திருமணத்திற்கான வயதெல்லை?
நபி (ஸல்) அவர்கள் மனித வாழ்க்கைக்காக இறைவனால் நியமிக்கப்பட்ட முன்னுதாரணமாகும். இவர்கள் பொறுத்தமில்லாத மூட சம்பிரதாய சடங்குகளையும், வணக்க வழிபாடுகளையும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத சமுதாயத் திணிப்புகளையும் தகர்த்தெறிந்து தனது ஒவ்வொரு செயல்கள் மூலமும் உலக மக்களுக்கு முன் உதாரணமானவராகவே திகழ்ந்துள்ளார்கள்.முஹம்மது நபி, உலக மக்களுக்கு முன்னுதாரணமோ இல்லையோ, நிச்சயமாக, முஸ்லீம்களுக்கு முன்னுதாரணம் அவர் மட்டுமே…!
ஆம்…!
முஸ்லீம்கள் முஹம்மது நபியைப் போலவே எல்லா விதங்களிலும் இருக்கவே முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய அறிஞர்கள் பலவருடங்களாக மதரஸாக்களில் கற்ற அல்லாஹ்வின் தூதருடைய சுன்னாவை (செயல்முறைகளை) மற்ற முஸ்லீம்களுக்கு கற்பிக்கின்றனர்.
சுன்னாவைக் கற்பதன் மூலம் முஹம்மது நபி எவ்வாறு முகம், கைகள், கால்களைக் கழுவிக் கொண்டார், எவ்வாறு தொழுகை நடத்தினார், எவ்வாறு பல் துலக்கினார், மூக்கு, காதுகளை எப்படி குடைந்து சுத்தம் செய்தார் என்றும், அவர் ஆடை அணிந்த விதம், ஆடையின் வடிவம், நிறம், தைக்க உபயேகித்த நூல் எது? என்றும், அவர் எந்தெந்த உணவுகளை சப்பிட்டார், எந்தெந்த விரல்களை சப்புகொட்டி உறிஞ்சி நக்கினார், அவருக்குப்பிடித்த உணவு எது? எவ்வாறு தூங்கினார், எந்தப்பக்கம் ஒருக்களித்துப் படுத்தார், அவர் தலைமுடி, தாடி மற்றும் மீசையின் அளவுகள் என்ன? அவர் தன் நகங்களை எந்தமுறையில் நறுக்கிக் கொண்டார்? எந்த விரல் நகத்தை முதலில் நறுக்கினார்? எப்படி சொறிந்து கொண்டார்? எத்தனைமுறை சொறிந்து கொண்டார்?
அவர் உடலுறவுக்கு முன்னும் பின்னும் செய்த செயல் முறைகள் யாவை? அதை எவ்வாறு செய்தார்? கழிப்பறையில் எந்த காலை முதலில் வைத்தார்? சிறுநீர் எவ்வாறு கழித்தார்? நின்று கொண்டா அல்லது அமர்ந்து கொண்டா கழித்தார்? எந்த கையால் உறுப்பைப் பிடித்து சிறுநீர் பீச்சினார்? மலம் கழிக்கையில்அவர் முகம் எந்த திசையை நோக்கியிருந்தது? அவ்வாறு மலம் கழிக்கையில் எந்த காலின் மீது தன் முழுஉடல் பாரத்தை வைத்திருந்தார்? எந்த கையால் தன் பிட்டத்தை எப்படி கழுவிக் கொண்டார்?
இவையனைத்துமே முஸ்லீம்களுக்குப் புனிதமானவைகள் மறுமையின் வெற்றிக்கும் உரியவைகள். இவைகள் தங்களின் இயல்புக்குப் பொருந்தவில்லையென்றாலும், இவைகளை உயிராக கருதி பின்பற்றி வாழ்கை முறையை அமைத்துக் கொள்கின்றனர். மற்ற முஸ்லீம்களையும் பின்பற்றுமாறு வற்புறுத்துகின்றனர். பின்பற்றாதவர்களை, நரக தண்டனைகளைக் கூறி எச்சரிக்கின்றனர். ஆனால் மிக முக்கியமான குழந்தைத் திருமண சுன்னத்துகளைப் பற்றி வாய் திறக்கமாட்டார்கள்.
