முகம்மதுவின் எச்சில் !!!

உமிழ்தலில் அபிவிருத்தி..


புஹாரி ஹதீஸ்:- 77.
 'நான் ஐந்து வயது சிறுவனாக இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு வாளியிலிருந்து (தண்ணீரை எடுத்துத் தம் வாயில் வைத்து) என் முகத்தில் ஒரு முறை உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன்' என மஹ்மூது இப்னு ரபீவு(ரலி) கூறினார்.
Volume :1 Book :3
189. தாம் குழந்தையாக இருந்தபோது தம் வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து அதை நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் உமிழ்ந்ததாக மஹ்மூத் இப்னு ரபீய்(ரலி) என்னிடம் கூறினார்கள்' என இப்னுஷிஹாப் அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தால் அவர்கள் மீதி வைக்கிற தண்ணீரை எடுத்துக் கொள்வதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்வார்கள்' என்று உர்வா என்பவர் மிஸ்வர் என்பவர் வழியாகவும் மற்ற ஒருவர் வழியாகவும் அறிவித்தார். இவ்விருவரும் ஒருவர் மற்றவரை மெய்ப்பிக்கிறார்கள்.
Volume :1 Book :4
196. 'நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி அதில் தங்களின் இரண்டு கைகளையும் முகத்தையும் கழுவிவிட்டு அதில் உமிழ்ந்தார்கள்' என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
241. 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையில் உமிழ்ந்தார்கள்' என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4

3577. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்
ஹுதைபிய்யா நிகழ்ச்சியின்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். ஹுதைபிய்யா என்பது (மக்காவிலிருந்து மதீனா செல்லும் பாதையில் இருந்த) ஒரு கிணறாகும். நாங்கள் அதிலிருந்து (தண்ணீர்) இறைத்தோம். எந்த அளவுக்கென்றால் அதில் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட நாங்கள்விட்டு வைக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் கிணற்றின் விளிம்பில் உட்கார்ந்தார்கள். பிறகு, சிறிது தண்ணீரை வரவழைத்து வாய் கொப்பளித்தார்கள். பிறகு (தம் வாயிலிருந்து நீரை) கிணற்றுக்குள் உமிழ்ந்தார்கள். நாங்கள் சிறிது நேரம் பொறுத்திருந்தோம். பிறகு, நாங்கள் தாகம் தீரும் வரையிலும், எங்கள் வாகனங்கள் தாகம் தீரும் வரையிலும்... அல்லது எங்கள் வாகனங்கள் (தாகம் தீர்ந்து) திரும்பும் வரையிலும்... நாங்கள் (அக்கிணற்றிலிருந்து தண்ணீர்) இறைத்தோம்.
Volume :4 Book :61

6354. முஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார்.
நான் (நான்கு அல்லது ஐந்து வயது) சிறுவனாக இருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக் கிணற்றிலிருந்து (தண்ணீரை எடுத்துத் தம் வாயில் வைத்து) என் முகத்தில் (பரக்கத்திற்காக) உமிழ்ந்தார்கள்.
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்.
Volume :6 Book :80
6422. முஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார்.
(நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிலிருந்து வாளி ஒன்றில் (ம்ணற்று) நீர் எடுத்து (தம் வாயில் ஊற்றி பரக்கத்திற்காக என் மீது) உமிழ்ந்தது எனக்கு நினைவுண்டு.15
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்.
Volume :7 Book :81


முஸ்லிம் ஹதீஸ்:-

653. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள். (மஹ்மூத் சிறுவராக இருந்தபோது) அவர்களது கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளி (வாயில் செலுத்திய பின்) அவரது முகத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செல்லமாக) உமிழ்ந்தார்கள்.
Book :4
1167. மஹ்மூத் பின் அர்ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
)நான் சிறுவனாக இருந்தபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிலிருந்த (கிணறு ஒன்றிலிருந்து) வாளியில் (தண்ணீர் எடுத்துத் தமது வாயில் ஊற்றி என் முகத்தில்) ஒரு முறை (செல்லமாக) உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன்.
என்னிடம் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நான் "அல்லாஹ்வின் தூதரே! என் பார்வை கெட்டுவிட்டது..." என்று தொடங்கி, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தயாரித்திருந்த கோதுமை மாவுக் கஞ்சி(யை அவர்கள் பருக வேண்டும் என்ற ஆசை)க்காக அவர்களை இருக்கவைத்தோம்" என்று ஹதீஸ் முடிகிறது. அதற்குப் பின்புள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.
Book :5

