இஸ்லாம் ஒற்றுமையாளர்களின் மதமா?


எதிர்த்து போரிட யாரும் இல்லாவிட்டால் தன்னைத்தானே வெட்டிக்கொள்ளவும் செய்வார்கள்.




இஸ்லாம் அமைதி மார்க்கமா?



குர்ஆனின் வசனங்கள் பலவற்றில் வன்முறையை மட்டுமே காண முடிகிறது. இவைகள் அன்றி, ஹதீஸ்கள் இஸ்லாத்தை மறுப்போர் மீது வெறிச் செயல்களில் ஈடுபட அறிவுறை செய்கின்றன. வன்முறைக்கு அழைக்கும் இவ்வசனங்களில் ஒருசிலவற்றை இங்கே பட்டியிலிட்டுள்ளோம். 1400 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்த வசனங்கள் பல்லாயிர கணக்கான உயிர்களை இன்றும் சூறையாடி வருகின்றன. ஒரு மனிதன் இஸ்லாத்தை ஏற்று இவ்வசனங்களை தீவிரமாய் பின்பற்ற தொடங்கினால் என்னாகும்?

குர்-ஆன்:

2:193 - கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் அல்லாஹ்வுக்குரியதாக ஆகும் வரை அவர்களுடன் போர் செய்யுங்கள்!

2:244 - அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்! அவன் செவியுறுபவன்; அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

2:216 - உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.

3:151 - அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளாமலிருந்தும் அவனுக்கு இணை கற்பித்ததால் மறுத்தோரின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்துவோம்.

4:74 - இவ்வுலக வாழ்வை விற்று மறுமையை வாங்குவோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும்! யாரேனும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டாலோ, வெற்றி பெற்றாலோ அவர்களுக்கு மகத்தான கூலியை பின்னர் வழங்குவோம்.

4:76 - நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். மறுப்போர் தீய சக்திகளின் பாதையில் போரிடுகின்றனர். எனவே ஷைத்தானின் கூட்டாளிகளுக்கு எதிராகப் போரிடுங்கள்! ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது.

4:89 - "அவர்கள் மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் சமமாக ஆக வேண்டும்" என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் எவரையும் உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!

4:95 - "நம்பிக்கை கொண்டோரில் தக்க காரணமின்றி போருக்குச் செல்லாதோரும், தமது பொருட்களாலும் மற்றும் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். தமது பொருட்களாலும், உயிர்களாலும் போரிடுவோருக்கு, போரிடாதோரை விட ஒரு தகுதியை அல்லாஹ் சிறப்பாக வழங்கியிருக்கிறான்"

4:104 - "அக்கூட்டத்தை விரட்டிச் செல்வதில் தளர்வடையாதீர்கள்! நீங்கள் துன்புற்றால் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நீங்கள் துன்புற்றது போல் அவர்களும் துன்புறுகின்றனர். அவர்கள் எதிர்பார்க்காத சொர்க்கத்தை நீங்கள் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறீர்கள்"

5:33 - "கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடுகடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது"

8:12 - "நான் உங்களுடன் இருக்கிறேன். நம்பிக்கை கொண்டோரைப் பலப்படுத்துங்கள்! என்னை மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்!''

8:15 - "நம்பிக்கை கொண்டோரே! முன்னேறி வரும் மறுப்போரை நீங்கள் சந்திக்கும் போது அவர்களுக்குப் புறங்காட்டி ஓடாதீர்கள்!"

8:39 - "கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் முழுவதும் அல்லாஹ்வுக்காக ஆகும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!"

8:57 - "போரில் அவர்களை நீர் வெற்றி கொண்டால் அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களுடன் அவர்களையும் ஓட ஓட விரட்டுவீராக! அப்போது தான் அவர்கள் பாடம் கற்பார்கள்"

8:59-60 - "மறுப்போர், தாம் வென்று விட்டதாக நினைக்க வேண்டாம். அவர்கள் வெல்ல மாட்டார்கள். உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர் குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம்"

8:65 - "நபியே! நம்பிக்கை கொண்டோருக்கு போர் செய்ய ஆர்வமூட்டுவீராக! உங்களில் சகித்துக் கொள்கின்ற இருபது பேர் இருந்தால் இருநூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் நூறு பேர் இருந்தால் மறுப்போரில் ஆயிரம் பேரை வெல்வார்கள்.

