மனைவியின் மீது சந்தேகமும் வேதவெளிப்பாடும் (-1)
சில ஹதீஸ்களை திரும்பத்திரும்ப வெவ்வேறு கோணங்களில் படிக்கவேண்டும்.. வேறு வழியில்லை..
புகாரி ஹதீஸ் -2581ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:….. அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனைதராதே. ஏனெனில் ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு)எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்….
நபி அவர்களின் இந்த வாக்குமூலம் உங்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்கவில்லயா? (அல்லாஹ்வின் வஹீ (வேதவாக்கு) படுக்கையறையிலும், கம்பளி போர்வைக்கு அடியில், ஆயிஷாவுடன் “……” இருக்கும் போதும் விடாது பின்தொடர்வதன் மர்மம் என்னவோ?)
நமக்குள் இஸ்லாம் இணையதள கட்டுரையிலிருந்து….
முஹம்மத் அவர்கள் முடித்த பல்வேறு திருமணங்களில் ஆய்ஷா மட்டுமே கன்னிப் பெண். மற்ற அனைவரும் இறைத்தூதரின் வயதுக்கு ஒப்பவர்கள் – சிலர் அவர்களின் வயதை விட அதிக வயதை அடைந்தவர்கள். இப்படி ஒரு கன்னிப் பெண்ணுடன் அவர்கள் இல்லறத்தில் சேராமல் போயிருந்தால் அவர்களின் ஆண்மையில் கூட சந்தேகம் எழும். இந்த திருமணத்தின் வழியாக அத்தகைய சந்தேகம் எழாமல் போயிற்று.
உண்மையான வரலாற்றுச் செய்திகளை அறிந்தவர்களால் மட்டுமே இதைப் போன்ற அபாண்டமான புளுகு மூட்டைகளை இனம்காண முடியும். முஹம்மது நபியின் மனைவியர்களின் அழகு, வயது மற்றும் நபி அவர்களின் பாலியல் திறமைகளைப் பற்றியும் முந்தின அத்தியாயத்தில் நான் விளக்கியிருப்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இவர்களது விளக்கத்தின் அபத்தங்களை நீங்களே அறிந்து கொள்ளலாம். மேலும் நபி அவர்கள் தனது ஆண்மையை நிரூபிக்கவே சிறுமியுடன் வாழ்ந்தார்கள் என்கிறார்கள். இவர்கள் இதைப்போன்ற முதிர்ச்சியற்ற விளக்கங்களை என்று நிறுத்துவார்கள்?
திருமணத்திற்கான வயதெல்லை?
இறைவனது ஏற்பாடே ஆயிஸா (ரழி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமான திருமணம் என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. இந்த ஆதாரங்களைக்கொண்டு இவ்வேற்பாட்டினைச் செய்த இறைவனை ஆராய முற்பட வேண்டுமே தவிர அவனது சட்டங்களை ஆராய்வது வீணான கால விரயம் என்றே நான் கருதுகிறேன்.புகாரி ஹதீஸ் -7012ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள் உன்னை நான் மணமுடிபதற்கு முன்னால் இரண்டு முறை கனவில் கண்டேன். (முதல் முறை) வானவர் பட்டுத் துணி ஒன்றில் உன்னைச் சுமந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான் அவரிடம் (அந்தத் துணியை) விலக்குங்கள் என்று சொன்னேன். அவர் விலக்கினார். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின் இதை அவன் நனவாக்குவான் என்று சொல்லிக்கொண்டேன். பிறகு (இரண்டாம் முறையாக) உன்னை வானவர் பட்டுத் துணி ஒன்றில் சுமந்துகொண்டிருப்பதைக் (கனவில்) கண்டேன். அப்போது நான் (இத்துணியை) நீக்குங்கள் என்றேன். அவர் நீக்கினார். அது நீதான். அப்போதும் நான் (மனத்திற்குள்) இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின் இதை அவன் நனவாக்குவான் என்று சொல்லிக்கொண்டேன்(புகாரி 5078, 5125)
(நிச்சயமாக இது கால விரயமல்ல…! வரலாற்றையும், மார்க்கச் சட்ட விளக்கங்களையும் மட்டுமே தெரிந்து கொள்ள விரும்பிய என்னை, ஆயிஷாவின் திருமண வாழ்க்கை தொடர்பான ஹதீஸ்களே இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியது. மார்க்க அறிஞர்களின் மழுப்பலான பதில்களும், அர்த்தமற்ற அச்சுருத்தல்களும் என் ஆராய்ச்சியை தீவிரப்படுத்தியது, பல உண்மைகளை உணர வைத்தது)
ஆழ் மனதில் புதைந்துள்ள நினைவுகளும், ஆசைகளும் கனவுகளாக வெளிப்படுகின்றன என்பது நாம் நன்றாக அறிந்த செய்தி. நபி அவர்கள், ஆயிஷாவை மணமுடிபதற்கு முன்னால் இரண்டு முறை கனவில் கண்டேன் என்கிறார். ஆயிஷாவின் திருமண வயது ஆறு என்பதை நாம் அறிவோம். அப்படியானால் ஆயிஷா சின்னஞ்சிறிய குழந்தையாக இருக்கும்பொழுதே இவரின் பார்வை வேறுவிதமாக இருந்துள்ளது என்பதையே இச்சம்பவம் எடுத்துரைக்கிறது.