1214. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் நானும் அவர்களுடன் இருந்தேன். அன்று நாங்கள் இரவு முழுவதும் பயணம் செய்தோம். அதிகாலை நேரம் நெருங்கியபோது நாங்கள் (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தோம். அப்போது எங்களையும் அறியாமல் கண்ணயர்ந்து, சூரியன் உதயமாகும்வரை உறங்கிவிட்டோம். எங்களில் அபூபக்ர் (ரலி) அவர்கள்தாம் முதலில் விழித்தார்கள். (பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்கள் தாமாகவே கண்விழிக்காதவரை அவர்களை நாங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பமாட்டோம். பிறகு உமர் (ரலி) அவர்கள் எழுந்து நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று உரத்த குரலில் தக்பீர் கூறலானார்கள். (உமர் (ரலி) அவர்களின் தக்பீரைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விழித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தியபோது சூரியன் உதித்துக்கொண்டிருப்பதைக் கண்டார்கள் உடனே "இங்கிருந்து புறப்படுங்கள்" என்று கூறினார்கள். பிறகு எங்களுடன் பயணம் புறப்பட்டார்கள். சூரியன் நன்கு பிரகாசித்த பிறகு ஓரிடத்தில் இறங்கி எங்களுக்கு வைகறைத் தொழுகை (ஃபஜ்ர்) தொழுவித்தார்கள்.
அப்போது ஒருவர் எங்களுடன் தொழாமல் மக்களைவிட்டு விலகியிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியதும் அந்த மனிதரிடம் "இன்னாரே! நீங்கள் எங்களுடன் தொழாமலிருக்கக் காரணம் என்ன?" என்று கேட்டார்கள், அதற்கு அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது (குளிப்பதற்கு தண்ணீர் இல்லை)" என்றார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மண்ணில் "தயம்மும்" செய்துகொள்ளுமாறு) உத்தரவிட, அவ்வாறே அவர் மண்ணில் "தயம்மும்" செய்துகொண்டு தொழுதார். பிறகு என்னைத் தம் முன்னிருந்த ஒரு பயணக் குழுவினருடன் சேர்ந்து தண்ணீர் தேடிவருமாறு வேகப்படுத்தினார்கள். அப்போது எங்களுக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டிருந்தது. அவ்வாறே நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெண் தண்ணீர் நிரம்பிய இரு தோல் பைகளுக்கிடையே தன் கால்களைத் தொங்கவிட்டபடி (ஒட்டகத்தில் வந்துகொண்டு) இருந்தாள்.
நாங்கள் அப்பெண்ணிடம், "தண்ணீர் எங்கே (கிடைக்கும்)?" என்று கேட்டோம், அதற்கு அப்பெண், "அது வெகுதொலைவில் உள்ளது. (இங்கு எங்கும்) உங்களுக்குத் தண்ணீர் கிடையாது" என்றாள். நாங்கள் "உன் குடும்பத்தா(ர் தங்கியி)ருக்கும் (இந்த இடத்திற்கும்) தண்ணீரு(ள்ள இடத்து)க்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது?" என்று கேட்டோம். அதற்கு அப்பெண், "ஒரு பகல் ஓர் இரவு பயண தூரம்" என்று பதிலளித்தாள்.
நாங்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீ நட!" என்றோம். அதற்கு அவள், "அல்லாஹ்வின் தூதரா (யார் அவர்)?" என்று கேட்டாள். நாங்கள் என்ன சொல்லியும் அந்தப் பெண்ணை எங்களால் (தண்ணீர் தர) இசைய வைக்கமுடியவில்லை. இறுதியில் அவளை அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துக்கொண்டு வந்தோம். அப்பெண்ணை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் கொண்டு நிறுத்திய போது அவளிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கேட்டார்கள். அவள் எங்களிடம் சொன்னதைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமும் சொன்னாள். மேலும், அவள் (தண்ணீர் சுமக்கும் தனது ஒட்டகத்திலிருந்தபடி) தான் அநாதைக் குழந்தைகளின் தாய் என்று கூறினாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது ஒட்டகத்தை (மண்டியிடச் செய்யுமாறு) கூற, அவ்வாறே அது மண்டியிட்டுப் படுக்கவைக்கப்பட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாய் கொப்புளித்து அந்தத் தண்ணீர் பைகளின் மேவாயினூடே உமிழ்ந்தார்கள். பிறகு அந்த ஒட்டகத்தைக் கிளப்பிவிட (அது எங்கள் அருகில் வந்தது.) நாங்கள் தண்ணீர் அருந்தினோம். அப்போது நாங்கள் நாற்பது பேரும் தாகத்துடன் இருந்தோம். தாகம்தீர நீரருந்தினோம். மேலும், எங்களிடமிருந்த தோல் பாத்திரங்கள், கோப்பைகள் ஆகியவற்றில் தண்ணீரை நிரப்பிக்கொண்டோம். (குளியல் கடமையாகிருந்த) எங்கள் தோழரைக் குளிக்கவைத்தோம். ஆனால், நாங்கள் எங்கள் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் புகட்டவில்லை. (ஆயினும்) அவ்விரு தண்ணீர் பைகளும் ஊதி வெடித்துவிடுமளவுக்கு நீர் நிரம்பியிருந்தது.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களிடமுள்ள (உணவுப் பண்டத்)தைக் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள். நாங்கள் அந்தப் பெண்ணுக்காக ரொட்டித் துண்டுகளையும் பேரீச்சம் பழங்களையும் திரட்டினோம். பின்னர் அவற்றை ஒரு பையில் வைத்துக் கட்டி, அவளிடம் "நீ சென்று உன் குடும்பத்தாருக்கு இதை ஊட்டுவாயாக! உனது தண்ணீரில் சிறிதும் நாங்கள் குறைத்துவிடவில்லை என்பதை அறிந்துகொள்வாயாக!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்பெண் தன் குடும்பத்தாரிடம் சென்று, "நான் மனிதர்களில் மிக வசீகரமான ஒருவரைச் சந்தித்தேன். அல்லது அவர் கூறியதைப் போன்று அவர் ஓர் இறைத்தூதர்தாம். அவரிடம் இப்படி இப்படி (அற்புதம்) நிகழ்ந்தது" என்று கூறினாள். இதையொட்டி அந்தப் பெண்ணால் அவளைச் சுற்றிலும் வாழ்ந்த வீட்டார்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டினான். அவளும் அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
- இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு (நாள்) இரவில் பயணித்தோம். இரவின் இறுதிப் பகுதியில் அதிகாலைக்கு முன்பாக ஓரிடத்தில் ஒரு தூக்கம் தூங்கினோம். ஒரு பயணிக்கு அதைவிட இனிமையான தூக்கம் வேறெதுவும் இருக்க முடியாது. (அந்த ஆழ்ந்த உறக்கத்திலிருந்து) எங்களைச் சூரிய வெப்பம் தான் விழிக்கச் செய்தது.
தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே சிறிது கூடுதல் குறைவு வார்த்தைகளுடன் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த ஹதீஸில் பின்வருமாறும் இடம்பெற்றுள்ளது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் விழித்து மக்களின் நிலையைக் கண்டபோது உரத்த குரலில் தக்பீர் சொன்னார்கள் (உமர் (ரலி) அவர்கள் உரத்த குரலுடையவராயும் நெஞ்சுரம் வாய்ந்தவராயும் இருந்தார்கள்) அவ்வாறு உமர் (ரலி) அவர்கள் உரத்த குரலில் தக்பீர் சொல்வதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்விழித்தார்கள். விழித்தெழுந்தவுடன் அவர்களிடம் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட(உறக்கத்)தைப் பற்றி முறையிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பிரச்சினை இல்லை; இங்கிருந்து புறப்படுங்கள்" என்றார்கள்.
Book :5
3695. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுதைபியாவை நோக்கிச் சென்றோம். அப்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அங்கு (தண்ணீர் குறைவாக இருந்ததால் எங்களுடைய) ஐம்பது (குர்பானி) ஆடுகள் நீர் புகட்டப் படாமல் (தாகத்துடன்) இருந்தன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்த கிணற்றின் சுற்றுச் சுவர்மீது அமர்ந்துகொண்டு பிரார்த்தித்தார்கள். அல்லது அதனுள் உமிழ்ந்தார்கள். உடனே கிணற்றில் நீர் மட்டம் உயர்ந்தது. உடனே நாங்கள் நீர் அருந்தினோம். எங்கள் கால் நடைகளுக்கும் நீர் புகட்டினோம்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்த மரத்துக்குக் கீழே உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) வாங்குவதற்காக எங்களை அழைத்தார்கள். மக்கள் அனைவருக்கும் முன்பாக (முதலில்) நானே அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். பிறகு ஒவ்வொருவராக (வந்து) உறுதிமொழி அளித்தனர்.
மக்களில் பாதிப்பேரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உறுதிமொழி வாங்கி) இருந்தபோது "சலமா! உறுதிமொழி அளிப்பாயாக!" என்று (என்னிடம்) கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் மக்கள் அனைவருக்கும் முன்பாக தங்களிடம் உறுதிமொழி அளித்துவிட்டேன்" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மீண்டும் (ஒரு முறை உறுதிமொழி அளிப்பாயாக)" என்று கூறினார்கள்.
அப்போது என்னிடம் ஆயுதம் எதுவும் இல்லாமலிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். எனக்கு "சிறிய தோல் கேடயம் ஒன்றை” அல்லது "தோல் கேடயம் ஒன்றை” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். பிறகு என்னிடம் உறுதிமொழி பெற்றார்கள்.
மக்களில் இறுதி நபரிடம் அவர்கள் (உறுதிமொழி பெற்றுக்கொண்டு) இருந்தபோது, "சலமா! என்னிடம் நீ உறுதிமொழி அளிக்கக் கூடாதா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் மக்கள் அனைவருக்கும் முன்பாகவும் மக்களில் பாதிப்பேராகவும் தங்களிடம் உறுதிமொழி அளித்துவிட்டேன்" என்று சொன்னேன்.
"மீண்டும் (ஒரு தடவை உறுதிமொழி அளிப்பாயாக)" என்று சொன்னார்கள். நான் மூன்றாவது தடவையாக உறுதிமொழி அளித்தேன்.
பிறகு என்னிடம், "சலமா! உனக்கு நான் வழங்கிய உனது "சிறிய தோல் கேடயம்” அல்லது "தோல் கேடயம்" எங்கே?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார். அவரிடம் ஆயுதம் எதுவும் இல்லாமலிருப்பதை நான் கண்டேன். எனவே, அதை அவருக்குக் கொடுத்துவிட்டேன்" என்று சொன்னேன்.
அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். மேலும், "நீர் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதரைப் போன்றவர் ஆவீர். அவர் "இறைவா! எனக்காக ஒரு நண்பரைக் கிடைக்கச் செய்வாயாக! அவர் என் உயிரைவிட எனக்கு மிகவும் பிரியமானவராக இருக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தார். (அவரைப் போன்றே நீரும் உம்மைவிட உம் தந்தையின் சகோதரருக்கு முன்னுரிமை அளித்துள்ளீர்)" என்று கூறினார்கள்.
பிறகு (மக்கா) இணைவைப்பாளர்கள் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்வதாக எங்களுக்குத் தூது விட்டார்கள். இதனால், (நாங்களும் அவர்களும்) ஒருவர் பகுதிக்கு மற்றவர் சென்றுவர முடியும். நாங்கள் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டோம்.
நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களுக்கு உதவியாளராக இருந்தேன். அவரது குதிரைக்குத் தண்ணீர் புகட்டுவேன். அதைத் துடைத்துத் துப்புரவு செய்வேன். அவருக்கு ஊழியமும் செய்வேன். அவர் தரும் உணவை உண்டுகொள்வேன். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் எனது குடும்பம், சொத்து (சுகங்)கள் அனைத்தையும் விட்டுவிட்டு, நான் நாடு துறந்து (மதீனாவுக்கு) வந்திருந்தேன்.
நாங்களும் மக்காவாசிகளும் சமாதான ஒப்பந்தம் செய்து, எங்களில் ஒருவர் மற்றொருவருடன் கலந்துறவாடிக்கொண்டபோது, நான் ஒரு மரத்தை நோக்கி வந்து, அதன் (அடிப்பாகத்தில் இருந்த) முற்களை அகற்றிவிட்டு அதற்குக் கீழே படுத்துக்கொண்டேன்.
அப்போது மக்காவாசிகளான நான்கு இணைவைப்பாளர்கள் என்னிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசத் தொடங்கினர். அவர்கள் மீது எனக்குக் கோபம் வந்தது. உடனே மற்றொரு மரத்துக்கு நான் மாறிக்கொண்டேன். அந்த நால்வரும் தம் ஆயுதங்களை (அந்த மரத்தில்) தொங்கவிட்டுவிட்டு அவர்களும் படுத்துக்கொண்டனர்.
இந்நிலையில், யாரோ ஒருவர் அந்தப் பள்ளத்தாக்கின் கீழேயிருந்து "முஹாஜிர்களுக்கு ஏற்பட்ட நாசமே! (நம் தோழர்) இப்னு ஸுனைம் கொல்லப்பட்டுவிட்டார் (ஒப்பந்த மீறல் நடைபெற்றுவிட்டது)" என்று உரக்க அறிவித்தார். உடனே நான் எனது வாளை உருவிக் கொண்டு, படுத்திருந்த அந்நால்வரைத் தாக்கினேன். அவர்களின் ஆயுதங்களை எடுத்து ஒரே கட்டாக என் கையில் வைத்துக்கொண்டேன்.
பிறகு "முஹம்மத் (ஸல்) அவர்களது முகத்தைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக! உங்களில் யாரேனும் தலையைத் தூக்கிப் பார்த்தால் அவரது கண் உள்ள பகுதியிலேயே அடிப்பேன்" என்று கூறினேன்.
பின்னர் அவர்களை இழுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் "அபலாத்” குலத்தைச் சேர்ந்த "மிக்ரஸ்” எனப்படும் ஒரு மனிதரை பிடித்துக்கொண்டு, துணி விரிக்கப்பட்ட குதிரையொன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடன் எழுபது இணைவைப்பாளர்களும் இருந்தார்கள்.
அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு "அவர்களை விட்டு விடுங்கள். (ஒப்பந்த மீறல்) குற்றம் அவர்களிடமிருந்தே தொடங்கி மீண்டும் ஏற்பட்டதாக இருக்கட்டும்" என்று கூறி, அவர்களை மன்னித்து விட்டுவிட்டார்கள்.
அல்லாஹ் (இது தொடர்பாகவே), "மக்காவின் மையப் பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின் உங்கள் கைகளை அவர்களிடமிருந்தும், அவர்கள் கைகளை உங்களிடமிருந்தும் அவனே தடுத்தான். அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருப்பதை உற்றுநோக்குபவனாக இருக்கின்றான்" (48:24) எனும் வசனத்தை அருளினான்.
பிறகு நாங்கள் மதீனாவை நோக்கித் திரும்பினோம். அப்போது ஓரிடத்தில் நாங்கள் இறங்கித் தங்கினோம். (அந்த இடத்திலிருந்த) எங்களுக்கும் இணைவைப்பாளர்களான "பனூ லஹ்யான்” குலத்தாருக்கும் இடையே ஒரு மலை மட்டுமே இருந்தது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(எதிரிகளைக் கண்காணிப்பதற்காக) இன்றிரவு இம்மலைமீது ஏறுபவரின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக!" எனப் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய தோழர்களுக்கும் உளவாளி போன்று (அவர் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்). அன்றிரவு நான் இரண்டு அல்லது மூன்று முறை அம்மலைமீது ஏறினேன்.
பிறகு நாங்கள் மதீனாவுக்கு வந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் (பால்) ஒட்டகங்களைத் தம் அடிமையான ரபாஹ் (ரலி) அவர்களுடன் அனுப்பிவைத்தார்கள். அவருடன் நானும் இருந்தேன். தல்ஹா (ரலி) அவர்களின் குதிரையை ஓட்டிக்கொண்டு, ஒட்டகங்களுடன் அந்தக் குதிரைக்கும் தண்ணீர் புகட்டி மேய்ச்சல் நிலத்துக்கு அனுப்புவதற்காக நானும் புறப்பட்டுச் சென்றேன்.
காலையில் அப்துர் ரஹ்மான் அல்ஃபஸாரீ என்பான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒட்டகங்களைத் திடீரெனத் தாக்கி, அவை அனைத்தையும் ஓட்டிச் சென்றுவிட்டான். அவற்றின் மேய்ப்பாளரையும் கொன்றுவிட்டான்.
உடனே நான், "ரபாஹே! (இதோ) இந்தக் குதிரையைப் பிடித்துச் சென்று, தல்ஹா பின் உபை தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சேர்த்துவிடு. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அவர்களின் கால்நடைகளை எதிரிகள் தாக்கிக் கொள்ளையடித்துச் சென்று விட்டனர் எனத் தெரிவித்துவிடு" என்று கூறினேன்.
பிறகு ஒரு மலையின் உச்சியில் ஏறி மதீனாவை முன்னோக்கி நின்றுகொண்டு, "உதவி! உதவி! அதிகாலை ஆபத்து! (யா ஸபாஹா!)" என மூன்று முறை உரத்த குரலில் கூவினேன். பிறகு அந்தக் (கொள்ளைக்) கூட்டத்தைப் பின்தொடர்ந்து சென்று, அவர்கள்மீது அம்பெய்தவனாக விரட்டிச் சென்றேன். அப்போது நான்,
"அக்வஇன் மகன் நான்
இன்று அற்பர்களின் (அழிவு) நாள்"
என யாப்புக் கவிதை பாடினேன். பிறகு அவர்களில் ஒருவனை நெருங்கி அவனது ஒட்டகச் சேணத்தின் மீது அம்பெய்தேன். அதன் கூர்முனை சேணத்தில் நுழைந்து அவனது தோளில் பாய்ந்தது. நான்,
"இதோ வாங்கிக்கொள்;
அக்வஇன் மகன் நான்;
இன்று அற்பர்களின் (அழிவு) நாள்"
என்று (பாடியபடி) கூறினேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு அவர்கள்மீது அம்பெய்துகொண்டும் அவர்களின் குதிரைகளை வெட்டி வீழ்த்திக்கொண்டும் நான் இருந்தேன். என்னை நோக்கிக் குதிரை வீரர் எவரேனும் திரும்பி வந்தால், நான் ஏதேனும் மரத்தை நோக்கிச் சென்று அதற்குக் கீழே அமர்ந்துகொண்டு, அவன்மீது அம்பைப் பாய்ச்சினேன். அவனது குதிரையை வெட்டி வீழ்த்தினேன். குறுகிய மலையிடுக்கு தென்பட்டபோது, அதன் இடுக்கில் அவர்கள் நுழைந்து கொண்டனர். நானும் அம்மலை மீதேறிக்கொண்டு, கல்லால் அவர்களை விரட்டியடித்தேன்.
இவ்வாறு (விரட்டியடித்த வண்ணம்) அவர்களை நான் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். இறுதியில் அல்லாஹ் படைத்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒட்டகங்கள் அனைத்தையும் என் முதுகுக்குப் பின்னால் கொண்டு வந்துவிட்டேன். அவர்கள் அவற்றை என்னிடமே விட்டுவிட்டு விரைந்துகொண்டிருந்தனர்.
பிறகு மீண்டும் அவர்கள்மீது அம்பெய்த வண்ணம் அவர்களைப் பின்தொடர்ந்தேன். அவர்கள் (ஓடிய வேகத்தில்) முப்பது சால்வைகளையும் முப்பது ஈட்டிகளையும் விட்டு விட்டு ஓடினர். அவர்கள் விட்டுச் சென்ற ஒவ்வொரு பொருள்மீதும் அல்லாஹ்வின் தூதரும் அவருடைய தோழர்களும் அறியும் விதத்தில் ஓர் அடையாளக் கல்லை வைத்துக் கொண்டேபோனேன்.
பிறகு ஒரு குறுகலான மலைக் கணவாய்க்கு அவர்கள் சென்றனர். அங்கு பத்ர் அல்ஃபஸாரீ என்பவனின் மகனிடம் அவர்கள் போய்ச்சேர்ந்து, அமர்ந்து காலை உணவை உட்கொள்ளலாயினர். நான் ஒரு மலை உச்சியில் அமர்ந்துகொண்டேன்.
அப்போது அந்த ஃபஸாரீ, "நான் காணும் இந்தக் காட்சிகள் என்ன?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "இதோ இவனிடமிருந்து கடும்துயரத்தை நாங்கள் சந்தித்துவிட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! அதிகாலை இருளிலிருந்து அவன் எங்களை விட்டு விலகவே இல்லை. எங்களை நோக்கி அம்பெய்து எங்கள் கையிலிருந்த எல்லாவற்றையும் பறித்துக்கொண்டான்" என்று கூறினர்.
அதற்கு அந்த ஃபஸாரீ, "உங்களில் நான்கு பேர் அவனை நோக்கிச் செல்லட்டும்" என்று கூறினான்.
அவர்களில் நான்கு பேர் நானிருந்த மலைமீது ஏறினர். அவர்கள் எனது பேச்சைக் கேட்கும் இடத்திற்கு வந்தபோது,நான், "என்னை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டேன்.
அவர்கள் "இல்லை, நீ யார்?" என்று கேட்டார்கள். "நான் சலமா பின் அல்அக்வஉ. முஹம்மத் (ஸல்) அவர்களது முகத்தைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக! உங்களில் யாரேனும் ஒருவரை நான் தேடிப் புறப்பட்டால் அவரை நான் பிடிக்காமல் விடமாட்டேன். (அதே சமயத்தில்) உங்களில் யாரேனும் ஒருவர் என்னைத் தேடிப் புறப்பட்டால் அவரால் என்னைப் பிடிக்க முடியாது" என்று நான் கூறினேன். அவர்களில் ஒருவன், "நானும் (அவ்வாறே) கருதுகிறேன்" என்றான்.
பிறகு அவர்கள் அனைவரும் திரும்பிச் சென்றனர். நான் அந்த இடத்திலிருந்து நகர்ந்திருக்கக்கூட இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குதிரைப் படையினர் மரங்களிடையே புகுந்து வருவதை நான் பார்த்தேன். அவர்களில முதல் ஆளாக அக்ரம் அல்அசதீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவருக்குப் பின்னால் அபூகத்தாதா அல்அன்சாரீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவரைத் தொடர்ந்து மிக்தாத் பின் அல்அஸ்வத் அல்கிந்தீ (ரலி) அவர்கள் இருந்தார்கள்.
நான் அக்ரம் (ரலி) அவர்களது குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டேன். அவர்கள் நால்வரும் புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருந்தனர். நான் "அக்ரமே! அவர்களிடம் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் வந்து சேர்வதற்கு முன் (தனியாக வரும்) உம்மை இவர்கள் பிடித்துவிட வேண்டாம்" என்று கூறினேன்.
அதற்கு அக்ரம் (ரலி) அவர்கள், "சலமா! நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவராயிருந்தால், சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை என நீர் அறிந்திருந்தால் எனக்கும் வீர மரணத்துக்குமிடையே குறுக்கிடாதீர்!" என்று கூறினார்.
ஆகவே, அவரை நான் விட்டுவிட்டேன். அவரும் அப்துர் ரஹ்மான் அல்ஃபஸாரியும் (வாள் முனையில்) சந்தித்துக்கொண்டனர். அக்ரம் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மானின் குதிரையை வெட்டிவிட்டார்கள். அப்துர் ரஹ்மான்,அக்ரம் (ரலி) அவர்கள்மீது ஈட்டியைப் பாய்ச்சி அவர்களைக் கொன்றுவிட்டான்.
முஹம்மத் (ஸல்) அவர்களின் முகத்தைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக! பிறகு நான் காலால் நடந்தே அவர்களைப் பின்தொடர்ந்தேன். எனக்குப் பின்னால் வந்த முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களையோ,அவர்களது (குதிரை கிளப்பிய) புழுதியையோ நான் பார்க்கவில்லை.
இறுதியில் அ(ந்தப் பகை)வர்கள் சூரியன் மறைவதற்கு முன் ஒரு கணவாயை அடைந்தனர். அங்கு ஒரு நீர்நிலை இருந்தது. அதற்கு "தூ கரத்” எனப் பெயர் சொல்லப்பட்டது. அவர்கள் தாகத்துடன் இருந்ததால் அதில் நீர் அருந்தச் சென்றனர். தங்களுக்குப் பின்னால் நான் ஓடி வருவதை அவர்கள் கண்டதும் அந்த இடத்தைவிட்டு வெளியேறும் நிலைக்கு அவர்கள் உள்ளாயினர். அவர்கள் ஒரு துளி நீரைக்கூட சுவைக்கவில்லை.
அவர்கள் அங்கிருந்து கிளம்பி ஒரு மலைக் குன்றில் விரைந்து சென்றனர். நான் வேகமாக ஓடி அவர்களில் ஒருவனைச் சென்றடைந்தேன். அவனது தோள் பட்டையிலுள்ள மெல்லிய எலும்பின் மீது,
"இதோ இதை வாங்கிக்கொள்
அக்வஇன் மகன் நான்
இன்று அற்பர்களின் (அழிவு) நாள்"
என்று கூறியவாறு ஓர் அம்பைப் பாய்ச்சினேன். அவன், "உன் தாய் உன்னை இழக்கட்டும்! காலையில் வந்த அக்வஆ நீ?" என்று கேட்டான். நான் "ஆம். தனக்குத் தானே பகைவன் ஆகிவிட்டவனே! காலையில் சந்தித்த உன் அக்வஉதான் நான்" என்றேன்.
அக்கூட்டத்தார் ஒரு மலைக் குன்றின் மீது இரு குதிரைகளை விட்டுவிட்டு ஓடி விட்டனர். நான் அவ்விரு குதிரைகளையும் பிடித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓட்டி வந்தேன்.
அப்போது (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் (ரலி) அவர்கள் தோல் அடுக்குப் பாத்திரம் ஒன்றை என்னிடம் கொண்டுவந்தார். அதில் தண்ணீர் கலந்த பால் சிறிதளவு இருந்தது. இன்னொரு தோல் அடுக்குப் பாத்திரமும் அவரிடம் இருந்தது. அதில் தண்ணீர் இருந்தது. நான் அங்கத் தூய்மை (உளூ) செய்தேன்; அருந்தினேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அக்கூட்டத்தாரை நான் விரட்டியடித்த நீர்நிலை அருகில் அவர்கள் இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த ஒட்டகங்களையும் அந்த இணைவைப்பாளர்களிடமிருந்து நான் கைப்பற்றிய ஈட்டிகள், சால்வைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்திருந்தார்கள்.
அப்போது பிலால் (ரலி) அவர்கள், அக்கூட்டத்தாரிடமிருந்து நான் விடுவித்த ஒட்டகங்களில் ஒன்றை அறுத்து அதன் ஈரலையும் திமிலையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகப் பொரித்துக்கொண்டிருந்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். நான் (நம்) மக்களில் நூறு பேரைத் தேர்ந்தெடுத்து (அழைத்துக்கொண்டு) அக்கூட்டத்தாரைப் பின் தொடர்ந்து செல்கிறேன். அவர்களில் இறப்புச் செய்தி அறிவிக்கக்கூட ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்கள் அனைவரையும் கொன்றுவிடுகிறேன்" என்று கூறினேன்.
அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அங்கிருந்த நெருப்பின் வெளிச்சத்தில் அவர்களின் கடைவாய்ப் பற்கள் தெரிந்தன. அப்போது அவர்கள், "சலமா! உன்னால் அதைச் செய்ய முடியும் என நீ கருதுகிறாயா?"என்று கேட்டார்கள். நான் "ஆம் (செய்வேன்), தங்களைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக!" என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தற்போது அக்கூட்டத்தார் ஃகத்ஃபான் பகுதியில் விருந்து அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்" என்று (இறையறிவிப்பின் மூலம்) கூறினார்கள்.
அப்போது ஃகத்ஃபான் பகுதியிலிருந்து ஒரு மனிதர் வந்தார். அவர் "அக்கூட்டத்தாருக்காக இன்ன மனிதர் இறைச்சி ஒட்டகமொன்றை அறுத்(து விருந்தளித்)தார். அவர்கள் அந்த ஒட்டகத்தின் தோலை உரித்துக்கொண்டிருந்தபோது (பாலைவன வெளியில்) புழுதி கிளம்புவதைக் கண்டனர். உடனே "அக்(குதிரைப் படைக்) கூட்டம் வந்துவிட்டது” என்று கூறியவாறு வெருண்டோடிவிட்டனர்" என்று கூறினார்.
காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்றைய தினத்தில் நம் குதிரைப் படையில் மிகச் சிறந்த வீரர் அபூகத்தாதா ஆவார். நம் காலாட் படையில் மிகச் சிறந்த வீரர் சலமா ஆவார்" என்று (பாராட்டிக்) கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குதிரைப்படை வீரருக்கான ஒரு (பரிசுப்) பங்கும், காலாட்படை வீரருக்கான ஒரு பங்குமாக இரு பங்குகள் சேர்த்து (போர்ச் செல்வமாக) எனக்கு வழங்கினார்கள்.
பிறகு தமது "அள்பா” எனும் ஒட்டகத்தில் தமக்குப் பின்னால் என்னை அமரச் செய்து மதீனா நோக்கித் திரும்பினார்கள்.
நாங்கள் வந்துகொண்டிருந்தபோது (ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.) அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். அவரை ஓட்டப்பந்தயத்தில் யாராலும் வெல்ல முடியாது. அவர், "மதீனாவரை என்னுடன் போட்டியிட்டு ஓடுபவர் யார்? போட்டியிட்டு ஓடுபவர் யார்?" என்று திரும்பத் திரும்பக் கூறலானார்.
அவரது குரலைக் கேட்ட நான் (அவரிடம்), "மரியாதைக்குரியவர்களை நீ மதிக்கமாட்டாயா? சிறப்புக்குரியவர்களை நீ அஞ்சமாட்டாயா?" என்று கேட்டேன். அவர் "இல்லை, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களாக இருந்தால் தவிர" என்று கூறினார்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! என்னை விடுங்கள்; அந்த மனிதரை நான் வெல்கிறேன்" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உன் விருப்பம்" என்றார்கள்.
நான், "முதலில் நீ ஓடு” என்று கூறிவிட்டு, என் கால்களை உதறிவிட்டு, குதித்து ஓடினேன். ஓடிக்கொண்டிருந்தபோது ஒன்றிரண்டு மேடுகளில் ஏறியபோது, ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி மூச்சு வாங்கி ஓய்வெடுத்தேன். பிறகு அவருக்குப் பின்னால் ஓடினேன். மறுபடியும் ஒன்றிரண்டு மேடுகளில் ஏறியபோது ஓட்டத்தை மட்டுப்படுத்தினேன்.
பிறகு அவரைச் சென்றடைவதற்காக (மேட்டில்) ஏறினேன். அப்போது அவருடைய தோள்களுக்கிடையே அடித்து, "நீ தோற்கடிக்கப்பட்டாய், அல்லாஹ்வின் மீதாணையாக!" என்றேன். அவர், "நானும் (அவ்வாறே) எண்ணுகிறேன்" என்று கூறினார். மதீனாவரை அவருக்கு முன்பாகவே நான் ஓடிவந்தேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! (மதீனாவிற்கு வந்த பின்) நாங்கள் மூன்று இரவுகள் மட்டுமே தங்கியிருந்தோம். (நான்காம் நாள்தான்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி(ப் போருக்காக)ப் புறப்பட்டோம். அப்(பயணத்தின்)போது, என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) பின்வரும் யாப்புக் கவிதையைப் பாடினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக!
அல்லாஹ் மட்டும் இல்லாவிட்டால்
நாங்கள்
நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்
தானதர்மம் செய்திருக்கவுமாட்டோம்
தொழுதிருக்கவுமாட்டோம்
(இறைவா!) நாங்கள்
உன் கருணையிலிருந்து
தேவையற்றவர்கள் அல்லர்.
(போர் முனையில் எதிரிகளை)
நாங்கள் சந்திக்கும்போது
எங்கள் பாதங்களை
உறுதிப்படுத்துவாயாக!
எங்கள்மீது
அமைதியைப் பொழிவாயாக!
இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "நான் ஆமிர்" என்றார்கள். "உம்முடைய இறைவன் உமக்கு மன்னிப்பருள்வானாக" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்காக (போரில் தனிப்பட்ட முறையில்) அவரது பெயர் குறிப்பிட்டுப் பாவமன்னிப்பு வேண்டுவார்களேயானால், அவர் (அப்போரில்) வீர மரணம் அடையாமல் இருந்ததில்லை.
ஆகவே, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், தமது ஒட்டகத்தின் மீதிருந்தவாறு, "அல்லாஹ்வின் தூதரே! ஆமிர் (நீண்ட நாள் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களைப் பயனடையச் செய்யக்கூடாதா?" என்று கேட்டார்கள். பிறகு நாங்கள் கைபர் சென்றடைந்ததும் கைபர்வாசிகளின் மன்னன் மர்ஹப் தனது வாளை மேலும் கீழுமாக அசைத்துக்கொண்டே,
"கைபருக்குத் தெரியும்
நான்தான் மர்ஹப் என்று
(போருக்கு ஆயத்தமாய் என்றும்)
முழு ஆயுதங்கள் தரித்த பண்பட்ட வீரன் என்று.
போர்கள் மூண்டு
கொழுந்துவிட்டு எரியும்போது
(சில நேரம் நான் ஈட்டியெறிவேன்
சில நேரம் வாள் வீசுவேன்)"
என்று பாடினான்.
அப்போது என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் முன்னே வந்து,
"கைபருக்குத் தெரியும் நான் ஆமிர் என்று
போர்த் துன்பங்களை எதிர்கொள்ளும்
ஆயுதங்கள் தரித்த சரியான வீரன் என்று"
என்று பாடினார்கள். பிறகு இருவரும் மோதிக்கொண்டனர். அப்போது மர்ஹபின் வாள், ஆமிர் (ரலி) அவர்களின் கேடயத்தைத் தாக்கியது. ஆமிர் (ரலி) அவர்கள் (குனிந்து) அவனது கீழ் பகுதியில் (தமது வாளால்) வெட்டப்போனார்கள். அப்போது அவரது வாள் அவரையே திருப்பித் தாக்கிவிட்டது; அவரது கை நரம்பைத் துண்டித்துவிட்டது. அதிலேயே அவரது இறப்பும் ஏற்பட்டது.
பிறகு நான் புறப்பட்டுச் சென்றேன். அப்போது நபித்தோழர்களில் சிலர் "ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டன. அவர் தற்கொலை செய்துகொண்டார்" என்று பேசிக் கொண்டிருந்தனர்.
உடனே நான் அழுதுகொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டனவா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவ்வாறு) யார் சொன்னது?" என்று கேட்டார்கள். "தங்கள் தோழர்களில் சிலர்" என்று பதிலளித்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவ்வாறு சொன்னவர் பொய்யுரைத்துவிட்டார். அவருக்கு அவரது நன்மை இருமுறை கிடைக்கும்" என்று கூறினார்கள்.
பிறகு கண்வலியுடன் இருந்த அலீ (ரலி) அவர்களிடம் (அவர்களை அழைத்துவர) என்னை அனுப்பிவைத்தார்கள்.
(என்னை அனுப்புவதற்கு முன்) "நான் (நாளை) இஸ்லாமிய(ச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் கொடுப்பேன். அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்றனர்" என்று கூறினார்கள்.
நான் அலீ (ரலி) அவர்களிடம் சென்று கண் வலியுடனிருந்த அவர்களை அழைத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அலீ (ரலி) அவர்களின் கண்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமிழ்ந்தார்கள். அவர்கள் கண் குணமடைந்தார்கள். பிறகு அலீ (ரலி) அவர்களிடம் இஸ்லாமிய(ச் சேனையின்) கொடியைக் கொடுத்தார்கள். கைபரின் மன்னன் மர்ஹப் புறப்பட்டு வந்து,
"கைபருக்குத் தெரியும் நான்தான் மர்ஹப் என்று
(போருக்கு ஆயத்தமாய் என்றும்)
ஆயுதங்கள் தரித்த பண்பட்ட வீரன் என்று.
போர்கள் மூண்டு கொழுந்துவிட்டு எரியும்போது
(சில வேளை நான் ஈட்டியெறிவேன்
சில வேளை நான் வாள் வீசுவேன்)"
என்று பாடினான்.
அதற்கு அலீ (ரலி) அவர்கள்,
என் தாயாரால் ஹைதர் (சிங்கம்)
எனப் பெயர் சூட்டப்பட்டவன் நான்
அருவருப்பான தோற்றமுடைய
அடர்வனத்தின் சிங்கம் நான்
சந்தர் எனும் பேரளவையால்
அளப்பதைப் போன்று
அவர்களைத் தாராளமாக அளந்திடுவேன்
(ஏராளமான எதிரிகளை
வெட்டி வீழ்த்துவேன்)"
என்று பாடிக்கொண்டே மர்ஹபின் தலையில் ஓங்கி அடித்து, அவனை வீழ்த்தினார்கள். பிறகு அலீ (ரலி) அவர்களின் கரங்களாலேயே (கைபரின்) வெற்றியும் கிட்டியது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book :32
4144. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ் (போருக்காகக் குழி) தோண்டப்பட்டுக்கொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வயிறு (பசியால்) ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் என் மனைவியிடம் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டியிருந்ததை நான் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உணவு) இருக்கிறதா?" என்று கேட்டேன்.
உடனே என் மனைவி என்னிடம் ஒரு பையைக் கொண்டுவந்தார். அதில் ஒரு "ஸாஉ" அளவு தொலி நீக்கப்படாத கோதுமை இருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக் குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தார். நான் (அறுத்து) முடித்தபோது அவரும் (அரைத்து) முடித்துவிட்டார். மேலும், அதைத் துண்டுகளாக்கி அதற்கான பாத்திரத்தில் இட்டேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். என் மனைவி, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப்படுத்திவிட வேண்டாம் ("நம்மிடம் உணவு குறைவாகவே இருக்கிறது" என்று கூறிவிடுங்கள்)" என்று சொல்லியிருந்தார்.
எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று இரகசியமாக "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்தோம். எங்களிடம் இருந்த ஒரு "ஸாஉ" அளவு தொலி நீக்கப்படாத கோதுமையை (என் மனைவி) அரைத்து வைத்துள்ளார். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள்" என்று அழைத்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரத்த குரலில், "அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "நான் வரும்வரை நீங்கள் பாத்திரத்தை (அடுப்பிலிருந்து) இறக்க வேண்டாம். குழைத்துவைத்துள்ள மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம்" என்று கூறினார்கள். நான் என் இல்லத்திற்கு வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்துக்கொண்டு முன்னால் வந்துகொண்டிருந்தார்கள்.
நான் என் மனைவியிடம் வந்துசேர்ந்தேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நூற்றுக்கணக்கான மக்களுடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று) "(எல்லாம்) உங்களால்தான்; உங்களால்தான்" என என்னைக் கடிந்துகொண்டார். உடனே நான் "நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்ன விஷயத்தை நான் அவர்களிடம் தெரிவித்துவிட்டேன்" என்று சொன்னேன்.
பிறகு என் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குழைத்த மாவைக் கொண்டு வந்து கொடுத்தார். அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இலேசாக உமிழ்ந்து, பெருக்கம் (பரக்கத்) ஏற்பட பிரார்த்தித்தார்கள். பிறகு (இறைச்சிப்) பாத்திரத்தை நோக்கிச் சென்று, அதில் இலேசாக உமிழ்ந்து பெருக்கம் (பரக்கத்) ஏற்படப் பிரார்த்தித்தார்கள்.
பிறகு (என் மனைவியிடம்), "ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழைத்துக்கொள். உன்னுடன் (சேர்ந்து) அவளும் ரொட்டி சுடட்டும்! உங்கள் (இறைச்சிப்) பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக்கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்துவிடாதே" என்று கூறினார்கள். அ(ங்கு வந்த)வர்கள் ஆயிரம் பேர் இருந்தனர்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் அனைவரும் உண்டுவிட்டு, அந்த உணவை (சிறிதும் குறையாமல்) அப்படியே விட்டுவிட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் பாத்திரம் முன்பு போலவே (சிறிதும் குறையாமல்) சப்தத்துடன் கொதித்துக்கொண்டிருந்தது. மேலும், நாங்கள் குழைத்த மாவும் (சிறிதும் குறைந்துவிடாமல்) முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக்கொண்டிருந்தது.
Book :36

