்” என்று கூறினார்.

66:4. நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்வீர்களாயின் ஏனெனில் நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் சாய்ந்து விட்டன - தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் - அவருடைய எஜமானன் ஜிப்ரீலும், ஸாலிஹான முஃமின்களும் அதன் பின் மலக்குகளும் உதவியாளராக இருப்பார்கள்.

66:5. அவர் உங்களை “தலாக்” சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த - முஸ்லிம்களான, முஃமினான, வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான - கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர் - இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன்.

ஆச்சுதா...
நம்ம கிளிகள் எப்பவுமே குர்ஆன் இறக்கப்பட்ட காலத்தையும் சூழலையும் கருத்துல வச்சிக்கிட்டு அதை புரிஞ்சிக்கனும்னு.... நாமளும் அப்படியே கணக்குல எடுத்துக்கிட்டு புரிஞ்சிக்க முயற்சி பண்ணுவோம்...

66:1. நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்?

அல்லா அனுமதித்த எதை முகம்மது தம் மனைவிகளின் திருப்திக்காக விலக்கினார்? என்றொரு கேள்வியை எழுப்பினால் விடையாகக் கிடைப்பது தான் முகம்மது தேன் குடித்த கதை.

அதாவது முகம்மது தன் பல மனைவியர்களின் வீட்டில் முறைவைத்து தங்கும் போது ஒரு மனைவியின் வீட்டில் தேன் குடிக்கிறார். அந்த தேனுக்கு பின்பாக ஒரு வக்கிரம் பிடித்த ஒரு வரலாறு மறைந்து கிடக்கிறது. இதை விரிவாகப் பார்க்கலாம்.

முதல் வசனத்திற்கு (66:1) ப் பிந்திய நான்கு வசனங்களும் முகம்மது தேன் குடித்ததை, முகம்மதுக்கு எதிராக நீங்கள் சதி செய்து விட்டீர்கள் என்றும்,
இருவரும் அல்லாவிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றும்,
முகம்மதுக்கு உதவி செய்ய அல்லாவும், வானவர்களும் இன்னும் ஏராளமானவர்களும் இருக்கிறார்கள் என்றும்,
உங்களை விவாகரத்து செய்து விட்டால் உங்களுக்குப் பதிலாக சிறந்த மனைவியர்கள் முகம்மதுவுக்கு கிடைப்பார்கள் என்றெல்லாம் முகம்மதின் மனைவியர்களை அல்லா மிரட்ட வேண்டிய அவசியம் என்ன?

இது மட்டுமா? இந்த தேன் குடித்த கதையால்  சஞ்சலத்துக்கு உள்ளான முகம்மது தன்னுடைய அனைத்து மனைவிகளையுமே ஒட்டுமொத்தமாக விவாகரத்து செய்து விடும் அளவுக்கு சென்றார் என்றால் நம்ப முடிகிறதா?
ஆனால் அது உண்மைதான் என்பதை ஒரு ஹதீஸ் உறுதி செய்கிறது.

புஹாரி:- 5203
(சுருக்கமாக பார்ப்போம்.)
ஒரு நாள் காலை நபி அவர்களுடைய துணைவியர் அழுது கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அருகில் அவரவர் குடும்பத்தினரும் இருந்தனர்.
...
(இடையிலுள்ள மானே,தேனேவை கடந்துவிடுவோம்)...
 உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, தங்கள் துணைவியரை விவாக ரத்துச் செய்துவிட்டிர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், இல்லை. ஆனால், ஒரு மாத காலம் நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்து விட்டேன் என்று பதிலளித்தார்கள். அங்கு நபி அவர்கள் இருபத்தொன்பது நாட்கள் தங்கியிருந்துவிட்டுப் பிறகு தம் துணைவியரிடம் சென்றார்கள்.

ஒரு மனைவியின் வீட்டில் தேன் குடித்தது இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகுமா? ஒட்டு மொத்தமாக அத்தனை மனைவியர்களையும் விவாகரத்து செய்து விடுமளவுக்கு அல்லாஹ் ஆகுமாக்கிய தேன் குடித்தது அவ்வளவு பெரிய குற்றச் செயலா?