எனவே ஏதேதோ பொருளற்ற சுன்னத்துகளை (நபிவழி செயல்முறைகளை) வலியுறுத்தி பிரச்சாரம் செய்யும் நாமும், நம்முடைய மார்க்க அறிஞர்களும், பகுத்தறிவிற்கு மிகவும் ஏற்புடைய (?), முஹம்மது நபி அவர்களின் Child sex சுன்னத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். புனிதமான Child sex செயல்முறைகளை எதிர்க்கும் சமுதாய திணிப்புகளை தகர்த்தெறிய வேண்டும். இஸ்லாமிய பிரச்சார பிரங்கிகளால் முடியுமா? அல்லது உங்களால்தான் முடியுமா?
(இது போன்ற ஏடாகூடமான கேள்விகளைக் கேட்டு தொலைத்து விட்டால் அவ்வளவுதான் அவர்களது மத உணர்வுகள் புண்பட்டுவிடும், உங்களை அடித்து நொறுக்கி விடுவார்கள் அல்லது ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைப் போல முகத்தை வைத்துக் கொள்வார்கள். ஆனால் பதில் மட்டும் கிடைக்காது.)
நிச்சயமாக முடியாது. காரணம் Child sex ன் மனிதத் தன்மையற்ற வெறியை, கொடூரத்தை, வலியை அவர்களால் நிச்சயமாக உணர முடியும். அப்படி மனிதர்களாகிய நாம் உணர்ந்ததால்தான் நாம் மேற்கண்ட மருத்துவ அறிவியல் கொள்கைகள் பிறந்தது. இல்லையெனில் முஹம்மது நபி அவர்களின் Child sex போன்ற செயல்களை இஸ்லாமிய மார்க்க அறிஞர்களைப்போல உலகில் உள்ள அனைவரும் நியாயப்படுத்திக் கொண்டு இருப்பார்கள்.
இந்த குறிப்பிட்ட சுன்னத்தை ஆதரித்தால் பிற சமுதாயம் மட்டுமல்லாமல் இஸ்லாமிய சமுதாயத்தின் வெறுப்பிற்கு ஆளாவது உறுதி என்பதை உணர்ந்ததால் இன்றுவரை இச்செய்தி மார்க்க அறிஞர்களால் மறைக்கப்பட்டும் மழுப்பப்பட்டும் வருகிறது. முஹம்மது நபி மற்றும் அவரது தோழர்களின் முடிவைப்போல இறைவன் படைத்த பெண் இனம் ஆண்களின் இச்சைக்கு மட்டுமே வயதும் மனிதத் தன்மையும் ஒரு பொருட்டல்ல என விட்டுவிடலாமா?. (இன்றும் அதே நிலைதான்)
நாகரீகம், தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் பண்பாட்டையும், உறவுமுறைகளையும் சீரழிப்பதாகக் கூறப்படும் மேலை நாட்டில் கூட Child sex is a Crime என்ற விளம்பரங்களை அனைத்து Media களிலும் காணலாம்.
நாகரீகம், மனிதத்தன்மை மிக்கவர், உலகத்திற்கே ரஹ்மத்தானவர், இந்த பிரபஞ்சத்திற்கே அழகிய முன்மாதிரி என்று இறைவனால் போற்றப்படுபவர் செய்யும் செயலா இது?. மனிதத் தன்மையற்ற செயலை இஸ்லாம் பகிரங்கமாக அனுமதிக்கிறது! என்று ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சொல்கிறேன் உங்களால் ஆதரத்துடன் மறுக்க முடியுமா?.
என்னுடைய கேள்விகளால் “திருமணத்திற்கான வயதெல்லை ?” யின்ஆசிரியர் எரிச்சலடைந்து போனார்.
…இன்னும் ஐந்து முறை புவி சூரியனைச்சுற்றி வந்தாலே மனிதர்களின் அறிவும் திடகாத்திரமும் பெருகும் என்றும், புவி சுழற்சியை கொண்டே சட்டங்களை இயற்றுமாறும் இறைனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை எம்மிடமில்லை.
“ஆக பெண்ணாயின் பொறுப்பாளரினது சம்மதத்துடன் தனது விருப்பப்படி எந்த வயதுடைய கணவனையும் துணைவனாக தேர்ந்தெடுக்க இஸ்லாம் வழியேற்படுத்திக் கொடுக்கிறது. ஆணாயின் அவனது விருப்பம் மட்டுமே போதுமானதாகும் தன்னை விட மூத்த அல்லது இளைய வயது பெண்களை திருமணம் செய்ய அவன் நாடலாம். அதே நேரம் ஆண்களானாலும் பெண்களானாலும் சரியே துணைவர் மரணிக்கும் போது அடுத்த திருமணத்தை இஸ்லாம் கட்டாயப்படுத்தி ஊக்குவிக்கவும் செய்கிறது. திருமண உறவுகளை இறைவணக்கமாகவும் இஸ்லாம் ஊக்குவிக்கிறது.”