முகம்மது இறைத்தூதரா?

புஹாரி :- 2229.
அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்;
”நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” என்று கூறினார்கள்.

முகமதின் போர்வீரர்கள் கற்பழிப்பு செய்கிறார்கள். யாரை? போரில் பிடிக்கப்பட்ட பெண்கைதிகளை. 

 அன்றுதான் தன் கணவன்மார்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் கொல்லப்படுவதை கண்ணால் பார்த்திருக்கிறார்கள். அன்றே முகமதின்  போர்வீரர்கள் அந்த பெண்களை கற்பழித்து அந்த பெண்களுக்கு இன்பம் தருகிறார்கள்.
இந்த வேளையில் அபு சயீத் (ரலி) அவ்ர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. இந்த பெண்களை கற்பழித்து அந்த பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், இந்த பெண்களை விற்று பணம் பண்ண முடியாதே என்று கவலைப்படுகிறார்.
ஒரு குலத்தார் மீது போர் தொடுத்து அவர்களது ஆண்களை கொன்று பெண்களை சிறைபிடிக்க வேண்டும் என்பது முகமதின் வழிமுறை. அவ்வாறு செய்திருக்கும் இந்த நிகழ்வில் அதுவரை சுதந்திர பெண்களாக இருந்த அவர்கள் அடிமைகளாக விற்கப்பட தகுதியுடையவர்களாக ஆகிவிடுகிறார்கள். இதுவும் முகமதின் வழிமுறை. இது தவறு என்று இன்று நாம் கருதக்கூடாது. இப்படிப்பட்ட முக்கியமான அறிவுரையை நாம் உதறித்தள்ளி விட முடியுமா? சிந்தியுங்கள் என்று அல்லாஹ் அல்குரானில் அடிக்கடி நம்மை கேட்டுகொள்கிறான்.
ஆனால் அங்கே முகமது என்ன அறிவுரை சொல்கிறார் என்று சிந்திக்க வேண்டும்.

”அடே பதர்களே.. இன்றுதான் கணவனை இழந்திருக்கிறார்கள். பெற்ற பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள். இன்றுதான் பெற்ற தந்தையை இழந்திருக்கிறார்கள். அவர்களை போய் கற்பழித்து அடிமையாக விற்கிறேன் என்று சொல்கிறாயே உனக்கு மனிதாபிமானம் இருக்கிறதா?” என்றா  கேட்டார் ? இல்லவே இல்லை!

”இந்த பெண்களை கற்பழிக்கிறேன். உள்ளே விடலாமா? வெளியே விடலாமா? என்று கேட்கிறாயே? நீ ஒரு மனுஷனா? இதற்காகவா நீ மனிதனாக பிறந்தாய்? உன் மனைவியிடம் போய் உடலுறவு கொள். போரில் தோல்வியடைந்தால் என்ன? அவர்கள் மனிதர்கள் இல்லையா?” என்றா முகமது கேட்டார் ? இல்லவே இல்லை!

“அடே நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளே.! நான் இந்த காலத்துக்கு மட்டுமா போதனை கொடுக்க வந்தேன்? இனி வரும் காலம் அனைத்துக்கும் போதனை கொடுக்க வந்தேன். இதே ஆட்கள் நம்மை கைப்பற்றினால் நம் பெண்களை இதே போல கற்பழிப்பார்கள். அது உண்மைதான். அது காட்டிமிராண்டி வழக்கம். நாம் நாகரிகமான புதிய மதத்தில் இருக்கிறோம். அந்த மதத்தில் இது போன்ற காட்டிமிராண்டித்தனமான செய்கைகளுக்கெல்லாம் இடமில்லை. இவர்களை மரியாதையாக கண்ணியமாக நடத்துங்கள். இவர்களை அடிமைகளாக விற்காதீர்கள். அவர்கள் பெண்கள். அவர்கள் நம்மோடு போர்புரியவில்லை. அவர்களது கணவன்கள், பெற்றோர்கள் குழந்தைகள் நம்மோடு போர் புரிந்தார்கள் தோற்றார்கள் இறந்தார்கள். ஆனால் இந்த பெண்கள் என்ன தவறு செய்தார்கள்? . அதற்காக இவர்களை கற்பழிப்பதோ இவர்களை அடிமைகளாக்கி விற்பதோ தகுமா? இந்த பெண்களே நம்முடன் போரிட்டாலும், இவர்களை அவமரியாதை செய்வதோ கற்பழிப்பதோ தகுமா? அது நாகரிகமானதா? பண்பாடுள்ள விஷயமா? இவர்களை கற்பழிப்பவன் கேடுகெட்டவனிலும் கேடுகெட்டவனாயிற்றே. நாம் செய்யக்கூடாது. இவர்களை களங்கப்படுத்தாமல் அனுப்பி வையுங்கள். அந்த பெண்களை கௌரவமாக அனுப்பி வையுங்கள். அவர்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள். அவர்கள் யாரை கணவராக எடுத்துகொள்கிறார்களோ அவர்களிடம் செல்லட்டும். அந்த பெண்கள் தனியாகவே இருக்க விரும்பினாலும் இருக்கட்டும். அவர்களை அடிமையாக விற்பது மனித அறத்துக்கே எதிரானது. இறைவனின் முன்னால் மனிதர்கள் எல்லோருமே சமம். அப்படியிருக்கும்போது ஒரு மனிதனின் அடிமையாக இன்னொரு மனிதன் இருப்பது தகுமா?” என்றா நம் முகமது சொன்னார்? இல்லவே இல்லை!

அவர் என்ன சொன்னார் ?
அந்த பெண்களை எப்படி கற்பழிக்க வேண்டும் என்றல்லவா  அறிவுரை வழங்குகிறார்! சிந்தியுங்கள்!

"“அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? உச்சகட்டத்தில் ஆண் குறியை வெளியே எடுத்து விந்தை கொட்டக்கூடாது என்று ஒன்றுமில்லை. ஆனாலும் அப்படி செய்யாமலிருப்பதே மேலானது. அதாவது அந்த பெண்ணின் கருப்பைக்குள் உங்கள் விந்தை அனுப்புவதே மேலானது. ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!”""

ஆஹா…!
இதுதானே  இறைதூதரின் அதுவும் இறுதி இறைதூதரின் அறிவுரை!!!
இதுவல்லவோ இறைதூதரின் இலக்கணம்!!!

அல்லாஹ்வும் முகம்மதும் பெண்களும்

அல்லாஹ்:-
நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது; பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்; இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.
(அல்குர்ஆன் : 4:19)

முகம்மது:- 
புஹாரி ஹதீஸ்...
பாடம் : 109 அடிமைகளை விற்பது.
2229. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, `இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?` என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!" என்று கூறினார்கள்.

விபச்சாரத்தின் மூலம் பெறப்படும் மகளையும் மணந்துக்கொள்ளலாம்!!??

இஸ்லாம் இனியதொரு மார்க்கம்.