 தன்னுடைய நெருங்கிய நண்பரும், மாமனாருமாகிய உமர் கேட்கும் போது விவாகரத்து செய்யவில்லை. ஒரு மாத காலம் அனைத்து மனைவியர்களை விட்டும் விலகி இருக்கப் போகிறேன் என்று கூறி 29 நாட்கள் விலகி இருக்கும் அளவுக்கு தேன் குடித்தது ஒரு மன்னனை கலங்க வைக்குமா?

 நிச்சயம் இருக்காது. குரானின் அந்த வசனங்களும், புஹாரியின் இந்த ஹதீஸும் தெட்டத் தெளிவாக அது தேன் குடித்த கதையல்ல வேறு எதுவோ ஒன்று அதில் மறைந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. அது என்ன?

 இந்த தேடலை முகம்மதின் பிரியத்திற்குறிய மனைவி ஆயிஷா அறிவித்த இரண்டு ஹதீஸ்களிலிருந்து தொடங்கலாம்.

புஹாரி:- 4912
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம், அவர்களது தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் தங்கி விடுவார்கள். நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். தேன் சாப்பிட்ட பின் நம்மவரில் எவரிடம் நபி அவர்கள் முதலில் வருவார்களோ, அவர், நபி அவர்களிடம் கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா உங்களிடமிருந்து பிசினின் துர்வாடை வருகிறதே என்று கூறி விட வேண்டும். வழக்கம்போல ஸைனப்பின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டு விட்டு நபி அவர்கள் வந்த போது நாங்கள் பேசி வைத்த பிரகாரம் கூறியதற்கு அவர்கள் இல்லை ஸைனப் பின்த் ஜஹ்ஷ் தேன் குடித்தேன். நான் ஒரு போதும் அதைக் குடிக்க மாட்டேன், நான் சத்தியமும் செய்து விட்டேன் என்று கூறிவிட்டு இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே என்று கூறினார்கள்.

இது ஒரு ஹதீஸ். இன்னொரு ஹதீஸையும் பார்க்கலாம்.


புஹாரி:- 5268
அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்குத் தேனும் இனிப்பும் மிக விருப்பமானவைகளாக இருந்தன. அஸ்ர் தொழுகையை முடித்ததும் நபி அவர்கள் தம் துணைவியாரிடம் செல்வார்கள்: அவர்களில் சிலருடன் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவ்வாறு தம் துணைவியால் ஒருவரான ஹஃப்ஸா பின்த் உமர் அவர்களிடம் நபி அவர்கள் சென்று வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்து விட்டார்கள். ஆகவே நான் ரோஷப்பட்டேன். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கிளாள் என்றும் அதிலிருந்து தயாரித்த பானத்தை நபி (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. உடனே நான் அல்லாஹ்வின் மீதாணையாக இதை நிறுத்துவதற்காக ஒரு தந்திரம் செய்வோம் என்று கூறிக் கொண்டு நபி அவர்களின் துணைவியரில் சவ்தா பிந்த் ஸம்ஆவிடம் நபி அவர்கள் உங்கள் அருகில் வருவார்கள். அப்போது கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள் ... ... (மானே , தேனே-களை விட்டுவிடுவோம்.)

மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலும் கூறப்பட்ட நிகழ்வு ஒன்று தான், அறிவித்தவரும் ஒருவர் தான்.

ஆனால், அதில் ஈடுபட்ட மனைவியரில் மட்டும் ஆள்மாறாட்டம்.

முகம்மது தேன் குடித்தது யார் வீட்டில்?
 ஜைனப் வீட்டிலா?
ஹப்ஸா வீட்டிலா?