இது தெய்வீகத்திருமணம். இத்திருமணம் அல்லாஹ்வின் ஏற்பாடு. நபி அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்கிறார். ஒருவேளை நபி அவர்கள் ஆயிஷா அவர்களை திருமணம் செய்வது, Child sex -ல் ஈடுபடவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தால்? அவ்வாறு இருப்பின், மருமகள் ஜைனப்பை திருமணம் செய்யவும், தேன் அருந்துவதற்கும்(?), சக்களத்தி சண்டையை பஞ்சாயத்து செய்யவும் வஹீ இறக்கிக் கொண்டிருந்த அல்லாஹ் இதற்கு எந்த வஹியையும் அனுப்பவில்லை. அப்படி எந்த ஒரு விளக்கத்தையும் நான் காணவுமில்லை கேள்விப்படவுமில்லை. ஆயிஷா அவர்களிடம் கொண்ட காதலையே மிகுதியாக நபி அவர்களின் செயலில் காணமுடிகிறது.
ஆயிஷா சிறப்பு என்னவென்றால், பெண்களில் ஆயிஷா ஸரீத் என்று தன் ஆசை மனைவி ஆயிஷா அவர்களைப் பற்றி நபி அவர்கள் வர்ணனை செய்கிறார் (புகாரி 3343). ஸரீத் என்பது இறைச்சி மாற்றும் கோதுமை மாவு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் உயர்ரக அரேபிய உணவு.
புஹாரி ஹதீஸ் -2028அபூசயீத் அல்குத்ரீ(ரலி)ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியாவது :நபி (ஸல்)அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும்போது தமது தலையை (வீட்டிலிருக்கும்) என் பக்கம் நீட்டுவார்கள் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதை நான் வாருவேன்.(புகாரி 2028-2031, 2046)
மேலும் தன் மனைவியரிடையே நீதம் செலுத்த தவறியுள்ளார். அவர்களிடையே தன் அன்பையும், பிரியமான ஆதரவையும் மற்ற மனைவியரிடையே சரிவர நிகழ்த்தவில்லை. நபி அவர்களின் நேசம் ஆயிஷா அவர்கள் பக்கமாக சாய்ந்த போக்கை அனுசரித்து மற்ற மனைவியர்தான் விட்டுக் கொடுத்துள்ளனர். தன்னுடைய இறுதிகாலத்தில் ஆயிஷா அவர்களுடன் தங்கியிருப்பதையே மிகவும் விரும்பினார். அவர் மடியிலேயே நபி அவர்களின் உயிரும் பிரிந்தது.
புஹாரி ஹதீஸ் : 4450ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது, நாளை நான் எங்கே இருப்பேன். நாளை நான் எங்கே இருப்பேன் என்று எனது (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்களுடைய (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி) க்கும் இடையே அவர்களது தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக்கொண்டான். (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள், தாம் பல் துலக்கும் குச்சியைத் தம்முடன் கொண்டுவந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். அவரிடம் நான், என்னிடம் இந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுங்கள். அப்துர் ரஹ்மானே! என்று கேட்க, அவர் என்னிடம் அதைக் கொடுத்தார். நான் அதைப் பற்களால் கடித்துமென்று (பல் துலக்க ஏதுவாக மென்மைப் படுத்தி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். (இவ்வகையிலேயே அவர்களுடைய எச்சில் எனது எச்சிலுடன் கலந்தது.) அவர்கள் என் நெஞ்சின் மீது சாய்ந்தபடி அதனால் பல் துலக்கினார்கள்.