 மாலிக் மற்றும் ஷாபி அது தகும் என்று கூறுகின்றனர் ஏனெனில் அவள் அவனுக்கு அந்நியமானவள் மற்றும் அவனுடன் உறவு முறையில் இல்லாதபடியால்” [ புகழ்பெற்ற சுன்னி இஸ்லாமிய ஈமாமான ஈமாம் இப்னு கதமாவின் ‘ அல்-முக்னி​’ (Al-Mughni), தொகுதி 7,பக்கம் 485

அந்த பகுதியின் அரபி வாசகம் கீழே :

ويحرم على الرجل نكاح بنته من الزنى ، وأخته ، وبنت ابنه ، وبنت بنته ، وبنت أخيه ، وأخته من الزنى . وهو قول عامة الفقهاء . وقال مالك ، والشافعي في المشهور من مذهبه : يجوز ذلك كله ; لأنها أجنبية منه ولا تنسب إليه شرعا

மலிக் மற்றும் ஷாபி போன்றோர் சுன்னி இஸ்லாத்தின் நான்கு மத்ஹபில் (பிரிவு) மலிக்கி மற்றும் ஷாபி எனும் இருப்பிரிவை ஸ்தாபித்த புகழ்ப்பெற்ற சுன்னி இஸ்லாமிய ஈமாம்கள்.இவர்களின் சட்ட திட்டத்தை வைத்து தான் சுன்னி முஸ்லிம்கள் ஷரியா சட்டத்தை கடைபிடிக்கின்றனர்.இப்படி சுன்னி இஸ்லாத்தின் மிகவும் உயர்ந்த இடத்தில் உள்ள ஈமாம்களின் விபச்சாரத்தை ஊக்குவிக்கும் கருத்தைப் பாருங்கள் ! இப்படித் தான் இஸ்லாத்தின் ஈமாம்கள் பல காம நூல்களை/பகுதிகளை மதத்தின் பெயரால் இயற்றி அதற்கு மதச்சாயம் பூசி,முஸ்லிம்களை முட்டாளாக வைத்துள்ளனர். முஸ்லிம்கள் சிந்திக்க மாட்டார்களா ?

பத்ரு போர் எனும் கொள்ளை



பத்ரு, முஹம்மதிற்குப் புதிய உற்சாகத்தை கொடுத்த இடம்; முஸ்லீம்கள் என்றும் பெருமை பாராட்டுமிடம். எங்கள் பகுதி பள்ளிவாசலில், ரமளான் நோன்பு 17-ம் நாள்  பத்ரு ஸஹாபாக்களின் நினைவு தினம் என்று கூறி  முந்தின இரவில் மவ்லீது, சிறப்பு பயான் என்றெல்லாம் அமர்க்களப்படுத்தி விடுவார்கள். 1973-ல் எகிப்து மேற்கொண்ட ஒரு தாக்குதலுக்கும், 1999-ல் கார்கிலில் பாகிஸ்தான் மேற்கொண்ட திட்டத்திற்கு “OPERATION BADR“ என்று பெயர் சூடப்பட்டதை அறிவீர்கள். 

அந்த அளவிற்கு பத்ரு முஸ்லீம்களுக்கு முதன்மையானது. எனது நண்பர் ஒருவர், முஹம்மது கடவுளின் தூதர்தான் என்பதற்கு சாட்சியாக பத்ரு வெற்றியை ஒரு அற்புத நிகழ்வாக முன்வைத்து விளக்கமளித்தார். 

காரணம் முஸ்லீம்களின் மனதில் பத்ரு வெற்றிக்கு உயர்ந்த இடமுண்டு; இதை அல்லாஹ் நிகழ்த்திக் காண்பித்த அற்புதமாகவே அவர்கள் கருதுகிறார்கள்.மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து யஸ்ரிப் என்ற மதீனாவிற்கு வந்து தனது வழக்கமான பல்லவியை மீண்டும் வாசிக்கிறார். சில மாதங்கள் கடக்கிறது வருமானத்திற்கு வழியில்லை. 

இதுவரை, பெரும் சீமாட்டியான கதீஜாவின் சொத்துக்களை ஒன்றுமில்லாமல் செய்ததைத்தவிர முஹம்மது உருப்படியாக எந்த வேலையும் செய்ததில்லை.அல்லாஹ்விடமிருந்து வரும் வஹீயைக் கொண்டு வயிற்றை  நிறைக்க முடியாது என்பதை முஹம்மதுவும் அவரது சீடர்களும் நன்றாகவே அறிந்திருந்தனர்.

வருமானத்திற்கு என்ன செய்வது? முஹம்மது தனக்குத் தெரிந்ததாகக் காண்பித்துக்கொண்ட ஆடுமேய்த்தல் தொழிலையோ, வியாபாரத்தையே தனது சீடர்களுக்கு கற்பிக்க முயலவில்லை,முஹம்மதிற்கு தன்னை அல்லாஹ்வின் தூதரென்று போற்றிப் புகழவேண்டும், கைத்தடிகளுக்கு வியர்வைவழிய நேர்மையாக உழைத்து உண்பதில் விருப்பமில்லை. 

தீர்வு? 

இருக்கவே இருக்கிறது அல்லாஹ்வின் வஹீ!

"போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்'' என்ற காரணத்தால் அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்.(குர்ஆன் 22:39)

முதல்கட்டமாக கொள்ளையடித்தலையும்,சூறையாடலையும் அல்லாஹ்வின் பெயரல் சட்டபூர்வமாக அங்கீகரித்தார். 

இதை முஸ்லீம்களின் பாணியில் சொல்வதென்றால், வேறுவழியின்றி ஆயுதமேந்தித் தாக்குதல் செய்தது அல்லது மக்காவிலிருந்து ஷாம் செல்லும் வழியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முஹம்மது விரும்பினார்.கிபி 624 மார்ச்-ல் (ஹிஜ்ரி 2 ரமலான் 17) நிகழ்ந்த பத்ருதாக்குதலுக்கு முன்பாக, 

குறைஷியர்களின் மீது நடைபெற்ற வழிப்பறி முயற்சிகள் அல்லது திடீர்த் தாக்குதல்கள்,
1.     ஸய்ஃபுல் பஹ்ர்           - கிபி 623 மார்ச்
2.     ராபிக்                    - கிபி 623 ஏப்ரல்
3.     கர்ரார்                    - கிபி 623 மே
4.     அப்வா/வத்தான்           - கிபி 623 ஆகஸ்ட்
5.     பூவாத்                    - கிபி 623 அக்டோபர்
6.     ஸஃப்வான்                - கிபி 623 செப்டம்பர்
7.     துல் உஷைரா             - கிபி 623 நவம்பர்
8.     பத்ரு-1                    - கிபி 623 டிசம்பர்
9.     நக்லா                    - கிபி 624 ஜனவரி

இதில் நக்லாவில் மட்டுமே முஹம்மதுவின் கூட்டத்தினருக்கு வெற்றி கிடைத்தது. பத்ருவிற்கு முன்பாகவே கொள்ளையடித்தல் எனும் புனிதமிக்க தொழிலைத் துவக்கியிருந்தனர். குறைஷியர்களை வழிப்பறி செய்ய வேண்டுமென்று திட்டமிட்டது அல்லாஹ்வோ அல்லது முஹம்மதோ அல்ல.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறியதாவது:..., சஅத்(ரலி) அவர்கள் வலம் வந்து கொண்டிருந்த போது அபூஜஹ்ல் வந்து, கஅபாவை வலம் வருவது யார்? என்று கேட்டான். சஅத் (ரலி) அவர்கள், நான் தான் சஅத் என்று கூறினார்கள். அதற்கு அபூஜஹ்ல், (மதீனாவாசிகளான) நீங்கள் முஹம்மதுக்கும் அவருடைய தோழர்களுக்கும் (மதீனாவில்), புகலிடம் கொடுத்திருக்க, இங்கே கஅபாவை நீ அச்சமின்றி வலம் வந்து கொண்டிருக்கிறாயா? என்று கேட்டான். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், ஆம் (அதற்கென்ன?) என்று கேட்டார்கள். அவ்விருவருக்குமிடையே (அதையொட்டி) சச்சரவும் வாக்குவாதமும் ஏற்பட்டது. உடனே உமய்யா, சஅத் (ரலி) அவர்களிடம், அபுல் ஹகமைவிட குரலை உயர்த்தாதீர். ஏனெனில், அவர் இந்த (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர் என்று சொன்னான். பிறகு சஅத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின்மீதாணையாக! இறையில்லத்தை வலம்வர விடாமல் என்னை நீ தடுத்தால் நீ ஷாம் நாட்டிற்குச் செல்லும் வாணிபப் பாதையை நான் துண்டித்து விடுவேன் என்று சொன்னார்கள்...(புகாரி 3632)

குறைஷிகளின் வாணிபப் பாதையையை வழிமறித்து கொள்ளையடிக்க வேண்டுமென்பதும் ’சஅத்’ என்பவர் எடுத்த முடிவுதான்.பத்ரு தாக்குதலை சுருக்கமாக கூறிவிடுகிறேன்.மக்காவிலிருந்து ஷாம் (ஈராக்) நாடடிற்கு கொண்டுசெல்லப்படும், குறைஷிகளின் வியாபாரப் பொருட்களை  கொள்ளையடிக்க முஹம்மது  தனதுபடையை துல்உஷைரா என்ற இடத்தை நோக்கிஏவிவிடுகிறார். இவர்கள்  துல்உஷைராவைஅடைவதற்கு பல நாட்களுக்கு முன்பாகவேவியாபாரக்குழு அவ்விடத்தைக் கடந்துவிடுகிறது.ஏமாற்றத்திற்குள்ளான கொள்ளைக்கும்பல்,குறைஷிகளின் வியாபாரக்குழு ஷாம் நாட்டிலிருந்துதிரும்பிவரும்பொழுது வழிமறிக்க முடிவெடுக்கிறது.அதுவரை காத்திருக்க பொறுமையில்லாமல் நக்லா என்ற இடத்தில் அப்துல்லாஹ் இப்ன் முகீரா, நவ்ஃபல்இப்ன் அப்துல்லாஹ், அம்ர் இப்ன் ஹழ்ரமி மற்றும் சிலஅடிமைகளுடன் வந்து கொண்டிருந்தவியாபாரக்குழுவை தாக்கி வழிப்பறி செய்து,கொலையையும், கொள்ளையையும் நிகழ்த்தினர். 

அரபிகள், யாருடனும் எதற்காகவும், எவ்விதமான போர்நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் புனிதமாகபோற்றிப் புகழும் துல்கஃதா, துல்ஹஜ், முஹ்ரம், ரஜப்ஆகிய மாதங்களில், ரஜப் மாதத்தின் இறுதியில்தான்மேற்கண்ட கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த்து....

அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்!...(குர்ஆன் 9:36) 

இது முஹம்மதை இக்கட்டான சூழ்நிலைக்குத்தள்ளியது. நிலைமை சமாளிக்க வேறுவழிதெரியாததால் வஹீயைத் துணைக்கிழுக்கவேண்டியதாயிற்று.

புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். "அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும்(மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு)உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ் விடம் இதை விடப் பெரியது.கொலையை விட கலகம் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக! …(குர்ஆன் 2:217)...

போர்க் களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றும் பொருட்களில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும், (அவரது) உறவினருக்கும், அனாதைகளுக்கும்,ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்!...(குர்ஆன் 8:41)

இல்லையெனில் 20% பங்கை எப்படிப் பெறமுடியும்?தான் முன்பு தவறவிட்ட குறைஷிகளின்வியாபாரக்குழு, அபூஸுஃப்யான் தலைமையில் மிகப்பெரிய அளவிலான பொருட்கள் மற்றும்செல்வங்களுடன் சுமார் 1000 ஒட்டகங்களில், மிகபலவீனமான பாதுகாப்புடன் ஷாமிலிருந்துதிரும்பிவருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்ட,முஹம்மது  பத்ரு கொள்ளைக்குத் தயாரானார்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிரியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற) அபூ சுஃப்யானின் வணிகக் குழு என்ன ஆயிற்று எனக் கண்டறிய புசைசா பின் அம்ர் அல்அன்சாரீ (ரலி) அவர்களை உளவாளியாக அனுப்பிவைத்தார்கள். அவர் சென்றுவிட்டு (திரும்பி) வந்தபோது, என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் தவிர வேறெவரும் வீட்டில் இருக்கவில்லை. ("அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரையும் தவிர' என்று கூறினார்களா என எனக்குத் தெரியவில்லை என்று ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் உள்ளது.) அவர் வந்து (அபூசுஃப்யானின் வணிகக் குழு மக்காவை நோக்கிப் புறப்பட்டுவிட்டது' என்ற) தகவலைச் சொன்னார்...(முஸ்லீம்)

”இதோ… குறைஷிகளின் வியாபாரக்கூட்டம்அவர்களது பொருட்களுடன் வருகிறது.அக்கூட்டத்தை நோக்கி நீங்கள் புறப்படுங்கள்,அல்லாஹ், அவைகளைக் கொள்ளைப் பொருட்களாக  உங்களுக்கு அளிக்கக் கூடும்”
(Page 289, Life of Muhammad a Translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah by A.Guillaume)

என்று உற்சாகப்படுத்தியவராக தனது அடியாட்களுடன்வியாபாரக் கூட்டத்தை நோக்கி பெரும் ஆவலுடன்பயணமானார்.முஹம்மதின் குற்றநடவடிக்கைகள் குறித்துஎச்சரிக்கையடைந்த அபூசுஃப்யான் வியாபாரப்பொருட்களுக்கு நேரவிருக்கும் அபாயத்தைக் குறித்தசெய்தியை குறைஷிகளுக்கு அறிவிக்க ஒருவரைமக்கவிற்கு அனுப்பியதுடன், வியாபரக்குழு செல்லும்பாதையை மாற்றியமைத்து, முஹம்மதுவிடம்சிக்காமல், தங்களது பொருட்களை பாதுகாப்பாககொண்டு சென்றுவிடுகிறார். 
வியாபாரப்பொருட்களைப் பாதுகாக்க மக்கவிலிருந்து 1300பேர்களுடன் வரும் குறைஷியப் படை,வணிகப்பொருட்களுக்கு ஆபத்தில்லை என்பதைஅறிந்து படையிலிருந்த  300 பேர், அக்னஸ் இப்ன் ஷரீக் தலைமையில் திரும்பிவிடுகின்றனர்.

அபூஜஹ்லுடன் எஞ்சியிருந்த 1000 பேரும்,முஹம்மதுவுடனிருந்த 313 நபர்களும்  (310-லிருந்து 320வரை எண்ணிக்கை மாறுபடுகிறது. 313 பேர் என்பதைபொதுவாக அங்கீகரிக்கின்றனர்) மோதுகின்றனர்;முஹம்மது வெற்றியடைகிறார். போதிய ஆயுதபலமில்லாத 313 பேர் 1000 பேரை வெற்றி கொண்டதை, முஸ்லீம்கள்  இன்றும் பிரதாபிக்கின்றனர். 

இந்தமோதலைப்பற்றி இஸ்லாம் கூறுவதைப் பார்ப்போம்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் பத்ருப் போரை எதிர்பார்த்துப் புறப்படவில்லை. மாறாக தமது நாட்டு எல்லையில் புகுந்து மக்காவின் வணிகக் கூட்டம் பயணிக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு அவர்களை வழிமறிக்கவே புறப்பட்டார்கள்…196.
 திட்டமிடாமல் நடந்த பத்ருப் போர்-onlinepj.com சத்தமில்லாமல் யஸ்ரிப்(மதீனா) இப்பொழுது முஹம்மதின் உடைமையாகியுள்ளதை கவனியுங்கள்.

ஹிஜ்ரத் என்ற பெயரில், பிழைப்பிற்கு வழியில்லாமல் மெக்காவிலிருந்து ஓடிவந்த ஒரு ஓடுகாலி இரண்டு ஆண்டுகள் ஆவதற்குள், மதீனாவின் மன்னராகி விட்டாராம், நாட்டின் எல்லைகளை நிர்ணயம் செய்வாராம். வேடிக்கையாக இருக்கிறது.இஸ்லாமியர்கள் இவ்வாறு முஹம்மதின் கதையை கட்டமைக்கவில்லையெனில், அவர் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரர் என்பதை குழந்தைகூட கூறிவிடும்.

அதனால்தான் இந்த Built-up-கள், சமாளிப்புகள்.முஹம்மது மட்டுமல்ல அவரது கைத்தடிகளும், பத்ரு தாக்குதலை எதிர்பார்க்கவே இல்லை.அபூஸுஃப்யானின் வணிக்குழுவை கொள்ளையடிப்பதைப் பற்றி மட்டுமே ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துவரப்பட்ட கூட்டம்,வணிகக்குழு தப்பிவிட்டதையும், அபூஜஹ்லுடன் போர் புரியவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதையும் அறிந்தபொழுது அவர்களுக்குள் சர்ச்சை உருவானது.

அவர்களில் கணிசமான ஆட்கள், வணிக்குழுவைத் தாக்குவதை மட்டுமே விரும்பியதால், அபூஜஹ்லுடன் போர்புரிவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த இடத்தில் இஸ்லாமியர்கள் கூறும் ஒரு விளக்கத்தையும் கவனிக்க வேண்டும். முஹம்மது வியாரக்குழுவைத் தாக்கிக் கொள்ளையடிக்கவே சென்றார் என்பதை அவர்களும் அறிவார்கள். அதை வெளிப்படையாக எப்படி கூறமுடியும்? அதனால் வேறொரு தந்திரத்தை கையாளுகின்றனர்.