அல்லா எச்சரித்த இரண்டு மனைவியர்கள் யாவர்?
ஒருவர் ஆயிஷா. இன்னொருவர் யார்?
 ஹப்ஸாவா? சவ்தாவா?
ஆயிஷாவும் , ஹப்ஸாவுமா?
ஆயிஷாவும் , சவ்தாவுமா?
எந்த ஆயிஷாவை ஆறு வயதிலேயே இவரைத் திருமணம் செய்து கொண்டால் இல்லறம் குறித்த அறிவிப்புகளை தெளிவாகவும் துல்லியமாகவும் அறிவிப்பார்கள் என்று கண்டு பிடித்து முகம்மது திருமணம் செய்து கொண்டதாக மதவாதிகள் கூறுகிறார்களோ, அந்த ஆயிஷா தான் இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த குழப்பத்தை இன்னொரு ஹதீஸ் தெளிவிக்கிறது.


புஹாரி:- 4913
... .... ..... அப்போது நான் அவர்களிடம், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே நபி அவர்களுடைய துணைவியரில், நபியவர்களைச் சங்கடப் படுத்தும் வகையில் கூடிப் பேசிச் செயல்பட்ட இருவர் யார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் தாம் அந்த இருவர் என்று பதிலளித்தார்கள் .. .. .. அதற்கு நான், அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர் அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். அருமை மகளே தன்னுடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை-ஆயிஷாவை-ப் பார்த்து நீயும் துணிந்து விடாதே என்று சொன்னேன். பிறகு நான் புறப்பட்டு, நபி அவர்களின் மற்றொரு துணைவியாரான உம்மு சலமாவிடம் அறிவுரை கூறச்சென்றேன். ஏனெனில், அவர் என்  உறவினராவார். இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா, கத்தாபின் புதல்வரே உம்மைக் கண்டு நான் வியப்படைகின்றேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்கள் என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக உம்மு சல்மா தம் பேச்சால் என்னை ஒரு பிடி பிடித்து விட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி கோப உணர்ச்சியை உடைத்தெறிந்து விட்டார் .. .. ..

இந்த ஹதீஸ் இரண்டு விபரங்களைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டுள்ளது. ஒன்று, எந்த இருவர் என்பதற்கு ஆய்ஷாவும் ஹப்ஸாவும் என்பது. அடுத்தது, இந்த விவகாரத்தில் உமர் முகம்மதுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்து முகம்மதின் ஒவ்வொரு மனைவியராக சந்தித்து அறிவுரை கூறி எச்சரிக்கிறார். ஆனால் உம்மு சலமா உமர் வாயடைத்துப் போகும் அளவுக்கு அவரை கேள்விகளால் திணறடித்து விடுகிறார். உமரால் பேச முடியாமல் போகும் அளவுக்கு தேன் குடித்ததில் அத்தனை பெரிய விவகாரம் என்ன இருந்து விட முடியும்? ஆக ஒன்று தெளிவாய் புரிகிறது. ஹதீஸ்களும் குரான் வசனங்களும் நடந்த ஏதோ ஒன்றை மறைத்து தேன் குடித்தார் என்று பூசி மெழுகுகின்றன. இது தேன் குடித்த கதையல்ல என்பது தெளிவாகி விட்டது. என்ன நடந்தது என்று எப்படி அறிந்து கொள்வது? இஸ்லாமிய மதவாதிகள் ஒருபோதும் இதற்கு பதில் கூறப் போவதில்லை. குரான் வசனங்களிலும், ஆதாரபூர்வமானவை என்று மதவாதிகள் நீட்டி முழக்கும் ஹதீஸ் தொகுப்புகளிலும் தலைகீழாக நின்று தேடினாலும் இதற்கான விபரம் கிடைக்கப் போவதில்லை. அப்படியானால் எப்படி அதை தெரிந்து கொள்வது? எதில் இதற்கு விளக்கங்கள் கிடைக்கும்?


இப்ன் ஸாத் என்பவர் எழுதிய தபாக்கத் எனும் நூலை முகம்மது மஹ்தவி தம்ஹானி என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.
அதில் 223ம் பக்கத்தில் முகம்மது என்ன தேனைக் குடித்தார் எனும் விபரம் கிடைக்கிறது.