Islamic Q & A வின் பதில்
In summary, then, it is permitted to contract marriage with a young girl and to hand her over to her husband to stay with him before she reaches adolescence. As for consummating the marriage, this does not happen until she is physically able for it. Thus the matter becomes quite clear. Do you see anything wrong with a man living with his young wife in one house, bringing her up and teaching her, but delaying consummation until she is ready for it? We ask Allaah to show us truth and falsehood and to make each clear. And Allaah knows best.
திருமணம் என்ற பெயரில் இவ்வகையான மனிதத் தன்மையற்ற செயலை இஸ்லாம் பகிரங்கமாக அனுமதிக்கிறது! நிச்சயமாக Child sex முஹம்மது நபி அவர்களின் வழிமுறையாக இருக்கிறது.
புகாரி ஹதீஸ் -4788ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களைளேய கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், ‘ஒரு பெண் தம்மைத் தாமே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?’ எனும் சொல்லிக் கொண்டேன். ‘(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை(விரும்பும் காலம்வரை,) உங்களுடன் இருக்க வைக்கலாம் . நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை ” எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய போது, நான் ‘உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்” என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.
சிறுமியாக இருப்பினும் ஆயிஷாவின் துடுக்குத்தனமான பதிலில் பொருளில்லாமலில்லை. முஹம்மது நபியின் பலதார குடும்ப வாழ்க்கையும், அதற்கு ஆதரவாக உடனுக்குடன் அல்லாஹ் இறக்கிக் கொண்டிருந்த குர்ஆனின் வசனங்களுமே அதற்கு சாட்சி.
மனைவியர்களின் பட்டியல்
ஒரு இஸ்லாமிய இணையதளம் பதிமூன்று மனைவிகளின் பட்டியலை தந்து குற்றச்சாட்டுகளை மறுத்தது. நபி (ஸல்)அவர்களின் பலதார மணங்கள் சமுதாய நலனை அடிப்படையாக கொண்டது வேறு விதமாக கண்பது தவறானது எனவும் எச்சரித்தது. இதுதான் அவர்கள் கொடுத்த பட்டியல்,
மனைவியர்களின் / அவருடன் மனைவியர்களின் நபி அவர்களின்வாழ்ந்த பெண்களின்
பெயர்கள் திருமண வயது திருமண வயது
- கதீஜா 40 25
- சவ்தா ? 52
- ஆயிஷா 6 52
- ஹப்ஸா 22 56
- ஜைனப் 30 56
- உம்முஸல்மா 26 56
- ஜைனப் 37 58
- ஜுவேரியா (போர் கைதி) 20 58
- உம்மு ஹபீபா 36 60
- ஸபியா (போர் கைதி/அடிமை) 17 60
- மாரியா (கிருத்துவ பெண் /அடிமை) 17 60
- ரைஹானா ( போர் கைதி/ அடிமை) 15 60
- மைமூனா 36 53
மேற்கண்ட பதிமுன்று மனைவியர்களுடன் இன்னொரு இணையதளம் தரும் பட்டியல் இதோ,
நபி (ஸல்) அவர்கள் மேலும் பல பெண்களைத் திருமணம் செய்திருப்பதாக ஹதீஸ் ஆய்வாளர் அலீ தஷ்தி குறிப்பிடுகிறார் (இவர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்) அவர் தரும் பட்டியலையும் காண்போம்
இவர்களைப் பற்றிய குறிப்புகள்
- ஃபாத்திமா al-Tabari vol.9 p.39, al-Tabari vol.9 p.139
- ஹெந்த் (விதவை) Sahih Muslim vol.3 no.4251-4254 928-929.
- அஸ்மா பின்த் நுக்மான Bukharivol.7 book 63 no.181 p.131,132
- அஸ்மா a-Tabari vol.9 p.135-136. al-Tabari vol.39 p.166
உறுதியற்றஉறவுகள்/ சுருக்கமாக திருமணம் செய்தல்
- உம்மு ஷரிக் al-Tabarivol.9 p.139.