(இறந்த தங்களது உறவினர்களை அல்லது நண்பர்களைப் பற்றி நம்மில் பலர் இவ்வாறு சொல்வதுண்டு, அவர் தொழுகையில் ஸஜ்தாவில் இறந்தார், ஹஜ் செய்யும் போது இறந்தார், மதப்போரில் ஷஹீதானார் (உயிர்த்தியாகி) ஒளுவுடன் தூய்மையாக இறந்தார் என்றெல்லாம் அவர்களது மரணத்தைப் பற்றி உயர்வாக கூறுவார்கள். உண்மையில் அவை சுன்னத்தான மரணங்கள் இல்லை. ஆண்கள், விருப்பமான தங்கள் மனைவியின் மார்புக்கு நடுவே அவர் மனைவியின் எச்சிலும் கலந்த நிலையில் மரணிப்பதே நபி வழி மரணம். இதுவே நபி அவர்களின் சிறந்த முன்மாதிரி. பெண்கள் நபிவழிப்படி மரணிப்பது எப்படி?)
மேலும் சில ஹதீஸ்களையும் பார்ப்போம்,
புகாரி ஹதீஸ் -5218உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவதுஎன் அண்டைவீட்டு அன்சாரி நண்பர் நபி (ஸல்)அவர்கள் தம் துணைவியரை விவாகவிலக்குச் செய்துவிட்டதாகத் தந்த தவறான தகவலையடுத்து நான் என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று என்னருமை மகளே! தம் அழகும் தம்மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொண்டுள்ள அன்பும் யாரைக் குதூகலப்படுத்தியுள்ளதோ அவர்-ஆயிஷா-(நபியவர்களிடம் சற்று கூடுதல் உரிமை எடுத்துக் கொள்வது) கண்டு நீ ஏமாந்துவிடாதே! என்று கூறினேன். பிறகு இந்தச் சம்பவத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் எடுத்துரைத்தபோது அவர்கள் புன்னகைத்தார்கள்…(புகாரி 4913,5115, 5218).புகாரி ஹதீஸ் -2581ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:….மீண்டும் உம்மு சலமா (அவர்களின் முறை வந்தபோது) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். உம்மு சலமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் மீண்டும் (இது குறித்துப்) பேசினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனை) தராதே. ஏனெனில் ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்….….பிறகு அந்த மனைவியர் அல்லாஹ்வின் தூதருடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அணுகி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்கள் மனைவிமார்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மக(ளான ஆயிஷா (ரலி) அவர்க)ளின் விஷயத்தில் (தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவியரிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறார்கள் எள்று கூறுமாறு (சொல்லி) அனுப்பினார்கள். (அவ்வாறே) ஃபாத்திமாவும் நபி (ஸல்) அவாகளிடம் பேசினாகள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிக்கவில்லையா என்று கேட்டார்கள். அதற்க அவர்கள் ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்) என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று அவர்களிடம் (தன் சின்னம்மாக்களிடம்) செய்தியைத் தெரிவித்து விட்டார்கள். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் மறுபடியும் போ(ய்ச் சொல்) என்று கூறினார்கள். மீண்டும் (இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம்) செல்ல ஃபாத்திமா அவர்கள் மறுத்து விட்டார்கள். ஆகவே அவர்கள் (தம் சார்பாக) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (சற்று) கடுமையாகப் பேசி உங்கள் மனைவிமார்கள் அபூ கஹாஃபாவின் மகனுடைய (அபூபக்ருடைய) மகளின் (ஆயிஷாவின்) விஷயத்தில் (நடந்து கொள்வது போன்றே பிற மனைவிமார்களிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள் என்று கூறினார்கள். நான் (ஆயிஷா) அமர்ந்து கொண்டிருக்க அவரது குரல் உயர்ந்தது. அவர் என்னைக குறைகூறித் திட்டினார். எந்த அளவுக்கென்றால் அல்லாஹ்வின் தூதர் நான் பதில் பேசுவேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே நான் ஸைனவுக்கு பதில் சொல்லி இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து இவள் (உண்மையிலேயே) அபூபக் ருடைய மகள் தான் என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது ஃபாத்திமா அனுமதி கேட்டு உள்ளே வந்தார் என்று ஆயிஷா (ரலி) கூறியுள்ளார்கள்.