குறைஷிகள், மக்காவிலிருந்து முஹம்மதின் சீடர்களை அடித்துத், துன்புறுத்தி விரட்டியதாகவும், இனி அவர்கள் அங்கு வாழவே முடியாது என்ற சூழல் ஏற்பட்டதாகவும்,அவ்வாறு வெளியேறியவர்களின் செல்வங்கள், இதர உடைமைகளையும் குறைஷிகள் அபகரித்துக் கொண்டனர். எனவே அவர்களைத் தாக்கி, அவர்களது உடைமைகளை சூறையாடுவது சரியானதே என்கின்றனர்.இன்னும் சில இஸ்லாமிய அறிஞர்கள், அபூஸுஃப்யான் வியாபாரப் பொருட்களாக ஷாம் நாட்டிற்கு கொண்டுசென்றது முஸ்லீம்களது உடைமைகளைத்தான் எனவே அதைத் திரும்பப் பெறும் நோக்கிலேயே பத்ரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாவும் எனவே அதில் தவறில்லை என்றும் கூறுக் கொள்கின்றனர். 

முஹம்மதின் சிடர்களுக்கு மக்கா நகரமே உடைமையாய் இருந்ததை போல முழம் போடுகின்றனர்.  இவர்களது இந்த கதைகளுக்கான பதிலை நாம் இஸ்லாமும் ஹிஜ்ரத்தும் என்ற பதிவில் பார்த்தோம். அதிலிருந்து சில வரிகள்“முஹம்மதின் சீடர்களில் பெரும்பாலும்,அடிமைகளும், போக்கிரித்தனமாக ஊரைச்சுற்றிக் கொண்டிருந்த சில இளைஞர்களுமே! அரேபியர்கள்,அடிமைகளைத் தங்களது உடமைகளாகவே கருதிவந்தனர். உதாரணத்திற்கு, உங்களுக்குச் சொந்தமான கால்நடைகளை பகிரங்கமாக கவர்ந்து செல்லப்படுவதை நீங்கள் அனுமதிப்பீர்களா? நிச்சயமாக இல்லை! குறைஷிகள் அதையே செய்தனர்”அபூஜஹ்லா? பெரும் செல்வத்துடனுள்ள வியாபாரக் குழுவா? சர்ச்சை தொடர்கிறது…”கொள்ளைப் பொருட்களை அல்லாஹ் வாரி வழங்கக் கூடும்” என்று முஹம்மது ஒரு ஆருடம் கூறி அழைத்து வந்தார், ஆனால் அலாஹ் வேறுவிதமாக அதை மாற்றுகிறான்.

"எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்)'' என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்! ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலை நாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான்.(குர்ஆன் 8:07)

அல்லாஹ்வின் விருப்பமோ அபூஜஹ்லைத் தாக்குவதுதான். ஆனால் அதை துணிந்து வெளிப்படையாகக் கூறாமல், இரண்டில் ஒன்று கிடைக்கும் என்று ஆரூடம் கூறுவது போல பூசி மழுப்புகிறான்; 
கோழையைப் போல முனகுகிறான். 
அல்லாஹ், தான் உண்மையை நிலை நாட்டவும்மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறேன், ”போய்அபூஜஹ்லைத் தாக்குங்கள்..!” என்று துணிந்துஉத்தரவிடலாமே?  அதைக் கூறுவதிலிருந்து அவனைத்தடுத்தது எது?  முஹம்மதின் அடியாட்களிடம்கூறவேண்டாம், முஹம்மதிடமாவது கூறியிருக்கலாம்;

பாவம் அவரும்கூட ஏமாற்றத்தில் துவண்டுவிட்டார்.அல்லாஹ்வின் இந்தச் செயலைத், தனது தேவையைநிறைவேற்றிக் கொள்ள முஹம்மதையும், அவரதுஅடியாட்களையும்  நயவஞ்சகமாக அழைத்துவந்திருக்கிறான் என்றே கூறமுடியும்! அதனால்தான்வெளிப்படையாகக் கூறாமல் தடுமாறுகிறான்.
அவனது இந்த செயலை சூழ்ச்சி என்று கூறுவதேசரியானது! ஆனால் இஸ்லாமியர்கள் இதைஅல்லாஹ்வின் திட்டம் அல்லது விதி என்றுமழுப்புகின்றனர்.ஏன் இவ்வாறு எது நிகழ்ந்தாலும் அல்லாஹ்வின் திட்டம் (சூழ்ச்சி) என்று கூறுகின்றனர்?முஹம்மது, மலம் கழிக்கச் செல்வதற்குக்கூட தனதுகடவுளின் வஹீயை துணைக்கிழுப்பவர். 

புனிதமிகுகொள்ளைத் தொழிக்குச் செல்லும் போதுஅல்லாஹ்வை கைவிடுவாரா? நிச்சயமாகஅவ்வாறிருக்க இருக்க வாய்ப்பில்லை.  ஆனால் இந்தபத்ருகொள்ளை முயற்சி இரண்டாம் முறையாகவும்தோல்வியையைத் தழுவிவிட்டது. கொள்ளையடிக்கஅடியாட்களைத் திரட்டிக்கொண்டு சென்றதுபயனளிக்கவில்லை, எதிர்பார்த்தது கிடைக்கவில்லை.எதை சொல்லி சமாளிப்பது ?மிக எளிதான வழிருக்கிறது! வியாரக்குழு தப்பியதும்அல்லாஹ்வின் திட்டமே என்றொரு வஹீவெளியிட்டால் போதும் தனது மானத்தையும்,கடவுளையும் தோல்வியிலிருந்து காப்பாற்றிவிடலாம்என்பதை முஹம்மது அறிந்திருந்தார்.

தோல்வி அல்லது வேதனையான நேரங்களில் “விதி”என்று கருதிக் கொள்வதால் மனரீதியாக  ஆறுதல்அளிக்கிறது என்று விதிக் கோட்பாட்டைஆதரிப்பவர்கள் சப்பைக்கட்டு கட்டுவார்கள், உண்மைஅதுவல்ல!கடவுளர்களின் மானத்தைப் பாதுகாக்கவே விதி என்றகருத்தை மதக்கோட்பாடுகளில் உருவாக்கிவைத்திருக்க வேண்டும்! அல்லாஹ்வின்(?) ஏடாகூடமான திட்டத்தினால்முஹம்மதிற்கு, வேறுவழியில்லாமல் குறைஷிகளைபத்ருகளத்தில் சந்திக்க வேண்டியதாயிற்று. 

 போதியஆயுதபலம்கூட இல்லாத 300 பேர் கொண்டகொள்ளைக்கும்பல், 1000 பேர்களை வெற்றிகொண்டதுஎப்படி? அல்லாஹ் வழங்கிய உதவியின்காரணமாகவே இது சாத்தியமாயிற்று. 

முஹம்மதுஅல்லாஹ்வின் தூதரென்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்என்கின்றனர் இஸ்லாமியர்கள்.அல்லாஹ் ஏன் உதவினான்?உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:…. "இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக. இறைவா! இஸ்லாமியரில் இக்குழுவினரை நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில் உன்னை வழிபட (இனி) யாரும் இருக்கமாட்டார்கள்''என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருந்தார்கள்....(முஸ்லீம்)

தன்னை வழிபட ஒருவருமில்லாது போய்விட்டால்என்ன செய்வது என்ற அச்சம் மேலிட்டதால்தான்அல்லாஹ், உதவினானோ? முஹம்மதின்பிரார்த்தனையைக் கேட்டதுமே அல்லாஹ்வின்உதவிகள் விதவிதமாக பத்ருகளத்தில் இறங்கியதாம்.

பத்ருவில் முஹம்மதிற்குக் கிடைத்தவெற்றிமனிதர்களால் ஏற்பட்டதல்ல மாறாக அல்லாஹ்வெளிப்படுத்திய அற்புதங்களால்தான்நிகழ்ந்ததென்பதே இஸ்லாமியர்களின் உறுதியானநிலைப்பாடு.…அற்புதங்களால்தான் வெற்றி பெற முடிந்ததே தவிர போரில் பங்கெடுத்தவர்களின் ஆற்றலினால் அல்ல என்பதை உணர்த்தவே இவ்வாறு சுட்டிகாட்டுகிறான்..193. 
அத்வைதத்தின் அறியாமை -onlinepj.com

இன்றைய திரைப்படங்களில், கணிணிவரைகலை தொழில்நுட்பத்தின் உதவியால் பலவிதமான தந்திரக் காட்சிகளை உருவாக்குகின்றனர். அவற்றில் எதுவும் உண்மையில்லை நாம் அறிவோம்.

 இதுபோன்ற தந்திரக் காட்சிகளுக்கு முன்னோடி இந்த பத்ருகளம் தான் என்று நினைக்கிறேன் (இஸ்லாமிய அறிவியல் பதிவர்கள் கவனிக்க வேண்டும்) தந்திரவித்தையை,முதலில் சோதனை முயற்சியாக முஹம்மதின் கனவில் காண்பித்தபிறகு,

(முஹம்மதே!) உமது கனவில் அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாரும்!. அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள்...(குர்ஆன் 8:43)

பிறகு களத்திலும் செயல்படுத்தினான். இது அல்லாஹ்வின் கிராஃபிக்ஸ் காட்சிபற்றிய அறிவிப்பு!
நீங்கள் (களத்தில்) சந்தித்துக் கொண்ட போது உங்கள் கண்களுக்கு அவர்களைக் குறைந்த எண்ணிக்கையினராகவும், அவர்களின் கண்களுக்கு உங்களைக் குறைந்த எண்ணிக்கையினராகவும் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் செய்வதற்காக (இவ்வாறு காட்டினான்). காரியங்கள் அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.(குர் ஆன் 8:44)

முதலில் வியாபரக்குழுவைக் கொள்ளையடிக்க ஆசைகாண்பித்து ஏமாற்றினான். இப்பொழுது ஆட்களின் எண்ணிக்கை குறைவாக மாற்றிக் காண்பித்து இருவரையும் ஏமாற்றி மோதவிடுகிறான். ஏனெனில், இந்த இரண்டு குழுக்களில் எவரை அதிகமாகக் காண்பித்தாலும் அச்சமடைந்து மற்றவர் பின்வாங்க வாய்ப்புள்ளது. இரு குழுவினரும் மோதியே தீரவேண்டுமென்ற அல்லாஹ்வின் தேவை நிறைவேறுவதற்காக அனைத்து விதமான தில்லுமுல்லு வேலைகளிலும் இறங்கிவிட்டான்.

அபூஜஹ்லை கொல்வதற்கு இன்னும் எத்தனை பொய்களை சொல்ல வேண்டியுள்ளதோ? சூழ்ச்சியில் மகாபாரதக் கதைகளில் வரும் சகுனியை மிஞ்சிவிட்டான்!இதை நாம் சூழ்ச்சி என்றுதான் கூறமுடியும். அல்லாஹ் சூழ்ச்சி செய்வதாகவும், சூழ்ச்சி செய்வதில் சிறந்தவனென்றும் குர்ஆனின் பல இடங்களில் அறிவித்துக்கொள்கிறான். உண்மையைப் பொய்யாகவும், பொய்யை உண்மையாகவும் காண்பித்து ஏமாற்றுவதே சூழ்ச்சி.

 இன்றும்கூட இராணுவத் தாக்குதல்கள் நிகழும் பொழுது, பொம்மை பீரங்கிகளையும், ஏவுகணைகளையும் கொண்டு இராணுவ முகாம்களை அமைத்து எதிரிகளை ஏமாற்றுவதுண்டு. இந்த யுக்தி ஈராக்-அமெரிக்கா போரிலும் கையாளப்பட்டதை அறிவீர்கள்.பொதுவாகவே யுத்த காலங்களில் உண்மையான செய்திகளை அறிந்துகொள்வது சற்று சிரமம்தான்.மனிதர்கள் தங்களது இயலாமையால் இத்தகைய செயல்களை மேற்கொள்கின்றனர். 

இந்த இயலாமையை ராஜதந்திரம் என்று தங்களைத் தாங்களே சொறிந்தும் கொள்வார்கள்.இந்த அடிப்படையில் அல்லாஹ்வின் இந்த செயல் பகிரங்கமானதொரு சூழ்ச்சி எனலாம். ஆனால்,மனிதர்களை போலவே இயலாமையால் அல்லாஹ்வும் பொய்சொல்லி ஏமாற்றினான் என்பதை இஸ்லமியர்களால் எப்படி ஏற்க முடியும்?… "அவர்கள் கேலி செய்தால் அல்லாஹ்வும் கேலி செய்வான்'' என்பது "கேலி செய்ததற்கான தண்டனையை வழங்குவான்'' என்ற கருத்திலும், "அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்'' என்பது "சூழ்ச்சியைத் தோல்வியுறச் செய்வான்'' என்ற கருத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது...
6. அல்லாஹ் இயலாதவனா? -onlinepj.com

அல்லாஹ் சூழ்ச்சி செய்தான் என்பதை நவீன நபி பீஜே-வால் சகித்துக்கொள்ள முடியவில்லை.எப்படியாவது இதை மழுப்பி மறைத்துவிட வேண்டுமென்று கடுமையாக முயற்சித்துள்ளார்.என்ன செய்வது…! மறைந்து தொலைய மாட்டேன் என்கிறது. அல்லாஹ்வின் வார்த்தையை மாற்றமுடியுமா என்ன?!  

உண்மை என்னவெனில்,பீஜேவின் விளக்கம், குர்ஆன் 8:44, 8:07-ம் வசனங்களில் எடுபடவில்லை! தான் எவ்வாறெல்லாம் சூழ்ச்சி என்ற பெயரில் பித்தலாட்டம் செய்து ஏமாற்றியுள்ளதை விளக்கமாகக் கூற அல்லாஹ்வே வெட்கப்படவில்லை இவர் ஏன் அலட்டிக்கொள்கிறார் என்று தெரியவில்லை.

அடுத்த அற்புதம் மந்திர மண் தாக்குதல்!  இன்றைய கண்ணீர்ப் புகை குண்டுகளுக்கு முன்னோடி!?தான் நிகழ்த்திய எந்த ஒரு தாக்குதலிலும் முஹம்மது தனது எதிரியுடன் நேருக்கு நேராக போர் புரிந்ததில்லை. அம்பு எறிதல், வாள் வீச்சு என்று எதுவும் தெரியாதவர். தனது எதிரியுடன் நேருக்குநேர் நின்று சண்டையிட்டதாக அவரது வரலாற்றிலிருந்து ஒரு செய்தியைக்கூட காணமுடியாது. தனது தொழிலுக்குத் தேவையான திறமைகளைத் தனது கடவுளிடம்  கேட்டுப் பெறாமல், அந்தப்புரத்திற்காக,  “அந்த” வாள்வீச்சிற்கான ஆற்றலை அல்லாஹ்விடம் கோரிப் பெற்றுக் கொண்டார் (இதைவிட வேறென்ன வேண்டுமென்கிறீர்களா? அதுவும் சரிதான்!)தாக்குதல்களில், மண்ணையும், கல்லையும் வீசியெறிந்து சாபமிட்டு ஒப்பாரி வைப்பது என்ற வீரமிக்க பணியைச் செய்வதுமட்டுமே அவரது வேலை.இங்கு அதற்கும் அல்லாஹ் வேட்டு வைத்துவிட்டான். 

அல்லாஹ்(?), மண்ணை எறிந்து உதவுதல்.

வர்களை நீங்கள் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான்.(முஹம்மதே!) நீர் எறிந்த போது (உண்மையில்) நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான். நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய முறையில் பரிசளிப்பதற்காக இவ்வாறு செய்தான். அல்லாஹ் செவியுறுபவன்;அறிந்தவன்.(குர் ஆன் 8:17)

இங்கு அல்லாஹ்வே அவர்களை கொலை செய்ததாகவும், மண்ணை எறிந்ததாகவும் சூழ்ச்சி செய்ததாகவும், மார்த்தட்டிக் கூறுவதை நமது நவீன நபி பீஜே விரும்பவில்லை. சர்வவல்லமையுடையதாக கூறப்படும் அல்லாஹ், படையின் இறுதியில் பாதுகாப்பாக ஒளிந்து நின்றுகொண்டு, ஒரு கோழையைப்போல சாபமிட்டு மண்ணை எறிந்தான் என்பதை எப்படி ஜீரணிக்க முடியும்? எனக்கே மிகவும் கூச்சமாக இருக்கிறது, தூதர் பீஜேவால் எப்படி இதை ஏற்க முடியும்? எனவே தனது குர்ஆன் விரிவுரையில்(193) 
சுற்றிவளைத்து அல்லாஹ்வின் மூக்கையே தொட்டுவிட்டார்!..நான் கல்லை வீசினால் போதும், எதிரிகள் ஓட்டமெடுப்பார்கள் என்று முஹம்மதே நீர் நினைத்து விடக்கூடாது, மாறாக குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியில் நீர் கல்லை வீசிய போது எனது வல்லமையால் அதை பரவச் செய்தேன்”என்பதுதான் இவ்வசனஹ்ட்தில் கருத்தாகும்…
193. அத்வைதத்தின் அறியாமை -onlinepj.com

என்று அல்லாஹ்வின் உளறல்களை சரிகாண்கிறார்.அல்லாஹ் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன போலும். அல்லாஹ், தனது அந்தரங்க காரியதரியாக பீஜேவை நியமித்திருந்தால், குர்ஆனின் உளறல்களை முன்பே களைந்திருக்க முடியும்! காலம் கடந்த யோசனை(!)பத்ரு தக்குதல் திட்டமிடாமல் நிகழ்ந்ததென்பதால் முஸ்லீம்களிடம் போதிய ஆயுதங்கள்கூட இல்லாமல் இருந்ததென்று உண்மை புரியாமல் கதையளப்பார்கள்.