- ஜைனப் al-Tabari vol.7 p.150 footnotes 215,216 and al-Tabari vol.39 p.163-164
- கவ்லா al-Tabari vol.39 p.166
- முலைகா பின்த் தாவூத் al-Tabarivol.8 p.189
- அல் ஷன்பா பின்த் அம்ர் al-Tabarivol.9 p.136
- அல் அலீய்யா al-Tabari vol.39 p.188
- அம்ராஹ் பின்த் யஜீத் al-Tabari vol.39 p.188
- கத்ைலா பின்த் கைஸ் al-Tabarivol.9 p.138-139
- ஸானா பின்த் ஸூஃப்யான் al-Tabari vol.39 p.188
- ஷாராஃப் பின்த் கலீபா al-Tabarivol.9 p.138
- 28. ஜைனப்
- பெயர் தெரியாத ஒரு பெண் al-Tabari vol.39 p.187
Wiki Islam தரும் பட்டியல் இதோ
1 கதீஜா,
2 சவ்தா,
3 ஆய்ஷா,
4 ஆய்ஷாவின் அடிமைப் பெண்,
5 உம்மு சலாமா,
6 ஹஃப்ஸா,
7 ஜைனப் பிந்த் ஜஹ்ஷ்,
8 ஜுவைரியா,
9 உம்மு ஹபீபா,
10 ஷஃபியா,
11 மைமூனா,
12 ஃபாத்திமா,
13 ஹிந்த்,
14 ஸனா பிந்த் அஸ்மா,
15 ஜைனப் பிந்த் கொஸாய்மா,
16 ஹப்லா,
17 அஸ்மா பிந்த் நோமன்,
18 மரியா
19 ரைஹானா பிந்த் ஸைத்
20 உம்மு ஷரிக்,
21 மைமூனா,
22 ஸைனப்
23 காவ்லா,
24 முலைக்கா பிந்த் தாவூத்,
25 அல் ஷன்பா பிந்த் அம்ர்,
26 அல் அலிய்யா,
27 அம்ரா பிந்த் யாஸித்,
28 பெயர் தெரியாத ஒரு பெண்,
29 குதாய்லா,
30 சனா பிந்த் சுப்யான்,
31 ஷரஃப் பிந்த் கலீஃபா.
சரியான ஆதார வரிசையில்லமல் விடுபட்டவர்களும் வலக்கரம் மூலம் சொந்தமாக்கிக் கொண்டவர்களின் எண்ணிக்கையையும் இணைத்தால் நபி (ஸல்) அவர்களின் மனைவிர்களின் எண்ணிக்கை சுமார் நாற்பதை நெருங்கும். உலகத்திற்கே அருளாக அனுப்பப்பட்டவர், இறைவனை அடையும் வழியை போதிக்க வந்தவர், இத்தனை பெண்களுடன் எப்படி வாழ முடியும் ?
சர்வ வல்லமையுடைய இறைவனால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்டவர், இறைச்செய்தியை மக்களிடையே கூறவந்தவர், இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்தவர் சராசரி மனித வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவர்களால் அற்பமான இன்பங்களை நாடிச் செல்ல மாட்டார்கள் என்றும், அவர்கள் உணர்ந்து கொண்ட பேரின்பத்தின் முன் இந்த உலகமும் அதன் இன்பங்களும் அற்பமானவைகளே என்றும் நினைத்துக் கொண்டேன்
நிலையற்ற இவ்வுலக வாழ்வின் இன்பங்களில் மூழ்கி நிலையான மறுஉலகவாழ்க்கையைத் தொலைத்துவிட வேண்டாம் என்பதே முஹம்மது நபி உலக மக்களுக்கு அச்சமூட்டி கூறிய உபதேசங்கள். எனவே முஹம்மது நபி (ஸல்) அவர்களின் திருமணங்கள் உடல் தேவைகளுக்கானது அல்ல. இது நிச்சயமாக, ஆதரவற்ற பெண்களுக்கு மறுவாழ்வளிக்க செய்து கொண்ட திருமணங்கள்தான் என்பதை குழப்பமடைந்த எனது மனதிற்கு உணர்த்த விரும்பினேன்.
நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களின் பின்னணியை ஆராய்ந்தால் சமுதாய காரணங்கள் என்னவென்பது தெளிவாகும். விளக்கங்களை அறிந்து கொள்ள மார்க்க அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள் சிலவற்றைப் படித்தேன் அவை எனக்குப் போதுமான தகவல்களைத் தரவில்லை. எனவே விரிவான செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காக இணையதள வலைக்குள் இறங்கினேன்.