9:5 - "புனித மாதங்கள் கழிந்ததும் அந்த இணை கற்பிப்போரைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகை இடுங்கள்! ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காகக் காத்திருங்கள்!"

9:14 - "அவர்களுடன் போர் செய்யுங்கள்! உங்கள் கைகளால் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான். அவர்களை இழிவுபடுத்துவான். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவுவான்"

9:20 - "நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர், அல்லாஹ்விடம் மகத்தான பதவிக்குரியவர்கள். அவர்களே வெற்றி பெற்றோர்"

9:29 - "வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல், உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!"

9:38,39 - "நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? "அல்லாஹ்வின் பாதையில் புறப்படுங்கள்!'' என்று உங்களிடம் கூறப்படும் போது இவ்வுலகை நோக்கிச் சாய்ந்து விடுகிறீர்கள்!....நீங்கள் புறப்படாவிட்டால் உங்களை அவன் துன்புறுத்தும் வகையில் தண்டிப்பான். உங்களையன்றி வேறு சமுதாயத்தைப் பகரமாக்குவான்..."

9:41 - "படைபலம் குறைவாக இருந்த போதும், அதிகமாக இருந்த போதும் புறப்படுங்கள்! உங்கள் செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்!"

9:73 - "நபியே! மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் போரிடுவீராக! அவர்களிடம் கடினமாக நடப்பீராக!"

9:88 - "முஹம்மதும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் போரிடுகின்றனர். அவர்களுக்கே நன்மைகள் உண்டு. அவர்களே வெற்றி பெற்றோர்"

9:111 - "நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். அவர்கள் கொல்கின்றனர்; கொல்லப்படுகின்றனர். இது, தவ்ராத்திலும், இஞ்சீலிலும், குர்ஆனிலும் அவன் தன்மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி. அல்லாஹ்வை விட வாக்குறுதியை நிறைவேற்றுபவன் யார்? நீங்கள் ஒப்பந்தம் செய்த இந்த வியாபாரத்தில் மகிழ்ச்சியடையுங்கள்! இதுவே மகத்தான வெற்றி"

9:123 - "நம்பிக்கை கொண்டோரே! உங்களை அடுத்திருக்கும் மறுப்போருடன் போரிடுங்கள். உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும். தன்னை அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

25:52 - "மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக!"

47:35 - "தைரியமிழந்து சமாதானத்துக்கு அழைப்பு விடாதீர்கள்! நீங்களே உயர்ந்தவர்கள். அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான்"

48:29 - "முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் ஏக இறைவனை மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர்"

61:4 - "உறுதியாக இணைக்கப்பட்ட கட்டடம் போன்று அணிவகுத்து தன் பாதையில் போரிடுவோரை அல்லாஹ் விரும்புகிறான்"

61:10-12 - "நம்பிக்கை கொண்டோரே! துன்புறுத்தும் வேதனையில் இருந்து உங்களைக் காப்பாற்றும் ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்ப வேண்டும்; அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும், உயிர்களாலும் அறப்போர் புரிய வேண்டும்; நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது. உங்களுக்காக உங்கள் பாவங்களை அவன் மன்னிப்பான். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அதன் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய குடியிருப்புகளும் உள்ளன. இதுவே மகத்தான வெற்றி"

66:9 - "நபியே! ஏகஇறைவனை மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் போரிடுவீராக! அவர்கள் விஷயத்தில் கடுமை காட்டுவீராக!"

ஹதீஸ்

அபூதர் அல்ஃகிஃபாரீ அவர்கள் கூறியதாவது:நான் நபி அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நற்செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் அவனது பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள்.....

(முஸ்லிம்: நூல் 1, எண் 136 - ரஹ்மத் அறக்கட்டளை தமிழாக்கம்)


இறைத்தூதர் அவர்களிடம் ஒருவர் வந்து, "ஜிஹாத் என்னும் இறைவழியில் புரியும் அறப்போருக்குச் சமமான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்டதற்கு நபி அவர்கள் "அப்படி எதையும் நான் காணவில்லை" என்று கூறிவிட்டு, "அறப்போர் வீரன் போருக்காகப் புறப்பட்டுச் சென்று விட்டால் அவனுக்கு இணையான நற்செயல் புரிந்திட வேண்டி நீ உன் வணக்கத் தலத்திற்குச் சென்று இடைவிடாமல் தொழுது கொண்டும் தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டும் இருக்க உன்னால் முடியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், 'அது யாரால் முடியும்?' என்று பதிலளித்தார்.