முஹம்மதுவின் உடனடி ஆயுதப் பட்டறை(?!)மரக்கிளையை பளபளக்கும் வாளாக மற்றிக் கொடுதத்தைப் பற்றி இப்ன் இஸ்ஹாக் கூறுவதைப் பாருங்கள்.
Ukkasha b. Mihsam b. Hurthan ak-Asadi, ally of B. ‘Abdu Shams, fought at Badr until his sward broken in his hand. He came to the apostle who gave him a wooden cudgel telling him to fight with that. When he took it he brandished it and it became in his hand a long, strong, gleaming sword, and he fought with it until god gave victory to the Muslims. The sward was called al-‘Aun …
(Page 305, Life of Muhammad a Translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah By A.Guillaume)

இதைத் தனது ”அர்ரஹீக்குல் மக்தூம்” என்ற நூலில் இஸ்லாமியப் பேரரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மானும் உறுதி செய்கிறார்.ஜிப்ரீல் உள்ளிட்ட வானவர்படையை இறக்கி உதவுதல் நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது "உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன்'' என்று உங்களுக்குப் பதிலளித்தான்.(குர்ஆன் 8:09)முதலில் ஆயிரம் வானவர்களை இறக்குவதாகத்தான் திட்டம் இருந்திருக்கிறது. குறைஷிகளை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து வானவர்களின் எண்ணிக்கை மூவாயிரமாக அதிகரிக்கப்பட்டிருக்கலாம்!(?)"

(விண்ணிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவியது உங்களுக்குப் போதாதா?'' என்று நம்பிக்கை கொண்டோருக்கு நீர் கூறியதை நினைவூட்டுவீராக!அது மட்டுமல்ல! நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சும் போது திடீரென்றுஅவர்கள் உங்களிடம் (போரிட) வந்தால் போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள்மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.(குர் ஆன் 3:124, 125)

அல்லாஹ், போர்க்கலை அறிந்த 5000 வானவர்கள்வரை அனுப்பலாம் என்ற திட்டத்தில் இருந்திருக்கிறான்.  முஹம்மதுவும் அவரதுபடையினரும் சரியாக அஞ்சவில்லை போலும்அதனால் 3000 வானவர்களை ’ஆணி பிடுங்க’அனுப்பிவிட்டு, 2000 வானவர்களை காத்திருப்போர்பட்டியலில் வைத்துவிட்டான்.எனவே இஸ்லாமிய ஆதாரங்களின் படி, முஹம்மதின்படையினர் எண்ணிக்கை 313 அல்ல! 313+3000 = 3313பேர் (எண்ணிக்கையில்) அடுத்தது எழும் மிகசாதாரணமான கேள்வி, ஒரு வானவர் எத்தனைமனிதர்களுக்கு சமம்? வானவர்களின் உதவிஎத்தகையதாயிருந்தது? இதற்கு விடையாக  சிலஹதீஸ்களை காண்போம். 

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் பத்ரு போரின்போது நபி(ஸல்) அவர்கள், ‘இதோஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தம்குதிரையின் தலையை பிடித்துக்கொண்டிருக்கிறார்’ என்றுஅரிவித்தார்.(புகாரி 3995)

ஜிப்ரீல், மாற்றுமுள்ள வானவர்களுக்குபோர்க்களத்திற்கு வரும் பொழுதுமட்டும் குதிரைதேவைப்படுகிறது. மற்ற நேரங்களில் அப்படியே பறந்துவருவாராம். குதிரை, கழுதை, ஒட்டகம் தவிர ஆறாம்நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு காட்டரபியின் அறிவிற்குவேறென்ன தோன்றும்? அவரது உளறல்களை  நம்பிமற்றவர்களின் உயிரை எடுப்பதற்கு இன்றும் ஒருபெரும் கூட்டம்!இந்தத் தாக்குதலில் ஜிப்ரீல் மட்டுமல்ல,அல்லாஹ்வின் முக்கிய மலக்குகள் அனைவருமேகளத்தில் இறக்கப்பட்டனர். மரணத்தின் மலக்குஇஸ்ராயீல், இடியின் மலக்கு மீக்காயீல், இறுதிநாளில்சூர் என்ற கொம்பை ஊதக்கூடிய இஸ்ராஃபீல்போன்றவர்களும் களத்தில் இறங்கி வாட்களைச்சுழற்றினர். 

ஜிப்ரீலின் உருவ அமைப்பை அறிவீர்கள்இருப்பினும் அந்த ஹதீஸையும் காண்போம்மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:...அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்தது'' என்றுகூறினார்கள்...(முஸ்லீம்)அல்லாஹ், இத்தகைய பிரம்மாண்ட தோற்றம் கொண்டவானவர்கள்(!) 3000 பேர்களை, சாதாரணமனிதர்களின் கண்களுக்குத் தென்படாத(மாயஉருவில்?) முறையில் குறைஷிகளை எதிர்த்துகளமிறக்கினான். இத்தகைய பிரம்மாண்டஉருவங்களில் ஒன்று நிற்பதற்குக்கூட பத்ருகளம்போதாது, இதில் 3000 உருவங்கள் எப்படி செயலாற்றினவோ? அவர்கள் அமர்ந்து பயணம்செய்த, போர்செய்த குதிரைகளின் உருவம் எத்தகையதாயிருந்ததோ? (எல்லாம் அல்லாஹ்வேஅறிவான்(!) 

 அவர்களின் செயல்திறனை பின்வரும்ஹதீஸ் விளக்குகிறது....

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றைய தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு முன் சென்றுகொண்டிருந்த இணைவைப்பாளர்களில் ஒருவரை விரட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர் "ஹைஸூம்! முன்னேறிச் செல்'' என்று கூறியதையும் செவியுற்றார். உடனே தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த இணைவைப்பாளரின் (அருகில் சென்று) அவர் பார்த்த போது, அவனது மூக்கில் காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார்...(முஸ்லீம்)

கண்களுக்குத் தெரியாத எதிரியுடன் போர்புரிவது எளிதான காரியமா? இவைகள் போதாதென்று அல்லாஹ்வும், குறைஷிகளை பயமுறுத்தி உற்சாகமூட்டி உதவினான். "நான் உங்களுடன் இருக்கிறேன். 

நம்பிக்கை கொண்டோரைப் பலப்படுத்துங்கள்! (என்னை) மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்!'' என்று (முஹம்மதே!) உமது இறைவன் வானவர்களுக்கு அறிவித்ததை நினைவூட்டுவீராக!(குர் ஆன் 8:12)

முஹம்மதின் சார்பாக 3000 வானவர்கள், அத்துடன் மாயஜாலவித்தைகள் களமிறங்கியும் குறைஷிகள் தரப்பில் 70 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர்.தாக்குதலின் முடிவில் 70 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர் மீதமுள்ள சுமார் 860-க்கும்மேற்பட்டவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர் என்பது வேடிக்கையானது. அத்துடன் ”அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்” என்று அல்லாஹ் கூப்பாடு போட்டுக் கொண்யிருந்ததை ஒருவரும் இங்கு பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை! இது அல்லாஹ்வின் இயலாமை என்று கூறுவதைத் தவிர வேறுவழியில்லை. ஆனால் ஆலீம்களோ மாபெரும் அற்புதமென்று கூறி தங்களையும், அப்பாவி முஸ்லீம்களையும் புல்லரித்து கொண்டிருக்கின்றனர்.

முஹம்மதின் பத்ரு வெற்றிக்கு, ஹதீஸ்களின் மற்றொரு பகுதி வேறு காரணங்களைக் கூறுகிறது.…

வெற்றியின் நற்செய்தியை அறிந்தவுடன் முஸ்லீம்களும் அவர்களது தலைவர்களும் நபி(ஸல்) அவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டனர்.  இவர்களின் சந்திப்பு ‘ரவ்ஹா’ என்ற இட்த்தில் நபி (ஸல்)அவர்களுடன் நிகழ்ந்தது. அப்பொழுது அவர்களிடம் மதீனாவைச் சேர்ந்த ஸலமா இப்னு ஸலமா (ரழி) “நீங்கள் எங்களுக்கு எதற்காக வாழ்த்து சொல்கிறீர்கள்? கட்டப்பட்ட ஒட்டகத்தைப் போன்றிருந்த சொட்டைத் தலை கிழவர்களைத்தான் நாங்கள் போரில் எதிர்கொண்டோம். எனவே அவர்களது கழுத்துகளை அறுத்தோம்” என்று கூறினார். நபி(ஸல்) புன்முறுவல் பூத்து “எனது சகோதரன் மகனே! நீ யாரை அப்படி கூறுகிறாயோ அவர்கள்தான் (குறைஷிகளின்) தலைவர்கள்”என்றார்.(அர்ரஹீக்குல் மக்தூம்)

…Then he marched until he reached Rauha’ when the muslims met him. Salama B. Salama-So ‘Asim b. ‘Umar b. Qatada and Yazid b. Ruman told me – said, ‘What are you congratulating us about? By God, we only met some bald old women like sacrificial camels who are hobbled, and we slaughtered them!’ The apostle smiled and said, ‘But nephew, those were the chifs…
(Page 308, Life of Muhammad a Translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah By A.Guillaume)

இந்த சொட்டைத்தலை கிழவர்களைக் கொன்றதைத்தான் மாபெரும் அற்புதம், உலகம் காணத அதிசயம் என்று பீற்றிக் கொள்கிறார்கள்.போரில் பங்கெடுத்தவரே வாழ்த்து கூறுவதற்குக்கூட தகுதிபெறாத வெற்றி என்கிறார். உடனிருந்த முஹம்மதுவும்கூட அதை மறுக்கவில்லை என்பது நாம் கவனிக்கத் தக்கது.வயதான கிழவர்களைக் கொல்ல தந்திரவித்தைகளையும், வானிலிருந்து படைகளையும் இறக்கியதாக பீற்றிக்கொள்ளும் அல்லாஹ்வை நினைத்தால் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.போர்முடிந்தவுடன் கைபற்றிய பொருட்களைப் பங்கிடும் விவகாரம் துவங்கியது. முதல் குற்றச்சாட்டு முஹம்மதின் மீதே விழுந்தது.  

முஹம்மதைப்பற்றி கூறும்பொழுது அவர், ’அல் அமீன் - நம்பிக்கைகுரியவர் என்று குறைஷிகள் கூட அழைத்தனர் என்று இஸ்லாமியர்கள் ’பீலா’ விடுவதை மறுத்து கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 

அவருக்கு குறைஷிகள் மத்தியில் மட்டுமல்ல தனது சீடர்களிடம் கூட அப்படியொரு நற்பெயர் இருந்ததில்லை என்கிறது பின்வரும் ஹதீஸ்.

Narrated Abdullah ibn Abbas:The verse "And no Prophet could (ever) be false to his trust" was revealed about a red velvet. When it was found missing on the day of Badr, some people said; Perhaps the Apostle of Allah (peace_be_upon_him) has taken it. So Allah, the Exalted, sent down "And no prophet could (ever) be false to his trust" to the end of the verse.(அபு தவூத் 3960)

மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது...(குர் ஆன் 3:161)

சிவப்பு நிற சால்வை காணவில்லை என்றவுடன்,சீடர்கள் சிறிதும் தயக்கமின்றி முஹம்மது எடுத்திருப்பார் என்கின்றனர். அல்லாஹ் உடனே வஹீயை விட வேண்டியதாயிற்று. இதுதான் ’அல் அமீன்’ என்பதன் பொருளோ?.இந்த பத்ரு தாக்குதலிலுள்ள தர்க்க முறையிலான முரண்பாடுகளைப் பார்த்தோம். இனி இஸ்லாமின் அடிப்படைக் கொள்கையில் எழும் முரண்பாடுகளையும் காண்போம். பொதுவாக இத் தாக்குதலை கூறும் பொழுது முடிவு செய்யப்பட்ட வெற்றி என்கிறார்கள்“The battle has been passed down in Islamic history as a decisive victory..” என்கிறது விக்கிபீடியா. அதென்ன முடிவு செய்யப்பட்ட,  தீர்மானிக்கப்பட்ட வெற்றி?இரண்டிலொன்று கிடைக்கும் என்று வாக்களிக்கப்பட்டதே அதுவா?அது வெறும் அறிவிப்புதான், தீர்மானமும், திட்டமும் தீட்டப்பட்டது  எப்பொழுதென்று யாருக்கும் தெரியாது.அல்லாஹ்விடம் லவ்ஹுல்மஹ்ஃபூல் என்றொருமூலப்பதிவேடு இருப்பதாகவும், அதில் பிரபஞ்சத்தின் அனைத்து செயல்களும், அதாவது நிகழ்ந்தவைகள்,நிகழ்ந்துகொண்டிருப்பவைகள், இனி நிகழ இருப்பவைகள் என அனைத்துமே துள்ளியமாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இஸ்லாம் கூறுகிறது. அதை தீர்மானித்து செயல்படுத்துவது அல்லாஹ் மட்டுமே.அவனை மீறி ஒரு அணுகூட அசையமுடியாது;அசையக் கூடாது இதுதான் இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை.

அவர்கள் செய்த ஒவ்வொரு காரியமும் ஏடுகளில் உள்ளது.
ஒவ்வொரு சிறியதும், பெரியதும் பதிவு செய்யப்பட்டுள்ளது
(குர் ஆன் 54:52, 53)

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
(குர் ஆன் 57:22)

அதை அப்படியே பத்ரு தாக்குதலுக்கும் பொருந்தும்.அபூஸுஃப்யான் தப்பித்ததும், அபூஜஹ்ல் கொல்லப்பட்டதும், முஹம்மதின் படை வெற்றிகண்டதும் முன்பே இறுதி செய்யப்பட்டு லவ்ஹுல் மக்ஃபூல் ஏட்டில் பதியப்பட்ட அல்லாஹ்வின் திட்டமே! அபூஜஹ்லின் தாடியைப் பிடித்து, எப்படி,யாரால் தலைதுண்டித்து கொல்லப்பட வேண்டுமென்பது கூட முன்முடிவு செய்யப்பட்டதுதான்.இந்த நம்பிக்கையில்லையெனில் ஒருவர் முஸ்லீமாகவே இருக்க முடியாது.இது எப்படி இருக்கிறது எனில், எதிராளி என்று எவருமில்லாமல், சதுரங்க விளையாட்டில் இருமுனைகளிலும் ஒருவரே காய்களை நகர்த்தி இறுதியில், வெற்றி பெற்றுவிட்டதாகவும்; தன்னை இணையற்ற மாபெரும் வீரன், சிறந்த அறிவாளி,என்றெல்லாம் சதுரங்கக் காய்களிடம் பெருமை பாராட்டிக்கொண்டால் என்ன கூறத் தோன்றும்? இதை இயலாமை என்பதா? மனநோய் என்பதா?


நிலைத்து நிற்கும் வேதமா குர்ஆன்?

நிலைத்து நிற்கும் வேதமா குர்ஆன்?



குர்ஆன் காலங்காலமாக இறைவனால் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் அதற்கு முன்பு அருளப்பட்ட வேதமான பைபிள் காலப்போக்கில் தன் உண்மைகளை இழந்துவிட்டதாகவும் இஸ்லாமிய தோழர்களுக்கு சிறு வயதில் இருந்து கற்று கொடுக்கப்படுகிறது. உண்மையை சொல்ல வேண்டுமானால், பைபிள் குரானை விட தன்னுள் உண்மைகளை கொண்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் கால அளவில் நாற்பது நபர்களால் எழுதப்பட்ட 66 நூல்களை உள்ளடக்கிய புத்தகமாக பைபிள் இருந்து வருகிறது. களிமண் பலகைகளிலும், பாப்பிரஸ் ஓலைகளிலும், துணிகளிலும், உலோக தகடுகளிலும், தோல் சுருள்களிலும் ஆயிரம் ஆயிரம் வருடங்களாக பாதுகாக்கப்பட்டு 3500 ஆண்டுகள் ஆன பின்பும் நம் கரங்களில் நிலைத்து நிற்கின்ற அதிசய புத்தகம் தான் பைபிள். குரானை விட ஐந்து மடங்கு செய்திகளை கொண்டது. இத்தனை பெரிய செய்திகளையும், கால அளவுகளையும், பல்வேறு ஆசிரியர்களையும் கொண்டிருந்தாலும் இன்று வரை நம் கரங்களில் உலாவி வரும் வேதமே உண்மையில் வியக்கத்தக்கது. ஆனால், குரான் ஒரே ஒரு நபரது போதனைகளை உள்ளடக்கி, ஒருவரது காலக்கட்ட‌த்தில் எழுதி முடிக்கப்பட்டது. பைபிள் முடிவுபெற்று 500 ஆண்டுகளுக்கு அப்பால் எழுதப்பட்டது. சிந்திப்போருக்கு, இவைகளில் வியக்கத்தக்கது எது என்பது விளங்கும். இனி குரான் காக்கப்பட்ட வரலாற்றை காணலாம். பெரும்பாலான முஸ்லிம்கள், இஸ்லாத்தை ஒருவருக்கு அறிமுகப்படுத்தும் முன், இந்த செய்திகளை எல்லாம் கூற மாட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்.