“The Prophet of Allah liked three worldly objects – perfume, women and food.”இது ஆயிஷா அவர்களின் வழியாக அறிவிக்கப்படும் ஒரு நம்பகமான ஹதீஸ்.
வாசனை திரவியங்கள், பெண்கள் மற்றும் உணவு – அல்லாஹ்வின் தூதருக்கு விருப்பமான மூன்று உலக விஷயங்கள். (வேறு சில அறிவிப்புகளில், முஹம்மது நபிக்கு மிகவும் பிடித்தமான உலக விஷயங்கள், வாசனை திரவியங்களும், பெண்களுமே என காணப்படுகிறது)
“பெண்களை மிகவும் பிடிக்கும்” என்பதன் பொருள் அன்பு செலுத்துவதைக் குறிப்பிடுவதாக இருக்க வேண்டும், அதனால் தான் அவர்களுக்கு உதவி அல்லது பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தின் காரணமாகவே இவ்வளவு திருமணங்களும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன். ஆதரவற்ற பெண்களுக்கு உதவி அல்லது பாதுகாப்பு வழங்குவதற்காக அனைத்து பெண்களையும், நபி (ஸல்) அவர்களே திருமணம் செய்து கொள்வதுதான் சரியான தீர்வா?
நபி (ஸல்) அவர்கள், தானே திருமணம் செய்து கொண்டிருப்பதைவிட தனது உத்தம நண்பர்களுக்கு திருமணம் செய்து வைக்க இயலுமே?, அல்லது அவர்களுக்கு வேறு வகைகளில் உரிய பாதுகாப்பு வழங்கியிருக்க முடியுமே?
என் மனதில் பலவிதமான எதிர்க்கேள்விகள் உருவாகிக் கொண்டிருந்த பொழுது வேறொரு ஹதீஸ் கண்களில் பட்டது.
Ibn Sad’s “Kitab al-Tabaqat al-Kabir, volume 1”, pages 438, 439.…The apostle of Allah said, “Gabriel brought a kettle from which I ate and I was given the power of sexual intercourse to forty men.”(அல்லாஹ்வின் தூதர் கூறினார், ஜிப்ரீல் ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்ததை நான் அருந்தியதிலிருந்து எனக்கு நாற்பது ஆண்களின் பாலியல் பலம் கிடைத்து விட்டது.)
ஜிப்ரீல் (கேப்ரியேல் என்ற தேவ தூதன்)அல்லாஹ்வின் வஹீ செய்திகளைக் கொண்டு வந்தார் என்று மார்க்க அறிஞர்கள் கூறுவதை அறிவேன். நபி(ஸல்) அவர்களுக்கு ஆண்மையை அதிகரிக்கச் செய்வதற்கு மருந்துகளையும் கொண்டு வந்தாரா?
இன்றைய மொழியில் சொல்ல வேண்டுமென்றால், அல்லாஹ், நபி (ஸல்)அவர்களுக்கு, ஜிப்ரீல் மூலமாக “வயாக்கரா“வை விட வீரியமிக்க மருந்துகளை வழங்கினான் என்று சொல்லலாம்.
அப்படியானால், முஹம்மது நபியின் இத்தனை திருமணங்களுக்கும் அடிப்படைக் காரணம் என்ன?
எண்ணற்ற மனைவியர்களுடன் உல்லாசம் காண்பதற்காகத்தான்.
அல்லாஹ்வின் செய்தியை கூற வந்தவருக்கு இந்த பாலியல் வலிமை எந்த வகையில் உதவும்? நாற்பது ஆண்களுக்கு சமமான வலிமை துன்பத்திலிருப்பவருக்கு உதவவோ,தன்னை இறைத்தூதுவராக ஏற்றுக் கொண்ட மக்களைப் பாதுகாக்கவோ வழங்கப்படவில்லை. அற்ப உணர்வுகளில் உல்லாசம் காணவே நாற்பது ஆண்களுக்கு சமமான பாலியல் வலிமை வழங்கப்படடுள்ளது. என்னுடைய உறுதியான நம்பிக்கைகள் ஆட்டம் காணத் துவங்கியது.மேற்கண்ட ஹதீஸ்களைக் கண்டவுடன் நபி (ஸல்), பெண் மோகம் கொண்டவர் என்ற குற்றச்சாட்டிற்கான அடிப்படை விளங்கியது.
(தொடரும்)
No comments:
Post a Comment