(புகாரி: நூல் 56, எண் 2785 - அப்துல் காதிர் உமரி தமிழாக்கம்)


"அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என உறுதிமொழி கூறி, என்னையும் எனக்குக் கிடைத்துள்ள மார்க்கத்தையும் நம்புகின்றவரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. இதை அவர்கள் செயல்படுத்தினால் தமது உயிரையும் செல்வத்தையும் என்னிடம் இருந்து காத்துக் கொள்வார்கள்....."

(முஸ்லிம்: நூல் 1 எண் 34 - ரஹ்மத் அறக்கட்டளை தமிழாக்கம்)


ஸஅப் பின் ஜஸ்ஸாமா அவர்கள் கூறியதாவது: நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இணைவைப்பாளர்களின் பெண்களையும் குழந்தைகளையும் இரவு நேரத்தில் தாக்க வேண்டிய நிலை சில சந்தர்ப்பங்களில் ஏற்பட்டு விடுகிறதே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர்களும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள் தாம்" என்று விடையளித்தார்கள்.

(முஸ்லிம்: நூல் 32, எண் 3590 - ரஹ்மத் அறக்கட்டளை தமிழாக்கம்)


அனஸ் பின் மாலிக் அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போர் நாளில் ஒரு கட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அன்சாரிகளில் எழுவரும் குறைஷியரில் இருவரும் மட்டுமே தம்முடன் இருக்க தனித்து விடப்பட்டார்கள். மற்ற தோழர்கள் சிதறி ஓடிவிட்டனர். இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் அவர்களை எதிரிகள் நெருங்கிய போது, "நம்மிடம் இருந்து இவர்களை விரட்டியடிப்பவர் யார்? "அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்"; அல்லது "அவர் சொர்க்கத்தில் என்னுடன் இருப்பார்"என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் முன்னேறிச் சென்று போரிட்டார். இறுதியில் அவர் கொல்லப்பட்டார். பிறகு மீண்டும் அல்லாஹ்வின் தூதர் அவர்களை எதிரிகள் நெருங்கினார்கள். அப்போது "நம்மிடமிருந்து இவர்களை விரட்டியடிப்பவர் யார்? "அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்"; அல்லது "அவர் சொர்க்கத்தில் என்னுடன் இருப்பார்" என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் மற்றொரு மனிதர் முன்னேறிச் சென்று எதிரிகளுடன் போரிட்டார். அவரும் கொல்லப்பட்டார். இவ்வாறே ஒருவர் பின் ஒருவராகச் சென்று அன்சாரிகள் எழுவரும் கொலை செய்யப்பட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தம்முடனிருந்த குறைஷித் தோழர்களிடம், "நாம் நம்முடைய அன்சாரித் தோழர்களிடம் நியாயமாக நடந்துகொள்ள வில்லை" என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: நூல் 32, எண் 3663 - ரஹ்மத் அறக்கட்டளை தமிழாக்கம்)


அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் அவர்கள், என்னிடம் "அபூசயீத்! அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் எனவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது" என்று கூறினார்கள். இதைக் கேட்டு வியப்படைந்த நான், "மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். மீண்டும் அவ்வாறே அவர்கள் சொல்லி விட்டு, இன்னொன்றும் சொல்கிறேன், சொர்க்கத்தில் ஓர் அடியார் நூறு படித்தரங்களுக்கு உயர்த்தப்படுவார். ஒவ்வோர் இரு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைவு இருக்கும்" என்றார்கள். நான், "அது என்ன நற்செயலுக்குக் கிடைக்கும் வெகுமதி, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல்" என்று விடையளித்தார்கள்.

(புகாரி: நூல் 31, எண் 3829 - அப்துல் காதிர் உமரி தமிழாக்கம்)

நபி அவர்கள் அறிவித்தார்கள் - நீங்கள் யூதர்களுடன் போரிடாத வரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கு என்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் ஒளிந்து கொண்டு இருப்பான். அந்தக் கல், "முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் ஒளிந்து கொண்டு இருக்கிறான். அவனை நீ கொன்று விடு" என்று கூறும் - என அபூ ஹுரைரா அறிவித்தார்.

(புகாரி - நூல் 56, எண் 2926 - அப்துல் காதிர் உமரி தமிழாக்கம்)