ஸைத் அவர்களின் குர்ஆன்:
முகமது போதனை செய்ய ஆரம்பித்து இறக்கும் வரை குரான் வசனங்களை சிறிது சிறிதாகவே கூறி வந்தார். அவர் உயிரோடு இருக்கும் காலம் அளவும் குர்ஆன் எழுதி முடிக்கப்படவுமில்லை. ஒன்று திரட்டப்படவுமில்லை. அவர் வாழ்நாட்களில் அத்தகைய தேவையை பற்றி எந்த முஸ்லிமும் பெரிதளவு சிந்திக்கவில்லை. முகமது அவர்கள் இறந்த பின்பு தான் அத்தகைய முயற்சிகள் கைக்கொள்ளப்பட்டன. முகமது அவர்களது மாமனார் அபூபக்ர் அவர்களே குரானை மனனம் செய்த சைத் இப்னு ஸாபித் என்பவரை அணுகி குரானை ஒன்று திரட்டும் படி பிற்காலங்களில் பணித்தார். சைத் கற்களில், பனவோலைகளில் எழுதி வைக்கப்பட்டிருந்த வசனங்களையும், மனனம் செய்து ஓதி வந்த சில‌ரது உதவி கொண்டும் குரானை ஒன்று திரட்டி எழுதி முடித்தார். இந்த முயற்சியின் மூலம் திரட்டப்பட்ட குரான் பிழையற்றதா? அனைத்து வசனங்களையும் கொண்டுள்ளனவா? அல்லது நூறு சதவிகிதம் நேர்த்தியானதா? என்பதெல்லாம் சிறிது சிந்திக்க வேண்டியவைகள். முகமதுக்கு பின் அபூபக்ர் அவர்களே தலைமை ஏற்று முதல் கலீபாவாக செயல்பட்டார். கலீபாவின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட குரான் தொகுப்பு என்பதை தவிர சைத் அவர்கள் கொண்டுவந்த குரான் பிரதிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. பின் இந்த தொகுப்பு உமர் அவர்களிடமும், பல ஆண்டுகளாக முகமது அவர்களது நான்காம் மனைவியான ஹஃப்ஸாவிடம் மட்டுமே இருந்தது. இந்த காலங்களில் முகமது அவர்களின் பிற சகாக்களும் குரானை ஒன்று திரட்டி எழுதி வந்தனர். இவ்வாறு பல்வேறு நபர்களால், விதவிதமான நூல்கள் குர்ஆன் என்ற பெயரில் வளம் வந்து கொண்டிருந்தன.
சஹீஹ் புகாரி 7191: (வேத அறிவிப்பை எழுதியோரில் ஒருவரான) ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். யமாமா(போரில்) வீரர்கள் கொல்லப்பட்ட போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னை அழைத்து வரும்படி) ஆளனுப்பினார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) கூறினார்: உமர்(ரலி) அவர்கள் என்னிடம் வந்து, இந்த யமாமா போர், குர்ஆன் அறிஞர்கள் பலரைப் பலிகொண்டது. (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) எல்லா இடங்களிலும் குர்ஆன் அறிஞர்கள் பலர் கொல்லப்பட்டு அதனால் குர்ஆனில் பெரும்பகுதி (அந்த நெஞ்சங்களுடன் அழிந்து) போய்விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். எனவே, (கலீஃபாவான) நீங்கள் குர்ஆனைத் திரட்டுமாறு ஆணையிட வேண்டுமென கருதுகிறேன்' என்று கூறினார்கள். அதற்கு நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்ய முடியும்?' என்று (உமர்(ரலி) அவர்களிடம்) கேட்டேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்று கூறினார்கள். இது விஷயமாக தொடர்ந்து உமர்(ரலி) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். முடிவில், உமர்(ரலி) அவர்கள் மனதை அல்லாஹ் எதற்காக விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அவன் விரிவாக்கினான்; எது விஷயத்தில் உமர்(ரலி) அவர்கள் கருதியதையே நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னிடம்), 'நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்பட்டதில்லை. நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக வஹீ (இறைச்செய்தி) (வேத அறிவிப்பை) எழுதக் கூடியவராயிருந்தீர்கள். எனவே, (தனித்தனி பிரதிகளில் பல்வேறு நபித் தோழர்களிடம் இருக்கும்) குர்ஆன் வசனங்களைத் தேடி (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென என்னை அவர்கள் பணிந்திருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப் போகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்றார்கள். இதையே என்னிடம் அன்னார் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர்(ரலி) ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். அவர்கள் இருவரும் கருதியதையே நானும் (பொறுத்தமானதாகக்) கருதினேன். எனவே, நான் (மக்களின் கரங்களிலிருந்து குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அகலமான பேரீச்ச மட்டைகள், துண்டுத் தோல்கள் ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சங்கள் ஆகியவற்றிலிருந்து குர்ஆன் வசனங்களைத் திரட்டினேன். அப்போது நான் அத்தவ்பா எனும் (9 வது) அத்தியாத்தின் இறுதி அல்லது 'அபூ குஸைமா'(ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டேன். அதை நான் அதற்குரிய அத்தியாயத்தில் சேர்த்தேன். 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார்' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 09:128 வது) வசனமே அந்த வசனமாகும். (என் வாயிலாகத் திரட்டிக் தொகுக்கப் பெற்ற) குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை அவர்களின் வாழ்நாள் முழுக்க இருந்து வந்தது. பிறகு (கலீஃபா) உமர்(ரலி) அவர்களிடம் அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை அவர்களின் வாழ்நாள் முழுக்க இருந்து வந்தது. பிறகு (நபிகளாரின் துணைவியரான) ஹஃப்ஸா பின்த் உமர்(ரலி) அவர்களிடம் இருந்து வந்தது. முஹம்மத் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்கள், 'இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) 'லிகஃப்' எனும் சொல்லுக்கு 'ஓடு' என்று பொருள் எனக் கூறினார்கள்.
சைத் திரட்டிய குரான் நேர்த்தியானது என நம்பிகொள்வதை தவிர நிச்சயமாக கூற முடியாது. அவர் சில வசனங்களை ஒரே ஒருவரிடம் இருந்து மட்டுமே பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சில வசனங்கள் ஒரே ஒருவரது நினைவால் பாதுகாக்கப்பட்டிருந்தன. ஒருவர் கூட நினைவில் வைத்திராத சில வசனங்கள் இருந்தால், நிச்சயமாக அவை அழிந்துவிட்டன. இன்று நம்மிடம் உள்ள குரான் நேர்த்தியானது என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை.
சஹீஹ் புகாரி 4989: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்: (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் அவர்களிடம் சென்றேன். என்னிடம்) அவர்கள் 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற 'வஹீ' (வேத வசனங்)களை எழுதிவந்தீர்கள். எனவே, குர்ஆன் வசனங்களைத் தேடுங்கள்!' என்று கூறினார்கள். எனவே, நான் குர்ஆன் வசனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டேன். இறுதியாக 'அத்தவ்பா' எனும் (9 வது அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்களை அபூ குஸைமா அல்அன்சாரி(ரலி) அவர்களிடம் இருந்து பெற்றேன். அவரல்லாத வேறு எவரிடமும் அவற்றை நான் காணவில்லை. (அவ்விரு வசனங்களாவன:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குச் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான். '(திருக்குர்ஆன் 09:128, 129)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களின் குர்ஆன்:
அப்துல்லாஹ் இஸ்லாத்தை ஆரம்ப காலங்களிலேயே ஏற்று கொண்டார். குரானை நன்கு ஓத தெரிந்த நால்வரில் இவரும் ஒருவர் என புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நால்வரிலும், அப்துல்லாஹ் அவர்களை முகமது முதலாவதாக குறிப்பிடுகிறார்.

சஹீஹ் புகாரி 3808: மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார், அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) குறித்துக் கூறப்பட்டது. அப்போது அவர்கள் கூறினார்கள்: அவர் நான் நேசித்து கொண்டேயிருக்கும் ஒருவர். (ஏனெனில்,) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமை சாலிம், முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅப் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை (ஓதும் முறையை) எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்ல கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களையே முதலில் குறிப்பிட்டார்கள். 

அப்துல்லாஹ், ஸைத் அவர்களை விட அனுபவம் மிக்கவர். வயதில் பெரியவர். முகமது அவர்களிடம் குரானை நன்கு அறிந்தவர் என நற்சாட்சி பெற்றவர். இவரும் ஒரு குர்ஆனை எழுதினார் (சஹீஹ் புகாரி 4996, முஸ்லிம் 1494). குரானை நன்கு அறிந்தவராக அப்துல்லாஹ் தன்னை குறிப்பிட்டுள்ளார்.
சஹீஹ் புகாரி 5002: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்: எவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் அருளப்பட்டால், அது எங்கே அருளப்பட்டது என்பதை நான் நன்கு அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வசனம் அருளப்பட்டால் அது யார் விஷயத்தில் அருளப்பட்டது என்பதையும் நான் நன்கறிவேன். என்னை விட அல்லாஹ்வின் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் இருந்தால் நான் (அவரிடமிருந்து அதைக் கற்றுக் கொள்வதற்காக) அவரை நோக்கி நிச்சயம் பயணம் புறப்பட்டு விடுவேன். இதை மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். 
சாலிம் அவர்களின் குர்ஆன்:
குர்ஆனை நன்கு அறிந்தவர்களாக முகமது குறிப்பிட்ட நான்கு நபர்களுள் சாலிம் இரண்டாம் நபர். யமாமா போரின் போது இவர் கொல்லப்பட்டார். எனினும், இறப்பதற்கு முன்பு சாலிமும் ஒரு குரானை எழுதி முடித்தார். இந்த குர்ஆன் தான் முதலில் எழுதி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது - (As Suyuti, Al-Itqan fii Ulum al-Quran, Vol.1, p.135).

உபை இப்னு கஅப் அவர்களின் குர்ஆன்:
முகமது அவர்கள் குறிப்பிட்ட நான்கு நபர்களுள் இவரும் ஒருவர். இவர் எழுதிய குர்ஆன் சிரியா தேசத்து இஸ்லாமியர்களிடம் பிரதானமாக விளங்கி வந்தது (Source).

புழக்கத்தில் இருந்த பிற குர்ஆன்கள்:
இந்த குர்ஆன்களைத் தவிர, இப்னு அப்பாஸ் அவர்களது குர்ஆன், அலி அவர்களது குர்ஆன், அபூமூஸா அவர்களது குர்ஆன், அனஸ் இப்னு மாலிக் அவர்களது குர்ஆன், இப்னு அஸ் ஸுபைர் அவர்களது குர்ஆன் என விதவிதமான குர்ஆன்கள் அதே காலங்களில் எழுதி முடிக்கப்பட்டன.

உஸ்மான் அவர்களது உத்தரவு:
இத்தனை குர்ஆன்கள் எழுதப்பட்டு இருந்தாலும், ஸைத் அவர்களது குர்ஆன் தான் இன்று வரை நிலைத்து நம்மிடம் வந்துள்ளது. மூன்றாவது கலீபாவாக செயல்பட்ட உஸ்மான் அவர்களது காலத்தில் ஸைத் அவர்களது குர்ஆனை தவிர பிறர் இயற்றிய அத்தனை குர்ஆன்களும் தீயில் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. உஸ்மான் அவர்களது உத்தரவை பல இஸ்லாமியர்கள் எதிர்த்தனர். குர்ஆனை நன்கு ஓத அறிந்தவராக முகமது அவர்களால் நற்பெயர் பெற்ற அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களும் இதனை எதிர்த்தார். ஸைத் அவர்களது குர்ஆனிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய பிரதிகள் உருவாக்கப்பட்டது. பின்னர், சுற்றுப்புற பகுதிகளுக்கு இந்த ஏடுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இது தான் இன்று நம்மிடம் உள்ள குர்ஆன். இதனையே பாதுக்காக்கப்பட்ட வேதம் என இஸ்லாமிய அன்பர்கள் பல காலமாக கூறி வருகின்றனர்!
சஹீஹ் புகாரி 4987: அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்: ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின் போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர்பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கான போரில் கலந்து கொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்து வேறுபாடு கொண்டு அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடு கொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த (திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள். எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழி வழக்குப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழி வழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள்.
குர்ஆனை ஓதும் முறையிலேயே வித்தியாசங்கள் காணப்பட்டதாக மேலுள்ள ஹதீஸ் சமாளிக்கிறது. நிச்சயமாக, உச்சரிப்புகளில் வேறுபாடு காணப்பட்டால், அதற்காக பிறர் இயற்றிய குர்ஆன்களை எரிக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணத்திற்கு, "India is the best country" என்ற வாக்கியத்தை "இன்டியா இஸ் தி பெஸ்ட் கன்ட்ரி" எனவும் படிக்கலாம், "இந்தியா இஸ் த பெஸ்ட் கன்ட்ரி" என்றும் படிக்கலாம். இவ்வாறு உச்சரிப்பு வேறுபடுவதால், அந்த வாக்கியத்தில் பிழை உள்ளதாக அர்த்தமா? இல்லையே. உஸ்மானால் எரிக்கப்பட்ட பிற குர்ஆன்கள் உச்சரிப்பில் வேறுப்பட்டவை என்பது அர்த்தமற்ற கூற்று. உச்சரிப்பிற்கும், எழுத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அக்குர்ஆன்கள் ஸைத் அவர்கள் எழுதிய குர்ஆனுடன் முரண்பாடுகளை கொண்டிருந்ததே அவைகள் எரிக்கப்பட்டதற்கு காரணம். ஸைத் அவர்கள் எழுதிய குர்ஆன் தான் அனைத்திலும் நேர்த்தியானது என்பதற்கு என்ன ஆதாரம்?

திருத்தப்பட்ட மறுபதிப்பு!
ஹப்ஸா அவர்களிடம் இருந்த குர்ஆனே உஸ்மான் காலத்தில் அப்படியே நகல் எடுக்கப்பட்டது என்றும் கூற முடியாது. ஸைத் அவர்கள் இன்னும் சில வசனங்களை இணைத்து எழுதினார். மொழி வழக்கை திருத்தி எழுதினர். இவ்வாறு உஸ்மான் காலத்தில் குர்ஆனுக்கு திருத்தங்களும் செய்யப்பட்டது.
சஹீஹ் புகாரி 4988: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்: நாங்கள் (உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) குர்ஆனுக்குப் பிததிகள் எடுத்த போது 'அல்அஹ்ஸாப்' எனும் (33 வது) அத்தியாயத்தில் ஒரு வசனம் காணவில்லை. அதனை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். அதை நாங்கள் தேடிய போது அது குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டோம். (அந்த வசனம் இதுதான்:) அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெயப்படுத்தி விட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் உயிரை அர்ப்பணிக்க வேண்டுமென்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்ற தக்க தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23). உடனே நாங்கள் அந்த வசனத்தை குர்ஆன் பிரதியில் அதற்குரிய அத்தியாயத்தில் இணைத்துவிட்டோம்.
மேற்கண்ட குறிப்புப்படி அபூபக்ர் காலத்தில் தான் இயற்றிய குர்ஆன் பிரதி முழுமையானதல்ல என்பதை ஸைத் அவர்களே ஒப்புக் கொள்கிறார். தான் முந்தி எழுதிய பிரதியில் 33:23 வசனத்தை இணைத்து எழுதியிருந்தால், நகல் எடுக்கும் போது, சைத் அவர்களுக்கு இந்த வசனத்தை தேட வேண்டிய வேலையே இருந்திருக்காது. இது ஒரு மறுபதிப்பு குர்ஆன். குர்ஆன் பாதுக்காக்கப்பட்ட வேதமெனில் முதலில் இந்த சிக்கல்களை எல்லாம் தாண்டி நிறைவாக நமது கரங்களுக்கு வந்திருக்க வேண்டும். ஸைத் அவர்கள் திக்கி திணறி எழுதி முடித்த நூலையே இன்று நாம் குர்ஆனாக எண்ணி வருகிறோம். அது நேர்த்தியானதற்கு என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. நேர்த்தியில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் கிடக்கின்றன. அவற்றையும் இனி காணலாம்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களின் எதிர்ப்பு:
உஸ்மான் அவர்களின் உத்தரவை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் எதிர்த்தார். எரிக்கப்பட்ட குரான்களில் அப்துல்லாஹ் அவர்களது ஏடும் அடங்கும். உண்மையில் சொல்ல போனால், ஸைத் அவர்களிடம் ஒப்படைத்த பொறுப்பை அப்துல்லாஹ் அவர்களிடம் ஒப்படைத்திருக்கலாம். அப்துல்லாஹ் தான் முகமது அவர்களிடம் குரானை ஓத அறிந்தவர்களுள் முதன்மையானவர் என நற்சாட்சி பெற்றவர். ஸைத் அவர்களை விட வயதில் முதிர்ந்தவர், அனுபவம் மிக்கவர். ஆனால், அப்துல்லாஹ் இயற்றிய குரானை ஏன் அக்கால முஸ்லிம்கள் எரித்துவிட்டனர் என்பது தான் வியக்கதக்கது! ஒருவேளை அதுதான் இஸ்லாத்தின் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டுள்ள குர்ஆனோ என்னமோ! உஸ்மான் பிற குர்ஆன்களை எரிக்க உத்தரவிட்ட போது, மஸ்வூத் தனது பதிப்பை கொண்டுவர மறுத்தார், அவரது குர்ஆன் கூஃபா நகரில் பிரதான பிரதியாக விளங்கி வந்தது. ஆனால், ஸைத் அவர்களது பிரதி எந்தளவும் பரவலாக பின்பற்றபடவில்லை. (அபூ தாவூது, கிதாப் அல் மஸாஹிஃப், 13)
"Hudaifah said "It is said by the people of Kufa, 'the reading of Masud', and it is said by the people of Basra, 'the reading of Musa', (another Muslims Qur'an). By Allah! If I come to the commander of the faithful (Uthman), I will demand that they (the various Qur'ans) be drowned! Masud said to him, "Do so, and by Allah you will also be drowned, but not in water" - Ref: Abi Dawud "Kitab al Masahif" p. 13 
ஹுதைஃபா சொன்னார்: கூஃபாவாசிகள், "இது மஸ்வூத் அவர்களது ஓதுதல் என்கின்றனர், பஸ்ராவாசிகள், இது மூஸா அவர்களது ஓதுதல் என்கின்றனர். அல்லாஹ்வினால், நான் விசுவாசிகளின் தலைவராக இருந்தால், நான் இவைகளை மூழ்கடித்துவிடும்படி பணித்திருப்பேன்", மஸ்வூத் அவரிடம் சொன்னார்: "செய்யுங்கள், அல்லாவினால் நீங்களும் மூழ்கடிக்கப்படுவீர்கள். ஆனால் நீரில் அல்ல"

Masud said "I recited from the messenger of Allah seventy suras which I had perfected before Zaid Thabit had embraced Islam" - Abi Dawud "Kitab al Masahif" p. 17. 
மஸ்வூத் சொன்னார்: "நான் அல்லாவின் தூதரிடம் இருந்து எழுபது ஸூராக்களை ஓதியுள்ளேன், ஸைத் ஸாபித் இஸ்லாத்தை ஏற்கும் முன்பிருந்தே நான் அவைகளில் நேர்த்தியாயிருந்தேன்."