நபி, ஒவ்வொரு மனைவியின் வீட்டிற்கும் தினமும் செல்லும் வழக்கமுடையவர். அவ்வாறு அன்று ஹப்ஸாவின் வீட்டிற்கு வரும் முறை, ஹப்ஸாவிடம், உனது தந்தையார் உமர் கத்தாப் உன்னை பார்க்க விரும்புகிறார் என்று கூறுகிறார் முகம்மது.
 ஹப்ஸாவும், நபியின் ஆணையை ஏற்று தந்தையை காணச் சென்று விடுகிறார்.
 இதற்கிடையில் அடிமைப் பெண் மரியத்துல் கிப்தியாவுடன் கலவியில் ஈடுபட்டு விடுகிறார்.
சற்று விரைவாகவே வீடு திரும்பிய ஹப்ஸா நடந்த நிகழ்ச்சியை அறிந்து கோபமடைகிறார். அவர் நபியிடம் கூறுகிறார், “அல்லாஹ்வின் தூதரே, என் வீட்டிலா இதைச் செய்தீர்கள் அதுவும் என்னுடன் (இருக்க வேண்டிய) முறையில்?”  என்று கோபப்பட ஹப்ஸாவை சமாதானம் செய்ய, வேறு வழியின்றி அல்லாஹ்வால் ஹலால் ஆக்கப்பட்ட மரியத்துல் கிப்தியா இனி தனக்கு ஹராம் எனக் கூறி ஹப்ஸாவை சமாதானம் செய்கிறார்.
அதற்கு ஹஃப்ஸா அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறினால் தவிர என்னால் ஏற்க முடியாது என்கிறார். வேறு வழியின்றி இனி மரியத்துல் கிப்தியாவுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறார்.
இந் நிகழ்சியை யாரிடமும் கூறக்கூடாது எனவும் கூறுகிறார்.
ஆனால் ஹப்ஸா, தன் தோழியான ஆயிஷாவிடம் கூற விஷயம் வெளியாகிறது.

ஆக முகம்மது குடித்த தேன் மரியத்துல் கிப்தியா.
இப்போது குரான் வசனங்கள் ஹதீஸ்கள் ஆகியவை கூறும் செய்திகளை தொகுத்துப் பாருங்கள்.

அவை மரியத்துல் கிப்தியவை உறுதி செய்கின்றன.

அசிங்கமான வக்கிரமான இந்த வரலாற்றை மறைப்பதற்காக முகம்மதியனுக(வஹாபியனுக) படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்....

அதுசரி... முகம்மதுவுக்காக இந்த விசயத்துக்குலாம் அல்லா வஹீ இறக்குவாரான்னு கேக்காதீங்க.... முகம்மது தேவையை நிறைவேற்றியது போக மிச்ச நேரத்துலதான் அல்லா யூதனை திட்டிட்டு இருந்திருக்காப்டி...

புஹாரி:-4788
'உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்' என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.
Book : 65

பாடம் : 7 (நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம் வரை,) உங்களுடன் இருக்க வைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகின்றீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் மீது குற்றம் ஏதுமில்லை எனும் (33:51ஆவது) வசனத் தொடர்.

4788. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், 'ஒரு பெண் தம்மைத் தாமே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?' எனும் சொல்லிக் கொண்டேன். '(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை,) உங்களுடன் இருக்கவைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை' எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனத்தை அல்லாஹ் அருளியபோது, நான் 'உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்' என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.
Book : 65

33:51. அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.

முகம்மதுவை ரொம்ப யோக்கியன்னு யாரேனும் சொல்லக்கூடும்..

முதல் ஹதீஸ்சில் அந்த பெண்ணை முகமது தனது தோட்டத்தில் திருட்டுத்தனமாக ரேப் பண்ண முயற்சி செய்துள்ளார். அதற்கு அந்த பெண் ஒத்துக்கல.. அதனால் அந்த பெண்ண வலுக்கட்டாயமாக திருமணம் பண்ணி பிறகு ரேப் அட்டெம்ப்ட் பண்ணி இருக்கிறார் நபி. அப்பவும் அந்த பொண்ணு ஒத்துக்கல.. பிறகு வயசான காலத்துல எதுக்கு வம்புன்னெ...
அந்த பெண்ணை திருப்பி அனுப்பி இருக்கிறார் முகம்மது. இதையே கீழ் வரும் ஹதீஸ்களும் தெரிவிக்கின்றன..

