முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நியாயமா?

முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நியாயமா? இவர்கள்  முஸ்லிம்களா?

(முஸ்லிம் இயக்க பதிவு)

ஜனநாயக ரீதியில் போராட்டம்
ஆர்ப்பாட்டம் என்ற பெயரால் போராட மார்க்கம்
அனுமதிக்கவில்லை. இத்தகைய போராட்டம் மாற்று அரசியல்
மற்றும் மத அமைப்புகள் செய்ய க்கூடியது.இதற்கு நபி
(ஸல்) அவர்கள் அனுமதி தரவில்லை
இதோ ஆதாரம்
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அன்சாரிகளான) எங்களிடம்
'எனக்குப் பிறகு (ஆட்சியதிகாரத்தில் உங்களைவிடப் பிறருக்கு)
முன்னுரிமை வழங்கப்படுவதையும், நீங்கள் வெறுக்கிற சில
விஷயங்களையும், பார்ப்பீர்கள்' என்றார்கள். மக்கள்,
'அப்போது நாங்கசிள் என்ன செய்ய வேண்டும் என்று
தாங்கள் கட்டளையிடுகிறீர்கள், இறைத்தூதர் அவர்களே?' என்று
கேட்க, நபி(ஸல்) அவர்கள், '(ஆட்சியாளர்களான)
அவர்களுக்கு அவர்களின் உரிமையை வழங்கிவிடுங்கள்;
உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்'
என்றார்கள்.7
ஸஹீஹ் புகாரி : 7052.

அத்தியாயம் : 92. குழப்பங்கள் (சோதனைகள்)
அதே நேரம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது பற்றி குர்ஆன்
மற்றும் ஹதீஃத்கூறுகின்றதே . இப்போது நடக்கின்ற
காவிகளின் அட்டகாசத்தை தடுப்பது எங்கனம் என்று
நீங்கள் கேட்கலாம்.இஸ்லாமிய ஆட்சி வரும் வரை
அதாவது நபி(ஸல்) அவர்களும் சத்திய
ஸஹாபாக்களும் 13 ஆண்டுகாலம் பட்ட கஷ்டத்தை
பொறுத்துக் கொண்டதன்காரணமாக
வும் ஒரே ஜமாஅத்தாக ஒரே அமீரின் கீழ் இருந்ததாலும்
போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று எதுவும் செய்யாமல்
இருந்ததாலும் எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்குப்
பரிசாக அடுத்த ஆண்டே மதீனா நகரை தலைமையகமாக
கொண்டு ஒரு மாபெரும் இஸ்லாமிய
சாம்ராஜ்ஜியத்தை வழங்கினான்.அதன்பிறகு தீமைகளை நபி
(ஸல்) அவர்கள் இரும்புக்கரம் கொண்டு
அடக்கினார்கள்.அதைப்போல் நாமும் ஒரே அமீரின் கீழ்
அல்லாஹ் நமது சமுதாயத்திற்கு முஸ்லிமீன்
எனப்பெயரிட்டபடி ஒரே ஜமாஅத்தாக அனைவரும்
செயல்படுவோமேயானால் இந்தியாவிலும்
பொதுமக்களுக்கு எவ்வித தீங்கும் நடக்காத
நல்லாட்சி நமது சமுதாயத்தின் மூலம் எல்லாம் வல்ல
அல்லாஹ் நடத்தாட்டுவான்.

இதற்கு ஒரே தடை நமது கேடுகெட்ட பிரிவுகளான ஹனஃபி
ஷாஃபி ஜாக்ஹ் தமுமுகTNTJ SDPI ஸலஃபி ஷியா
காதியானி இ.யூ. மு .லீக் NTF இன்னொரு குட்டி
ஜமாஅத் அலதாஃபி ஜமாஅத் INTJ போன்ற பிரிவினை
இயக்கத்தலைவர்களின் தலைவர்களே யாவர்.எனவே இப்போது
உடனடித் தேவை அனைத்துப்பிரிவு இ யக்கங்களும்
ஒழிக்கப்படவேண்டும் .நபி(ஸல்) அவர்களின் இயக்கமான
ஜமாஅத்துல் முஸ்லிமீன் (ஆதாரம்- புகாரீ :
3606) .என்ற உலகளாவிய ஜமாஅத்-ல் அனைவரும்
இணையவேண்டும். இதைத்தவிர வேறுவழியில்லை.

No comments:

Post a Comment