மற்ற மனைவியரை விட நபி அவர்களின் மீது ஆயிஷா அவர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்ள நபி அவர்கள் அனுமதித்தார். அவரும் ஒரே பக்கமாக சாய்ந்திருநதார் என்பதை உமர் மற்றும் பாத்திமா அவர்களின் கூற்று வெளிப்படுத்துகிறது.
ஆயிஷா அவர்களை இச்சையின் காரணமாகவே நபி அவர்கள் திருமணம் செய்தார் என்பதே மார்க்க அறிஞர்களின் கருத்து. ஆதாரம் த்ரீயெம் PRINTERS வெளியிட்ட குர் ஆன் மொழிபெயர்ப்பின் 265 வது Foot Note ஐ காண்க.
புகாரி ஹதீஸ் -2581ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:….அல்லாஹ்வின் தூதர் என்னை எவ்வளவு (ஆழமாக) நேசித்து வந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தார்கள் ஆகவே அன்பளிப்பு செய்பவர் தம்மிடம் பரிசுப் பொருள் ஏதும் இருந்தால் அதை அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்புச் செய்ய அவர் விரும்பினால் அதை தள்ளிப் போட்டு என் வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தங்கும் நாள்) வரும்போது என் வீட்டிற்கு அன்பளிப்பு கொடுத்தனுப்புவார்….
நமக்குள் இஸ்லாம் இணையதள கட்டுரையிலிருந்து….
பால்ய விவாகம் தவறு என்ற சிந்தனையே எட்டாத – தவறாகக்கூட கருதப்படாத – ஒரு காலத்தில் நடந்த திருமணத்தை, அது தவறு என்று தீர்மானிக்கப்பட்ட காலத்தில் (ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு) இருந்துக் கொண்டு ‘அது தவறு’ என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நாம் முதலாவதாக சிந்திக்க வேண்டும்.பால்ய விவாகம் அந்த சமுதாயத்தில் அன்றைக்கு நடைமுறையில் இருந்தாலும் இறைத்தூதரின் இறுதிக் காலத்தில் அத்தகையத் திருமணங்கள் இல்லாமலாக்கப்பட்டு விட்டன… திருமணம் என்பதை வலுவான உடன்படிக்கை என்று இறைவன் குறிப்பிட்டு வசனத்தை இறக்கியவுடன் பால்யவிவாகம் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. எனவே இன்றைக்கு அத்தகைய திருமணங்களுக்கு அனுமதியில்லை. இது குறித்து வாய்ப்பு வரும் போது விளக்குவோம்.
அல்பாக்கவி.com–ன் “அன்னை ஆயிஷா (ரலி)-1″என்ற இணையதள கட்டுரையிலிருந்து….
சிறுமிகளை திருமணம் செய்யலாமா?சிறுவயதில் திருமணம் செய்தததை ஆதாரமாகக் கொண்டு நாமும் பருவமடையாத சிறுமிகளை திருமணம் செய்யலாம் என நாம் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவை திருமணம் புரிந்தது அந்நாட்டு வழமைபடித்தான். பின்னர் திருமணம் தொடர்பான சட்டங்கள் இறைவனால் வழங்கப்பட்டு சிறுமிகளை திருமணம் செய்வது தடை செய்யப்பட்டு விட்டது.
புகாரி ஹதீஸின் விரிவுரையில் இவ்வகை திருமணம் காரணம் முஹம்மது நபி அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி என்ற விளக்கம் காணப்படுகிறது. Child sex அந்தக் கால நடைமுறை இறைவானால் அனுமதிக்கப்பட்ட வழிமுறை எனவே முஹம்மது நபி அவர்கள் செய்தது சரிதான். இவ்வகை திருமணத்திற்கு இன்று அனுமதியில்லை என்றும் விளக்கம் தரப்படுகிறது.