புஹாரி 5255.
.. .. .. நாங்கள் நபி அவர்களுடன் புறப்பட்டு அஷ்ஷவ்த் என்றழைக்கப்படும் தோட்டத்தை நோக்கி நடந்தோம் .. . .. அப்போது நபி அவர்கள் இங்கேயே அமர்ந்திருங்கள் என்று சொல்லிவிட்டு தோட்டத்திற்குள் சென்றார்கள். அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டு பேரீச்சத் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அப்பெண் உமைமா பிந்த் நுமான் இப்னி ஷராஹீல். அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். அப்பெண் இருந்த வீட்டினுள் நபி அவர்கள் நுழைந்து உன்னை எனக்கு அன்பளிப்புச் செய் என்று கூறினார்கள். அதற்கு அந்தப் பெண் ஓர் அரசி தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா? என்று கேட்டாள். அவளை அமைதிப்படுத்துவதற்காக தங்களின் கரத்தை அவள் மீது வைக்கப் போனார்கள். உடனே அவள் உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன் என்று கூறினாள். அப்போது நபி அவர்கள் அவளை நோக்கி கண்ணியமானவனிடம் தான் நீ பாதுகாப்பு கோரியிருக்கிறாய் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள் ... .....

ஸஹ்ல் இப்னு சஅது, அபூ உசைத் ஆகியோர் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்ணை மணம் முடித்தார்கள். அப்பெண் நபியவர்களிடம் அனுப்ப பட்ட போது, அவரை நோக்கி நபி (ஸல்) கையை நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும். எனவே அப்பெண்ணை அனுப்பி வைத்துவிடுமாறும், அவளுக்கு இரு வெண்ணிற சணல் ஆடைகளை அளித்துவிடுமாறும் அபூ உசைத் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். இதே ஹதீஸ் மற்றொர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது
[புஹாரி 5256,5257]

இப்படியெல்லாம் பண்ணிட்டு இருந்தால் எம்புட்டு நாள்தான் வண்டி ஓடும்....
முன்பு ஆயிஷா பத்து வயசுப்புள்ள... முகம்மது சொன்னதையெல்லாம் நம்பியிருக்குது... வயசு கூடக்கூட வெவரம் தெரியவும்.... மேற்படி நடவடிக்கைகளால் ஆயிஷா பொங்கிடுச்சு....

இதோ இப்படி.....

” அல்லாவின் தூதனாக நடிப்பவன் நீயே ” [ சுன்னி இஸ்லாத்தில் மிகவும் புகழ்பெற்ற ஈமாம் கஜாலியின் “இஹ்யா உலும்-இத்-தீன் ” (Ihya Ulum-id-din),தொகுதி 2, பக்கம் 43 ]
அந்த பகுதியின் அரபி வாசகம் கீழே :
وقالت له مرة في كلام غضبت عنده أنت الذي تزعم أنك نبي الله
முஹம்மதுடன் ஒரு வாக்குவாதத்தில் அவனது மனைவி ஆயிஷா இந்த வார்த்தைகளை கோபமாக கூறியதாக அந்த நூல் கூறுகிறது.

ஆக, ஏதோ தற்கால காபிர் மட்டும் முஹம்மதை போலி இறை தூதன் என்று கூறவில்லை,”உம்முல் முக்மினின்”(நம்பிக்கை உடையோரின் தாய்) என்று சுன்னி முஸ்லிம்களால் வர்ணிக்கப்படும் ஆயிஷாவே தனது கணவனான முஹம்மது இறை தூதன் என்று கூறிக்கொண்டு ஊரை ஏமாற்றுவதை சுட்டிக் காட்டிவிட்டாள்.

கடுமையான வாக்குவாதத்தின் போது,சில சமயம் எதிராளி செய்த குற்றங்களை நாம் கோபத்தில் சுட்டிக் காட்டுவோம்.அதே மாதிரி தான் ஆயிஷா முஹம்மதின் அயோக்கியத்தனத்தை கோபத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறாள்.

No comments:

Post a Comment