"I acquired directly from the messenger of Allah 70 suras when Zaid was still a child, must I now forsake what I acquired directly from the messenger of Allah?" - Abi Dawud "Kitab al Masahif" p. 15. 
"ஸைத் குழந்தையாக இருக்கும் போதே, நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து 70 ஸூராக்களை நேரடியாக பெற்றேன், அல்லாஹ்வின் தூதரிடம் இருந்து நான் நேரடியாக பெற்றவைகளை இப்போது கைவிட வேண்டுமா?"

The people have been guilty of deceit in the reading of the Qur'an. I like it better to read according to the recitation of him (Muhammad) who I love more than that of Zaid Thabit - Ibn Sa'd's "Kitab al-Tabaqat al-Kabir, vol 2, p.444 
"குர்ஆனை தப்பிதமாக ஓதிவருவதாக மக்கள் உணர்கின்றனர். நான் ஸைத் ஸாபித்தை விட முகமது ஓதிய வண்ணம் படிப்பதே நலமென்று விரும்புகிறேன்."

அப்துல்லா இப்னு மஸ்வூத் கூறுவது போல அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்களும் மறுப்பு தெரிவிக்கின்றார்,

Let none of you say “I have acquired the whole of the Qur’an”. How does he know what all of it is when much of the Qur’an has disappeared? Rather let him say “I have acquired what has survived.” - (As-Suyuti, Al Itqan fii Ulum al-Qur’an, p.524). 
"முழு குர்ஆனையும் பெற்றுவிட்டேன்" என உங்களில் எவரும் சொல்ல வேண்டாம், குர்ஆனின் பெரும்பாலான பகுதி காணாமற் போய்விட்ட நிலையில், அதில் முழுமையானது என்ன என்பது எப்படி ஒருவனுக்கு தெரியும்? அதற்கு பதிலாக, "குர்ஆனின் நிலைத்துள்ள பகுதிகளையே நான் பெற்றுள்ளேன்" என ஒருவன் கூறட்டும்.

இன்றுள்ள ஸைத் அவர்களின் குர்ஆன் தான் பாதுகாக்கப்பட்டதா? வாசகர்களே சிந்தியுங்கள்! ஏதோ ஒன்றை திரட்டி வைத்துவிட்டு காக்கப்பட்ட வேதம் என பெருமை பேசி கொள்வதில் எந்த பயனில்லை. முதலில், திரட்டப்பட்ட நூல் நேர்த்தியாக இருக்க வேண்டும்!

ஸைத் அவர்களது பிரதியில் உள்ள கோளாறுகள்:
தங்கள் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்ட காரணங்களால் பொறாமை கொண்டு மேற்கண்ட நபர்கள் அவதூறு கூறியதாக எண்ண வேண்டாம். உண்மையில் ஸைத் அவர்களது குர்ஆனில் பல கோளாறுகள் காணப்படுகின்றன. குர்ஆனில் இடம்பெற்று இருந்ததாக கூறப்படும் பல வசனங்கள், பகுதிகள், முழு அத்தியாயங்கள் இன்றைய குர்ஆனில் இருந்து காணாமல் போய்விட்டன. இன்று நம்மிடம் உள்ளது ஒரு அரைகுறை நூல் தான்! சில எடுத்துக்காட்டுகளை காணலாம்,

எடுத்துக்காட்டு 1:
சஹீஹ் முஸ்லிம் 1897: அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் பஸ்ரா (இராக்) நகரத்திலுள்ள குர்ஆன் அறிஞர்களிடம் (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். (அவர்களது அழைப்பை ஏற்று) குர்ஆனைக் கற்றறிந்த முன்னூறு பேர் அவர்களிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம் அபூமூசா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: பஸ்ராவாசிகளிலேயே நீங்கள் தாம் சிறந்தவர்கள் ஆவீர்கள்; அவர்களிலேயே குர்ஆனை நன்கறிந்தவர்களும் ஆவீர்கள். எனவே, (தொடர்ந்து) குர்ஆனை ஓதிவாருங்கள். காலம் நீண்டுவிட்ட போது உங்களுக்கு முன் வாழ்ந்த (வேதம் அருளப்பெற்ற சமுதாயத்த)வர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டதைப் போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிட வேண்டாம். நாங்கள் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ஓர் அத்தியாயத்தை ஓதிவந்தோம்; நீளத்திலும் கடுமை(யான எச்சரிக்கை விடுக்கும் தோரணை)யிலும் "பராஅத்" எனப்படும் (9ஆவது) அத்தியாயத்திற்கு நிகராக அதை நாங்கள் கருதினோம். ஆனால், அந்த அத்தியாயத்தை நான் மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும், அதில் "ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். மேலும், மற்றோர் அத்தியாயத்தையும் நாங்கள் ஓதிவந்தோம். அதை (சப்பஹ, யுசப்பிஹு, சப்பிஹ் என) இறைத்துதியில் தொடங்கும் அத்தியாயங்களில் ஒன்றுக்கு நிகராகவே நாங்கள் கருதினோம். அந்த அத்தியாயத்தையும் நான் மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும்,அதில் "நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அவ்வாறு நீங்கள் செய்யாததைப் பிறருக்குச் சொல்வீர்களாயின்) அது உங்களுக்கு எதிரான சாட்சியாக உங்களுடைய கழுத்துகளின் மீது எழுதப்படும். பின்னர் மறுமை நாளில் அது குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். (இந்த அத்தியாயங்கள் பின்னர் மாற்றப்பட்டுவிட்டன.)
இந்த ஹதீஸை கணக்கில் கொண்டால், இன்று நம்மிடம் உள்ள குர்ஆனில் இருந்து இரண்டு முழு அத்தியாயங்களே காணாமல் போய்விட்டன. இந்த ஹதீஸின் தமிழ் மொழிப்பெயர்ப்பில் பல்வேறு பொய்கள் வேறு கலந்துள்ளன. அவற்றையும் என்ன என்று இனி காணலாம்.

1) (இந்த அத்தியாயங்கள் பின்னர் மாற்றப்பட்டுவிட்டன.)
(இந்த அத்தியாயங்கள் பின்னர் மாற்றப்பட்டுவிட்டன.) என்று இறுதியில் கொடுக்கப்பட்ட குறிப்பு தமிழ் மொழிப்பெயர்ப்பாளரால் இணைக்கப்பட்டது. இத்தகைய வாக்கியம் எதுவும் உண்மையான ஹதீஸில் இல்லை. கீழுள்ள ஆங்கில வரிகளை கண்டால் இந்த பொய் விளங்கும்.
(2286) Abu Harb b. Abu al-Aswad reported on the authority of his father that Abu Musa al-Ash'ari sent for the reciters of Basra. They came to him and they were three hundred in number. They recited the Qur'an and he said: You are the best among the inhabitants of Basra, for you are the reciters among them. So continue to recite it. (But bear in mind) that your reciting for a long time may not harden your hearts as were hardened the hearts of those before you. We used to recite a Sura which resembled in length and severity tO (Sura) Bara'at. I have, however, forgotten it with the exception of this which I remember out of it: "If there were two valleys full of riches for the son of Adam, he would long for a third valley, and nothing would fill the stomach of the son of Adam but dust." And we used to so recite a Sura which resembled one of the suras of Musabbihat, and I have forgotten it, but remember (this much) out of it: "O people who believe, why do you say that which you do not practice" (lxi 2.) and "that is recorded in your necks as a witness (against you) and you would be asked about in on the Day of Resurrection" (xvii. 13)." (Sahih Muslim, translated by A. H. Siddiqi, Ashraf, Lahore, pp. 500, 501)
2) மாற்றப்பட்டவைகளை சேர்த்து எழுத வேண்டுமா? விட்டு விட வேண்டுமா?
இந்த அத்தியாயங்கள் பின்னர் மாற்றப்பட்டவிட்டன என என்னத்தையோ கூறி முஸ்லிம் சகோதரர்கள் சமாளிக்க முற்ப்பட்டுள்ளதை மேலே காணலாம். கீழுள்ள கேள்விகளுக்கு இஸ்லாமியர் எவரேனும் விடையளித்தால் நலமாயிருக்கும்.

அ) எந்த ஆதாரங்களை வைத்து இந்த அத்தியாயங்கள் மாற்றப்பட்டுவிட்டது என கூறுகின்றீர்?
ஆ) எதற்காக அல்லாஹ் இந்த அத்தியாயங்களை வழங்கிவிட்டு பின்னர் மாற்றி விட்டார்?
இ) சரி, நீங்கள் கூறுவது போல மாற்றப்பட்டுவிட்டது என எடுத்துக் கொண்டால், அதற்காக அந்த அத்தியாயங்களை குர்ஆனில் சேர்க்காமல் விட்டு விடலாமா?
ஈ) விட்டு விடலாம் என்றால் அதற்கான காரணம் என்ன என்று கூற முடியுமா?
உ) மாற்றப்பட்ட இந்த வசனங்களை விட்டு விட்டு, ஏன் மாற்றப்பட்ட பிற வசனங்களை மட்டும் சேர்த்து கொண்டீர்கள்? (சஹீஹ் புகாரி 4530)
சஹீஹ் புகாரி 4530: அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார், நான், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம், 'உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தருவாயில் இரு)ப்பவர்கள், தம் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்யட்டும்! ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டால் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மிகைத்தோனும் விவேகமிக்கவனும் ஆவான்' எனும் (திருக்குர்ஆன் 02:240 வது வசனம் குறித்து இந்த) இறை வசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (திருக்குர்ஆன் 02:234) மாற்றிவிட்டதே! இதை 'ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?' அல்லது 'இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே)விட்டுவைக்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்' என்று பதிலளித்தார்கள்.
மேற்கண்ட ஹதீசையும் கணக்கில் கொண்டால், இன்று நம்மிடம் உள்ள குரான் கறைப்பட்டது என்பது நிச்சயமாகும். சில மாற்றப்பட்ட வசனங்களை சேர்த்து எழுதியுள்ளனர், வேறு சில மாற்றப்பட்ட வசனங்களை விட்டு எழுதியுள்ளனர்! கோளாறுகள் நிறைந்த நூல் தான் காக்கப்பட்ட இறைவேதமா?

3) "மறக்கச்செய்யப்பட்டுவிட்டேன்"
மூன்றாவதாக, I have forgotten it என்பதை 'மறந்துவிட்டேன்' என்று மொழிபெயர்ப்பதற்கு பதிலாக 'மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன்' என்று மொழி பெயர்த்துள்ளார்கள். இதற்கு காரணம் இந்த அறிவிப்பை தருபவரை காக்க‌ வேண்டிதான். ஏன் எனில் முகமது கீழுள்ளவாறு ஒரு ஹதீஸில் கூறுகிறார்.
சஹீஹ் புகாரி 5039: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன் என்று ஒருவர் கூறுவதே அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். உண்மையில், அவர் மறக்கவைக்கப்பட்டுவிட்டார் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
அவர் மறந்துவிட்டாரா, மறக்கவைக்கப்பட்டாரா என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். அறிவிப்பாளர் என்ன கூறியுள்ளாரோ அதனை சரியாக மொழி பெயர்த்துவிடுங்கள். அது போதும்!

எடுத்துக்காட்டு 2:
உமர் இப்னு அல் கத்தாப் முகமது அவர்களின் நெருங்கிய தோழரில் ஒருவர். இரண்டாவது கலீபாகவாக செயல்பட்ட இவர், மதீனா வாசிகளிடம், குர்ஆனின் 24:2ஆம் வசனத்தை குறிப்பிட்டு கீழுள்ளவாறு வெளிப்படையாக கூறியுள்ளார். குரானின் 24:2 வசனம் விபச்சாரக் காரர்களுக்கு நூறு கசையடிகள் கொடுக்கும் படி கூறுகிறது. உண்மையில் அவர்கள் மீது கல்லெறி தண்டனை நிறைவேற்றும்படியே இந்த வசனம் இருந்ததாக உமர் தெரிவிக்கிறார்! பல்வேறு குறிப்புகள் இதனை உறுதி செய்கின்றன.
See that you do not forget the verse about stoning and say: We do not find it in the Book of Allah; the Apostle of Allah (may peace be upon him) had ordered stoning and we too have done so, after him. By the Lord Who holds possession of my life, if people should not accuse me of adding to the Book of Allah, I would have had this transcribed therein: “The adult men and women who commit adultery, stone them”. We have read this verse - (Muwatta Imam Malik, p.352) 
நீங்கள் இந்த வசனத்தை மறக்காதவாறு பார்த்து கொள்ளுங்கள், எங்களால் இதனை அல்லாஹ்வின் வேதத்தில் காண இயலவில்லை; அல்லாஹ்வின் தூதர் கல்லெறியும்படி உத்தரவிட்டுள்ளார், அவருக்கு பின்னரும் நாங்கள் இதனை செய்து வந்தோம். அல்லாஹ்வின் வேதத்தில் இடைசெருகல் செய்தவனாக என்னை மக்கள் தூசிக்காவிட்டால், என்னுயிரை தன்னிடம் கொண்டுள்ள இறைவனால், நான் அதில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பேன்: "விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் மீது கல்லெறியுங்கள்". இந்த வசனத்தை நாங்கள் வாசித்திருக்கிறோம்.
சஹீஹ் புகாரி 6829: இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார், உமர்(ரலி) கூறினார்: காலப் போக்கில் மக்களில் சிலர் 'இறை வேதத்தில் கல்லெறி (ரஜ்கி) தண்டனை காணப்படவில்லையே?' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறி விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். அறிந்துகொள்ளுங்கள்: திருமணமான ஒருவர் விபசாரம் புரிந்து, அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது நிச்சயமாகும். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'அறிந்து கொள்ளுங்கள்! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள். அவர்களுக்குப் பின் நாங்களும் அதனை நிறைவேற்றினோம்' (என்றும் உமர்(ரலி) கூறினார்). இவ்வாறு தான் நான் மனனமிட்டுள்ளேன்.
எடுத்துக்காட்டு 3:
மேற்கண்ட வசனத்தை போல, இன்னொரு வாக்கியத்தையும் காணவில்லை என உமர் கூறுகிறார்!
சஹீஹ் புகாரி 6830: காலப்போக்கில் மக்களில் சிலர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும். பிறகு, நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்: உங்களுடைய (உண்மையான) தந்தையரைப் புறக்கணித்து(விட்டு வேறொரு வரை தந்தையாக்கி விட வேண்டாம். அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி சொல்லலாகும்.
தற்போது நம்மிடம் உள்ள குர்ஆனில் இது போன்று இன்னும் நிறைய கோளாறுகள் நிறைந்துள்ளன. இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள மூன்றும் வெறும் எடுத்துக்காட்டுகள் தான்.

இந்த குர்ஆன் தான் தற்போது பாதுகாக்கப்பட்டதாக இஸ்லாமியர்களால் பெருமை பேசப்பட்டு வருகிறது! ஸைத் அவர்கள் எழுதிய குரானை விட சிறப்பாக எழுதிய பிற மக்களது பிரதிகளை எரித்து, பின்னர் ஸைத் அவர்களது குர்ஆனிலும் திருத்தங்கள் மேற்கொண்டு இயற்றப்பெற்றது தான் இன்றைய குர்ஆன். பல அத்தியாயங்களையும், வசனங்களையும் தொலைத்து விட்ட நூல் தான் இன்றைய காக்கப்பட்ட இறைவேதம்! உஸ்மான் அவர்களது கால குர்ஆனிலும் நமது தற்போதைய குர்ஆனிலும் கூட வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை இன்னொரு பதிவில் காணலாம்! சிந்திப்போருக்கு இதில் நிறைய அத்தாட்சிகள் உள்ளன.