உலமாக்கள் தரும் விசித்திரமான விளக்கங்களில் ஒன்று. சிறப்பு அனுமதி என்று கூறியது யார்? நிச்சயமாக அல்லாஹ் அவ்வாறு எந்த ஒரு செய்தியையும் கூறவில்லை. முஹம்மது நபி அவர்கள் கூறினார் என்றால் தன்னுடய செயல் மிகப்பெரும் தவறு, இந்த செயலை மற்றவர்கள் பின்பற்றினால் உலகில் ஒரு பெண் குழந்தை கூட வாழ முடியாது. எனவே, இது தவறான முன்னுதாரணம் இது தவிர்க்கப்படவேண்டும் என முஹம்மது நபி அவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்று பொருள்படும். இதனால் அவரின் நம்பகத் தன்மை கேள்விக் குறியாகிவிடும். (இவரின் நம்பகத்தன்மையைப்பற்றி அடுத்துவரும் அத்தியாயத்தில் பார்க்கலாம்)
நாகரீகத்தின் வளர்ச்சியால் இன்று தவறாக தெரிகிறது என்றால், கொள்கைகள் காலத்தின் மாற்றத்திற்கு உட்பட்டது என பொருள்படும். அல்லாஹ்விற்கும், நபி அவர்களுக்கும் உலகநாகரீகத்தின் வளர்ச்சி புரியவில்லை, மேலும் அவர்களின் பார்வையில் காலத்தை கடந்த ஞானமில்லை எனவும் பொருள்படும். காலத்தைக் கடந்த ஞானமில்லை என்றால் அவன் எப்படி இறைவனாக இருக்க முடியும்? என்று புதிய கேள்வி பிறக்கும்.
Child sex முஹம்மது நபி அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி என அல்லாஹ்வும் குறிப்பிடவில்லை. என்னைத்தவிர வேறுயாரும் Child sex செய்யக்கூடாது என நபி அவர்களும் கூறவில்லை. நபி அவர்களின் செயலில் நிச்சயம் படிப்பினை இருக்கிறதென்றால், Child sex -ல் அப்படி என்ன படிப்பினை இருக்கிறது?. இன்று வரை யாருக்குமே தெரியாத, விளக்க முடியாத ரகசிய படிப்பினையால் யாருக்கு, என்ன உபயோகம் இருக்க முடியும்?.
மேலும், நமக்குள் இஸ்லாம் இணையதள கட்டுரையில் கூறப்பட்ட விளக்கங்கள், தவறென்பதை இவர்கள் அளித்துள்ள இறுதியான பதில்களும், சமீபத்திலும் சில முஸ்லீம் நாடுகளில் நிகழ்ந்துள்ள திருமணங்கள் உறுதி செய்கிறது.
இஸ்லாமிய வரலாற்றிலிருந்து ஒரு உதாரணம்
நபியின் மரணத்திற்குப் பிறகு (ஹிஜ்ரி 17ல்) நிகழ்ந்த உமர் அவர்களின் குழந்தைத் திருமண செய்தி இது.
Umar ibn al-Khattab, the 3rd caliph of Islam, at the age of 55 married Umm Kulthum bint Ali when she was between 10 and 12 years old. Some sources even say that she was five years old when Umar married her.“‘Umar asked ‘Ali for the hand of his daughter, Umm Kulthum in marriage. ‘Ali replied that she has not yet attained the age (of maturity). ‘Umar replied, ‘By Allah, this is not true. You do not want her to marry me. If she is underage, send her to me’. Thus ‘Ali gave his daughter Umm Kulthum a dress and asked her to go to ‘Umar and tell him that her father wants to know what this dress is for. When she came to Umar and gave him the message, he grabbed her hand and forcibly pulled her towards him. ‘Umm Kulthum asked him to leave her hand, which Umar did and said, ‘You are a very mannered lady with great morals. Go and tell your father that you are very pretty and you are not what he said of you’. With that ‘Ali married Umm Kulthum to ‘Umar.” [In Tarikh Khamees, Volume 2, p. 384 (‘Dhikr Umm Kalthum’) and Zakhair Al-Aqba, p. 168]
ஏமன் நாட்டு பெண்கள் நீதிமன்றம் எட்டு வயது சிறுமிக்கு இதே சாயலில் நடந்த திருமணத்தை நாகரீகமற்ற, மனிதத் தன்மையற்ற செயல் என கருதி ரத்து செய்தது. இதே போன்ற ஒரு நாகரீகமற்ற நிகழ்வு பாகிஸ்தானிலும் நடைபெற்றது. சவுதி அரேபியாவில் எட்டு வயது வயதான சிறுமி, வயதான கணவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். வெளி உலகிற்கு தெரியாமல் இன்னும் எவ்வளவோ உள்ளது.
இஸ்லாத்தில் இல்லாத ஒன்றைச் செய்ததற்காக, பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்டவர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர, இஸ்லாத்தில் இத்தகைய திருமணங்களுக்கு அனுமதியில்லை என்பது உண்மையானால், குழந்தைத் திருமண வழக்கில் விவாகரத்து எப்படி வழங்க முடியும்?
(தொடரும்)
No comments:
Post a Comment